-
10th March 2009, 01:21 PM
#11
Senior Member
Seasoned Hubber
சீரியல் வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது: நளினி
தமிழ் தொலைக்காட்சி சீரியல் உலகத்தில் தற்போது இவருக்கென்று ஓர் இடம். கொடுமையான மாமியாரா? பாசமுள்ள அம்மாவா? பாந்தமான குடும்பத் தலைவியா? எதுவாக இருந்தாலும் எல்லா கேரக்டர்களிலும் ‘நச்'சென்று பொருந்திப்போகிறார் நடிகை நளினி. ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டின் இடைவெளியில் நளினி நம்மிடம் பேசியதிலிருந்து....
சினிமாவுக்கும், சீரியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எதாவது ஒன்றில் அனுபவம் இருந்தாலே போதும் மற்றொன்று ஈஸியாக இருக்கும். நடிப்பதில் என்ன வித்தியாசங்கள் இருக்கிறது.
ஒரு காலத்தில் சினிமாவில் இருந்தேன். இப்போது சீரியலில் இருக்கிறேன். ஆனால் சினிமாவை விட இந்த வாழ்க்கை ரொம்பவும் பரபரப்பாக இருக்கிறது. எந்த நேரமும் ஷூட்டிங், கேரக்டர்களை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்பு என எந்த நேரமும் சீரியல் பற்றித்தான் யோசனை!
சினிமாவில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ, அதை நடித்து விட்டுச் சென்று விடலாம். ஆனால், சீரியலில் அது போல அல்ல; கேரக்டராக வாழ வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
சீரியல்கள் வீட்டிற்கே சென்று சந்திப்பதால் அதில் மக்கள் அனைவரும் ஒன்றிவிடுகிறார்கள். அதனால் எந்தத் தவறு செய்தாலும் சுலபமாகத் தெரிந்து விடும். ஒன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடிக்கும்போது ஒரு சீரியலின் சாயல், மற்ற சீரியல்களில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இங்கு நிலைக்க முடியும்.
‘கோலங்கள்' அலமேலு கேரக்டருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடிப்பதால் வாழ்க்கை பரபரப்பு மிக்கதாக இருக்கிறது. வேலைக்குப் போவது மாதிரிதான் ஷூட்டிங்கும்.
என்னுடன் சினிமாவில் நடித்த சக நடிகைகள், இப்போது சீரியலிலும் நடிக்கிறார்கள். அவர்களுடன் இருக்கும்போது பழைய சினிமா ஞாபகங்களைப் பற்றி பேசிக்கொள்வேன். அந்த தருணங்கள் ரம்மியமானவை.
மகன் அருண், மகள் அருணா இருவருமே நன்றாக படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வளர்த்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற என் கனவு விரைவில் நிறைவேறப் போகிறது. அதற்காகத்தான் காத்திருக்கிறேன். இருவரையுமே தமிழ் கலாசாரத்துடன் சுதந்திரமாக வளர்த்திருக்கிறேன் என்பது பெருமையான விஷயம்.
10 வருடங்களாகி விட்டது அவரை (நடிகர் ராமராஜன்) சந்தித்து... அதற்காக நான் வருத்தப்பட்டதே கிடையாது. பிடிக்காமல்தானே பிரிந்தோம். அதற்கு ஏன் வருத்தபட வேண்டும். அவருக்கென்று ஒரு வாழ்க்கை, எனக்கென்று ஒரு வாழ்க்கை என ஆகி விட்டது. இனி அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது என்கிறார் பிரிவு தந்த அனுபவத்துடன்
http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0
[/tscii]
-
10th March 2009 01:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks