Sridharan Renganathan
திரைக்கலையின் தன்னிகரில்லா தமிழ் தாயின் தலை மகன் ! திரைத் திறனில் தனித்துவமிக்க தெய்வமகன்! எழேழு ஜென்மங்கள் கடந்தாலும் ஈடிணை என்ற சொல்லுக்கே இடமளிக்காத கலைத்துவம் கொண்டு, சாதனைகள் படைத்த பல்சுவை பாவ(BHAAVA) நடிப்புலக பராக்கிரமன் சிம்மக்குரலோன் ஜெனித்த நன்னாளன்று திரைதேனிசை மெட்டில் என் வாழ்த்தொலி!
************************************************** ****************
சாதனையாளும் சீலன்!
(மெட்டு; ஒரு கோப்பையிலே) ... பாடல்;
திரு முகத்தினிலே நல் தெளிவிருக்கும்;
திரை நடிப்பினிலே மொழி சுவையிருக்கும்;
பல பாவத்திலே அது பரிமளிக்கும்;
நாம் பிரமித்திடவே அது நிலைத்திருக்கும்; (திரு)
காவியத் தாயின் தவப்புதல்வன்-உயர்
தனித்துவமாகும் திரைக்கலைஞன்; (பெரும் காவியத்)
சாதனையாளும் சீலனவன்;-புவி
சரித்திரம் போற்றும் சிவாஜியவன்; (திரு)
மானுட உலகை மயங்கவைக்கும்;-மக்கள்
மனங்கள் யாவையும் நெகிழவைக்கும்; (இம்மானுட உலகை)
நடிப்பினில் நிகரில்லா நிறைவிருக்கும்;-அதில்
நடிகர் திலகத்தின் திறனிருக்கும்; (திரு)
BY. R. SRIDHARAN.
https://www.facebook.com/SridharanRe...7867366256481/
Bookmarks