-
6th June 2013, 05:03 PM
#41
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்,
கட்டபொம்மன் திரைப்படத்தைப் பற்றிய தங்கள் அலசல் அபாரம்.
தாங்கள் மிகுந்த இன்வால்வ்மெண்டில் எழுதியதில் ஒரு எழுத்துப் பிழையை கவனிக்காமல் விட்டு விட்டீர்கள். அது 1791-1799 அல்லவா,
jokes apart.
கட்டபொம்மன் திரைப்படத்தில் மிக முக்கியமான அம்சம் காஸ்ட்யூம் டிசைனிங், Set Properties மற்றும் Presentation. மிக அழகாக காலத்தை பிரதிபலிக்கும் உடை யமைப்பு இப்படத்திற்கு ஒரு கூட்டல் புள்ளி... சாரி ... PLUS POINT.
இயக்கம் மிக சிறப்பானது. வெள்ளையர்களின் ஆதிக்கம், எதிர்ப்பு இவை ஒரு புறம் இருக்க, சில வெள்ளைக் கார அதிகாரிகள், PROTOCOL அனுசரிப்பதில் கவனமாக இருந்தார்கள் என்பதை இப்படம் சித்தரிக்கிறது. அதே வெள்ளையர்களில் மற்றொரு வர்க்கம் எதிரியை இளக்காரமாகப் பார்ப்பதுவும் இப்படத்தில் காட்டப் பட்டுள்ளது. எதிரியைப் பற்றி தெரியாதிருந்தால் வெள்ளைக் காரர்களின் அணுகுமுறையில் ஒரு formal approach இருக்கும். ஆனால் காட்டிக் கொடுக்கப் பட்ட எதிரியாக இருந்தால் அவனைத் துச்சமென மதித்து நடத்துவதும் அவர்களுடைய குணமாக இப்படத்தில் காட்டப் பட்டிருக்கிறது. இதுவும் நடைமுறையில் இருந்துள்ளதாக பல கட்டுரைகளில் படித்த நினைவு. இதன் ஒரு பிரதிபலிப்பாகவே ஜாக்சன் துரையுடனான உரையாடலைக் கூறலாம். இருக்கை கூட தராமல் அவமதிக்கும் குணம் கொண்ட வெள்ளைக்காரனாக ஜாக்சன் காட்டப் பட்டிருப்பதும் ஒரு வகையான reflection of history.
தொடருங்கள்... மேலும் மேலும் படிக்க ஆவலாயுள்ளோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th June 2013 05:03 PM
# ADS
Circuit advertisement
-
7th June 2013, 07:45 AM
#42
Junior Member
Newbie Hubber
வாசு - உனது பதிவு காட்சியை கண்முன் நிறுத்தி அசை போட வைக்கும் அற்புதம்.
சர் .ராகவேந்தர் ,சர் .கண்பட் -உங்கள் உந்துதல் என் மீது சுமையை அதிகரித்து கொண்டே உள்ளது.
-
8th June 2013, 05:46 PM
#43
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-38
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
----To be continued.
Last edited by Gopal.s; 9th June 2013 at 10:26 AM.
-
9th June 2013, 12:13 PM
#44
Senior Member
Senior Hubber
Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-38
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
----To be continued.
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தங்கள் பாகம்-38 அற்புதம்!
ஒரு விஷயத்தை பெரும்பாலோர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். கட்டபொம்மன் அவருடைய முதல் பத்து சிறந்த நடிப்பைத் தாங்கி வந்த படங்களில் வராது என்பது! தங்களுக்கேயுரிய தைரியம் மற்றும் அதை எப்படி விளங்க வைக்க வேண்டும் என்பதில் உங்களுக்கிருக்கும் தன்னம்பிக்கை தான் அதன் காரணம்.
எனினும் ஒன்று. நான் எழுதிய அண்மைப் பதிவில் குறிப்பிட்ட படி, ஒரு நடிகன் அவனுடைய நடிப்பினால் மட்டுமே, ஒட்டு மொத்த அரங்கையும் - ஏன் ஒரு சமுதாயத்தையே, பல பல ஜெனரேஷன்களாகக் கட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் ஒரு படம் இது என்றால், அது மிகையாகாது.
யாரும் பார்த்திராத ஒரு பாத்திரத்தை, சுதந்திரப் போராட்டத்தில் கட்டபொம்மனை விடவும் பலர் பெரிய பங்கு பெற்றிருக்க, அந்த அளவிற்கு பங்களிக்காத ஆனால் உலக கவனம் பெறாத ஒரு சிறிய மண்டலம் மட்டுமே அறிந்திட்ட - அதுவும் நாடகம்/பாளையக்காரன் கூத்தின் மூலம் அறியப்பட்ட ஒரு பாத்திரத்தை, முழுவதும் உள் வாங்கி, இன்றளவும், கட்டபொம்மனைப் பெரிதாக பேச விட்டதில் - அதுவும் வெளி நாடுகளிலும் - நடிகர் திலகம் எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறார், உயிரை விட்டிருக்கிறார் என்பது புரியும்.
திரு. வாசுதேவன் அவர்கள் குறிப்பிட்டது போல, கட்டபொம்மனை விடவும் ஒரு பெரிய வீரன் இல்லை என்பதை பெரிய சண்டைக் காட்சிகள் இல்லாமல், நடிப்பினால் மட்டுமே செய்து காட்டிய அதிசயம் "வீர பாண்டிய கட்டபொம்மன்" தான். படம் நெடுகிலும் அவரிடம் தெறிக்கும் கொப்பளிக்கும் எனர்ஜி, உடல் மொழி, கவனம், ஒவ்வொரு மிகச் சிறிய அசைவு மற்றும் கணங்களிலும் அவரிடம் தெரிந்த நுணுக்கமான தலை முதல் கால் வரை தெரிந்த அற்புத உடல் மொழி - நீங்கள் குறிப்பிட்டது போல், வசனங்கள் இல்லாமலேயே, அந்தப் பாத்திரத்தை சிரஞ்சீவிப் பாத்திரமாக்கி விட்ட அதிசயம்.
அற்புதம். தொடருங்கள் - ஆனந்தம் தாருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
9th June 2013, 12:44 PM
#45
Junior Member
Newbie Hubber
Originally Posted by
parthasarathy
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தங்கள் பாகம்-38
அற்புதம். தொடருங்கள் - ஆனந்தம் தாருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
நம்பினால் நம்புங்கள். முதல் ஆளாக நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். புரிதலுக்கு மிக நன்றி.(H .R ,H .R தான். sharp ).
-
10th June 2013, 06:02 AM
#46
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-38
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
உண்மை! டாப் 10 இல் வரமுடியாதுதான். ஏனென்றால் வாழ்வில் நமக்கு பிடித்த ஒரு சில அம்சங்கள் வழக்கமாகப் பிடித்திருக்கும் பல அம்சங்களையும் மீறி நம்மிடையே சிறகடிப்பதுண்டு. அதைப் போலத்தான் பொம்மனும். உதாரணத்திற்கு என்னுடைய டாப் 10-இல் முதலில் என்ன வரும் என்று எல்லோருக்கும் தெரிந்ததே. பிறகு 2,3,4 என்று பிடித்த படங்களை வரிசைப் படுத்துவேன். ஆனால் சவாலே சமாளியை அந்த பத்தில் நான் சேர்க்க மாட்டேன். ஆனால் பத்தையும் மீறிய ஒருவித ஸ்பெஷல் அது. ஒரு தனி இடம். அது போல கட்டபொம்மன் எல்லோருக்கும் தனியான ஒரு ரகம். பெயர் கேட்டாலே உணர்வுகள் கிளர்ந்தெழும் உச்சநிலை. ஜாக்கிசான் படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் டூ வீலரை ஸ்டாண்டில் எடுக்கும் போதே சர்...புர்ர்.....என்று ஏக வேகத்துக்கு எடுத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். படம் விட்ட ஒரு 5 நிமிடம் ஜாக்கியின் சாகசங்களில் மூழ்கி அதிலிருந்து வெளியே வரமாட்டாமல் ஜாக்கி போல சாதனை செய்ய துடிப்பான். கொஞ்ச நாழிக்குத்தான். அதே போல பொம்மனைப் பார்த்து விட்டு வரும் ஒவ்வொருவரும் இறுக்கமாக உணர்ச்சிப் பிழம்பாகத்தான் வெளியே வருவர். வேறு சிந்தனையோட்டமே இருக்காது. நடிகர் திலகத்தை விட பொம்மன்தான் மனதிற்குள் சடுகுடு நடத்துவான். அவன் பட்ட கஷ்டங்களே பார்வையாளர்களை மிகவும் ஆக்கிரமித்திருக்கும். அவன் நடிகர் திலகத்தை மறந்திருப்பான். பொம்மனை நேரில் தூக்கு மாட்டியதைப் பார்த்து விட்டு வந்தவனாகத்தான் தெரிவான். நடிப்புக்கும், கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும், வசனங்களுக்கும், படமாக்கின ஒவ்வொருவரின் வேர்வைகளுக்கும் இதை விட பெரிய வெற்றி ஏது?
Last edited by vasudevan31355; 10th June 2013 at 08:30 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th June 2013, 06:26 AM
#47
Senior Member
Diamond Hubber
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
பேய்த்தனமான சாமியாட்டம்.
வெள்ளையனின் கொடுமைகள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் மறக்க இயலாத பட்சத்தில் நாம் சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு ஓரளவிற்கு மறந்திருந்து நீறு பூத்த நெருப்பாய் இருந்த நிலையில் நடிகர் திலகம் என்ற கட்டபொம்மன் அதில் பெட்ரோலை ஊற்றினார் என்றும் சொல்லலாம். சுதந்திரம் அடைந்திருந்தாலும் மீண்டும் அந்த வெள்ளைய நாய்களின் மேல் வெறியை மூட்டிய கட்டபொம்மன். ஒரு சிறு கற்பனை. கட்டபொம்மன் படம் நாம் சுதந்திரம் அடைவதற்கு முன் தடைகள் இல்லாமல் வெளியாகி இருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசியுங்கள். அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை நம்மால் கற்பனை செய்ய இயலுமா?! கட்ட்டபொம்மனாக வாழ்ந்த அந்த சிங்கத்திற்கும் கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட நிலை ஏற்ட்டிருந்தாலும் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா! (சற்று குரூரமான கற்பனைதான்)
-
10th June 2013, 06:42 AM
#48
Senior Member
Diamond Hubber
உளவுபூர்மாக, உணர்வு பூர்வமாக ஒவ்வொருவர் நெஞ்சிலும் சிம்மாசனமிட்டு நடிகர் திலகமாய் அமர்ந்து விட்டான் கட்ட பொம்மன். கட்ட பொம்மன் வேறு சிவாஜி I mean நடிகர் திலகம் வேறு என்ற பேச்சுக்கே இடமில்லை. தாங்கள் குறிப்பிட்டது போல மெஸ்மரிஸ நிகழ்வு. கட்டபொம்மனின் பேச்சு , செயல், நடை, உடை, பாவனை, வீரம், விவேகம், அறிவு, ஆத்திரம், ரௌத்திரம் என்ற பலவகைப்பட்ட உணர்வுகளுக்கு ஒவ்வொருவனும் நிரந்தர அடிமையாகிப் போனான். பாட நூல்களில் சப்ஜெக்ட் வந்தால் கட்டபொம்மனை பிள்ளைகளுக்குக் காட்ட படம் வரைந்தவன் யாரை மனதில் வைத்து வரைந்திருப்பான்? அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு அது. சமீபத்தில் ராஜராஜ சோழனின் சிலையொன்றை வெகு நாட்களுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒரு பூட்டியிருந்த அறையிலிருந்து எடுக்க நேர்ந்ததாம். பார்த்தால் அப்படியே அச்சு அசலாக உலகத்திலேயே யாருமே மிஞ்ச முடியாத ஒரு தமிழ் நடிகரின் உருவத்தை அப்படியே ஒத்திருந்ததாம். ஏன் இப்படிப்பட்ட வரலாற்று நாயகர்கள் அந்த நடிகனுள் புகுந்து தன்னை பிரம்மாண்டமாக எல்லோருக்கும் வெளிப்படுத்தி பின் வெளியேறியிருக்கக் கூடாது?
Last edited by vasudevan31355; 10th June 2013 at 07:11 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th June 2013, 06:57 AM
#49
Senior Member
Diamond Hubber
)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
அற்புதமான என்னைக் கவர்ந்த வரிகள். அந்தப் படம் ஏற்படுத்தும் பல்வேறு பாதிப்புகளை, அதற்கான காரணங்களை இரண்டு இரண்டு வரிகளில் மிகத் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள்.
உச்சத்தை நோக்கி உச்சங்கள் பயணித்துக் கொண்டே இருக்கும். படம் தூக்கு போட்டதும் முடிவடைந்து விடும். பெல் கொடுத்து விடுவார்கள். ஆனால் பார்வையாளர்கள் மனதில் தானாகவே அற்புதமான,பலமான அஸ்திவாரம் ஏற்பட்டு விடும். எழுப்பப்பட்டு விடும். அது கட்டபொம்மனின் மண் கோட்டையல்ல. இரும்புக் கோட்டை. படம் முடிந்தாலும் பார்த்தவன் மனதில் முடிவற்ற நிலை. கட்டபொம்மன் மறைந்து நடிகர் திலகத்தை நினைவுக்குக் கொண்டு வரும்போது அடி, நுனி கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுவான்.
அந்த நடைதான் டாப்...இல்லை இல்லை அந்த வாளை உறைக்குள் போடுவதுதான் டாப்...இல்லை இல்லை ஜாக்சனின் முன் நாற்காலியை இழுத்துப் போட்டு கால் மேல் காலிட்டு அமர்வதுதான் உச்சம்...இல்லை இல்லை தூக்கு மாட்டுமுன் கர்ஜிக்கும் அந்த காட்சிகள்தாம் அற்புதம்....என்று அவனுக்குள் ஒரு போர்க்களம் அமைத்து போரிடுவான். ஆனால் வெற்றியே கிடைக்காது. குழம்பிப் போவான். முடிவெடுக்க முடியாது. எந்த நாட்டாமையும் இந்தக் காட்சிதான் சிறந்தது என்று தீர்ப்பளிக்க முடியாது.
Last edited by vasudevan31355; 10th June 2013 at 09:27 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th June 2013, 07:07 AM
#50
Senior Member
Diamond Hubber
focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
அப்படி அமைந்து விட்டது அல்லது அமைக்கப் பட்டது. கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளும் அவ்வாறே! கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் உருவாக உருவாக நடிப்பு பூதமும் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கும். பூதத்துக்கேற்ற தீனி கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்க ஆரம்பித்து விடும்..அதனால்? உணர்ச்சி வரைபடத்தின் அளவுகோல்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகும். இறங்க வாய்ப்பே இல்லை. போருக்குத் தயாரகும் முன் கடவுளைத் தொழும் அமைதி நிலையிலிருந்து விடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பையும், குரலையும் உயர்த்த ஆரம்பித்து, நம்மையும் கொஞ்ச கொஞ்சமாக இருக்கை நுனிக்கு கொண்டு வரச் செய்வதைப் போல. லாபம் கட்டபொம்மன் புகழுக்கு.
Bookmarks