-
18th August 2016, 12:59 AM
#11
Moderator
Diamond Hubber
டப்பிங் சீரியல்களால் கலாச்சாரம் அழிகிறது: சின்னத்தரை கலைஞர்கள் போராட்ட அறிவிப்பு
தமிழ் சேனல்களில் கடந்த சில வருடங்களாகவே இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியிலும் சேனல் வைத்திருக்கும் விஜய், ஜீ தொலைக்காட்சிகள் இதனை ஆரம்பித்து வைத்தது, அதன் பிறகு பாலிமர், ராஜ், வசந்த், ஜெயா என அனைத்து சேனல்களும் டப்பிங் சீரியலுக்கு தாவியது. எந்தக் காலத்திலும் டப்பிங் சீரியலை ஒளிபரப்ப மாட்டோம் அது எங்கள் இமேஜை பாதிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த சேனல்கள்கூட இப்போது டப்பிங் சீரியலை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
இதனால் நேரடி தமிழ் சீரியல்கள் வெகுவாக குறைந்து நடிகர், நடிகைள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டப்பிங் சீரியல்களுக்கு எதிராக போராட்டம் நடத்த சின்னத்திரை கலைஞர்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் தளபதி கூறியதாவது: மொழிமாற்று தொடர்களால் தமிழ் தொலைக்காட்சியை நம்பி வாழும் சின்னத்திரை கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க அறவழி விழிப்புணர்ச்சி போராட்டம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது. இதில் சின்னத்தரையின் அனைத்து சங்கத்தினரும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
அன்று முதல் இன்று வரை சின்னத்திரை சீரியல்களை விரும்பி பார்ப்பதே பெண்கள்தான் அவர்கள் தற்போது இந்தி சீரியல்களில் வரும் பெண்களின் ஆடைகள் முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் ரசனை நம் கலாச்சாரத்தைவிட்டு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. நம் கலாச்சாரத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து வேட்டையும் நடத்தவிருக்கிறோம். சின்னத்திரை முதல் பெரிய திரை வரை உள்ள அனைத்து சங்கங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் கையெழுத்து வாங்கி அதை தமிழக முதல்வரிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் . என்றார் தளபதி
நன்றி: தினமலர்
கலாச்சாரத்தை வளர்கிறவங்க கூறுகிறாங்க ;;
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறதாம்...
-
18th August 2016 12:59 AM
# ADS
Circuit advertisement
Bookmarks