-
5th August 2010, 11:13 AM
#11
Senior Member
Veteran Hubber
அன்பான ரசிகர்களுக்கு,
பாரதிராஜா பற்றி நான் துவக்கிய வாதத்துக்கு நானே முற்றுப்புள்ளி வைக்கிறேன். விவாதம் வேறு திசைக்குப் போகும் முன் இதோடு விட்டுவிடுங்கள் ப்ளீஸ்.
டியர் பம்மலார்,
உங்கள் 'கேள்வி பிறந்தது, நல்ல பதில் கிடைத்தது' பகுதியில் கேள்விகள் கேட்டிருக்கும் அன்பர்களின் பெயரகளைப்பார்க்கும்போது, பழைய நினைவுகள் எல்லாம் அலமோதுகின்றன. இணையதளங்கள் இல்லாத அன்றைய காலகட்டங்களில், வாரப்பத்திரிகைகளே கதி என்றிருந்த நாட்களில்.... 'வேலூர் லட்சுமி செங்குட்டுவன், பூதப்பாண்டி ராமலிங்கம், திருவனந்தபுரம் எஸ்.எஸ்.மணி' ஆகியோரின் கேள்விகள் இடம்பெறாத பத்திரிகைகளே இல்லையெனலாம். அதிலும் அண்ணன் எஸ்.எஸ்.மணி அவர்கள் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிகர்திலகத்தைப்ப்ற்றி கேட்கும் கேள்விகளில் ஒரு மறைமுகமான கிண்டல், குசும்பு, நாசூக்கான நையாண்டிகள் இருக்கும். ஆனால் நல்ல மனிதர். அதுபோல பூதப்பாண்டி திரு ராமலிங்கம், பின்னாளில் ஒரு பத்திரிகையாளராக ஆனார். திரை நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்புக்காகவே பத்திரிகைத்துறையில் நுழைந்ததாக ஒருமுறை சொல்லியிருந்தார். வேலூர் லட்சுமி செங்குட்டுவனின் பெயரை அடிக்கடி குமுதம் வார இதழ்களில் பார்த்திருக்கிறேன்.
இத்தனை கேள்வி பதில்களையும் சேகரித்து வைத்திருக்கும் உங்களைப்பார்க்க மிகவும் மலைப்பாக இருக்கிறது. உங்களை இன்னொரு கல்கி, இன்னொரு சாண்டில்யன் என்று சொன்னதுபோல இப்போது இன்னொரு 'பிலிம்நியூஸ் ஆனந்தன்' என்றும் சொல்லலாம்.
டியர் முரளி,
சிவந்தமண் காட்சிகள் பற்றி இன்னும் நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது.
-
5th August 2010 11:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks