-
19th March 2020, 06:15 AM
#11
Senior Member
Devoted Hubber
சிவாஜி எதிர்மறை ராசி உடையவர்.அது என்ன எதிர்மறை ராசி.நாம் யார் மீது உண்மையான அன்பு கொண்டு அவருடைய வளர்ச்சிக்காக உழைத்து உதவி செய்து அவரது முன்னேற்றத்துக்கு தாமும் ஒரு காரணம் ஆகிறோ மோ அவர ஒரு நாளைக்கு நம்மை விட்டுவிட்டு நமக்கு எதிர் முகாமில் போய் இணைந்துவிடுவார்.சிறு சிறு கரு த்து வெறுபாடுககளுக்காககடந்த கால நட்பையும் நன்றியையும் அடியோடு மறப்பது சினிமாவிலும் அரசியலிலும் சகஜம்.சிவாஜியையும் சிலர் அவ்வாறு மறந்துவிட்டார்கள்.அதில் முதன்மையானவர் ஜி.என் வேலுமணி.பதி பக்தி பட படத்தின் உச்சகட்ட காட்சி .ஜெமினியை நோக்கிச் சுட்ட ஒரு போலி துப்பாக்கி குண்டுசற்று தொலைவில் னின்று கொண்டு இருந்த தயாரிப்பு நிர்வாகி வேலுமணியின் தொடையில் பட்டு காயம் அடைந்து விழுந்துவிட்டார்.பதறிப்போன சிவாஜி உடன் இருந்து உதவிகள் செய்தார்.அவர மீது அனுதாபம் கொண்ட சிவாஜி தனியாக படம் தயாரிக்கும் படியும் அதில் நடித்து கொடுப்பதாக கூறினார்.
அவ்வாறே வேலுமணி தனியாக சரவணா ஃப்லிம்ஸ் ஆரம்பித்து சிவாஜி நடித்து பீம்சிங் இயக்கிய பாகப்பிரிவினை படத்தை தயாரித்து வெற்றிகண்டார்.அடுத்து அதே சிவாஜி பீம்சிங் யுனிட்டை வைத்து பாலும் பழமும் தயாரித்தார்.இந்த 2வெற்றிப் படங்களுக்குப் பிறகு வேலுமணி சிவாஜியை விட்டு விலகி பாதகானிக்கை படம் தயாரித்தார்படம் சரியாக போகவில்லை.பிறகு எம்ஜிஆரிடம் சென்று அவரை வைத்து பணத்தோட்டம் 'சந்திறோதயம்,கலங்கரை விளக்கம் படகோட்டி படம் எடுத்தார்.ஏ.பி நாகராஜன் இயக்கி தயாரித்து 3-11-1964 தீபாவளி அன்று வெளிவந்து வெற்றி பெற்ற சிவாஜியின் நூறாவது படமான நவராத்திரி படத்துக்கு போட்டியாக வேலுமணி தனது படகோட்டி யை வெளியிட்டார்.படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.அதன் பிறகு சில படஙகள் எடுத்த வேலுமணி பின்னாட்கலில் பல்லவன் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு சிரமங்களை சந்தித்தார்.ஆரூர்தாஸ் புத்தகத்தில் இருந்து.அடுத்து பந்துலு அவர்கள்
Thanks Vijaya Raj Kumar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th March 2020 06:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks