-
18th September 2019, 12:31 PM
#11
Senior Member
Devoted Hubber
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் 48 வது வார நிகழ்ச்சி அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் இன்று மதியம் இனிதே நிகழ்ந்தேறியது.
இன்றைய நிகழ்ச்சியின் உபயதாரர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. வி. சேகர் அவர்கள். அவரும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த திரு. ராம்குமார் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பு சேர்த்தது மகிழ்ச்சிக்குரியது.
திரு. சேகர் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக நினைவுச் சான்றிதழும் புத்தகங்களும் வழங்கிச் சிறப்பித்தார் திரு. சொர்க்கம் நாகராஜ் அவர்கள்.
சிகர மன்றத்தை சார்ந்த அன்பு நெஞ்சங்கள் திரு. ML.கான், திரு. R.S. சிவா, திரு. ஏழுமலை, திரு. பாண்டியன், திரு. நந்தகுமார், திரு. சுகுமார் மற்றும் அவரது மைந்தர் உட்பட பொதுமக்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th September 2019 12:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks