-
7th February 2013, 09:22 AM
#1651
Junior Member
Devoted Hubber
Dear Thiru.Raghavendra,
தெரிந்தோ தெரியாமலோ உங்களிடத்தில் ஒரு பலவீனம் இருக்கிறது.பிறர் சொல்வதை தவறாக புரிந்து கொள்வதோடு மட்டுமின்றி, அதை உங்கள் இஷ்டத்திற்கு திரிக்கவும் செய்கிறீர்கள்.(எனக்கு மைசூர் போண்டா பிடிக்கும் என்று சொன்னால், Ganpat மங்களூர் போண்டாவின் பரம எதிரி எனபது போல).
ஒரு நிறுவனத்தில் production, engineering, sales, personnel, என்று பல துறைகள் இருக்கும். அனைத்தும் அவசியம்.ஆனால் சிலர் இயல்பிலேயே சில துறைக்குத்தான் சரிபட்டு வருவார்கள்.நான் சொல்ல வந்தது அதுவே."எனக்கு ஊர் ஊராக திரிந்து பொருள்களை விற்கும் மனப்பாங்கு இல்லை" என்று சொல்வதால் நான் sales ஐ மட்டம் தட்டுவதாக அர்த்தம இல்லை.
மகா ஸ்ரீ ஸ்ரீ உ.வே.சா.பரண் மேல் ஏறாதிருந்தால் நமக்கு ஐம்பெருங்காப்பியங்ககள் கிடைத்திரா.அது கூட தெரியாத அப்பாவி இல்லை நான்.மேலும் என் பதிவில் உங்களை பற்றியும் நான் எதுவும் சொல்லவில்லை.எனவே ...
தங்களுடைய விவாதங்களில் என் பெயர் ஏன் அடிபடுகிறது. தெரியவில்லை.
தாங்கள் ஏப்ரல் 2012ல் தான் வந்துள்ளீர்கள். இன்னும் 100 பதிவுகள் வரவில்லை. தங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் வந்தவர் வாசுதேவன். இரவு பகலாக உழைத்து இன்று 3000 பதிவுகளை எட்டும் நிலையில் இருக்கிறார். பல்வேறு சொந்த அலுவல்களுக்கிடையில் நாங்கள் - தங்கள் பாஷையில் சொல்வதானால் - பரண் மேல் ஏறு தூசு தட்டி ஆவணங்களை இங்கு பதிவிடுகிறோம். இவற்றின் அருமை தங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதனை கேலி செய்யும் வகையில் பதிவினை எழுதியது அதிர்ச்சியளிக்கிறது. ஆய்வெழுத எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம், எவ்வளவு உழைப்பு தேவைப் படுகிறதோ அதைப் போல் பல மடங்கு, ஆவணங்களைத் தருவதற்கு தேவைப் படுகிறது. இன்றைக்கு ஒரு பழைய பேப்பர், சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பான நாளிதழைத் தேடி எடுத்து பிரதி எடுக்க தேவைப் படும் சிரமங்களை யும் பொருட்செலவையும் சற்றே விசாரித்துப் பாருங்கள், தங்களுக்கு அதனுடைய மதிப்புத் தெரியும். அந்த அடிப்படையில் பார்த்தால் நமது பம்மலார் இதுவரை நமக்கு அளித்துள்ள ஆவணங்கள் - விலை மதிப்பற்றவை என்பது ஒரு பக்கம் - குறைந்த பட்சம் 70 ஆயிரம் ரூபாய்களிலிருந்து ரூ. 1.0 லட்சம் வரைக்கும் மதிப்புப் பெறும். பம்மலார், வாசுதேவன் போன்ற நமது சிவாஜி ரசிக நண்பர்களெல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்தா செய்கிறார்கள்.
.....என்பது விவாதத்தை திசை திருப்ப நீங்கள் செய்துள்ள ஒரு அதீத கற்பனை மட்டுமே.
ஆனால் யாராவது ஒருவர் போக வேண்டும் எனத் தாங்கள் எழுதியிருப்பது வியப்பை அளிக்கிறது. மற்ற அனைவரும் மன வருத்தங்களை மறந்து மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து நடிகர் திலகத்திற்காக பதிவுகளை இட வேண்டும் என பொதுவாக கேட்டுக் கொள்வார்கள். ஆனால் தாங்களோ யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். அல்லது அப்படி எனக்குத் தோன்றுவது தவறா தெரியவில்லை.
மீண்டும் உங்களது திரிக்கும் மனப்பான்மை வெளிப்படுகிறது.நான் கேட்பதெல்லாம் இதுதான்.வாசுவின் 1907 எண் பதிவு நாகரீகமானதா இல்லையா? இதை moderators தீர்மானிக்கட்டும்.அப்படி அதில் தவறில்லை எனும் பட்சத்தில், வனஜா &கோபால் திரும்பி வருவது அவர்கள் இஷ்டம்.அதற்கு மாறாக முடிவெடுத்தால், அதை எழுதியதிற்கு வாசு வருத்தம் தெரிவித்து விட்டுதான் வரவேண்டும் என்பதே.இதை எப்படி நீங்கள் யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். என குயுக்தியாக எடுத்துக்கொண்டீர்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
சிலம்பு கண்ணகியுடையதா கோப்பெருந்தேவியுடையதா எனும் வழக்கில், கண்ணகியுடையதே என நிரூபணம் ஆன பிறகு, தவறான தீர்ப்பு அளித்த குற்றத்திற்கு தன் உயிரையே கொடுத்து தன்னை தண்டித்து கொண்டான் பாண்டிய மன்னன்.அதுதான் அந்தகால மனு நீதி..
ஆனால் தவறு எல்லார் பேரிலும் உள்ளது.கண்ணகி சோழ நாட்டை சேர்ந்தவள்.பாண்டிய நாட்டிற்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. பொற்கொல்லனோ நம் இனம். 300 மாதங்களாக இங்கு நம்முடன் பணி புரிகிறான்.எனவே அவனையும் தண்டிக்க முடியாது.ஆகவே சிலம்பு 6 மாதம் அதன் உரிமையாளரான கண்ணகியிடத்தும்,5 மாதம் மகாராணியிடத்தும் 1 மாதம் பொறகொல்லனின் மனைவியிடத்தும் இருக்கவேண்டும் எனும் தீர்ப்பு ..தற்போதய கழக நீதி..
இங்கு வழங்கப்படும் தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி.
-
7th February 2013 09:22 AM
# ADS
Circuit advertisement
-
7th February 2013, 09:47 AM
#1652
Senior Member
Seasoned Hubber
டியர் கண்பத் சார்,
பல்வேறு சொந்த மனக்கஷ்டங்கள் மற்றும் அலுவல்களுக்கிடையில் நேரம், உழைப்பு, யாவையும் செலவழித்து இங்கு நடிகர் திலகத்தின் சிறப்புகளை எடுத்தியம்பவே நான் இங்கு முனைந்து வருகிறேன். விவாதங்களைத் திரித்து மனக் கசப்புகளை வளர்த்து விரோதங்களை வளர்க்கும் மனப் பான்மை எனக்குக் கொஞ்சமும் கிடையாது அதற்கான நேரமும் அவசியமும் கிடையாது. ஆவணங்களைத் தேடிப் பிடித்து இங்கு தருவதில் உள்ள சிரமங்களை சொல்வதில் என்ன திசை திருப்பும் முயற்சி உள்ளது எனத் தெரியவில்லை. தாங்கள் உ.வே.சா. வைப் பற்றி எழுதிய வரிகளுக்குக் தான் பதில் எழுதினேன். தங்களுக்கு அவ்வாறு மனப்பான்மை இல்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். இதில் திசை திருப்பும் முயற்சி என்று எழுதுவது ஏன். அதில் என்ன கற்பனை உள்ளது.
அதே போல் தங்கள் விவாதங்களில் என் பெயர் இடம் பெறுகிறது என்பதற்கு பொருள் ... சிவகாமியின் செல்வன் பாடலைப் பற்றிய தங்கள் அனைவரின் விவாதங்களில் என்பதையே நான் குறிப்பிட்டுள்ளேனே தவிர , உங்கள் ஒருவரைத் தனியாகக் குறிப்பிட வில்லை. அதில் என் பெயரை தாங்கள் எழுதவில்லை என்பதையும் நான் அறியாதவனல்ல. சம்பந்தமில்லாமல் என் பெயரை இந்த விவாதத்தில் ஏன் கொண்டு வர வேண்டும்.
அதே போல் ஒரே ஒரு பதிவினை மட்டும் தாங்கள் குறிப்பிட்டு கூறுவதிலிருந்து தங்களிடம் பேசிப் பயனில்லை என நான் உணர்கிறேன். எனவே இனிமேல் இதில் கருத்துக்களைக் கூறுவதில் எனக்கு உடன் பாடு இல்லை.
என் எழுத்துக்களில் ஏதேனும் பிழையிருந்தால் அல்லது தங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும். ஏனென்றால் தெரிந்து யார் மனதையும் புண்படுத்தும் தைரியமும் குணமும் எனக்கில்லை.
Last edited by RAGHAVENDRA; 7th February 2013 at 09:52 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th February 2013, 10:17 AM
#1653
Junior Member
Devoted Hubber
நன்றி திரு ராகவேந்தர்..
உங்கள் பேரிலும் எனக்கு எந்த கோபமோ,வருத்தமோ இல்லை..
மேலும் எனக்கும் இந்த விவாதத்தை இழுக்க மனமில்லை.
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
வணக்கம்.
-
7th February 2013, 10:46 AM
#1654
Junior Member
Seasoned Hubber
Hope everyone must forget their differences and come
back to this wonderful thread of our NT.
-
7th February 2013, 11:27 AM
#1655
பிரபு அவர்கள் நடிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் மக்கள்திலகத்திடம் ஆசிபெற்றபோது கீழ்வரும் பொருள்படி அவர் சொன்னதாய்ப் படித்திருக்கிறேன் -
'' சண்டைக்காட்சிகளில் வேண்டுமானால் என்னை ஆசானாய்க் கொள். ஆனால் காதல் இணைப்பாடல் காட்சிகளுக்கு உன் தந்தையே மிகச்சிறந்த முன்னோடி..'' .
.
நாயகியின் கரம் தன்வசம் வந்தால் அதை உரிமை, அன்பு, காதல் கலந்து வருடி ஆராதிக்கும் அழகு உடல்மொழி நடிகர்திலகம் தனிமொழி..
சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து பாடலில் மரக்கிளை அருகே சரோஜாதேவி கைக்கு அவர் நடத்தும் காதல் ஆராதனை நினைவிருக்கிறதா?
------------------------
நீலவானம்
பசுந்தரை
வெண்-சேலை, மல்லிகை,கழுத்து நகை. புன்னகை..- நாயகி
கருங்கேசம், வசீகர முகம், மென்னடர் நிற உடை, உள்ளங்கவர் நடை - நாயகன்
ஶ்ரீதர்,மெல்லிசை மன்னர், கவியரசர், ஒளிப்பதிவாளர் என எல்லாரும் உச்சத்தில் துணைநிற்க
நடிகர்திலகத்தின் காதலிணைப்பாடல்கள் எனும் தேன்குடத்தில் ஒரு துளி..
Last edited by kaveri kannan; 7th February 2013 at 11:31 AM.
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
7th February 2013, 11:37 AM
#1656
Junior Member
Seasoned Hubber
Mr Kaveri Kannan
Superb Sir your Kavithai Nadai.
-
7th February 2013, 04:26 PM
#1657
Senior Member
Seasoned Hubber
-
8th February 2013, 01:49 AM
#1658
நன்றி திரு கோல்ட்ஸ்டார் அவர்களே!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
8th February 2013, 12:21 PM
#1659
Administrator
Platinum Hubber
It is with utter disappointment and embarrassment that moderators are continually called to moderate this thread. Even Ajith and Vijay threads are running without any moderation these days as those fans seem to know where to draw the line.
The purpose of Hub is for mutual discussion and exchanging of thoughts and NOT the place for childish arguments and name-calling. Very very disappointing!
WARNING
1. No personal abuses will be tolerated and will result in the respective Hubber banned immediately.
2. All posts should ONLY discuss Sivaji Ganesan and his movies.
3. Action will be taken on anyone making provocative posts.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th February 2013, 12:46 PM
#1660
Administrator
Platinum Hubber

Originally Posted by
adiram
NOV sir,
Congradulations for acheiving 20,000 posts in the hub (ammadiyoooo...)
Waiting for your 50,000 goal.
This EXACTLY what I am referring to.
What does it matter about posts? What has it got to do with NT? Does it add any value to the discussion here?
People who open the thread to find a new discussion, end up feeling frustrated and eventually won't even bother coming back here.
PLEASE STOP THIS NONSENSE.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks