-
14th May 2016, 07:44 PM
#11
Junior Member
Devoted Hubber
Rajsehar, dochu, irfan:
கால் நூற்றாண்டுக்கு மேலான யுத்தம் இது.. பங்காளிகளுக்குள் சண்டை.. நண்பர்களுக்குள் சண்டை.. ராஜா சார் அவர்களால் முகவரி பெற்ற பின்னர் அவரை நோக்கி அம்பு எய்தாதோர் யார்? நம்மை போன்ற அவர் நலம் விரும்பிகள் மட்டுமே அவரை கொண்டாடி வருகிறோம். மற்றபடி அவருக்கு நண்பர்களை விட, காலை வாரி விடுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் தான்.
பாலகுமாரனின் உடையார் மூன்றாம் இறுதியில் அந்தணர்களை கணக்கு எழுத அழைக்க வேண்டும் என்கிற விவாதத்தில், ராஜராஜ சோழன் தன மகன் ராஜேந்திரனுக்கு அறிவுரை கூறுகிறார், இதையே எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறேன். ராஜா சார், மற்றும் அவரை வெறுப்பவர் விரும்புவர், போற்றுபவர், காறி உமிழ்பவர் என இது எல்லோருக்கும் பொருந்தும்:
உடையார் பாகம் 3, அத்தியாயம்: 129
தேவை இல்லாமல் ஒரு எதிரியை ஒரு அரசன் சம்பாதித்துகொள்ள கூடாது. அதுவும் உன் நாட்டிலேயே குழப்பம் விளைவிக்க ஒரு முறையை அவன் எடுத்து விடகூடாது. ராஜேந்திரா, மிக மிக கவனமாக இரு.
...
...
தவிர, வாள் உருவி பேசுவது என்பது போர் முனையில் மட்டுமே, எதிரிகளிடம் மட்டுமே. எதிரிகளை நண்பர்களாக மாற்றி கொள்ளலாம். அது நல்லது. ஆனால், தயவு செய்து நண்பர்களை எதிரிகளாக மாற்றி கொள்ளாதே. வாழ்கை நிலைபெறாமல் போய்விடும். நிம்மதி அறுந்து தொங்கும். எனவே இத்தோடு இந்த பேச்சை முடித்து கொள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th May 2016 07:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks