-
12th September 2009, 11:27 PM
#11
Moderator
Diamond Hubber
பிரபுநேபாலின் `777'
சேனல்களில் மெகா தொடர்கள் ஆரம்பித்தபோது அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து வந்தனர். இப்போது நிலைமை வேறு. எப்போது முடிப்பது என்ற எந்த இலக்குமின்றி கிளைக்கதைகளை புதிதுபுதிதாக உருவாக்கி ஆண்டுக்
கணக்கில் தொடரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ஒரு சீரியல் என்றால் 10 வருடம் வரை கூட தொடருமோ என்ற பயம் சின்னத்திரை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதில் விதிவிலக்கானவர் பிரபுநேபால். சின்னத்திரை தொடர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இவர், இப்போதும் கவரிமான்கள் என்ற தொடரை இயக்கி தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் உருவாகும் தொடர்கள் நீண்ட நெடுங்காலம் தொடர்ந்து ரசிகர்களை சோதிப்பதில்லை. மந்திரவாசல், கிருஷ்ணதாசி, கிருஷ்ணாகாட்டேஜ் போன்ற இவரது தொடர்கள் தேவையில்லாமல் ஒரு நாள் கூட நீடித்ததில்லை என்ற நல்ல பெயரை ரசிகர்களிடம் சம்பாதித்திருக்கிறது.
இப்படி சுருக்கமாக மனதுக்கு நெருக்கமாக சீரியல் தந்த அனுபவத்தாலோ என்னவோ இவரிடம் இப்போது உருவாகியிருக்கும் புதிய சிந்தனை, வாரம் ஒரு தொடர். அதாவது ஞாயிறில் ஆரம்பித்து சனிக்கிழமை முடிகிற மாதிரியான மினி தொடர்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அதாவது 7 நாளைக்கு 7 எபிசோடு. அதுவும் தினமும் இரவு 7 மணிக்கு. இப்படி மூன்று `7' ஒன்று சேர்வதால் இந்த தொடருக்கு 777 என்று பெயரிட்டிருக்கிறார்.
டைரக்டர்கள் அகத்தியன், மனோபாலா, `சிட்டிசன்' சரவணசுப்பையா, தாய் செல்வா ஆகியோர் தங்கள் ஒரு வார கதையை படமாக இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.சுவர்ணமால்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் இதுமாதிரியான தொடர்களை மினிசீரிஸ் என்பார்களாம். அதை கருத்தில் கொண்டு இங்கும் அதுமாதிரி மினி தொடர்களை தரத் தொடங்கிவிட்ட பிரபுநேபால் உண்மையில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். நெல்சன்மண்டேலா தனது 27 ஆண்டுகால சிறைவாசத்தை முடித்துவிட்டு விடுதலையானபோது அந்தக்காட்சிகளை படம் பிடித்து சேனல்களுக்கு கொடுத்தவர் என்ற முறையில் அப்போதே இவர் தென்னாப்பிரிக்காவில் பிரபலம். அதன்பிறகு இந்தியா வந்து தமிழகத்தில் தன் கலைப் படைப்புகள் மூலம் புகழ் பெறத் தொடங்கினார்.
கலைப்படைப்புகள் விஷயத்தில் பிரபுநேபாலின் சமீபத்திய சிந்தனை என்ன தெரியுமா? ஆப்பிரிக்க தொழில் நுட்ப கலைஞர்கள், தமிழக கலைஞர்கள் இணைந்து பணியாற்றும் படைப்புகளை தரவேண்டும். அதன்மூலம் தமிழக கலைஞர்களின் திறமை உலக நாடுகள் வரை பேசப்படவேண்டும். இதை மனதில் கொண்டு இப்போது அவர் எடுத்து வரும் ஆங்கிலப்படத்தில் தமிழக-ஆப்பிரிக்க கலைஞர்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
12th September 2009 11:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks