-
10th October 2014, 08:50 AM
#11
Senior Member
Senior Hubber
80’களில் கால கட்டத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வியாபார ரீதியை நோக்கி படங்களும் பாடல்களும் போய் கொண்டிருந்த நிலையில்
மலையாளத்தில் எப்பவுமே மெலோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் வந்து கொண்டிருந்தன.. ரஹ்மான் போன்ற நல்ல நடனக்கலைஞரின் படங்களில் நடன/ஆர்பாட்ட பாடல்கள் இருந்தாலும் அவற்றிலும் மொலோடி சோலோ டூயட் பாடல்கள் இல்லாமல் இருக்காது .. அப்படி 60’களில் தேவராஜன் மாஸ்டரும், பாபுக்கா, கே.ராகவன், தக்*ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் போன்றோர் எப்படி மெலோடி தந்தார்களோ அவர்கள் வழியே 80’களில் ஷ்யாம்,எம்.ஜி.ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஜாய் மற்றும் குறிப்பாக ஜான்ஸன் மாஸ்டர். ஜான்ஸன் அவர்களில் இசையில் ஒரு தனித்துவம் மெலோடிக்கு முக்கியத்துவம் என மனுஷர் நம்மை உருக்கிவிடுவார்.. மிகச்சிறந்த திறமை சாலி
இதோ 80’களில் வெளிவந்த புட்பால்(football) என்னும் சித்திரத்தில் ஜான்ஸன் மாஸ்டரின் சங்கீதம், இசையரசியின் குரலில் மதுர கானம்
வாசு ஜி , கேட்டு ரசியுங்கள் ... சில வருடங்களுக்கு முன் இந்த பாடலை இசையரசிக்கு நினைவூட்டியவுடன் ஜான்ஸன் மாஸ்டரை நினைவுகூர்ந்து இந்த பாடலை தினம் கேட்கும் பட்டியலில் சேர்த்து கொண்டார்.
ஜான்ஸன் மாஸ்டரின் மறைவு பேரிழப்பு ..
இதோ பாடல் மனசிண்டே மோகம் மலராய் பூத்து .... ஆஹா ஆஹா
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th October 2014 08:50 AM
# ADS
Circuit advertisement
Bookmarks