-
22nd April 2018, 01:13 AM
#11
Senior Member
Devoted Hubber
"தெய்வமகன்"
******************
*
இவர் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவர்கள், புரிந்துக்கொள்ளாமல் இருந்தாலும் பரவாயில்லை அதிகபிரசங்கிதனமாக பேசும் போது, ரௌத்திரத்தை பழகியதை காட்ட வேண்டியுள்ளது. தடிமனான வார்த்தைகளை பிரயோகப்படுத்த வேண்டியுள்ளது.
*
அவரின் நடிப்பை தவிர்த்து இந்த சமுதாயத்திற்கு செய்த எத்தனையோ நல்ல காரியங்கள் ஊடக நண்பர்களால் மறைக்கப்பட்டிருக்கிறது.
*
எலும்பிற்கு ஆசைப்படும் குணமுடையதாகிவிட்ட மனித பதர்களை நம்பி மோசம் போன சமுதாயம் கால ஓட்டத்தின் வேகத்தில் மாறுதல் இல்லாமலிருப்பது எல்லா தேர்தலையும் காட்டுகிறது.
*
வள்ளல் குணபடைத்தவர் யாரென அவருடன் இருந்தவர்களும் பிரகடணப்படுத்தாமல்
இருந்ததினால் ஊடகங்கள் எதிர்பார்த்ததைவிட பசை அதிகமாக கொடுத்தவர்களை பத்திரிகைகள் போஸ்டர்களாக மக்கள் மனதில் ஒட்டவைத்தார்கள். இவர்களின் தயவுடன்தான் அய்யனுக்கு 'கஞ்சன்' முத்திரை கொடுக்கப்பட்டது.
*
சிவாஜி என்ற தனிமனிதன் செய்த சேவைகளை, வாரிவழங்கியதை பட்டியல் போட்டு எடுத்துச்சொன்னால் அப்பப்பா... இன்றைய மதிப்பீட்டில் எத்தனை ஆயிரம் கோடியிருக்குமென மக்கள் மன்றம் மொத்தமாக உணரவில்லை என்றாலும் ஆவண சான்றுகள் மூலம் உணராமல் இல்லை. இதனால்தான் கஞ்சன் எனும் சொல் காணாமல் போய்விட்டது.
*
அதற்கு காரணம் சிவாஜியை தெய்வமாக மதிக்கும் ஒவ்வொரும் பக்தரும் ஊடக உருவமாக மாறியதுதான்... வாட்ஸ்அப், முகநூல் போன்ற ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டதே ஆகும்.
*
அவர் இருக்கும்போது துடைக்கமுடியா பழி, அவர் இல்லாதபோது துடைக்கப்பட்டது நமக்கு வருத்தந்தான்.
*
அந்த தர்ம தேவதை இதைபற்றியெல்லாம் ஒருநாள் கவலைபட்டது இல்லை. தேவதை என்பது பெண்ணல்ல, ஆண்தான்!தர்மதேவனை ஒருபடி மேலே போய் "தெய்வபிறவி" ஆனவரை "தெய்வமகன்" என அழைக்கலாம். இது படத்தின் பெயரல்ல. உயிரோடு வாழ்ந்த ஒரு உண்ணத மனிதனின் பெயர்தான் 'தெய்வமகன்'
*
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
courtesy Natarajan p f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd April 2018 01:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks