-
14th February 2022, 01:57 AM
#11
Senior Member
Devoted Hubber
கலியுக கர்ணன் வள்ளல் சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று.
#போராட்டம்_தொடருகிறது
தமிழக அரசு தூங்குகிறது
சிவாஜி கணேசன் 1965-ல்
பறையர்களுக்கு வாங்கி கொடுத்த
நிலத்தினை மீட்டுக்கொடு
________________________________
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கீழஊரணி பகுதியில் 200-க்கு மேற்பட்ட பறையர் குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். குடியிருப்பதற்கு மனையில்லாமல் துயரத்தோடு வாழ்ந்த இந்த மக்களின் நிலையை நினைத்து வருந்திய நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் 1965-ம் ஆண்டு இந்த பகுதிக்கு வந்து தேன்கூடு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி நாடகத்தின் வாயிலாக கிடைத்த வருவாயை வைத்து AVM.பழனியப்ப செட்டியார் என்பவர் மூலமாக இரண்டரை ஏக்கர் நிலத்தினை வாங்கி பறையர் மக்களின் பிரதிநிதிகள் பெயரில் பட்டா செய்து கொடுத்தார்கள்.
சிவாஜி கணேசன் காலனி என்னும் பெயரில் மக்களால் இந்த இடமானது அழைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது இந்த பகுதியில் வாழ்ந்துவரும் பறையர்களை அச்சுறுத்தி ஆதிக்க சாதியை சேர்ந்த பண முதலைகள் சிலர் சிவாஜி கணேசன் காலனியை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து வட்டாச்சியர் யுவராஜ் என்பவரை பயன்படுத்தி தங்கள் பெயர்களில் சட்டவிரோதமாக திருட்டு பட்டா மாற்றம் செய்துள்ளார்கள். எனவே பல ஆண்டுகளாக பறையர்குடி மக்கள் தங்களுக்கு சொந்தமான சிவாஜி காலனியை மீட்டுதரும்படி போராடி வருகின்றார்கள்.
பறையர் மக்களின் அறவழியிலான போராட்டத்தை ஆட்சியாளர்களோ அல்லது அதிகாரிகளோ ஒரு பொருட்டாகவே கருதாமல் இம்மக்களை ஏமாற்றி வருகின்ற காரணத்தால், நடக்கவிருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் புறக்கணித்து வீடுதோறும் கருப்பு கொடிகளை ஏற்றி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எனவே தமிழக அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து பறையர்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தினை மீட்டுதர வேண்டும்.
___ சடையன்பெயரன் ஊ.ம.த
siva-1042.jpg
நன்றி Vijaya Rai Kumar-( Nadigarthilagam Fans)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th February 2022 01:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks