செம மூடில் இருந்தார் விஜய். எல்லாம் 'நண்பன்' தந்த பூரிப்பு. எல்லா பிரஸ்மீட்டிலும் யாரிடமோ கோபித்துக் கொண்டு வந்தவர் போலவே இருக்கமாக இருக்கும் விஜய், இந்த முறை ரொம்பவே ஜோவியலாக இருந்தது பெருத்த ஆச்சர்யம். சுமார் ரெண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த விஜய், 'வழியெல்லாம் ஒரே டிராபிக் ஜாம். நடந்து வந்தா கூட எப்பவோ வந்திருக்கலாம், ஸாரி' என்றார் மலர்ச்சியான குரலில்.
'நண்பன்' படத்தின் பத்திரிகையாளர் ஷோ நடந்தபோது விஜய் சாரால் வர முடியாமபோயிருச்சு. வழக்கமா அவரோட படங்கள் எல்லாவற்றும் சார் வந்து உங்களையெல்லாம் சந்திக்கறதுதான் வழக்கம். இந்த முறை வர முடியாமல் போனதால்தான் இப்போ உங்களையெல்லாம் சந்திக்கிறார் என்று இந்த சந்திப்பிற்கான காரணத்தையும் விளக்கினார் அவரது பி.ஆர்.ஓ. பி.டி. செல்வகுமார்.
அப்படியே தனது மிக நீண்ட உரையில் 'நண்பன்' படத்தின் கலெக்ஷன் ரிப்போட்டையும் ஏரியா வாரியாக விவரித்தார். எந்திரன் படத்தின் வசூலுக்கு இணையா எல்லா ஏரியாவிலும் வசூலாகியிருக்கு என்ற அவரது வார்த்தையை சற்று உன்னிப்பாகவே கவனித்தார் விஜய்.
வசூல் பற்றியெல்லாம் சொல்றாங்க. இதையெல்லாம் மண்டையில ஏத்திக்கிறதா வேண்டாமன்னும் புரியலை என்று பதிலளித்த விஜய், சில
கேள்விகளை 'வேண்டாம் விட்ருங்க' என்பது போலவே டீல் பண்ணினார்.
It's not crap wrong news. Itha vida glorifying statement kodukka mudiyaathu

Bookmarks