-
29th August 2009, 02:42 AM
#11
Moderator
Diamond Hubber
வேட்டை
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `வேட்டை' தொடர், விறுவிறுப்பான காட்சியமைப்பில் வேகம் பிடித்திருக்கிறது.
சின்னத்திரையில் பிரபல மலையாள வில்லன் நடிகர் திலகன் இதுவரை நடித்ததில்லை. ஆனால் இந்த தொடரில் நடிக்க அணுகியபோது கதை கேட்டவர், உடனே ஒப்புக்கொண்டு விட்டார். இதை தொடர் தயாரிப்பு வட்டாரத்தில் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். தொடரின் கதைப்பின்னணி பற்றி இயக்குனர் ஷிவராஜ் கூறியதாவது:
"திலகன் ஊர்ப்பெரிய மனிதர். ஊரில் அவருக்கு எதிராக யாரும மறுமொழி கூற மாட்டார்கள். அந்த அளவுக்கு மரியாதை அல்ல. அந்த அளவுக்கு பயம் என்பதுதான் உண்மை.
அவரது பிரதான வேலை கோவில் சிலைகளைத் திருடி வெளியாட்களுக்கு கொள்ளை லாபத்திற்கு விற்பது. அதற்காகவே வெளி ஆட்கள் யாரும் தனது ஊருக்குள் வந்துவிடாமல் பயமுறுத்தும் வண்ணம் கதிர் என்ற கிராமத்தின் பெயரை புதிர் என்று மாற்றி எழுதி வைத்தார். காவல் துறையைச் சேர்ந்த சிலரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிலரும் இவரது கையாட்கள் போலவே விளங்கினர்.
இந்த நிலையில், அரசு உள்ளூர் காவலர்கள் மீது நம்பிக்கை இழந்ததால் அடிக்கடி காணாமல் போகும் சிலைகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கிறது. இதே நேரம் தொல்பொருள் ஆராய்ச்சிப் படிப்பை முடித்த ஆறு இளைஞர்கள் இந்த ஊருக்கு வருகிறார்கள். இவர்களது வருகையால் திலகன் பீதி அடைகிறார். அடுத்து நடக்கும் சம்பவங்கள் பரபரப்பு கலந்தவை''
தொடரில் வாகை சந்திரசேகர் 3 வேடங்களில் வருகிறார். மற்றும் இளவரசன், வி.எஸ்.ராகவன், கோபி, விஜயகிருஷ்ணராஜ், நிரோஷா, ஜெயலட்சுமி, சபிதா ஆனந்த், பிரியா ஆகியோரும் உண்டு. தயாரிப்பு: ஆஸ்டர் மீடியா பிரைவேட் லிமிடெட்.
நன்றி: தினதந்தி
-
29th August 2009 02:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks