-
21st September 2018, 03:01 AM
#11
Senior Member
Devoted Hubber
இனிய மாலை வணக்கம் நண்பர்களே!
சுவரொட்டி எண் :11
நடிப்புக் கலையைப் பொறுத்தவரை சிவாஜியை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. தமிழர்களுக்கு எப்போதும் தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் அநேகர் சிவாஜியின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
மனத்தின் உணர்ச்சிகளை முகத்தில் துல்லியமாக பிரதிபலிக்கும் கலையில் சிவாஜியை மிஞ்ச உலகிலேயே ஆள் இல்லை. அவர் ஒரே நேரத்தில் முகத்தில் ஒரு உணர்ச்சியை மட்டுமல்ல...இரண்டு உணர்ச்சிகளையும் எளிதாக பிரதிபலிப்பார். மூன்றுவித உணர்ச்சி...
களையும் அவர் சித்தரித்த கட்டங்கள் பல படங்களில் உண்டு.
இந்த நடிப்பு மேதையின் நடிப்புப்பற்றி விமர்சிக்க வருபவன், முதலில் ஒரேஒரு உணர்ச்சியை முத்தில் ஒழுங்காக சித்தரித்துக் காட்டட்டும். அதற்குமேல் எனக்கும் உணர்ச்சிகளை சித்தரிக்கத் தெரியும் ....அது வேண்டாமென்றுதான் யதார்த்தமாக முகத்தை மரக் கட்டையாக வைத்துக்கொண்டு நடிக்கிறேன் என்று பேசட்டும்.
சிவாஜியின் நடிப்புத்திறன் முக்கால் பங்கு என்றால் அவர் முக அமைப்பும்
அந்த கண்களும் இருக்கிறதே... அவை பாக்கியை முழுமைப் படுத்துகின்றன.
குளோசப்பில் காட்டப்படும் அழுகைக் காட்சியிலும் சிவாஜி ஒருவர்தான் நம்மை ரசிக்கவும் வைப்பார்; உருகவும் வைப்பார்.
மற்ற நடிகர்கள் அழும்போது தங்கள் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொள்ளாவிட்டால் நாமே பயத்தில் அழ நேரிட்டுவிடும்.
நன்றி: 19:02:1986 தினகரன் நாளிதழில் வெளியான கட்டுரையிலிருந்து சில பத்திகள்....
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st September 2018 03:01 AM
# ADS
Circuit advertisement
Bookmarks