Results 1 to 10 of 1500

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள் II

    இந்த காட்சிக்கு சற்று முன்பாக குறிப்பாக சொல்லப் போனால் கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா பாடலின் போதே உள்ளே போலீஸ் வந்து விட்டது. அரங்க உரிமையாளர்கள் உள்ளே திரையரங்கிற்கு ரசிகர்களின் ஆர்வக் கோளாறினால் எதாவது ஊறு நேர்ந்து விடுமோ என எண்ணி அழைத்திருந்தனர். ஆனால் போலீஸ் இல்லை ராணுவமே வந்தாலும் ரசிகர்களை அடக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

    போலீசுடன் ஒரு வாக்குவாதம் ஏற்பட மன்ற நிர்வாகிகள் தலையிட்டு பொறுப்பேற்றுக் கொள்ள போலீஸ் சற்று தள்ளி நின்று பார்க்க முற்பட்டனர். அந்த நேரம்தான் பைரவர் விஜயம். இந்தோ அலப்பறை முடிந்து அவர் மனோகரின் மாளிகையில் நுழைய அடுத்தக் கட்ட ரகளைக்கு தயாரானார்கள் ரசிகர்கள். நீ அழகிலே ராணின்னு பார்த்தாலே தெரியுது ஆனா ஆட்டத்தில் ராணின்னு சொன்னானே எங்கே பார்க்கலாம் என்று சொன்னவுடன் பின்னணி இசை வேகம் பிடிக்க முன்னை விட அதிக ஆட்கள் திரைக்கு அருகே இடம் பிடிக்க சூட தீபங்கள் ஏற்றப்பட முத்தங்கள் நூறு என பாடல் ஒலிக்க தியேட்டரே ஆட ஆரம்பித்தது. அதிலும் நடிகர் திலகம் கையில் நீள ரிப்பன் வைத்த பெண்கள் சுற்றிலும் நிற்க ஒரு பக்கம் சாய்ந்து முத்தங்கள் நூறு என்று ஆரம்பிக்கும் போது கேட்ட கைதட்டலை சொல்வதா, காலை சற்றே அகற்றி இன்று எனக்கு நாளை எவருக்கு என்ற போது எழுந்த ஆரவாரத்தை சொல்வதா, இரண்டாவது சரணத்தில், ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு என கையை காட்டுவாரே அப்போது நடந்த அலப்பரையை வர்ணிப்பதா அல்லது உச்சக்கட்டமாக இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் வல்லவனை எதிர்ப்பேன் ஜெயிப்பேன் என்ற வரிகளின் போது பாடல் சத்தத்தையும் மீறி ரசிகர்கள் போட்ட வாழ்த்தொலிகள் சவால்கள் இவற்றை சொல்வதா? சுருக்கமாக சொன்னால் ரணகளம்.

    இது முடிந்தவுடன் கனகா வீடு சௌகார் சந்திப்பு இடைவேளை. இடைவேளையில் ரசிகர்களின் நினைவலைகள். பலரும் தங்கள் பழைய நட்பை புதிப்பித்துக் கொள்ள ஒரே உற்சாக வெள்ளம். திடீரென்று நாளைய திரைப்படம் என்று சொல்லி திரையில் நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே என்று அப்பர் பாட ஆரம்பிக்க அனைவரும் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினர். பாடல் முடிந்தவுடன் மீண்டும் பைரவன் காட்சி தொடர கற்பாம் மானமாம் பாடல். உடல் தெரியும் வண்ணம் அமைந்த ஷர்ட் பாண்ட் அணிந்துக் கொண்டு பாட இங்கே அமர்களத்திற்கு மேல் அமர்க்களம். அதிலும் தாய்மொழியாம் தாய் நாடாம் தாய்மை எனும் பண்பாம் என்ற வரிகளுக்கு உச்சகட்ட கைதட்டல். க்ளோஸ் அப் காட்சிகளிக்கு தீபமும் சூடமும் திரையை நோக்கியேஇருந்தன.

    அன்புடன்

    To be continued

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •