-
25th September 2016, 01:31 AM
#11
Junior Member
Senior Hubber

புரட்சித்தலைவர் படங்ககளின் சண்டைக்காட்சிகள் இன்றளவும், இனிமேலும் பேசப்படுவதன் காரணம்....ஒரு அலசல்..!!
1. Fight scene க்கு முன் 'எப்படா வருவார்' என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது கரெக்டா தலைவர் Entry ஆகிவிடுவார். ரசிகர்கள் குரல்கள் கேட்டு அவர் வருவது போல ரொம்ப இயற்கையாக இருக்கும்.
2. நேர்த்தி. ஒரு படத்தில் 4 சண்டை காட்சிகள் இருந்தால் அதில் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக அமைத்திருப்பார்.
3. படங்களில் நிறைய ஆயுதங்களை வித்தியாசமாகவும் அற்புதமாகவும் கையாண்டிருப்பார் (சிலம்பம், வாள், மான்கொம்பு, ஈட்டி, சுருள் பட்டா Etc.).
4. காட்சிகளில் வீரம் இருக்கும். வன்முறை இருக்காது.
5. படத்துக்குப் படம் வித்தியாசம் மற்றும் தனக்கே உரித்தான* ஸ்டைல்...
6. தலைவரின் உடல்வலிமை. கத்தியைப் போன்று தன் உடலை "கூராக" வைத்திருப்பது.
7. சுமார் 40 வருடங்களுக்கு மேல் தன் உடலை உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பான உடலமைப்பு..
8. கேமராவே திணறும் அளவிற்கு தலைவரின் வேகம்.
9. ரிலாக்ஸா பைட் பண்ணுவார். Bcz தலைவர் புரொபஷனல் ஃபைட்டர்.
10. காட்சிகளில் எதிராளிக்கும் சமவாய்ப்பு. அப்பதான் களை கட்டும்.
11. தன் உடல்வலிமைக்கு சற்றும் குறையாத அல்லது அதற்கும் மேலான வில்லனுடன் மோதுதல்.
12. காட்சிகளை கேமராவில் அற்புதமாக கையாண்ட விதம்.
13. ஒவ்வொரு சண்டையும் குறைந்தது 7 லிருந்து 10 நிமிடத்திற்கும் அதிகமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக.
14. எதிராளியிடம் முதலில் தான் அடிவாங்குவார். நாம் Tension ஆகும் நேரத்தை தெரிந்து கொண்டு வாத்தியார் தன் பாடத்தை துவக்குவார்.
15. கடைசியாக தலைவர் எதிராளியை வென்றபிறகு அவரை மன்னிக்கும் மாண்பு. சுத்தவீரனின் அடையாளம் இது.
இதனால் தலைவர் "வாத்தியார்" ஆனாரோ.
நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்.
நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்
-
25th September 2016 01:31 AM
# ADS
Circuit advertisement
Bookmarks