-
28th February 2013, 12:50 PM
#1991
//dig..
Gopal sir,
Please dont mistake me. I want to show me as nutral and for that I have to use the word 'group'. But it is well known you are the one told first about groups, like 'aal serkiraar', 'politics panraar' like that. But it seems there are two groups here (I dont want to mention names) one is 'talking about all movies' and the other one is 'talking about very selective movies'.
ok... leave it, we are all in Shivaji Group.
and regarding the 'medhaavithanam', why you take that word is for you, as I didnot mention your name or some other?. It will apply to all who are all writing in that nature, sometimes me too.
thanks again.
dig ends//
-
28th February 2013 12:50 PM
# ADS
Circuit advertisement
-
28th February 2013, 12:57 PM
#1992

Originally Posted by
sumithaa
you are not a true fan if you don't likethis movies .
Sumithaa,
It seems too much.
No one has the right to categorise any one whether he is a true fan or not.
Please reconsider your post.
-
28th February 2013, 01:51 PM
#1993
Mr. Chandrasekhar sir,
Nice to see the photo from Ananda Vikatam pokkisham. NT with V.P.Singh and others.
You also there in that picture makes it a very special one (I think the one who is standing behind NT).
It would be better if you round-up your face in that snap, sothat everyone here can identify you.
-
28th February 2013, 02:25 PM
#1994
Senior Member
Seasoned Hubber
நமது நண்பர் கே.சந்திரசேகர் அவர்கள் நடிகர் திலகத்தின் பின்னால் நிற்கிறார். சிவப்பு நிறத்தில் அம்புக்குறி இட்டு காட்டப் பட்டுள்ளது.

[தினத்தந்தி வாசகன் என்பதை நிரூபித்து விட்டேனாக்கும்]
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th February 2013, 02:34 PM
#1995
Senior Member
Seasoned Hubber
திரு. ஆதிராம் அவர்களே,
தங்கள் அன்புக்கு நன்றி.
அம்புக்குறியிட்டுக் காட்டி அசத்திய திரு.ராகவேந்திரன் அவ்ர்களுக்கு நன்றி.
Last edited by KCSHEKAR; 28th February 2013 at 02:39 PM.
-
28th February 2013, 02:38 PM
#1996
Senior Member
Seasoned Hubber
டியர் ஜோ சார்,
மெல்லிசை மன்னர்களுக்கு அந்தப் பட்டம் வழங்கிய நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் அடியேனும் ஒருவன் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் கூற விரும்புகிறேன். அந்த விழாவை நடத்தியது திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடெமி. அந்த சபா இன்னும் இயங்கி வருகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர் திரு என்.கே.டி. முத்து அவர்கள். அவர் தனியாக திருவட்டீஸ்வரன் பேட்டை சபா நடத்தி வந்தவர். இந்த விழாவிற்கு சில நாட்கள் முன்னர் அந்த அகாடெமி உறுப்பினர்களிடம் பல்வேறு பெயர்களை தரச் சொல்லி அதிலிருந்து தேர்ந்தெடுத்து தந்த பட்டம். சிவாஜி கணேசன் அவர்களுக்கு எத்தனையோ பட்டங்கள் யார் கொடுத்தாலும் எப்படி ஒரு ரசிகர் தந்த நடிகர் திலகம் என்ற பெயர் சாஸ்வதமானதோ அதே போல் விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு யார் எந்த பட்டம் கொடுத்தாலும் ஒரு ரசிகர் தந்த மெல்லிசை மன்னர்கள் என்ற பெயர் தான் அவர்களுக்கு நிலையான புகழைத் தந்துள்ளது. உள்ளன்போடு ஒரு ரசிகன் தரும் ஆதரவே நிலையானது என்பதற்கு இவ்விரண்டும் சரியான உதாரணங்கள். செவாலியே, பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று எவ்வளவோ அடைமொழி இருந்தாலும் நடிகர் திலகம் என்ற பெயரை உச்சரிக்கும் போது ஏற்படும் புல்லரிப்பு மற்றவற்றில் இல்லை.
அந்த நிகழ்ச்சி சென்னை என்.கே.டி. கலாமண்டபத்தில் நடைபெற்றது. அது open air theatre. அரங்கத்திற்கும் கேலரிக்கும் நடுவில் மிகப்பெரிய மைதானம். அந்த மைதானத்தில் சேர்கள் போடப் பட்டிருக்கும் . கிட்டத் தட்ட 1000 நாற்காலிகள் கொள்ளும். அது அன்றி கேலரியில் கிட்டத் தட்ட 500 பேருக்கு மேல் அமரலாம். அவையனைத்தும் நிரம்பி மைதானத்தில் நாற்காலி இடத்தை சுற்றிலும் நின்று கொண்டே பார்த்த மக்கள் மட்டுமின்றி போகும் வழியிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒலி பெருக்கி நெடுஞ்சாலை முகப்பிலும் வைக்கப் பட்டிருந்ததால் மக்கள் அங்கும் நின்று கொண்டிருந்தனர். நான் பள்ளி மாணவன்ஆகையால் நண்பர்களுடன் சிவாஜியைப் பார்க்கும் ஆசையில் முதலிலேயே போய் கேலரியில் அமரந்து விட்டோம். நாற்காலிகளில் உறுப்பினர்களுக்குத் தான் முன்னுரிமை.
நடிகர் திலகம் உள்ளே நுழையும் போது அந்த அரங்கில் எழுந்த அளப்பரை சொல்லி மாளாது. என் பங்கிற்கு நானும் எழுந்து குதிக்கிறேன். கை தட்டுகிறேன். அப்போதே எப்படியோ மனதில் நுழைந்து விட்டிருந்தார். அன்று தொடங்கிய ரசிகத் தன்மை இன்று வரை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
நினைவுகளை அசை போட வைத்ததற்கு நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th February 2013, 02:41 PM
#1997
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரா சார்.
மெல்லிசை மன்னர் விழா பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நன்றி . நேரடியாக பங்கு பெற்ற உங்கள் குதூகலம் உணரமுடிகிறது .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
28th February 2013, 02:54 PM
#1998
//செவாலியே, பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று எவ்வளவோ அடைமொழி இருந்தாலும் நடிகர் திலகம் என்ற பெயரை உச்சரிக்கும் போது ஏற்படும் புல்லரிப்பு மற்றவற்றில் இல்லை.//
Because, there will be many Chevaliers, many Padhmashrees, many Padhmabooshans...... but....
ONLY ONE NADIGAR THILAGAM in the world.
-
28th February 2013, 02:55 PM
#1999
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே,
ஆதிராம் சொன்னது போல் நாம் அனைவரும் சிவாஜி என்ற குரூப் தான். ரத்தத்தில் ஏ, பி, ஏ பாசிடிவ், பி பாசிடிவ், என்பது போன்று பல்வேறு குரூப்கள் இருப்பது போல் நம்முடையது சிவாஜி குரூப் ரத்தம், கோபால் உள்பட.
சுமிதா அவர்களே,
கோபால் சாரும் தீவிரமான சிவாஜி ரசிகர் தான், நடிகர் திலகத்தை கடவுளாக மதிப்பவர். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற ரசிகர்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் நடிகர் திலகத்தின் படங்களை சகட்டு மேனிக்கு விமர்சிப்பது தான் நம்மால் தாங்க முடிவதில்லை. ஒரு வட்டத்துக்குள் அவரை அடக்க முற்படுவதை நான் எதிர்த்துக் கொண்டே தான் இருப்பேன். அவர் படங்களை கோபால் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அது உரிமை. அதற்காக நடிகர் திலகத்தின் பங்களிப்பை அந்த படங்களில் consider பண்ண மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் போது தான் மனம் மிகவும் கஷ்டப் படுகிறது. சொல்லப் போனால் இவர் நடிகர் திலகத்தை சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் போது நமக்குத் தான் MENTAL TORTURE. நடிகர் திலகத்தின் பங்களிப்பை எந்த ஒரு படத்தினின்றும் ஒதுக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பாத்திரத்திலும் மிக நுண்ணியமான நுட்பமான விஷயத்தை செய்திருக்கிறார். அது வெற்றிக்கு ஒருவனாகட்டும் தர்மராஜா வாகட்டும், அவருடைய பங்களிப்பு 100 சதவீதத்திற்கு 0.1 சதவீதம் கூட குறைவில்லாமல் முழுமையாக தன் பங்கை அளித்திருக்கிறார்.
அவருடைய 50 வருட திரையுலக பங்களிப்பை வெறுமனே குறிப்பிட்ட சில படங்களுக்குள் அடக்க முயல்வதை நம்மால் ஜீரணிக்க முடியாது. அப்படிப் பட்ட போக்கு இருக்கும் வரை என்னுடைய எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.
மற்ற படி அவருடைய எழுத்து நடையிலோ அல்லது அவர் சொல்லும் பாணியிலோ குறை சொல்ல ஏதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் சிவகாமியின் செல்வன் பாடல் அவருடைய சிறந்த ஆய்வினை எடுத்துக் காட்டியதாகும். ஆனால் சொல்லும் போது சில சமயம் எழுத்து வேகத்தில் சில சொற்கள் அவரை மீறி வந்து விட்டாலும் கூட ஆய்வு சிறந்த முறையில் இருப்பதை மறக்க முடியாது.
கோபால் தாங்கள் சிவாஜி ரசிகர் தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, அது தெரிந்த ஒன்று தான்.
தங்களுக்கு பிடித்த படங்களை எழுதுங்கள். ஆனால் தங்களுக்கு பிடிக்காதவை மற்றவர்களுக்கு பிடிக்கலாம் என்பதை மனதில் வைத்து எழுதுங்கள். அந்தப் படங்களைக் கிண்டல் கேலியை விட்டு விட்டு அவற்றில் நடிகர் திலகம் என்ன செய்திருக்கிறார் என்பதை ஆராயுங்கள். உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஏதேனும் ஒரு SPARK அவர் தருவார். அதிலிருந்து எங்களுக்கும் புதிய தகவல்கள் கிடைக்கும்.
தாங்கள் வெறுக்கும் படங்களை மீண்டும் ஒரு முறை பொறுமையாக பாருங்கள். படம் எப்படி என்பதை விட்டு விட்டு bias இல்லாமல் பார்க்கும் போது புதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பை உணர்வீர்கள். அது கூட எங்களை விட உங்களுக்குத் தான் அதிகம் புலப் படும்.
Last edited by RAGHAVENDRA; 28th February 2013 at 03:01 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th February 2013, 03:30 PM
#2000
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sumithaa
you are correctly told mr. adiram. the other thread what you have mentioned mgr thread is currently going steadily with united postings and praising their actor like anything . no criticism. no arguements - no warnings . we have to learn the good things ,
well said
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks