-
23rd April 2013, 10:45 PM
#431
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் அதிக கவனம்!
நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்குக் கடமைப்பட்டவள். இது எல்லாம் சின்னத் திரைக்கு வந்த பிறகுதான் நடந்தது. அதே போல சின்னத் திரையில் நிறைய வசதிகள் உள்ளன. சினிமாவில் சொல்ல முடியாத பல விஷயங்களைச் சின்னத் திரையில் சொல்ல முடிகிறது. அதுதான் நான் சின்னத் திரையில் அதிக கவனம் செலுத்தக் காரணம்
' என்கிறார் நடிகை தேவயானி.
-
23rd April 2013 10:45 PM
# ADS
Circuit advertisement
-
23rd April 2013, 10:45 PM
#432
Moderator
Diamond Hubber
சன் மசாலா!
சன் சின்னத்திரை தொடர் குடும்பங்கள் பங்கேற்கும் "சன் சூப்பர் குடும்பம்' நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை இரவு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக முதலில் சுகன்யா, மீனா, கங்கை அமரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இப்போது அதன் சூப்பர் 8 சுற்று தொடங்கியுள்ளது. இதற்கு நடுவர்களும் மாறியுள்ளனர். கங்கை அமரன் சன் சிங்கர் நடத்த போய்விட்டதால் அவருக்குப் பதிலாக டி.ராஜேந்தர் நடுவராக வந்துள்ளார். சுகன்யாவிற்குப் பதிலாக நடிகை சங்கீதா. நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் காயத்ரி ஜெயராமுடன் சின்னத்திரை நடிகர் தீபக் இணைந்துள்ளார்.
-
23rd April 2013, 10:46 PM
#433
Moderator
Diamond Hubber
சுஹாசினி நடிக்கும் சிவசங்கரி!
சனிக்கிழமை தோறும் இரவு 10.00 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திகில் தொடர் "சிவசங்கரி'. இத்தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் சுஹாசினி நடிக்கிறார். இத்தொடரைப் பற்றி இயக்குநர் குருவித்துறை கே. ஜெ. தங்கதுரை கூறுகையில் "இது திகில் தொடர் என்பதால் காட்டு பகுதிகளில் சென்று படப்பிடிப்பு நடத்துவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஆதி மங்கலம் என்ற ஊருக்குள் அந்நியர்கள் புகுந்து பிரச்னையை உண்டாக்குகிறார்கள். அந்த நேரத்தில் அபசகுணமாக கோவிலின் கலசம் வெடித்துச் சிதறுகிறது. அமைதி பூங்காவாக இருந்த ஆதி மங்கலம் பரபரப்பான கிராமமாக மாறுகிறது. இதற்கிடையில் சங்கரிக்கு ஏற்படும் பிரச்னைகள் என்று பரபரப்பான கட்டங்களில் பயணித்து வருகிறது சிவசங்கரி' என்கிறார்.
-
23rd April 2013, 10:47 PM
#434
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் தொகுப்பாளியாக தேவி கிருபா!
ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "வெள்ளித்திரை'. இந்த நிகழ்ச்சியில் சினிமா உலகின் பரபரப்பான செய்திகள், புதிதாக வெளியாகும் படங்கள் பற்றி இயக்குனர்களின் கருத்து, புதுமுகங்கள் பற்றி விபரங்கள், தினமும் ஒரு சினிமா தகவல், கலைஞர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து, திரையுலக திருமண விழாக்கள், பட துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா, சினிமா சம்பந்தமான பிரச்சனைகள் குத்த விவாதங்கள் என பல சினிமா தகவல்களை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்குகிறார் நடிகை தேவி கிருபா.
-
23rd April 2013, 10:47 PM
#435
Moderator
Diamond Hubber
வாய்ப்புகளை மறுக்கும் ஜஸ்வர்யா!
சின்னத் திரையில் அழகான தொகுப்பாளினியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஜஸ்வர்யாவை சினிமா வாய்ப்புகள் சுற்றிச் சுற்றி வருகின்றனவாம். "எந்திரன்' படத்தில் நடிக்க அழைத்தார்களாம் அம்மணி போகவில்லை. "பரதேசி'யில் நடிக்க பாலாவும் அழைப்பு விடுத்தாராம் நடிக்கவில்லை. இப்படி பெரிய திரை வாய்ப்புகளை ஏன் தவிர்கிறீர்கள் என்று கேட்டால், "எனக்கு சின்னத் திரையே போதும், அதோடு எனக்கு நடிப்பதில் ஆசையில்லை படிப்பதில்தான் ஆர்வம். நான் ஐ.ஏ.எஸ் ஆகப் போகிறேன்' என்கிறார் ஐஸ்வர்யா.
-
6th June 2013, 11:49 PM
#436
Moderator
Diamond Hubber
வில்லியாக மாற ஆசை… சின்னத்திரை நடிகை கவிதா
கதாநாயகியாக நடிப்பதை விட வில்லியாக நடிப்பதுதான் சவாலான விசயம். எனவே சீரியலில் வில்லத்தனம் செய்வதுதான் என்னுடைய விருப்பம் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கவிதா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக கடந்த 15 ஆண்டுகளாக சீரியல் உலகில் சிறந்த நடிகையாக அறியப்பட்டு வரும் கவிதா அழகு மட்டுமல்ல நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர். சன் தொலைக்காட்சியில் சக்தி தொடரில் அறிமுகமாகி இப்போது இல்லத்தரசி வரை பல தொடர்களில் நடித்துள்ள கவிதா தன்னுடைய சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
-
6th June 2013, 11:51 PM
#437
Moderator
Diamond Hubber
சீரியலில் இருந்து காணாமல் போகும் கதாநாயகிகள்!
சினிமாவில் என்னதான் சண்டை என்றாலும் இயக்குநருடன் ஒத்துப்போகாவிட்டாலும் படம் முடியும் வரை நடித்துக் கொடுத்துவிட்டுதான் வருவார்கள் கதாநாயகிகள். ஆனால் சின்னத்திரை சீரியல்களில் அப்படியில்லை. சில எபிசோடுகளிலேயே இவருக்குப் பதில் இவர் என்று கார்டு போட்டு ஆளையே மாற்றிவிடுவார்கள். சின்னச் சின்ன கதாபாத்திரங்களுக்குதான் இதுபோன்று கார்டு போட்டு வந்த சீரியல் இயக்குநர்கள் இப்போது கதாநாயகிகளையே மாற்றிவிடுகின்றனர். பைரவி, சொந்த பந்தம், முத்தாரம், வாணி ராணி போன்ற பல சீரியல்களில் இதுபோன்று கார்டு போட்டு ஆளை மாற்றி நடிக்க வைக்கின்றனர். இதுபோன்ற மாறிய நடிகைகள் வேறு சீரியல்களில் சீரியசாக நடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது சீரியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுவார்கள்.
-
30th June 2013, 04:16 AM
#438
Moderator
Diamond Hubber
சினிமாவா... ஆளை விடுங்க..!
விஜய் டி.வியில் ‘ஜோடி நம்பர் ஒன்’ நடனப் போட்டியில் சிவ.கார்த்திகேயனோடு சேர்ந்து ஆடி ஜெயித்தவர் ஐஸ்வர்யா. இதைத் தொடர்ந்து வந்த சினிமா வாய்ப்புக்களை தவிர்த்து விட்டவர், இலக்கணம் மாறுதோ, மகாபாரதம் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் மகாபாரதம் தொடரில் திரவுபதிஇவர்தான்.
“ஏன் சினிமா வாய்ப்பை தவிர்த்து விட்டீர்கள்?” ஐஸ்வர்யாவைக் கேட்டால்...
‘‘எனக்கு சினிமா பார்ப்பதில் தான் ஆர்வம்.. நடிக்கிறதில் இல்ல. பத்தாவது படிக்கும்போதே சசிகுமார் டைரக்ஷனில் சுப்பிரமணியபுரம் படத்தில் நடிக்க அழைத்தார்கள். எனக்குத்தான் ஆர்வம் இல்லை. அதனால் மறுத்து விட்டேன். அடுத்து பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’, ‘பரதேசி’ படங்களுக்கு அழைப்பு வந்தது. அதையும் தவிர்த்து விட்டேன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தயாரிப்பாளரா என் எல்லையை விரிவுபடுத்தினால் போதும் அதற்கு என் விஸ்காம் படிப்பு நிச்சயம் உதவும்.’’
‘‘திரவுபதியாக நடித்த அனுபவம் எப்படி?’’
‘‘இன்னும் என் போர்ஷன் வரவில்லை. முன்னோட்டக் காட்சிக்காக கொஞ்சம் நடித்ததோடு சரி. அப்போதே திரவுபதியாக நடிக்க என்னை தயார்ப்படுத்திக் கொண்டு விட்டேன். ஒரு புராணத் தொடரில் அதுவும் புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில் எனக்கு அப்படியொரு சந்தோஷம். மக்கள் ரொம்ப காலத்துக்கு நினைவில் வைத்திருப்பார்களே..!’’
நன்றி: தினதந்தி
-
20th July 2013, 03:16 AM
#439
Moderator
Diamond Hubber
வேண்டாம், டப்பிங் சீரியல்
சின்னத்திரையில் இப்போது டப்பிங் சீரியல்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சில சேனல்களில் 50 சதவீதம், சில சேனல்களில் 100 சதவீதம் என்று இந்த ஆதிக்க எல்லை பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் சின்னத்திரை சீரியலை நம்பி இருக்கும் சின்னத்திரை கலைஞர்களை ஒட்டு மொத்தமாக அது அழித்து விடும். அதனால் இந்த டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பும் சேனல்கள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சேனல்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது சின்னத்திரை கூட்டமைப்பு.
இதுபற்றி சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவர் கவிதாபாரதி கூறுகையில், ‘‘இந்த டப்பிங் சீரியல்களால் டப்பிங் கலைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.அதில் கூட குறிப்பிட்ட சிலருக்குத் தான் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்கிறது. இதுவே தொடர்ந்தால் மற்ற கலைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே இந்த டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பும் சேனல்கள்அதை நிறுத்த கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதல்வரின் கவனத்திற்கும் எங்கள் கோரிக்கையை முன்வைக்கிறோம்’’ என்கிறார்.
நன்றி: தினதந்தி
-
28th July 2013, 04:12 AM
#440
Moderator
Diamond Hubber
]ஜீன்ஸ், டீ சர்ட் பிடிக்காது! ஸ்ருதிகா9
[size=1
எனக்கு ஜீன்ஸ், டீ சர்ட் அணிவது பிடிக்காது; புடவை அணிவதுதான் பிடித்திருக்கிறது என்று நடிகை ஸ்ருதிகா கூறியுள்ளார். பெரிய திரையில் அறிமுகமாகி, இன்று சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிகா. அவர் அளித்துள்ள பேட்டியில், என் அம்மா பிறந்தது சென்னை, அப்பா மலேசியா. நான் பத்தாவது வரை மலேசியாவில் படிச்சேன். அப்புறம் சென்னை வந்து ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். நான் மீடியாவிற்குள் வருவதற்குக் காரணமே என் அக்கா சுதாதான். டிவி ஆங்கரிங், விளம்பரத்துறை என பிசியாக இருந்த எனக்கு வெண்ணிலா கபடிக்குழு பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வேங்கையில் தனுஷ் தங்கையா நடித்தேன். மதுரை டூ தேனி படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்தபோது சீரியல் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஜீ தமிழ் சேனலில் மாமியார் தேவை தொடரில் அழகான மருமகள் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. எனக்கு ஜீன்ஸ், டிசர்ட் போட்டு நடிப்பதை விட புடவைதான் பிடித்துள்ளது. அதேபோன்ற நான் நடிக்கும் கதாபாத்திரங்களும் அமைவது என்னுடைய அதிர்ஷ்டம் என்றே கூறுவேன். சினிமாவில் நடித்துவிட்டு உடனே சீரியலுக்கு போனது ஏன் என்று கேட்கின்றனர். எனக்கு எல்லா கதாபாத்திரமும் நடிக்க வராது. குறிப்பா அயிட்டம் டான்ஸ் ஆட வராது. நான் நினைத்த கதாபாத்திரம் கிடைத்தால் சினிமாவில் நடிப்பேன். அதுவரை எனக்கு சீரியலில் கிடைத்து வரும் பெயர், புகழ் போதும், என்று கூறியிருக்கிறார்..
[/size]
Bookmarks