-
16th April 2018, 07:45 PM
#11
Senior Member
Devoted Hubber
பாவ மன்னிப்பாச்சே, மிஸ் செய்துவிட்டால் பிறகு எங்கே பாவ மன்னிப்பைப் பெறுவது,
வேறு ஒரு சூழலில் சிக்கியதால் வந்த மன உளைச்சல்,
எப்படியும் மஹாலட்சுமியை சென்றடைய வேண்டும், என்ன தலைவரின் ஓப்பனிங் சீனை விட்டு விடுவோம் ஐயோ எல்லோரும் கொண்டாடுவாங்களே எப்படி விட்டுவிட முடியும்,
பாரத விலாஸ் சக்கப் போடு போடு ராஜா விதமாக எனக்குள்ளாகப் பேசிக் கொண்டே கைகளில் அகப்பட்ட டூ வீலரில் பறக்கிறேன்,
வேப்பேறியை நெருங்கும் போது போஸ்டர்களின் வரவேற்பு, போகப் போக பாதியளவு போஸ்டர்களை பா...விகள் எதை எதையோ ஒட்டி மறைத்து இருந்தனர், அந்தப் பாவிகளுக்கு பாவ மன்னிப்பு கிடையவே கிடையாது,
சரி ஒரு வழியாக தியேட்டரை சென்று அடைந்து அருகில் சென்றால் கேட் பூட்டப்பட்டு " ஹவுஸ்புல்" போர்டை தொங்க விட்டிருந்தார்கள், கேட் கிரில் கேட் என்பதால் உள்ளே அலசினேன் யாராவது நண்பர்கள் உதவுவார்கள் என்பதால், என்னை தியேட்டர் ஊழியர் கவனித்து சோகமாக பார்த்தார், " சார் ரொம்ப சிரமம் எடுத்து வந்திருக்கேன் எனக்கு உட்கார இருக்கையெல்லாம் வேண்டாம் டிக்கெட் மட்டும் கொடுத்து உள்ளே அனுமதியுங்கள் என்றேன்" அவரோ இல்லை சார் டிக்கெட் மொத்தம் தீர்ந்துப் போயிடிச்சி என்றார், " ஏதாவது ஒரு வழியை நீங்களே சொல்லுங்க சார் என்றேன்" கொஞ்சம் வெயிட் பன்னுங்க சார், யாராவது வெளியே போக வருவாரு அப்படி வந்தாரானால் அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுங்கள் என்றார்,
கொஞ்சம் பொறுத்த எனக்கு தியேட்டர் ஊழியர் எதிர்பார்த்தபடி ஒரு நண்பர் அவசர அவசரமா வெளியே போக வந்தாரு , அவர் டிக்கெட்டையும் எனக்குக் கொடுத்தாரு நானும் டிக்கெட் கட்டணத்தை அவருக்கு கொடுத்தேன் ஆனால் நம்மவராச்சே வாங்க மறுத்து " சார் நான் திண்டிவனம் போகனும் தலைவருடைய முகத்தை பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன், நேரமாகுது நீங்க பாருங்க என்று கிளம்பிவிட்டார், நானும் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு அதற்கான கட்டணத்தை தியேட்டர் ஊழியரின் கையில் கொடுத்து விட்டு உள்ளே பாய்ந்தேன்,
அதற்கு மேல் சொல்ல எப்படி சொல்ல?
மஹாலட்சுமி தியேட்டர் 57 ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டது,
பாவ மன்னிப்பு வெளியான அன்றைய கொண்டாட்டத்தை நமக்கு உணர்த்தும் விதமாக நடிகர் திலகத்தின் பக்தர்களின் அமர்க்களம்,
உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன்,
மற்ற நடிகர்களுக்கு அமைந்த ரசிகர்கள் சண்டைக் காட்சிக்கும், பாடல் காட்சிக்கும் மட்டுமே விஷில் அடிப்பதும் கூச்சல் போடுவதும்
ஆனால் நடிகர் திலகம் ரசிகர்கள்
நடிகர் திலகம் தோன்றும் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்படுத்தும் நடிப்பை கொண்டாடுகின்ற ரசிகர்கள் 57 ஆண்டுகள் கடந்தும் பாவ மன்னிப்பை ரசிக்கும் அழகு,
நடிகர் திலகம் ரசிகனாய் இருப்பதற்கும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
courtesy sekar f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th April 2018 07:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks