-
2nd July 2013, 03:52 PM
#2131
Junior Member
Platinum Hubber
ஒரு பக்கம் தன்னுடைய திரைப்படம் - அரசியல் செய்திகள் -பிரபல தினசரி இதழில் இருட்டடிடிப்பு.
மறுபக்கம் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தில் இருந்து வெளியேற்ற சதி
தன்னுடைய தயாரிப்பாளர்கள் எல்லோர்க்கும் கனிவான மிரட்டல்கள்
அதனால் 16 படங்கள் வாய்ப்பு இழந்த நிலை
தன்னுடைய ரசிக மன்ற நிர்வாகிகளுக்கு பலவித நெருக்கடிகள்
திரைஅரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்களுக்கு மேலிட கட்டளைகள்
இதுதான் - மக்கள் திலகம் சந்தித்த இக்கட்டான சோதனை காலம் .
எந்த ஒரு தனி மனிதனும் இந்த சூழ் நிலையில் தன்னை காப்பாற்றிக்கொள்ள
வேறுவிதமாக முடிவு எடுத்து தன்னை நிலை நிறுத்த முயற்சி எடுத்திருப்பார்கள் .
மக்கள் திலகம் - புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் மிகவும் நிதானத்துடன்
எல்லா பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டு ரசிகர்களின் அமோக ஆதரவுடன் மக்களின் துணை கொண்டு வெற்றி பெற்ற வரலாறு உலகறியும் .
இதயவீணை ....
மீட்டும் .....
-
2nd July 2013 03:52 PM
# ADS
Circuit advertisement
-
2nd July 2013, 04:01 PM
#2132
Junior Member
Veteran Hubber
திரு. சைலேஷ் சார்..உங்களது ஐநூறுக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
2nd July 2013, 04:18 PM
#2133
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
நம் இதய தெய்வத்தின் பெருமையை இவ்வையம் அறிய, அரிய இவ்வாவணத்தை வெளியிட்ட எஸ்.வி.சாருக்கு நன்றி...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
2nd July 2013, 04:32 PM
#2134
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
ஒரு பக்கம் தன்னுடைய திரைப்படம் - அரசியல் செய்திகள் -பிரபல தினசரி இதழில் இருட்டடிடிப்பு.
மறுபக்கம் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தில் இருந்து வெளியேற்ற சதி
தன்னுடைய தயாரிப்பாளர்கள் எல்லோர்க்கும் கனிவான மிரட்டல்கள்
அதனால் 16 படங்கள் வாய்ப்பு இழந்த நிலை
தன்னுடைய ரசிக மன்ற நிர்வாகிகளுக்கு பலவித நெருக்கடிகள்
திரைஅரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்களுக்கு மேலிட கட்டளைகள்
இதுதான் - மக்கள் திலகம் சந்தித்த இக்கட்டான சோதனை காலம் .
எந்த ஒரு தனி மனிதனும் இந்த சூழ் நிலையில் தன்னை காப்பாற்றிக்கொள்ள
வேறுவிதமாக முடிவு எடுத்து தன்னை நிலை நிறுத்த முயற்சி எடுத்திருப்பார்கள் .
மக்கள் திலகம் - புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் மிகவும் நிதானத்துடன்
எல்லா பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டு ரசிகர்களின் அமோக ஆதரவுடன் மக்களின் துணை கொண்டு வெற்றி பெற்ற வரலாறு உலகறியும் .
இதயவீணை ....
மீட்டும் .....
நல்ல தலைவனுக்குரிய எல்லா தகுதிகளும் மக்கள் திலகத்திடம் இருந்ததாலே உச்ச நடிகராக இருந்து,
அரசியலிலும் வேறு யாரும் அடைய முடியாத உன்னத வெற்றிகளை குவிக்க முடிந்தது.
-
2nd July 2013, 04:54 PM
#2135
Junior Member
Veteran Hubber
பணம் படைத்தவனின் பாடங்கள் தொடர்கிறது...
பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்...

மேலைநாட்டு மோகத்தால் நம் தமிழர்களின் கலாசாரம் சீரழிந்து வருவதை அன்றே நம் தலைவர் தனது படத்தில் பாடலாக சொல்லிவிட்டார்..ஒரு பெண் குடும்ப விளக்காக இல்லாமல் தீவட்டியாகி மாறினால் அது தன்னை எரிப்பதுடன் மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை அழகாக எடுத்துகூறுவார்...சௌகார் ஜானகி தனது மரண தருவாயில்..'அத்தான் நீங்கள் எவ்வளவோ கூறினார்கள்..நான் கேட்கவில்லை..என் போன்ற பெண்களுக்கு இது ஒரு பாடம்' என்று கூறும்போது மேலே சொன்ன வரிகள் பின்னணியில் கேட்கும்...
-
2nd July 2013, 05:16 PM
#2136
Junior Member
Veteran Hubber
பணம் படைத்தவனின் பாடங்கள் தொடர்கிறது...
தேசத்தை காக்கும் ராணுவ வீரர்

ஒரு திரைப்படத்தில் எத்தனை நல்ல கருத்துக்கள்...தலைவர் அவர்கள் ஒரு முறை பேட்டியில்..நீங்கள் யாரை பார்த்து அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்டபோது..நேதாஜி சுபாஷ் சந்திரபோசை பார்த்து என்று கூறுவார்..இப்படத்திலும் கல்கத்தாவில் திரு.நேதாஜி வீட்டில் அவரது உருவத்தை பார்த்து.சல்யூட் செய்து விட்டு....தேசத்தைக்காப்பாற்ற ராணுவத்தில் சேர்வார்..
-
2nd July 2013, 05:22 PM
#2137
Junior Member
Veteran Hubber
தெய்வப்பாடகர் திரு.டி.எம்.எஸ். அவர்களின் காதல் இழையோடும் இனிமையான பாடல்..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..இருவரின் உடைகளும் நடன அசைவுகளும் ரம்யமாக இருக்கும்.
பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்..
புன்னகை என்றே பேராகும்...
-
2nd July 2013, 05:25 PM
#2138
Junior Member
Veteran Hubber
-
2nd July 2013, 05:54 PM
#2139
Junior Member
Veteran Hubber
சாதி ஒழிப்பு..

தலைவரின் பெரும்பாலான படங்கள் சாதி ஒழிப்பு..வறுமை ஒழிப்பு..தீண்டாமை ஒழிப்பு இதை மையமாக கொண்டே இருக்கும்..இந்த படத்திலும் தாழ்ந்த சாதியில் பிறந்த ஏழை கே.ஆர்.விஜயாவை, சாதி வெறி, பணவெறி பிடித்த தன் தந்தை வெறுத்து வெளியேற்றும்போது..தலைவர் அவரைப்பார்த்து...கண்மூடிதனங்கள் மண்மூடி போய்விட்டன..இன்னும் ஏம்பா சாதி வெறியில் இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு, கே.ஆர்.விஜயாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
2nd July 2013, 06:28 PM
#2140
Junior Member
Veteran Hubber
கலை மன்னன்
கலை தோன்றிய விதம்
பழங்காலத்தில் மக்கள் தாங்கள் உழைத்த நேரம் போக ஓய்வு நேரங்களில், தங்களின் உடல் அலுப்பையும், மனக்கவலையை மறக்கவும் தங்களுக்குள், இயல், இசை, நாடகங்களை நடித்தும், கேட்டும், பார்த்தும் மகிழ்ந்தார்கள்..இந்த கலைகளில் சிறப்பாகவும், அனைவரையும் கவரும் விதத்தில் நடிப்பவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டனர்..இவ்வாறு உருவான கலைஞர்கள் தாங்கள் குழுக்களாக பல ஊர்களுக்கு சென்று தங்கள் திறமையைக்காட்டி மக்களை மகிழ்வித்தனர்..சிலர் மன்னர்கள் முன்பும் தங்கள் ஆடல், பாடல் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகள் வாங்கி வந்தனர்...பண்டை தமிழகத்தை ஆண்ட சில மன்னர்கள் கூட இத்தகைய கலைத் திறமைகளைக் கொண்டிருந்தார்கள்..இந்த கலைஞர்கள் ராமாயண, மகாபாரத இதிகாசங்களையும், காப்பியங்களையும் தெருக்கூத்துகள் வாயிலாக மக்களிடையே நடித்து காட்டினர்..இந்த தெருகூத்துகள் பரிணாம வளர்ச்சியின் மூலம் நாடகமாக உருவெடுத்தது..பின்னர் இதற்கென நிலையான நாடக மன்றங்கள் உருவாகின.ஒரு கட்டத்தில் தமிழகத்தில் நாடக மன்றங்கள் பெருகி கலைவெள்ளம் பெருகி ஓடியது...அதில் ஒரு சில நாடக மன்றங்களில், பின்னாளில் திரைப்படங்களில் நட்சத்திரங்களாய் மின்னிய, பல கலைஞர்கள் பங்கேற்று நடித்து வந்தனர்...அவர்களில், சிறந்த நடிப்பின் மூலம் மக்களைக் கவர ஒரு சில கலைஞர்களால் மட்டுமே முடிந்தது..அவ்வாறு அனைத்து கலைகளிலும் தேர்ந்து நடிப்பின் அனைத்து சுவைகளையும் பிரதிபலித்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்களே சிறந்த கலைஞர்களாக மதிக்கப்பட்டனர்..சிறப்பிக்கப்பட்டனர்..அப்படி மக்களைக் கவர்ந்தவர்களில் நடிகப்பேரரசர் எம்ஜிஆர் அவர்கள் முதல் இடத்தைப்பெற்றார்..தான் திரையுலகில் இருந்த வரை அதைத்தக்க வைத்தும் கொண்டார்..அவரது எழில், அவரது நடிப்பு அனைவரையும் ஆட்கொண்டது உண்மை..அதனால் அவரைக் கண்டு.....

ஆடாத மனமும் உண்டோ...
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கண்ட உமைகண்டும்
இப்பூமியில்...
.
என்ன ஒரு பொருத்தமான வரிகள்..இவருடைய நடிப்பு மக்கள் அனைவரையும் கவர்ந்து முதல் இடத்தில் நின்றது மட்டுமல்லாது நாட்டில் நல்லதொரு மாபெரும் சமூக மாற்றத்தையே உண்டாக்கியது என்றால் மிகையாகாது..
...தொடரும்...
Bookmarks