Results 1 to 10 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    இன்று இரவு தூக்கம் கிடையாது........

    எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பதில்லை

    பெண் ஒன்று கண்டேன் படத்தில் நாயகியை நாயகன் ராகமாலிகையாய் கற்பனை செய்யும் பாடல்

    "நீ ஒரு ராகமாலிகை என் நெஞ்சம் ஒரு காதல் மாளிகை............

    எல்லா வரிகளிலும் ஒரு ராகத்தின் பெயரை சொல்லும் கவிதை

    ராகத்தின் பெயர்களை பிரித்து பொருள் கொண்டு நாயகன் நாயகியை பாடும் வரிகள் செய்யும் வித்தை நயம்.

    எழுதியவர் கண்னதாசனா ? வாலியா ?


    "உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
    உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
    உன் இளநடை மலயமாருதம் ஆகும்
    உன் மலர் முகம் சாரமதியென கூறும்
    நீ ஒரு ராகமாலிகை
    உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
    நீ ஒரு ராகமாலிகை

    நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
    இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
    நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
    இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
    குரல்வழி பிறந்தது அம்சத்வனி
    உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி
    உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி

    நீ ஒரு ராகமாலிகை
    உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
    நீ ஒரு ராகமாலிகை

    நான் வாவனெ அழைக்கையில்
    விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி
    ஆரபிமானமும் தேவையில்லை
    இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை

    நீ ஒரு ராகமாலிகை
    உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
    நீ ஒரு ராகமாலிகை

    நீ எனக்கே தாரம் என்றிருக்க
    உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
    நீ எனக்கே தாரம் என்றிருக்க
    உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
    என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
    நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
    இந்த நாயகன் தேடிடும் நாயகியே

    நீ ஒரு ராகமாலிகை
    உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
    நீ ஒரு ராகமாலிகை"

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •