-
18th December 2015, 08:22 AM
#11
Junior Member
Veteran Hubber
நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஒவ்வொன்றும் கடக்கும்போது மனிதனின் சூழலும், மனநிலையும் வெகுவாக மாறுபடுகின்றதை நாம் காண்கிறோம்.
1970 களில் இருந்த குணங்கள் 80 களில் இல்லை...80 களில் உள்ளது இப்போது இல்லவே இல்லை. சகிப்பு தன்மையும் மனிதர்கள் மத்தியில் குறைந்துகொண்டுவருவதர்க்கு நிறைய உதாரணங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. இந்த நாடு என்றில்லை...எந்த நாட்டிலும் அதே தான் நிலைமை.
கற்கால மனிதன் நாகரீகம் என்ற நிலைக்கு வந்தபோது....போதை, பேதை களுக்கு அடிமையாகி தனது நிலை மறந்து ...மனிதன் என்ற நிலை போய் போக போக கற்கால மனிதனாக மாறும் அபாயம் இருக்கதான் செய்கிறது.
இயற்கையும் அதன் சீற்றத்தை அவ்வப்போது வெளிபடுத்துகிறது ! குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்....காலம் செல்ல செல்ல மனிதனில் இருந்து குரங்காக மாறுவானோ மனிதன் ?
குண நலன்களை சித்தரிக்கும் பாடல் நடிகர் திலகம் அவர்கள் நடித்த லட்சுமி கல்யாணம் திரைப்படத்தில் இருந்து -
யாரடா மனிதன் அங்கே ...கூட்டிவா அவனை இங்கே...இறைவன் படைத்த படைப்பில் குரங்குதான் நீயும் இங்கே என்ற பாடல் !
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
18th December 2015 08:22 AM
# ADS
Circuit advertisement
Bookmarks