-
11th November 2015, 09:33 AM
#11
Senior Member
Diamond Hubber
நாயகன் படத்திலிருந்து தொடங்கினால் கூட புஷ்பக், அபூர்வ சகோதரர்கள், மகாநதி, இந்தியன், ஹேராம், தெனாலி, அன்பே சிவம், விருமாண்டி, வேட்டையாடு விளையாடு, உத்தமவில்லன்.. நேற்று வந்த தூங்காவனம் வரை இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. பல திரைப்படங்களில் கமலின் பாத்திரப் படைப்புகள் சராசரி லௌகீக வாழ்க்கையிலிருந்து வேறுபட்டிருக்கும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, குழந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சிகள், மாமனார், மாமியார் என அமைப்பான குடும்ப உறவுகள் என்றில்லாமல் எதோ ஒருவகையில் நேசித்த/அன்பு செலுத்திய உறவுகளை இழந்திருக்கும். உறவுகள் அப்படி சிதைந்துபோனாலும், அந்த சோகத்தை மனதில் ஏற்றி ஏங்கிக்கொண்டு இருப்பவராக காட்டிக்கொள்ளாமல் எஞ்சியிருக்கும் உறவுகளிடமும், புதிதாக வாய்க்கும் உறவுகளிடமும் அன்பு செலுத்தி, இருப்பதில் சுகம் கண்டு கருமமே கண்ணாக இயங்கிக்கொண்டிருக்கும். மறைந்துபோன, பிரிந்துபோன, இழந்துவிட்ட உறவுகளை நினைத்து சதா ஏங்கிக்கொண்டிருக்காமல் வாழ்க்கையின் இருத்தலை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
11th November 2015 09:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks