-
10th May 2014, 01:15 PM
#11
Junior Member
Devoted Hubber
கழுகார் பதில்கள்! ஜூனியர் விகடன் / 14 May, 2014
ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து, மத்திய, மாநில விருதுகள் பெற்றும் இளையராஜாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது இன்னும் கிடைக்கவில்லையே... ஏன்?
பால்கே விருது மட்டுமல்ல... உண்மையில் வரவேண்டிய எத்தனையோ விருதுகள் ராஜாவுக்கு பாக்கி இருக்கிறது. ஆனாலும் இளையராஜா இந்த விருதுகள் வந்தால் மட்டுமா பெருமை அடையப்போகிறார்? திண்ணையில் பாடிக்கொண்டு இருந்த பண்ணைபுரத்து பைந்தமிழ்க் குயில் இப்போது நாடுகள் கடந்து தமிழர் உள்ளங்களில் எல்லாம் கூடுகட்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறது. வயது கடந்தவர்களின் வானத்தில் இன்னும் இளமை ஜொலிக்கவைக்கும் வானவில்தான் இளையராஜா. நித்திரை வராமல் புரண்டு படுப்பவர்களுக்கு தூக்க மாத்திரை. காலை நேரத்துக் கவலையைக் கரைக்கும் கானக டானிக். 'செவி உள்ளவர்கள் கேட்கக் கடவது’ என்பதே ராஜா விதைத்து வைத்துவிட்ட வேதம். அப்புறம் எதற்கு விருதுகளை வேண்டி நிற்கும் வேதனை? விடுங்கள்!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th May 2014 01:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks