-
10th March 2012, 09:39 PM
#11
Moderator
Diamond Hubber
வெள்ளைத்தாமரை
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் `வெள்ளைத்தாமரை' தொடர், தொடக்கத்திலேயே பரபரப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
மகள் இந்து படிக்கும் கல்லூரிக்கு செல்லும் தாமரை, அங்கு "டிரியோ... டிரியோ'' என்று ஒரு பெண் அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பி பார்க்கிறாள். அந்த குரலுக்கு சொந்தமான கலைவாணி, தாமரை திரும்பிப் பார்த்ததும், அவளை வியப்போடும், கனிவோடும் பார்க்கிறாள்.
தாமரை அமைதியாக அவளைப் பார்த்துவிட்டு, தனது பழைய ஞாபகங்களை நினைவுக்கு கொண்டு வந்தாள். `இது தன்னுடைய காதலன் பிரசன்னா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ஆயிற்றே' என்று யோசித்தவள், பிரசன்னாவோடு பழகிய அந்த நாளைய நினைவுகளில் மூழ்கினாள். பிறகு சட்டென சுதாரித்துக் கொண்டு கலைவாணியை ஆழமாய் பார்த்தபடியே அங்கிருந்து சென்றாள்.
இப்படி ஒரு காட்சி கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வெள்ளைத்தாமரை தொடருக்காக சித்திரைச் செல்வன் ஒளிப்பதிவில் படமானது.
இந்த காட்சி பற்றி கதாசிரியர் ஜே.கே.கூறுகையில், "தாமரையும், பிரசன்னாவும் காதலர்கள். இது தெரியாத தாமரையின் தந்தை சூரியமூர்த்தி, தொழில் பகை காரணமாக, எதிரியின் மகனான பிரசன்னாவை கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுகிறார்.
அதோடு காதலை சொன்ன மகளிடம் காதலுக்கு பச்சை கொடி காட்டுவது போல நடிக்கிறார். ஒருகட்டத்தில் `அவன் உன்னை ஏமாற்றி விட்டு எங்கோ போய்விட்டானம்மா' என்று மகளை நம்ப வைக்கிறார்.
தந்தை சொல்வதை அப்படியே நம்பும் தாமரை, காதலனால் தான் தாய்மை அடைந்திருப்பதை தெரிவிக்கிறாள். இதை கேட்டு அதிரும் சூரியமூர்த்தி, தனது மகளின் எதிர்காலத்துக்கு அந்த குழந்தை எதிராக இருக்கும் என்பதால் பிறந்ததும் அதை கொலை செய்ய முடிவு செய்கிறார்.
தந்தையின் திட்டம் நிறைவேறியதா? தாமரைக்கு இந்த உண்மை எப்போது தெரியவரும்? கேள்விகளுக்கு, தொடரும் தொடரில் விடை இருக்கிறது.
நன்றி: தினதந்தி
-
10th March 2012 09:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks