Page 108 of 398 FirstFirst ... 85898106107108109110118158208 ... LastLast
Results 1,071 to 1,080 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #1071
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1976 -

    மக்கள் திலகதிற்கு ஒருபக்கம் அன்றைய மாநில அரசும் மத்திய அரசும் வெவ்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்துஅவரது கலையுலகம் - அரசியல் இரண்டிலும் பாதிப்பு உண்டாக்கிட எடுத்த எல்லா முயற்சிகளையும் மக்கள் திலகம் தனி மனிதனாக நின்று வெற்றி பெற்றார் .


    On January 31, 1976, the Indira Gandhi Government , dismissed DMK Government after DMK had challenged the imposition of the Emergency in 1975. The stated charges against the State Government were "corruption, maladministration and misuse of power."

    மக்கள் திலகம் அவர்களின் நடத்திய அற போராட்டதிற்கு[ 1972 முதல் போராடியதற்கு] 31-1-1976 அன்று வெற்றி கிடைத்தது .

    பதவி இழந்தவர்களின் ஆத்திரம் - கோபம் -வெறி எல்லாமே மக்கள் திலகத்தின் மீது திரும்பியது .

    அவர்கள் வைத்த குறி .\

    அண்ணா நினைவு நாளன்று [ 3.2.1976 ] சென்னையில் அவரை தாக்க முயற்சி செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் மக்கள் திலகம் அவர்கள் மைசூரில் படபிடிப்பு முடித்துவிட்டு பெங்களூர் திரும்பியதும்
    2.2..1976 இரவு சென்னை பயணத்தை மாற்றிவிட்டு
    பெங்களூர் MGR மன்ற நிர்வாகிகளுடனும் அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து மறுநாள் காலை 8 மணி பெங்களூர் - லாவண்யா அரங்கு அருகில் உள்ள கிறிஸ்துவ ஆலய மைதானத்தில் மௌன அஞ்சலி அனுசரிக்கப்படும்
    என்று முடிவு செய்யப்பட்டது .

    3-2-1976 காலை 6 மணி முதலே மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக நண்பர்களும் கூடி .விட்டனர்


    மக்கள் திலகம் அவர்கள் 7,50 மணி அளவில் ரசிகர்கள் வெள்ளம் சூழ மேடையேறினார் .
    சுமார் இரண்டாயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர் .

    சரியாக 8 மணிக்கு மக்கள் திலகம் எழுந்து நின்று 3 நிமிட மௌன அஞ்சலிக்கு பிறகு எந்தவித ஆரவாரமின்றி ,அமைதியான முறையில் ராணுவ கட்டு கோப்புடன் ரசிகர்கள் அமைதியுடன் கலைந்து சென்றனர் .
    Last edited by esvee; 27th January 2013 at 04:07 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1072
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    THANKS -MR. RAMESH - DENMARK

    மக்கள் திலகம் எம் ஜி ஆர் பிறந்தநாள் (17-01-1917 – 17-01-2013)
    January 17, 2013

    மாண்புமிகு மனிதநேய மணிமகுடம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பிறந்தநாள் . (17-01-1917 – 17-01-2013)
    அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் எம்ஜிஆர் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.
    ( பிறந்தநாள் சிறப்பு பார்வை)
    ஓராயிரம் ஆண்டுகள் போனாலும் எம் ஜி ஆர் புகழ் மங்காது..!
    உள்ளமதில் ஈழவரைச் சுமந்தவரை அள்ளித்தந்த நல்லவரை விண்ணுலகம் அழைத்ததனால்
    மண்ணுலகில் ஈழவர்கள் வேதனையில் விழுந்தனரே..!
    ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என முழங்கட்டுமே..! என்று தீர்க்க தரிசனமாக சொன்னவர் கருணைவாரிதி புன்னகை மன்னன் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்.
    வள்ளுவன் இளங்கோ கம்பனைப்போல் விரியும் புகழுக்கு ஆளாகி, விரிந்து செல்லும் புகழுக்கு மனிதராகி, மக்களால் மறக்க முடியா அன்புக்கு சொந்தமாய் திகழ்பவர் அமரர் எம் ஜி ஆர்.
    ஆறுகள் அடங்குவதில்லை ஓடிக்கொண்டே இருக்கும் அதுபோலவே எம் ஜி ஆரின் புகழாறும் ஓடிக்கொண்டே
    இருக்கின்றது.


    அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் அதுபோல் அவரின் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.
    சத்திய தாயின் உத்தம மகனாய் பிறந்து தமிழர்கள் வீடுகளில் தெய்வமகனாகி விட்டார் அமரர் எம் ஜி ஆர் என்றால் மிகையில்லை.
    சிறு வயதில் தான் பட்ட துன்பங்களை வசதிகள் வந்த பின்பு மறந்து விடாது தன்னைப்போல் சிறு பராயத்தில் கஷ்டங்களை சிறு பிள்ளைகள் படக்கூடாது என்றெண்ணி அவர்களுக்கு உணவு வழங்கி காத்து வந்தார்.

    அவரின் மனித நேயமே அவரை எல்லோரும் மதிக்கும்படி செய்தது, அஞ்சா நெஞ்சமும் சோம்பல் இல்லா சுறுசுறுப்பும் அவரை மேலே மேலே உந்தித்தள்ளியது வெற்றிமேல் வெற்றிகள் மலர்களாய் விரிந்து அவருக்கு மணம் பரப்பியது.
    தப்பு என்றால் அவர் எவராயினும் தட்டிக்கேட்க்க தயங்கியதில்லை மனதில் பக்குவம் நல்லவர்கள் கூட்டு செய்கையில் நேர்மை ஆற்றல் உள்ளவர்களை மதிக்கும் பண்பு கண்ணீர் சிந்தியோரை சிரிக்க செய்தார்.
    சிரித்தவர்களை சிந்திக்க செய்தார் அரசு பார்க்கட்டும் அது நம்ம வேலையில்லை என்று ஒதுங்கி வாழவில்லை.
    ஆபத்து காலங்களில் மக்கள் துயர் துடைக்க அலையாய் எழுந்து அல்லலுற்றோரை அணைத்தார் ஆறுதல் சொன்னார் அன்னமிட்டார், வாத்தியார் வந்துவிட்டார் என்று அறிந்தவுடன் பசியால் மெலிந்தவர்கள் முகங்களில் புன்னகை பூத்தது பொன்மனம் அவர்கள் பசியை ஆற்றியது.
    “ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்னே” என்ற அய்யன் திருவள்ளுவன் குறளுக்கு தக்கபடி வாழ்ந்து காட்டினார்.
    பசியை பொறுத்து தவமிருக்கும் வலிமை மிகுந்த முனிவர்களை காட்டிலும் பசித்தவர்கள் பசியை போக்குபவரே மிகவும் சிறந்தவர் என்பது அக்குறளின் பொருளாகும்.
    பணத்துக்கும் பதவிக்கும் யாரையும் பின்பற்றியதில்லை அவரின் செயல்த்திறன் கண்டு பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன.
    நாடி வந்தோருக்கு நல்விருந்தளித்து நல்மனதுடன் கோடி நன்மைகள் செய்தார் கொண்டோர் கொண்டாடினர் கோலமகன் கொடையுள்ளம் கண்டு.
    தனது நாடகக்குழுவில் நடித்த நலிவுற்ற கலைஞர்களுக்கு சுமார் 35 ஆண்டுகள் ஒவ்வொரு மாதமும் சம்பளம் அனுப்பிக்கொண்டிருந்தார்.
    தன் கலைக்குழுவினர் நிலையுணர்ந்து, அதிசய மனிதராக அற்புத மனிதராக உலகத்துக்கு தன் செயலால் உணர்த்தினார் .
    இன்னல்பட்ட ஈழமக்களுக்கும் உதவிகள் செய்தார் அவர்கள் விடிவுக்கு பல வழிகளிலும் கைகொடுத்தார்.
    தமிழர்கள் எல்லோரும் இன்று அவர் புகழை அறிவார்கள் அவரை கேலி செய்தோர் கிண்டல் செய்தோர் எல்லோரும் இன்று அவரை சொந்தங்கொண்டாடுகின்றார்கள் என்றால் தர்மத்தின் வலிமை எத்தகையது என்பதனை அறியலாம்.
    அவரைப்போல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நடிகன் முன்புமில்லை இன்றளவுமில்லை ஆனால் புகழில் அவருக்கு இணையாக எவரும் நெருங்க முடியவில்லை இன்றளவும் இனியும் வரப்போவது இல்லை.
    தொழில்களை நேசித்தார் தொழிலாளிகளை போற்றினார் அவர்கள் பெருமைகளை நாட்டு மக்களுக்கு தனது நடிப்பாலும் பாட்டாலும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி..
    என்ற அவரின் பாட்டை கேட்டு உற்சாகம் கொண்ட தொழிலாளிகள் ஓடியோடி உழைத்தனர்..
    உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே என்றொரு பாட்டினால் பொருளாதாரத்தால் நொந்த ஏழைத்தொழிலாளிகள் இதயத்துக்கு ஒத்தடம் கொடுத்தார்.
    பாடுபட்ட கை இது பாட்டாளிக்கை என்று தொழிலாளி பெருமையினை எழுச்சியுடன் பறைசாற்றினார்.
    தனது நடிப்பால் அவர் கைவீசி புன்னகைத்து எழுச்சி கூட்டி நடிக்கும் அழகு பொலிவு அவருக்கு மட்டுமே வரும் கலை.
    என்றும் அவர் இரசிகர்கள் அவர் நினைவாகவே வாழ்கின்றார்கள் அவர் சொன்ன நல்ல பாதையில் அனைவரும் நடத்தலே உண்மையில் அவரின் ஆன்மாவுக்கு மேலும் மேலும் மகிழ்வைத்தரும்
    எம் ஜி ஆர் நாமம் வாழ்க.
    ஆக்கம்
    இரசிகன்
    ம .இரமேசு
    Written by Thurai · Filed Under Denmark News
    Last edited by esvee; 27th January 2013 at 05:46 PM.

  4. #1073
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy - thiru balaganesh- minnal varigal

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.

    படத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

    அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார்.

    அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் *சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

    உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)

    அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க. பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

    அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு *ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட, பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

    சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

    திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

    அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்*சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின *பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

    பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்*சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


    படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு.

    படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?

    ‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!

  5. #1074
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    RAMANATHANPURAM, COIMBATORE

    Last edited by ravichandrran; 27th January 2013 at 08:04 PM.

  6. #1075
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    TRICHY ROAD, RAMANATHANPURAM, COIMBATORE


  7. #1076
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1077
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    PHOTO TAKEN DURING MY VISIT TO POLLACHI.


  9. #1078
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    ROYAL THEATRE, COIMBATORE

    Last edited by ravichandrran; 27th January 2013 at 08:34 PM.

  10. #1079
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    STICKER PASTED AT ROYAL THEATRE, COIMBATORE


  11. #1080
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    courtesy - thiru balaganesh- minnal varigal

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.

    படத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

    அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார்.

    அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் *சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

    உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)

    அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க. பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

    அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு *ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட, பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

    சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

    திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

    அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்*சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின *பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

    பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்*சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


    படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு.

    படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?

    ‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!
    I differ with balaganesh for some of his writing. For instance, வெந்நீர் நதி(?) ஓடுகிறது - since it is a den there is a possibility of hot springs and as per the scene the water is stagnant and is not running.

    மலையுச்*சியிலயா குடியிருக்காரு? - Yes the palace back side has been built over the summit.

    ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே - Very sad to say that MGR movies had some logic, same story in Hindi, the door of the den is opened by magic, but in Tamil it is opened by lever mechanism. Is this is'nt logic. Since everybody knows that MGR will not act in fantasy oriented movies.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •