Page 90 of 397 FirstFirst ... 40808889909192100140190 ... LastLast
Results 891 to 900 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #891
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மறக்க முடியாத அந்த நாட்கள்- மே -1973



    மே -11 அன்று வெளியான மக்கள் திலகத்தின்'' உலகம் சுற்றும்

    வாலிபன் '' மகத்தான வெற்றி செய்தி கிடைத்தவுடன் மதுரை

    மாநகரம் நோக்கி மக்கள் திலகம் ரசிகர்கள் திண்டுக்கல்

    இடைதேர்தல் வெற்றிக்காக குவிந்தனர் .




    மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கட்டு கோப்புடன் , திட்டமிட்டு 6 சட்ட

    மன்ற தொகுதிகளை பிரித்து கொண்டு இரவு பகல் பாராது

    புரட்சித்தலைவரின் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு

    சேகரித்து தங்களுடைய அயராத உழைப்பை வெற்றிக்கு

    பாடு பட்டார்கள் .


    அன்றைய தினம் மத்திய ஆளும் காங்கிரஸ் -பிரதமர் இந்திராகாந்தி

    ஸ்தாபன காங்கிரஸ் - பெருந்தலைவர் காமராஜர்

    திராவிட கழகம் - பெரியார்

    திராவிட முன்னேற்றகழகம்

    கண்ணதாசன்

    நடிகர் திலகம் மற்றும் பல நடிகர்கள்

    மற்றும் அனைத்து பத்திரிகைகள் - வடநாட்டு பத்திரிகைகள் -

    ஆளும் கட்ட்சிகளின் அதிகார பலம்

    என்ற பல நெருக்கடிகளை எதிர் கொண்டு நம் மக்கள் திலகம்

    நூறு நாள் கட்சி

    நடிகர் கட்சி

    அரிதாரம் பூசியவர்

    அரசியல் அனுபவம் இல்லாதவர்

    மலையாளி

    என்றெல்லாம் தரமற்ற வார்த்தைகளால்

    மக்கள் திலகத்தை எதிரணியினர் மேடை பேச்சாளர்கள் பலரும்

    தரமற்ற முறையில் பேசினர்


    பொது மக்களும் - மக்கள் திலகத்தின் ரசிகர்களும் - கம்யுனிஸ்ட் தோழர்களும் நம் மக்கள் திலகத்துக்கு அளித்த மாபெரும் வெற்றி பரிசு ''திண்டுக்கல் வெற்றி மாலை ''.

    எனவே அன்று தொடங்கி 40 ஆண்டுகளாக


    நம்முடைய மக்கள் திலகத்தின் சினிமா


    நம்முடைய மக்கள் திலகத்தின் அரசியல்


    புகழ் என்றென்றும் ஆளுகிறது .

    உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்களும் -

    அபிமானிகளும் - நடுநிலையாளர்களும் என்றென்றும் பெருமை

    கொள்ளும் விதமாக நல்ல கலை உலகம் - அரசியல் சாதனைகள்

    நடத்தி நம்மை எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தவிட்ட

    மக்கள் திலகம் ஒரு'' உலக வரலாற்று நாயகன் ''
    Bro. Eswee, Kannadhasan resigned from DMK in 1961 and in 1973 he was in Congress. Therefore, your statement that Kannadhasan was there on behalf of DMK is not true.
    Mahendra Raj

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #892
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள்
    என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?

    Thanks to Mr. Ashok Kumar

  4. #893
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like

    Newspaper a clippings of USV shooting in Singapore

    Quote Originally Posted by MGR Roop View Post
    Ulagam Sutrum Vaaliban in English title are:

    World Roaming Bachelor (in one webiste)

    World Trotting Youth
    Hi All, the National Library Board of Singapore (NLB) has the archives of MGR and his troupe's visitation to Singapore and Malaysia extracted from the English daily Straits Times, Malay daily Berita Harian and the Tamil daily, Tamil Murasu. Most of the archived reports can be read on line except for some as one needs to be a member of NLB. Unfortunately, the news reports cannot be copied but it can be obtained for a fee.

    Try accessing the NLB and you will be overwhelmed with the numerous vernacular and English news report on the shooting as well as interviews given by MGR to the English press in 1970 (if I am not mistaken in the month of September/October). The key word in the search engine of the NLB is 'MGR and Ulagam Sutrum Vaaliban shooting'. Happy retrograde surfing!
    Mahendra Raj

  5. #894
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Kannadhasan resigned from DMK in 1961 and in 1973 he was in Congress. Therefore, your statement that Kannadhasan was there on behalf of DMK is not true.

    pl read my posting. i never mentioned about kannadasan as d.m.k

    only mentioned kannadasan who canvased in that election against m.g.r

  6. #895
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    உரிமைக்குரலில் அண்ணன் தம்பியின் பாசபோராட்டம்

  7. #896
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    காவியம் சொல்லும் காதல் காட்சிகள் - மென்மையான காதல் காட்சிகளில் மேன்மையானவர்

  8. #897
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    விழியே கதை எழுது - கண்ணீரில் எழுதாதே
    நிகரில்லா நிலைத்து நின்ற பாடல்..இன்றைய தலைமுறையினராலும் விரும்பப்படும் பாடல்..பள்ளி பேருந்துகளில் இந்த பாடல் ஒளிபரப்பப்படும்போது..ஒன்ஸ் மோர் கேட்ட பாடல்..கேட்க கேட்க திகட்டாத தேன் சொட்டும் பாடல்..வினோத் சார் எனக்காக மீண்டும் ஒருமுறை பதிவிடுங்கள்..


  9. #898
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #899
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    தோல்விகளைச் சந்தித்த ஸ்ரீதருக்கு உதவ உரிமைக்குரல் என்ற படத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர்.

    'சந்திரமுகி', 'சின்னத்தம்பி' ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் பி.வாசு. இவரின் தந்தை பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் மேக்கப்மேனாக இருந்தார்.

    தன் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் மூலமாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தார் ஸ்ரீதர். அதற்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது. 'உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம். ஆனால் நாம் இருவரும் இது குறித்து பேசவேண்டும். ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்தித்துப் பேசுவோம்' என்று எம்.ஜி.ஆர். தகவல் அனுப்பினார்.

    இதனால் நெகிழ்ந்து போன ஸ்ரீதர், 'உங்கள் வீட்டுக்கு வந்து சந்திக்கிறேன்' என்று எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். மறுநாள் காலை தன் ராமாவரம் தோட்டத்திற்கு வருமாறும், இருவரும் ஒன்றாக சிற்றுண்டி சாப்பிடுவோம் என்றும் எம்.ஜி.ஆர். அழைத்தார். அதன்படி மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்குச் சென்று அவரை சந்தித்தார் ஸ்ரீதர்.

    'உங்களை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்' என்று ஸ்ரீதர் கூற, 'உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கும் மகிழ்ச்சி' என்றார், எம்.ஜி.ஆர். சிற்றுண்டி சாப்பிட்டபடி, இருவரும் மனம் விட்டுப் பேசினார்கள். 'நீங்களும், நானும் ஒன்று சேருவதை விரும்பாதவர்கள் நமக்குள் பிளவு ஏற்படுத்த ஏதாவது முயற்சி செய்யக்கூடும். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாதீர்கள். என்னிடம் விளக்கம் கேளுங்கள்' என்று ஸ்ரீதர் கூறியபோது, எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார்.

    'நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம் ஸ்ரீதர்! உங்களுக்கு எத்தனை நாள் கால்ஷீட் வேண்டுமானாலும் முன்னுரிமை கொடுத்து தேதி ஒதுக்கித் தருகிறேன். எப்படியும் மூன்று மாதங்களுக்குள் உங்கள் படத்தை முடித்துக் கொடுக்கிறேன். கவலையை விடுங்கள். மேலே ஆக வேண்டியதை கவனியுங்கள்' என்றார்.

    ஸ்ரீதர் விடைபெற எண்ணியபோது, 'ஒரு நிமிஷம் உட்காருங்கள்' என்று கூறிய எம்.ஜி. ஆர்., தன் செயலாளரை அழைத்து ஒரு கடிதம் தயாரிக்கச் சொல்லி, அதில் தன் கையெழுத்தைப் போட்டு, ஸ்ரீதரிடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் மெய் சிலிர்த்துப் போனார், ஸ்ரீதர். 'நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புதல் அளிக்கிறேன். அவர் படத்துக்கு முன்னுரிமை தந்து மூன்று மாதங்களுக்குள் முடித்துத்தர சம்மதிக்கிறேன்' என்று அக்கடிதத்தில் எம்.ஜி.ஆர். எழுதியிருந்தார்.

    'நீங்கள் சொன்னால் போதாதா? எழுதி கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டுமா?' என்று உணர்ச்சிவசப்பட்ட குரலில் ஸ்ரீதர் கூறினார். 'ஸ்ரீதர்! இது உங்களுக்காக அல்ல; பைனான்சியர்களுக்காக! இது பெரிய பட்ஜெட் படம். பணப்பற்றாக்குறையால் நீங்கள் சிரமப்படக்கூடாது. இந்தக் கடிதத்தைக் காட்டினால், பைனான்சியர்கள் உடனடியாக உங்களுக்கு பணம் கொடுக்க முன்வருவார்கள்' என்றார் எம்.ஜி.ஆர்.

    இதைக்கேட்டு ஸ்ரீதர் கண் கலங்கிவிட்டார். எம்.ஜி.ஆர். சொன்னது உண்மையாயிற்று. ஸ்ரீதர் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததுமே, பைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும் ஸ்ரீதர் வீட்டை மொய்க்கத் தொடங்கினர். படம் தயாராவதற்கு முன்பே தேவையான பணம் கிடைத்துவிட்டது. ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த அந்தப்படம் 'உரிமைக்குரல்.' இதில் எம்.ஜி.ஆரின் ஜோடி லதா. வேட்டியை புது மாதிரி (ஆந்திர பாணியில்) கட்டிக்கொண்டு எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆர். முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், படம் வேகமாக வளர்ந்தது.

    எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் மனத்தாங்கல் இருந்து வந்த நேரம் அது. எம்.ஜி.ஆரைத் தாக்கி, கண்ணதாசன் ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அப்படியிருந்தும், கண்ணதாசன் எழுதிய பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். நடித்தார். குறிப்பாக, 'விழியே கதை எழுது' என்ற பாடல் காட்சி, மிகச்சிறப்பாக அமைந்தது.

    1974-ல் உரிமைக்குரல் ரிலீஸ் ஆயிற்று. 'எம்.ஜி.ஆர்- ஸ்ரீதர் இணைந்து எடுத்த படம் வெற்றி பெறாது' என்று சிலர் சொன்ன ஆரூடம் பொய்யானது. படம் சூப்பர் ஹிட்! எம்.ஜி.ஆர். ரசிகர்கள், 'இது எம்.ஜி.ஆர். படம். பிரமாதம்!' என்றார்கள். ஸ்ரீதர் ரசிகர்கள், 'இது ஸ்ரீதர் படம்தான். அவருடைய தனித்தன்மையை விட்டுவிடவில்லை' என்றும் புகழ்ந்தார்கள். இந்தப்படத்தின் வெற்றி, சித்ராலயாவை நிதி நெருக்கடியில இருந்து பெரும் அளவுக்கு மீட்டது. ஸ்ரீதர் உற்சாகம் அடைந்தார். சிவாஜி நடித்து, பாதியில் நின்ற 'ஹீரோ 72' படத்தின் பெயரை 'வைரநெஞ்சம்' என்று மாற்றி, விரைவாகப் படப்பிடிப்பு நடத்தி, ரீலீஸ் செய்தார்.

    பத்மபிரியா அறிமுகமான படம் இது. இந்த சமயத்தில், சடையப்ப செட்டியார் என்ற தயாரிப்பாளரும், மதன் என்ற பைனான்சியரும் ஸ்ரீதரை சந்தித்தனர். 'நாங்கள் இருவரும் உங்களுடன் கூட்டாக சேர்ந்து, எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறோம்' என்று கூறினார்கள். அதற்கு ஸ்ரீதர் சம்மதித்தார். படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதம் தெரிவித்ததுடன், 'கதையைக்கூட எனக்குக் கூறத் தேவை இல்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முதல் நாள் வந்து என் கேரக்டர் பற்றி சொல்லுங்கள், போதும்' என்றார். 'மீனவ நண்பன்' என்ற பெயரில் படத்தைத் தயாரிக்க ஸ்ரீதர் தீர்மானித்தார். இதே நேரத்தில் ஜேயார் மூவிசார் ஸ்ரீதரை அணுகி, 'எம்.ஜி.ஆரை வைத்து நாங்கள் ஒரு படம் தயாரிக்கிறோம். அதை நீங்கள் டைரக்ட் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஸ்ரீதர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். படத்துக்கு 'அண்ணா! நீ என் தெய்வம்' என்று பெயர் சூட்டப்பட்டது. 'இந்தப்படத்தை பிரமாதமாக எடுப்போம்' என்றார், எம்.ஜி.ஆர். முதலில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வேகமாக வளர்ந்து வந்த இப்படம் இடையில் சில மாதங்கள் தடைப்பட்டு நின்றது. காரணம், ஸ்ரீதருக்கு ஏற்பட்ட ஒரு விபத்து. அதுபற்றி தன் வாழ்க்கை வரலாற்றில் ஸ்ரீதர் எழுதியிருப்பதாவது:-

    (Source: http://cinema.maalaimalar.com/2012/0...-director.html)
    Last edited by masanam; 13th May 2013 at 06:01 PM.

  11. #900
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    தோல்விகளைச் சந்தித்த ஸ்ரீதருக்கு உதவ உரிமைக்குரல் என்ற படத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர்.
    (தொடர்ச்சி)

    'ஒரு நாள் இரவு நான் பாத்ரூமிலிருந்து வெளியே வரும்போது தரை வழுக்கி, தலைகுப்புற விழுந்துவிட்டேன். கீழே கிடந்த ஒரு இரும்புக்கம்பி இடது கண்ணில் குத்த, என் விழியே வெளியே வந்துவிட்டது. நடு இரவில் பிரபல கண் டாக்டர் பத்ரிநாத்தைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்து, உடனடி சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்குப் போனேன். இரவு டியூட்டியில் இருந்த டாக்டர், விழியைப் பொருத்தித் தைத்துவிட்டார். மறுநாள் டாக்டர் பத்ரிநாத்திடம் போனபோது அவர் ரொம்ப வருத்தப்பட்டுவிட்டார். 'உடனே என்னிடம் வந்திருக்க வேண்டியதுதானே?' கண் சிகிச்சை என்பது ஸ்பெஷலிஸ்டுகள் கவனிக்க வேண்டியது அல்லவா? இது கூட தெரியவேண்டாமா? இப்போது விஷயம் சிக்கலாகிவிட்டதே!' என்று கூறி, சிகிச்சை ஆரம்பித்தார்.

    அவரிடம் முதலிலேயே சென்றிருந்தால் சீக்கிரம் குணமாகியிருக்கலாம்; தாமதம் செய்ததால் குணம் அடைய இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.' இவ்வாறு ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.

    குணம் அடைந்ததும், 'அண்ணா, நீ என் தெய்வம்', 'மீனவ நண்பன்' ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பையும் தொடங்கினார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. தேர்தல் இந்த சமயத்தில் 1977 தேர்தல் வந்தது. அதனால், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தேர்தல் பிரசாரத்துக்கு சென்றார், எம்.ஜி.ஆர். தேர்தலில் அவருடைய 'அண்ணா தி.மு.க' வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீதரை எம்.ஜி.ஆர். அழைத்தார். 'மீனவ நண்பன் முடிவடைய இன்னும் எத்தனை நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும்' என்று கேட்டார். 'இரண்டு நாட்கள் கொடுத்தால் போதும்' என்றார், ஸ்ரீதர். உடனடியாக எம்.ஜி.ஆர். தேதி கொடுத்தார். அந்தத் தேதிகளில் படப்பிடிப்பு நடந்து, 'மீனவ நண்பன்' பூர்த்தி ஆயிற்று. ('அண்ணா, நீ என் தெய்வம்' படம், 4 ஆயிரம் அடிதான் தயாராகி இருந்தது. அந்தக் காட்சிகளை, பின்னர் நடிகர் - டைரக்டர் கே.பாக்யராஜ் தன்னுடைய 'அவசர போலீஸ் 100' படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.) தமிழக முதல்-அமைச்சராக 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்.

    பதவி ஏற்பு விழாவுக்கு ஸ்ரீதரை அழைத்து வி.ஐ.பி.க்களின் வரிசையில் அமரச் செய்தார். 'மீனவ நண்பன்' 14-8-1977 அன்று வெளிவந்தது. 'உரிமைக் குரல்' போல் சூப்பர் ஹிட்டாக அமையவில்லை என்றாலும் நூறு நாள் ஓடியது. (முதல்-அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்து முடித்த மற்றொரு படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'. இது 14-1-1978-ல் வெளியானது.) (Source: http://cinema.maalaimalar.com/2012/0...-director.html)
    Last edited by masanam; 13th May 2013 at 06:05 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •