லவகுசா



வசந்த் டிவியில் நாளை முதல் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. `லவகுசா' புராணத் தொடர்.

ராமாயணத்தில் சுந்தரகாண்டத்திற்கு பிறகு வரும் காண்டம் உத்திரகாண்டம். இது சிறப்பானதொரு காண்டமாகும். இந்த காண்டத்தின் நிகழ்வுகள் லவகுசாவில் இடம் பெறுகின்றன. ராமனின் மகன்கள் லவன், குகன் போன்றோரின் கதைகளையும், சீதையின் பெருமைகளையும், சீதையின் வாழ்க்கைப் பாதையின் பெருமைகளையும் சொல்லும் தொடர் இந்த லவகுசா.

தொடரில் சீதா பிராட்டியாக யுவராணி நடிக்கிறார். கவுரிமனோகர் தொடரை இயக்குகிறார். தேவநாராயணன் கதை, வசனம் எழுதுகிறார். தயாரிப்பு: டி.எஸ்.சேதுராமன்.
நன்றி: தினதந்தி