-
8th June 2013, 06:31 PM
#11
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th June 2013 06:31 PM
# ADS
Circuit advertisement
-
10th June 2013, 11:52 PM
#12
Senior Member
Seasoned Hubber
இணையத்தில் முதன் முதலாக.
தட்டுங்கள் திறக்கப் படும் திரைப்படத்தில் சந்திரபாபுவும் கே.ஆர்.விஜயாவும் பங்கு பெறும் நடன நிகழ்ச்சியின் பின்னணி இசை.
இதைப் போன்ற ஒரு நடன இசையை இதற்கு முன்பும் பின்பும் மக்கள் கேட்டிருக்க மாட்டார்கள்.
எவ்வளவு வேறுபாடுகள், எவ்வளவு வித்தியாசங்கள், எத்தனை தாள மாற்றங்கள் ... ஆனால் ஒன்று கூட காட்சியிலிருந்தும் அதனுடைய ஒரிஜினாலிட்டியிலுருந்தும் விலகாதது வியப்பிற்குரிய விஷயம், மெல்லிசை மன்னருக்கு மட்டுமே சாத்தியப் படக் கூடிய விஷயம்.
பாடலின் இடையிடையே சந்திரபாபுவின் குரல் ஒலிப்பதும் அதில் அவர் வித்தைகள் செய்வதும் ...
முற்றிலும் புதிய அனுபவம்
பதிவிறக்கம் செய்து கேட்டுப் பாருங்கள்.
https://soundcloud.com/veeyaar/thatt...thirakkappadum
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th June 2013, 12:39 AM
#13
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th June 2013, 12:39 AM
#14
Senior Member
Seasoned Hubber
செல்வ மகள் திரைப்படத்திலிருந்து ஓர் இசைக் கோப்பு
துவக்கத்தில் கணவரான மேஜர் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து கடல் கடந்து போவதும் அதனைத் தொடர்ந்து மனைவி வீட்டை விட்டு வெளியேறி, குழந்தையை அநாதையாக விட்டு விட்டு தற்கொலைக்கு முயல்வதும் பின்னர் அதன் அழுகுரல் கேட்டு திரும்ப ஓடி வந்து பார்க்கும் போது குழந்தையைக் காணாமல் துடிப்பதுமாக காட்சி. இதனைத் தொடர்ந்து படத்தின் முகப்பிசை இடம் பெறும்.
இந்த இசைக் கோப்பினைத் தான் நாம் கேட்க இருக்கிறோம். இதில் மேஜரின் மனைவியாக வரும் பண்டரிபாய் குழந்தையைக் கோவில் வாசலில் கிடத்தி விட்டு தற்கொலைக்காக மலை உச்சியில் ஏறும் போது வயலின் உச்ச ஸ்தாயியில் ஒலிப்பதும், பின்னர் குழந்தையின் அழுகுரல் கேட்டு இறங்கி ஓடி வரும் போது அதனை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வேகமாக வயலினிசை ஒலிப்பதும் அந்தக் காட்சியைக் கண் பார்வையற்றோரும் உணரும் வண்ணம் அமைத்திருப்பார் மெல்லிசை மன்னர். தமிழகத்திற்கு இறைவன் கொடுத்த இன்னொரு பொக்கிஷம் எம்.எஸ்.வி. இந்த இசையும் அதற்குக் கட்டியம் கூறும்.
http://www.mediafire.com/?gm17oeb08zik67h
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks