-
7th May 2016, 11:16 AM
#11
Senior Member
Senior Hubber
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
ஒன்பதாம் பாடல்
*
ஆல கால கண்டனாகி ஆடு கின்ற முர்த்தியே
ஞால முற்றும் நன்மை செய்து நல்வழிப் படுத்துவாய்
பால பாடம் கற்றல் போல பாவி நானும் இங்குதான்
வாழும் போது உன்னை நெஞ்சில் பற்றி நின்று வணங்கினேன்
*
மகாபலிபுரம் போயிருக்கியோ”
போயிருக்கேனே மன்ச்சு… ஒரு நல்ல பாட் கூட எடுத்திருப்பாங்கள்ள..என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..ஆமா ஹீரோ பேரும் ஹீரோயின் பேருமே மறந்து போச்சு.வயசாகுது மனசாட்சி..
|ம்ஹூம் எனக்கு ஆகலை.. பட் அங்க நிறைய பாட் எடுத்துருக்காங்க.. சிலையெடுத்தான் ஒருசின்னப் பெண்ணுக்கு, கல்லிலே கலைவண்ணம்கண்டான், கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா
..ச் உன்னப் பார்த்து நானும் கெட்டுப் போயிட்டேன்..
சொல்ல வந்தது என்னன்னாக்க அங்க உள்ள கோவில்..ஜலசயனப் பெருமாள் கோவில் மாமல்ல புரத்தில இருக்கு..வெகு அழகான கோவில்..அதைப்பத்தி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ன எழுதியிருக்கார்னாக்க
செறிந்த பனைபறித்துத் திண் களிற்றை சாடி
முறிந்து விழப் பாகனையு மோதி - யெறிந்து
தருக்கடன் மல்லைக் குமைத்தான் தஞ்சமென் நெஞ்சே
திருக்கடன் மல்லைக்குள் திரி.”
“சரி..திருக்கடன் மல்லை அதாவது திருக் கடல் மல்லை மாமல்ல புரம்..திடீர்னு எதுக்கு இந்த நூத்தியெட்டுத் திருப்பதி அந்தாதிலருந்து கோட் பண்றே
விஷயமில்லாம சொல்வேனா இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்னு பார்த்தேன்னா..
கம்சனோட குவாலய பீடம் நு ஒரு யானை அதை ஏவினான் கண்ணன் மேல.. கண்ணன் ஒரு பனைமரத்தைப் பிடுங்கி அதை வீழ்த்தினான்..
அது யானையின் மீதும் அதன் பாகன் மீதும் விழுந்து இருவரையும் அழித்தது.. அப்பேற்பட்ட தோள்வலிமை கொண்ட கண்ணபிரான் தான் திருக்கடல் மல்லையில் ஸ்தல் சயனப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறாராம்..அவனையே தஞ்சமென்று திரிங்கறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்..
அதாவது அந்தப் போராட்டத்தில் கண்ணன் அந்தக் குவாலய பீடங்கற யானையின் தந்தத்தை ஒடித்துக்கொன்றாராம்.. அப்புறம் பிரம்மன்.அவருக்கு பெருமை வாய்ந்த நான்கு முகங்கள் உண்டு..
அவர்கள் இருவரையும் பற்றி இந்தப் பாட்டுல வருது..ஸிம்ப்பிள் தான் உள்ளேயே போய்ப்பார்ப்போம்
*
வேழவெண்கொம்பு ஒசித்தமாலும், விளங்கியநான் முகனும்
சூழஎங்கும் நேடஆங்கோர் சோதிஉள்ளாகி நின்றாய்
கேழல்வெண்கொம்பு அணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களமே யவனே
திரு நெடுங்களத்தில் உறைகின்ற ஈசனே.. பார்வதி மணாளா
கிருஷ்ணாவதாரத்தில் குவாலய பீடம் என்ற யானையின் வெண் தந்தத்தை உடைத்து அழித்த திருமாலும், பெருமை மிக்க நான்முகங்கள் கொண்ட பிரம்ம தேவனும் உனது ஆதியும் அந்தத்தையும் காண எல்லாவிடத்திலும் தேடினார்கள். நீயோ ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதி ஆயிற்றே..
மஹாவிஷ்ணு கேழல் எனப்படும் பன்றியின் அவதாரமெடுத்து உன் அடிகாணப் புறப்பட்டார்..அவரால் முடியவில்லை..வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக அந்த வராஹத்தின் கொம்பொன்றை ஒடித்து அணிகலனாக ஆக்கிக் கொண்டாய் நீ
அப்படிப்பட்ட நீ உன்னுடைய திருவடி நிழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைவாயாக..
*
-
7th May 2016 11:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks