-
14th June 2013, 08:07 PM
#1651
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
என்ன அப்படி வியப்பாக என்னை பார்க்கிறீர்கள் ?
நான்தான் மணிமாறன்
உங்களில் ஒருவன்
1965 ல் வந்த என்னை தொடர்ந்து
48 வருடங்களாக '
பல அரங்குகளிலும்
பின்னர் குறுந்தகடுகளிலும்
சின்ன திரையிலும்
கண்டு மகிழ்ந்த உங்களுக்கு
எனது வாழ்த்துக்கள் .
நவீன தொழில் நுட்பத்தில்
என்னை மேலும் மெருகேற்றி
புத்தம் புதிய
ஆயிரத்தில் ஒருவனை
என்னை மீண்டும் காண போகிறீர்கள்
விரைவில் சந்திப்போம்
இனிய செய்தி..
ஆயிரத்தில் ஒருவன் எத்தனை முறை எந்த வடிவில் பார்த்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை.
(கொடைக்கானல் தமிழ் ஒளி பரப்பு தொடங்கிய அன்று மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் தான் முதல் படமாக ஒளிபரப்பானது என்று அறிய வருகிறேன்)
வினோத் ஸார் தகவலுக்கு நன்றி.
-
14th June 2013 08:07 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2013, 08:07 PM
#1652
Junior Member
Platinum Hubber
-
14th June 2013, 08:11 PM
#1653
Junior Member
Platinum Hubber
"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு க்ளாசிக்!
எம் ஜி ஆர் படங்களிலேயே சிறப்பான ஒரு படம்னா அது, பி ஆர் பந்துலு வின் ஆயிரத்தில் ஒருவன் தான் என்பேன் நான். 1965 ல் வந்த படம் இது. பாடல்கள் அனைத்துமே முத்தானவை. ஜெயலலிதா அறிமுகமான (வெண்ணிற ஆடை) அதே வருடத்தில் முதல் முதலாக எம் ஜி ஆர் வுடன் ஜோடியாக நடித்த படம் இதுதான்.
நம்ம எம் ஜி ஆர், மணிமாறன், ஒரு நாட்டு வைத்தியர், பாம்புகடி விஷத்துக்கு மருந்து கண்டுபிடிப்பார். அவர் வாழும் நெய்தல் நாட்டில் ஒரு சர்வாதிகாரியின் கொடுமையால் புரட்சி வெடிக்கும். மணிமாறன் சில புரட்சியாளர்கள் உயிரைக் காப்பாற்றுவார். உடனே அங்கே உள்ள சர்வாதிகாரி மனோகர் அவரை குற்றம் சாட்டி அடிமையாக விற்க அவரை கன்னித்தீவுக்கு நாடுகடத்துவார். அடிமையோட அடிமையாக கன்னித்தீவுக்கு அனுப்பப்படுவார் அழகும், வீரமும் நிறைந்த மருத்துவர் மணிமாறன்.
கன்னித்தீவின் இளவரசி, பூங்கொடி (நம்ம அம்மையாருக்கு 16 வயது இருக்கும்).
* "பருவமெனது பாட"லில் அழகும் இளமையுமாக அறிமுகமாவார்!
* "ஏன் என்ற கேள்வி" கேட்கும் ஆயிரத்தில் ஒருவன், மணிமாறனின் அழகில் மயங்கி தன் இதயத்தைப் பறிகொடுப்பார்.
* "ஓடும் மேகங்களே" என்று பாடி, நாடாளும் வண்ண மயில் நீ, நாட்டிலுள்ள அடிமை நான்! உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்லி இளவரசியின் காதலை நிராகரித்துவிடுவார், மணிமாறன்.
* "உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்" என்று காதல் தோல்வியில் ஏங்குவார், பூங்கொடி!
காலச்சக்கரம் சுழலும், அடிமை மணிமாறன் கொள்ளைக்காரர் ஆவார் இல்லை ஆக்கப்படுவார். ஆனால் அவர் கொள்ளையரைத்தான் கொள்ளையடிப்பார்!! கொள்ளையர்போல் நடிக்கும் நல்லவர், பூங்கொடியின் இதயம் கவர்ந்த அடிமை, மணிமாறன், இன்று கொள்ளையராகி கொள்ளையர் கப்பல்போல் இருக்கும் உல்லாசக்கப்பலை- பூங்கொடியின் கப்பலையே- சூரையாடுவார்.
இளவரசி அடிமையாவார்! ஏலத்தில் விலைக்குப்போகும் (*ஆடாமல் ஆடுகிறேன்) அவர் இதயத்தைத் திருடிய “திருடன்” மற்றும் கொள்ளைக்காரன் மணிமாறன், தானே அவளை விலைக்கு வாங்கிக்கொள்வார்!
இருவருக்கும் இடையில் ஊடல், ஊடல் முடிந்து கூடலாகும்போது!
* நாணமோ இன்னும் நாணமோ பாடலில் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கும்! ரொம்ப சிறப்பான டூயட் இது! மிகவும் ரசிக்கத்தக்க இருக்கும் இந்தப்பாடல்.
அதுக்கப்புறம் கொள்ளையர்களை நல்லவராக்கி "அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்" பாடல் பாடிக்கொண்டே சொந்த நாடான “நெய்தல் நாட்டுக்கு" திரும்பி வந்து சர்வாதிகாரியிடம் போராடி அவரையும் திருத்தி, குடியாட்சி கொண்டு வருவார்!
எடிட்டிங் பிரமாதம், காமெடி (நாகேஷ்), வில்லன்கள் (நம்பியார், மனோகர்) எல்லாமே அபாரம்!
சண்டைக்காட்சிகள் சிற்ப்பாக இருக்கும். எம் ஜி ஆர், இளமையாகவும் மிகவும் அழகாகவும் இருப்பார்! ஜெயலலிதாவும் சிறப்பா நடித்து இருப்பார்.
-
14th June 2013, 08:11 PM
#1654
Junior Member
Veteran Hubber
A very rare image posted by Kumar Rajendran facebook.
-
14th June 2013, 08:23 PM
#1655
Junior Member
Veteran Hubber
Another rare image
-
14th June 2013, 08:26 PM
#1656
Junior Member
Platinum Hubber
From net
உற்சாகம் எனும் உணர்வுக்கு உதாரணமாக வரும் பாடல் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் திரைத் துறையிலும் அரசியலிலும் நீங்கா இடமும் மங்கா புகழும் கொண்ட புரத்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்". இந்தப் படத்தில் தான் அவரது அரசியல் வாரிசு அடையாளம் காணப் பட்டது. செல்வி.ஜெயலலிதாவும் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆரும் இணைந்து தோன்றும் இப்பாடல் சோர்ந்த போதெல்லாம் நெஞ்சை உயிர்ப்பிக்கும். திரு. எம்.எஸ்.வி அவர்களின் மெல்லிசையில், டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் வந்த களிப் பாடல் இது.
அந்தக் கூட்டம் அடிமைப் பட்டுக் கிடந்தது. அந்தக் கூட்டம் உய்வு பெற வந்த தலைவன் அவன். அவன் கண்டெடுத்த தலைவி அவள். அந்தத் தேசத்தை அவர்கள் மீட்டெடுக்கப் போகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.
"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்"
-
14th June 2013, 08:27 PM
#1657
Junior Member
Veteran Hubber

Rajesh Reddy from facebook
அறிஞர் அண்ணா மருத்துவமனையில்
வாழ்வின் இறுதிக் கணங்களை
எதிர்நோக்கிக் கிடந்தபோது,
கன்னத்தில் கை வைத்தபடி வாசலில்
ஒன்று சேர அமர்ந்திருக்கிறது...
அன்றைய எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும்...!!
இப்போது நடக்குமா.....?
தொலைந்து போன அரசியல் நாகரீகம்
-
14th June 2013, 08:27 PM
#1658
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ரூப்
மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் அருமை .
உங்களுக்கும் திரு ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி
-
14th June 2013, 08:29 PM
#1659
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
உலக பேரழகன் நம் மணிமாறன் விரைவில் வெள்ளி திரையில் நம் எல்லோரையும் மகிழ்விக்க வருகை புரிய உள்ளார் .
ஆயிரத்தில் ஒருவன் - 1965
ஆங்கில படங்களுக்கு இணையான ,
தரமான படமாக
மக்கள் திலகத்தின் வெற்றி காவியமாக
சரித்திர சாதனை படைத்த காவியம் .
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பொழுது போக்கு சித்திரம் .
48 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் திலகம்
மீண்டும் ஒரு இமாலய வரலாறு படைக்க போகிறார் .
எஸ்வி சார் ,
முக்கியமாக b .r பந்துலுவின் முதல் திரைப்படம் அல்லவா ஆயிரத்தில் ஒருவன் மக்கள் திலகத்துடன் ! எத்தனை திரை அரங்குகளில் வெள்ளிவிழா ஓடியது?
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் வெள்ளிவிழா மற்றும் நூறு நாள் விளம்பரங்களை பார்க்க ஆவலாக உள்ளது..இங்கே பதிவிடுவீர்களா ? நான் பதிவிறக்கம் செய்துகொள்ள விரும்புகிறேன் !
-
14th June 2013, 08:35 PM
#1660
Junior Member
Platinum Hubber
இனிய நண்பரே [360]
மக்கள் திலகம் - பந்துலு கூட்டணியில் வந்த வெற்றி காவியம் .
படம் வெள்ளி விழா ஓடவில்லை .
சென்னை - மூன்று அரங்குகள்
திருச்சி - கோவை - நூறு நாட்கள் ஓடியதாக தகவல் .
பத்திரிகை ஆதாரம் கிடைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது .
கிடைத்தவுடன் இங்கு பதிவிடப்படும் .
Bookmarks