Page 95 of 399 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #941
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    நான் எம்.ஜி.ஆர் ரசிகரா இல்லை கமல் ரசிகரா என்று கூறி என்ற விவாதம் வேண்டாம். முடிந்தால் எந்த சிவாஜி ரசிகராவது எனது கேள்விக்கு சரியான பதில் தெரிந்தால் கொடுங்கள்.
    அற்புதம் அண்ணே!!!
    நானும் ரொம்ப நாளா சொல்லிப்பாத்துட்டேன் அண்ணே. எங்க அண்ணன் யாருக்கு ரசிகரா இருந்தா உங்களுக்கு என்ன - அப்படின்னு. கேக்கலை. ஆனா அவங்க பக்கம் நியாயம் இருக்கு அண்ணே. நீங்க பாட்டுக்கு சாதாரணமா சொல்லிட்டீங்க, இங்க எல்லாரும் அண்ணன் யாரு ரசிகர்-னு சொல்லுவாருன்னு அந்த காலத்து ரிலீஸ் படம் பாக்க வந்த கூட்டம் போல கால் தேய காத்துக்கிட்டு இருக்காங்க. நீங்க அந்த விவாதம் வேண்டாம்-னு அம்புட்டு பேரையும் ரசிகர்களை அடக்குற நடிகர் மாதிரி அடக்குறீங்களே!!!

    அப்புறம் அண்ணே, உங்க கேள்விக்கு அவங்க பதில் சொல்றதுக்கு முன்னாலே, சிவாஜிக்கு, கமலஹாசனின் புகழில் பாதி அளவு கூட கிடைக்க வில்லைன்னு எடுத்து விட்டீங்களே அண்ணே, அதை எப்படி அளந்தீங்க-ன்னு எல்லோருக்கும் தெரியும்படி நச்-னு எடுத்து சொல்லுங்க அண்ணே!!! சொல்லுங்க.

    போன பதிவிலே சொன்னீங்களே அண்ணே, எல்லோருக்கும் 50 வயது கடந்து இருக்கும், ஆனா 10 வயசு பசங்க போல பதிவு பண்றாங்கன்னு. மன்னிச்சு விட்டுருங்க அண்ணே. உங்களை, உங்க வயசை புரிஞ்சிக்காம சொல்லிட்டாங்க. உங்களுக்கு வயசு கிட்டத்தட்ட ஒரு நூறாவது இருக்குமாண்ணே? கம்மியா சொல்லியிருந்தா இந்த தம்பியயும் மன்னிச்சிடுங்க.

    மற்றபடி எல்லோருக்கும் சொல்லிக்கிறேன். எங்க அண்ணன் சொல்வது தப்புன்னு தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தால் உடனே ஏற்றுக் கொள்வார். இல்லைன்னா கஷ்டம்தான். எங்க அண்ணன் சொல்றதை நீங்க கேட்டுக்க வேண்டியதுதான். எங்க அண்ணன் எந்த ஆதாரமும் தரவேண்டிய அவசியமில்லை. அது சரி படம் ஓடைலைன்னு சொல்றதுக்கு அவர் எப்படி ஆதாரம் தருவாரு? ஓடின படத்துக்கே அண்ணன் ஒத்துக்கற ஆதாரம் இங்க இல்லை. அதெப்படி அண்ணே, உங்களால மட்டும் முடியுது - 1968 விவகாரத்துக்கு 1959 விவகாரத்தை இழுக்க.
    Last edited by kalnayak; 6th July 2013 at 10:25 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #942
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The name and fame of NT being immortal, even after his attaining heaven, his movies prove their rerun value, Karnan being the classic example. There is no need to measure or compare the degree of fame of NT with any other actor in this world. From minus infinity to plus infinity NT has made his indelible mark as the integral of all sorts of acting while the other actors with whom NT is 'compared' find it very difficult to prove their rerun values. You enjoy the acting of your star but keep it in mind their actings are only differentials depicting a certain level of NT only. Navarathiri and Deivamagan.... incomparable!

  4. #943
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    சுப்ரமண்யம் சார்,
    நான் எப்பவும் சிவாஜியை கீழ் தரமாக விமர்சனம் கிடையாது. ஆனால் எனக்கு சரி என்று பட்டதை கூற எனக்கு உரிமை இருக்கிறது.

    இங்கே பதிவு செய்யும் சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் நிச்சயம் 50 வயதை கடந்து இருக்கும். ஆனால் அவர்களின் பதிவை படித்தால் 10 வயது சிறுவர்களின் பதிவைப் போல் இருக்கிறது.

    முரளி சார்,
    சட்டம் என் கையில் ஓடிய நாட்களை நான் தவறாக கூறி இருந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு இப்பொழுது சம்பந்தமே கிடையாது.

    1968ம் ஆண்டில் யார் படங்கள் நன்றாக ஓடியது என்பதுதான் இப்பொழுது பிரச்சனையே. அதற்கு எனக்கு சரியான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். (அப்படியே வீரபாண்டிய கட்டபொம்மன் 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது என்று கூறினீர்கள்.அதற்கும் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்).
    ராஜா சார்

    நீங்கள் சிவாஜி அவர்களை மேல்தரமாகவே விமர்சனம் செய்யுங்கள் ! விமர்சனம் செய்வது உங்கள் உரிமை என்று கூறிவிட்டீர்களே !

    இங்கே 10 வயது சமாஜாரமாகவாவது இருக்கிறது...அனால் தங்களுடைய பதிவை படிக்கும்போது தங்களுக்கு அதுகூட இருகிறதா என்பது சந்தேகமே. உங்கள் கேள்விக்கு நாங்கள் பதில் கூற தேவை இல்லை. காரணம் காலம் காலமாக நீங்கள் யார் ..எப்படிபட்டவர் ...எந்தவகை சார்ந்தவர் என்பதை உலகறியும்...நாங்களும் அறிவோம். !

    உங்களுக்கு சந்தேகம் என்றால் நீங்களே அவற்றை தீர்த்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுடைய சந்தேகங்களை தீர்க்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி அவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் கருதினால், நாங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயம் தீர்ப்போம் ஆனால் ஓசியில் அல்ல.

    ஒரு சந்தேகத்தை தீர்க்க எங்களுடைய Consultation Fees Rs.2,500 ஆகும். கொடுப்பதற்கு தயார் என்றால் சொல்லுங்கள் என்னுடைய பேங்க் அக்கௌண்ட் அனுப்புகிறேன். எவ்வளவு சந்தேகங்களோ அதற்க்கு தக்க Consultation Fees. ஆதாரங்களுடன் உங்களுடய சந்தேகம் தீர்க்கப்படும். காரணம் எங்களுடைய நேரத்திற்கு மதிப்பு உண்டு...மேலும் சந்தேகம் என்ற வியாதி உங்களுக்கு தான். எங்களுக்கு அல்ல. ஆகையால் ஓசியில் எங்கள் சேவை அதுவும் உங்களுக்கு நிச்சயமாக செய்யமுடியாது !

    எப்படி உங்களுக்கு சரி என்று பட்டதை கூற உங்களுக்கு உரிமை இருக்கிறதோ , எங்களுக்கும் உங்கள் சந்தேகம் என்ற வியாதியை அதுவும் முற்றிய நிலையில் உள்ள வியாதியை சரி செய்ய பணம் கேட்கும் உரிமை இருக்கிறது. ஓசியில் TV, MIXIE, GRINDER, மற்றும் வியாதியை மருத்துவரிடம் சரிசெய்யும் இன்சூரன்ஸ் கொடுக்க நாங்கள் அரசாங்கம் அல்ல !

    We are private consultants ! So, you have to pay to get your doubts cleared.

    OK என்றால் என்னுடைய தொலைபேசி 9841285626. என்னுடைய வங்கி அக்கௌண்டில் பணம் வந்தவுடன் Consultation with Medication தரப்படும். அப்படி நீங்கள் தயார் இல்லை என்றால் எடத்தை காலிசெய்யவும் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல்.
    Last edited by NTthreesixty Degree; 2nd July 2013 at 10:48 PM.

  5. #944
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    நான் எம்.ஜி.ஆர் ரசிகரா இல்லை கமல் ரசிகரா என்று கூறி என்ற விவாதம் வேண்டாம். முடிந்தால் எந்த சிவாஜி ரசிகராவது எனது கேள்விக்கு சரியான பதில் தெரிந்தால் கொடுங்கள்.
    காசுகுடுக்க முடியும்னா சரியான பதில் குடுக்க சொல்லு...இல்லையா விலகி நில்லு. !

    ஓசிலே இங்க ஒன்னும் வாங்கமுடியாது ! அப்படி செலவுபண்ணாம உங்க சந்தேகம் தீரனும்னா Connemara Library ல போய் நீங்களே தேடி எடுத்து உங்க சந்தேகத்த தீத்துகோங்க !

    ஞாயப்படி இதுக்குமே நாங்க CONSULTATION உங்களிடம் வாங்கவேண்டும்..இருந்தாலும்..பிழைத்துபோகட்டும் என்று வழிகாட்டி கொடுக்கிறோம். இதற்கும் ஏதாவது சொல்கிறேன் பேர்வழி என்று "பிச்சையிலும் பிச்சை அதிகாரபிச்சை எடுக்க முயர்ச்சிக்கவேண்டாம்.
    Last edited by NTthreesixty Degree; 2nd July 2013 at 10:34 PM.

  6. #945
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    தொண்டு செய்கிறேன் தொண்டு செய்கிறேன் என்று துண்டு விரித்து ஏமாற்றுபவர்கள் மத்தியில்,
    தான் நடிக்கும் திரைப்படம் மக்கள் கொடுக்கும் பணத்தால் தான் பெருகி வருகிறது..அதற்க்கு மக்களுக்கு தார்மீக ஆத்மார்த்த அடிப்படையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்று உண்மையான நோக்கத்தோடு

    ...திரை உலகத்தில் உள்ள அத்தனை நடிகர்களை விட அதிகமான கதாபாத்திரங்களை அதாவது

    தமிழறிஞர்கள்,
    தேசத்தலைவர்கள்,
    விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்,
    விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்,
    வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள்,
    கலை விற்பன்னர்கள்,
    புராண நாயகர்கள்,
    சமுதாய சீர்திருத்தவாதிகள்

    என பல நல்லவர்களை அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை மக்கள் முன் தன் திரைப்படம் வாயிலாக கொண்டுசென்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் !

    இந்த கால தலைமுறையினர், பொய்களை, போலிகளை, பித்தலாட்டங்களை அடையாளம் கண்டுகொண்டு, உண்மையான விஷயங்களை ஆதாரங்களோடு பார்த்து, படித்து நமது நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனை, அவரின் அரும்பணியினை அவருக்கு சமுதாயத்தின் மேல் மற்ற எந்த நடிகரையும் விட ஒருபடி மேல் அக்கறை உள்ளது என்ற உண்மையை உணரும் விதமாக இந்த கட்டுரை இன்று முதல் புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :


    முன்னுரை

    1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !

    உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....

    இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் தமிழ் திரைப்படத்தில் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும், தமிழை, முதலில் அறிதல் வேண்டும் ..அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்

    நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்

    http://www.youtube.com/watch?feature...&v=4IdkG7hnwC0


    http://www.youtube.com/watch?feature...&v=ovlbJ_FM3v4


    http://www.youtube.com/watch?feature...&v=76MtBfrCFvM


    ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..

    உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம்
    .

    மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!


    அந்த உடல் தான் நடிகன் !

    ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !

    இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!

    தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!

    உதாரணமாக :

    ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..!
    ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...

    அதுதான் தமிழின் வலிமை...!


    1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.

    அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று அவரை பற்றி அறியாதவர், அறிந்தும் தாழ்புனற்சியால் தூற்றுபவர், பலர் நினைக்கலாம்...

    அப்படி நினைபவர்களுக்கு : முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர் திலகத்தை படத்தை விட்டு தூக்கவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம்.

    PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.

    என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் ! ஒரு தயாரிப்பாளர் ஒரு புதுமுகத்தின் மேல் இத்தனை நம்பிக்கை வைத்தது திரை உலகம் அகில உலகத்திலும் நாம் கேள்விபடாத நடக்காத ஒரு சாதனை.

    இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...

    ஒரு நடிகனுக்கு பல படங்களில் சிறு சிறு வாயிப்புகள் வந்து நடித்துகொண்டிருந்தால் கூட பரவாஇல்லை,அது மிக மிக நல்ல விஷயம் காரணம், திரை துறையில் இருக்கிறோம் என்ற ஒரு ஆறுதல், தொடர்ந்து கிடைக்கும் (சிறு வேடமானாலும் )வாய்ப்பு இவற்றால் கிடைக்கும் வாழ்வாதாரம் இவை அனைத்தும் நல்ல விஷயங்கள் தான்.

    ஆனால் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் தோல்வி அடைந்தாலோ அல்லது தயாரிப்பாளர் அந்த நாயகனை பாதியில் தூக்கி எறிந்தாலோ முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் ஒரு வழியாக 8 மாத இடைவெளிக்கு பிறகு படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...

    அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , திரையுலகில் ஒரு புரட்சி புயலாய், "புரட்சி" என்ற வார்த்தையை திரைஉலகில் அனைவரையும் பராசக்தி என்ற பெருவெற்றியின் மூலம் முதன் முதலில் பேசவைத்ததே, அதை நடைமுறையில் கொண்டுவந்ததே, நம் திரை உலக சித்தர் சிவாஜி கணேசன் அவர்கள் தான் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ யாராலும் முடியாது ! ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.

    முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !

    முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு

    http://www.youtube.com/watch?feature...&v=KsqfDbJv33U

    கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு

    http://www.youtube.com/watch?feature...&v=B2ai_eNPkCs


    அடுத்தது பாடல் வரிகேற்ப வாய் அசைத்தல் - முதல் படம்- அதில் திராவிட கருத்துக்களை சொல்லும் பாடல் - காட்சிபடி இதை பாடுவது ஒரு பயித்தியம் போல வேஷமிட்ட நாயகன்..கதைப்படி மற்றவர்களை பொருத்தவரை ஒரு பயித்தியம்...நடிகர் திலகத்தின் குரல் இயற்கையாக 9 டு 10 கட்டை கொண்ட சிம்ஹகுரல்...அனால்..பாடியிருப்பவர்...திரு.C S ஜெயராமன் அவர்கள்.

    அவரது திறமை என்பது நடிப்பில் மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் - திரு.ஜெயராமன் அவர்களுடைய குரல் மெல்லிய மென்மையான குரல். வழுக்கிக்கொண்டு செல்லும் குரல்...நடிகர் திலகத்தின் இயற்க்கை குரலோ சிம்ஹகுரல்.

    இதை எவ்வளவு திறமை அவருள் இருந்தால் இப்படி வாயசைத்திருப்பர் என்று பாருங்கள்.

    நடிகர் திலகம் திரு.ஜெயராமன் அவர்கள் பாடும்போது, தன்னுடைய பாவத்தை, முகவாயகட்டையை சிறிது குவித்து வைத்து...அதாவது வாயில் சிறிது வெற்றிலையோ அல்லது தண்ணீரோ வைத்துகொண்டு பேசினால் என்னகுரல் வருமோ அதுபோல வாயசைத்திருப்பர் .

    பின்பு நடனம் - ஒருவித தான்தோன்றித்தனமான நடனம் இதில் பார்க்கலாம்...நடன ஆசிரியர் சொல்லிகொடுத்த ஸ்டெப்ஸ் மட்டுமே இங்கே நாம் பார்க்க முடியும். காட்சிக்கு என்ன தேவையோ அதை லாவகமாக செய்திருப்பார் நம்முடைய சித்தர் ! அந்த Movements அனைத்தும் பின்னணி இசையோடு கலந்து இருக்கும் நாம் சற்று கண்ணமூடி பாடலை கேடோமேயானால்...!

    அபிநயம் இந்த பாடலில் அவரது தனி முத்திரை ! பாடல் வரிகேற்ற அபிநயம். இதை எந்த டைரக்டர் சொல்லி கொடுத்திருப்பார் அவருக்கு..! உதாரணம் :

    நல்லவரானாலும் (காசு/பணம்) இல்லாதவரை நாடுமதிக்காது குதம்பாய் என்ற வரி...இந்த வரி வரும்போது காசு / பணம் என்ற வார்த்தை பாடலில் இடம் பெற்றிருக்காது. ஆனால் நடிகர் திலகம் தனுடைய விரலை சுண்டி காண்பித்து காசு / பணம் என்று புரியவைப்பார். !

    உங்களுடைய பார்வைக்கு அதன் ஓலி ஓளி வடிவம் !

    http://www.youtube.com/watch?feature...&v=eCVQAzG8_14

    நடிகர் திலகத்தின் நடிப்பின் உச்சம்
    அந்த நீதிமன்றம் காட்சி.....அவருக்கு பிறகு வந்த மூன்று முதல் நான்கு தலைமுறைகள், நடிகர் திலகத்தின் இந்த காட்சியை தங்களுக்குள்ள சினிமா ஆர்வம் தூண்டி ஒரு Directorayo அல்லது Producerayo காணும்போது பேசிகான்பிபது திரை உலகின் ஒரு வழக்கமாகவே இருந்தது என்றால் பாருங்கள்.

    நமது அன்னை தமிழின் உயிர் அதன் நாடி எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுண்டி விட்டு படம் பார்க்கும் நம்மையும் அவருக்கு மனதளவில் சப்போர்ட் செய்யவைக்கும் திறம்,

    கலைத்தாய் , தமிழ்த்தாய் நடிகர் திலகம் வரும்வரை எவ்வளவு தாகத்துடன் தமிழ் திரை உலகம் என்ற பாலைவனத்தில் இருந்திருப்பார்கள் என்று என்னிபார்தல் வேண்டும்..!

    இந்த செந்தமிழை, உரைநடை தமிழை எவ்வளவு லாவகமுடன்......ல..ள..ர..ற...ழ ....அக்ஷர சுத்தியுடன் உரைத்திருக்கிறார்

    அதுவும் முதல் படத்தில்....இந்த காட்சியில்...கேமரா ஒரு இடத்தில் நிருத்திவைக்கபட்டதோடு சரி. எவ்வளவு நீண்ட ஒரு வசனம்..ஒரு Takeல் எவ்வளவு நீளமான காட்சி எடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது...நாம் கற்று இன்று பேசும் தமிழ் ஏதோ கொஞ்சம் சுமாராக இருக்கிறதென்றால் அதற்க்கு முதல் காரணம் நம் சித்தர் படங்களை பார்த்து இதைபோல நாமும் பேசவேண்டும் அக்ஷரம் பிசகாமல் என்பது தான் !

    பக்கம் பக்கமாக வசனம் என்று கேள்விப்பட்டவுடன் ஆளவிடு சாமி என்று கொடுத்தவரிடம் காரணமே சொல்லாமல் பயந்தோடிய நடிகர்கள் மத்தியில், ஒன்ற, இரேண்டா, மூன்றா, பத்துபக்கமா..? கொடு வசனத்தை...பிடி முதல் takilayae ஓகே என்ற ரீதியில் கலை களஞ்சியமாக விளங்கியவர் திரை உலகில் நடிகர் திலகம் மட்டுமே என்றால் அது மிகையாகாது !

    அந்த அனல் பறக்கும் நீதிமன்ற காட்சி - !


    http://www.youtube.com/watch?feature...&v=SdnOlP94x2g

    வசன வார்தைகளுக்கேற்ற அவருடைய முகபாவம், வார்தைகேற்றவாறு கேசம்கூட ஆடவைக்கும் அந்த தலை அசைப்பு , ஆணித்தரமாக வாதிடும்போது தானாக வரும் அந்த வலதுகை, தங்கைபற்றி, குடும்பத்தைப்பற்றி பேசும்போது முதல்படதிலயே கண்ணீரை தேக்கி எப்போது வெளியே விடவேண்டுமோ அப்போது விடவைக்கும் திறன் இந்த புவியில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அந்த திறம் ...அடேயப்பா..! !

    தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !

    இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...

    தொடரும் ....
    Last edited by NTthreesixty Degree; 2nd July 2013 at 11:23 PM.

  7. #946
    Junior Member Newbie Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Respected NTTHREESIXTY SIR,

    WHAT A FUNTASTIC PRESENTATION.I WONDER YOUR WRITEUP.WHAT A VIDAL KNOWING THINGS YOU HAVE.OUR ACTING GOD FAME ESTABLISH ALL WORLD THOROUGH THIS TYPE OF EXCELLENT REPLY GIFT OF PRESENTATION. LONGLIVE MY DEAR SIR.THANKS THANKS THANKS LOT

  8. #947
    Junior Member Newbie Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Gopal sir , i accept your point

  9. #948
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Today, July 3rd marks the birthday of Mr.Ramkumar, the eldest son of the house Annai Illam and Nadigar Thilagam -

    We wish him many more happy returns of the day and may the almighty grant him all the wishes of his life and give the house of nation's pride all the laurels. - Many More Happy Returns of the Day Sir ! A scene from his first film Aruvadai Naal. Class Scene, Composed Performance !!

    Last edited by NTthreesixty Degree; 3rd July 2013 at 11:31 AM.

  10. #949
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ramesh Satyanarayanan View Post
    Respected NTTHREESIXTY SIR,

    WHAT A FUNTASTIC PRESENTATION.I WONDER YOUR WRITEUP.WHAT A VIDAL KNOWING THINGS YOU HAVE.OUR ACTING GOD FAME ESTABLISH ALL WORLD THOROUGH THIS TYPE OF EXCELLENT REPLY GIFT OF PRESENTATION. LONGLIVE MY DEAR SIR.THANKS THANKS THANKS LOT
    Dear Ramesh Sir,
    Am not that much old....am only 42...so " respected sir " ellam dhayavuseidhu vendaam...Subbu endre koopidungal.
    Thankyou so much for your kind words and appreciation. Infact, it is the motivation like this from you and our friends like Mr.Raghavender, Mr.Neyveliyar, Mr.Gopal, Mr.Murali, Mr.Rahulram, and our good friends from the other thread Mr.Esvee etc., making all of us to contribute whatever we are capable of. I will compare this with the Squirrel that helped SriRama to form a bridge.

    I would be happy if you also write your experiences on Nadigar Thilagam and we all will be happy too about it.

    Regards

  11. #950
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Red face hi

    Dear Mr.Subhu - it was nice talking to you today - really hats off to your time and passion in articulating a wonderful write up . Sometime criticisms are blessing in disguise - they may induce us to do further R&D to make the history believable ,they may distort the flow but we can be back on track with new energy - Regards
    Ravi-hyderabad

    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    தொண்டு செய்கிறேன் தொண்டு செய்கிறேன் என்று துண்டு விரித்து ஏமாற்றுபவர்கள் மத்தியில்,
    தான் நடிக்கும் திரைப்படம் மக்கள் கொடுக்கும் பணத்தால் தான் பெருகி வருகிறது..அதற்க்கு மக்களுக்கு தார்மீக ஆத்மார்த்த அடிப்படையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்று உண்மையான நோக்கத்தோடு

    ...திரை உலகத்தில் உள்ள அத்தனை நடிகர்களை விட அதிகமான கதாபாத்திரங்களை அதாவது

    தமிழறிஞர்கள்,
    தேசத்தலைவர்கள்,
    விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்,
    விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்,
    வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள்,
    கலை விற்பன்னர்கள்,
    புராண நாயகர்கள்,
    சமுதாய சீர்திருத்தவாதிகள்

    என பல நல்லவர்களை அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை மக்கள் முன் தன் திரைப்படம் வாயிலாக கொண்டுசென்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் !

    இந்த கால தலைமுறையினர், பொய்களை, போலிகளை, பித்தலாட்டங்களை அடையாளம் கண்டுகொண்டு, உண்மையான விஷயங்களை ஆதாரங்களோடு பார்த்து, படித்து நமது நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனை, அவரின் அரும்பணியினை அவருக்கு சமுதாயத்தின் மேல் மற்ற எந்த நடிகரையும் விட ஒருபடி மேல் அக்கறை உள்ளது என்ற உண்மையை உணரும் விதமாக இந்த கட்டுரை இன்று முதல் புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :


    முன்னுரை

    1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !

    உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....

    இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் தமிழ் திரைப்படத்தில் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும், தமிழை, முதலில் அறிதல் வேண்டும் ..அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்

    நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்

    http://www.youtube.com/watch?feature...&v=4IdkG7hnwC0


    http://www.youtube.com/watch?feature...&v=ovlbJ_FM3v4


    http://www.youtube.com/watch?feature...&v=76MtBfrCFvM


    ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..

    உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம்
    .

    மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!


    அந்த உடல் தான் நடிகன் !

    ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !

    இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!

    தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!

    உதாரணமாக :

    ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..!
    ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...

    அதுதான் தமிழின் வலிமை...!


    1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.

    அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று அவரை பற்றி அறியாதவர், அறிந்தும் தாழ்புனற்சியால் தூற்றுபவர், பலர் நினைக்கலாம்...

    அப்படி நினைபவர்களுக்கு : முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர் திலகத்தை படத்தை விட்டு தூக்கவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம்.

    PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.

    என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் ! ஒரு தயாரிப்பாளர் ஒரு புதுமுகத்தின் மேல் இத்தனை நம்பிக்கை வைத்தது திரை உலகம் அகில உலகத்திலும் நாம் கேள்விபடாத நடக்காத ஒரு சாதனை.

    இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...

    ஒரு நடிகனுக்கு பல படங்களில் சிறு சிறு வாயிப்புகள் வந்து நடித்துகொண்டிருந்தால் கூட பரவாஇல்லை,அது மிக மிக நல்ல விஷயம் காரணம், திரை துறையில் இருக்கிறோம் என்ற ஒரு ஆறுதல், தொடர்ந்து கிடைக்கும் (சிறு வேடமானாலும் )வாய்ப்பு இவற்றால் கிடைக்கும் வாழ்வாதாரம் இவை அனைத்தும் நல்ல விஷயங்கள் தான்.

    ஆனால் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் தோல்வி அடைந்தாலோ அல்லது தயாரிப்பாளர் அந்த நாயகனை பாதியில் தூக்கி எறிந்தாலோ முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் ஒரு வழியாக 8 மாத இடைவெளிக்கு பிறகு படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...

    அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , திரையுலகில் ஒரு புரட்சி புயலாய், "புரட்சி" என்ற வார்த்தையை திரைஉலகில் அனைவரையும் பராசக்தி என்ற பெருவெற்றியின் மூலம் முதன் முதலில் பேசவைத்ததே, அதை நடைமுறையில் கொண்டுவந்ததே, நம் திரை உலக சித்தர் சிவாஜி கணேசன் அவர்கள் தான் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ யாராலும் முடியாது ! ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.

    முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !

    முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு

    http://www.youtube.com/watch?feature...&v=KsqfDbJv33U

    கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு

    http://www.youtube.com/watch?feature...&v=B2ai_eNPkCs


    அடுத்தது பாடல் வரிகேற்ப வாய் அசைத்தல் - முதல் படம்- அதில் திராவிட கருத்துக்களை சொல்லும் பாடல் - காட்சிபடி இதை பாடுவது ஒரு பயித்தியம் போல வேஷமிட்ட நாயகன்..கதைப்படி மற்றவர்களை பொருத்தவரை ஒரு பயித்தியம்...நடிகர் திலகத்தின் குரல் இயற்கையாக 9 டு 10 கட்டை கொண்ட சிம்ஹகுரல்...அனால்..பாடியிருப்பவர்...திரு.C S ஜெயராமன் அவர்கள்.

    அவரது திறமை என்பது நடிப்பில் மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் - திரு.ஜெயராமன் அவர்களுடைய குரல் மெல்லிய மென்மையான குரல். வழுக்கிக்கொண்டு செல்லும் குரல்...நடிகர் திலகத்தின் இயற்க்கை குரலோ சிம்ஹகுரல்.

    இதை எவ்வளவு திறமை அவருள் இருந்தால் இப்படி வாயசைத்திருப்பர் என்று பாருங்கள்.

    நடிகர் திலகம் திரு.ஜெயராமன் அவர்கள் பாடும்போது, தன்னுடைய பாவத்தை, முகவாயகட்டையை சிறிது குவித்து வைத்து...அதாவது வாயில் சிறிது வெற்றிலையோ அல்லது தண்ணீரோ வைத்துகொண்டு பேசினால் என்னகுரல் வருமோ அதுபோல வாயசைத்திருப்பர் .

    பின்பு நடனம் - ஒருவித தான்தோன்றித்தனமான நடனம் இதில் பார்க்கலாம்...நடன ஆசிரியர் சொல்லிகொடுத்த ஸ்டெப்ஸ் மட்டுமே இங்கே நாம் பார்க்க முடியும். காட்சிக்கு என்ன தேவையோ அதை லாவகமாக செய்திருப்பார் நம்முடைய சித்தர் ! அந்த Movements அனைத்தும் பின்னணி இசையோடு கலந்து இருக்கும் நாம் சற்று கண்ணமூடி பாடலை கேடோமேயானால்...!

    அபிநயம் இந்த பாடலில் அவரது தனி முத்திரை ! பாடல் வரிகேற்ற அபிநயம். இதை எந்த டைரக்டர் சொல்லி கொடுத்திருப்பார் அவருக்கு..! உதாரணம் :

    நல்லவரானாலும் (காசு/பணம்) இல்லாதவரை நாடுமதிக்காது குதம்பாய் என்ற வரி...இந்த வரி வரும்போது காசு / பணம் என்ற வார்த்தை பாடலில் இடம் பெற்றிருக்காது. ஆனால் நடிகர் திலகம் தனுடைய விரலை சுண்டி காண்பித்து காசு / பணம் என்று புரியவைப்பார். !

    உங்களுடைய பார்வைக்கு அதன் ஓலி ஓளி வடிவம் !

    http://www.youtube.com/watch?feature...&v=eCVQAzG8_14

    நடிகர் திலகத்தின் நடிப்பின் உச்சம்
    அந்த நீதிமன்றம் காட்சி.....அவருக்கு பிறகு வந்த மூன்று முதல் நான்கு தலைமுறைகள், நடிகர் திலகத்தின் இந்த காட்சியை தங்களுக்குள்ள சினிமா ஆர்வம் தூண்டி ஒரு Directorayo அல்லது Producerayo காணும்போது பேசிகான்பிபது திரை உலகின் ஒரு வழக்கமாகவே இருந்தது என்றால் பாருங்கள்.

    நமது அன்னை தமிழின் உயிர் அதன் நாடி எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுண்டி விட்டு படம் பார்க்கும் நம்மையும் அவருக்கு மனதளவில் சப்போர்ட் செய்யவைக்கும் திறம்,

    கலைத்தாய் , தமிழ்த்தாய் நடிகர் திலகம் வரும்வரை எவ்வளவு தாகத்துடன் தமிழ் திரை உலகம் என்ற பாலைவனத்தில் இருந்திருப்பார்கள் என்று என்னிபார்தல் வேண்டும்..!

    இந்த செந்தமிழை, உரைநடை தமிழை எவ்வளவு லாவகமுடன்......ல..ள..ர..ற...ழ ....அக்ஷர சுத்தியுடன் உரைத்திருக்கிறார்

    அதுவும் முதல் படத்தில்....இந்த காட்சியில்...கேமரா ஒரு இடத்தில் நிருத்திவைக்கபட்டதோடு சரி. எவ்வளவு நீண்ட ஒரு வசனம்..ஒரு Takeல் எவ்வளவு நீளமான காட்சி எடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது...நாம் கற்று இன்று பேசும் தமிழ் ஏதோ கொஞ்சம் சுமாராக இருக்கிறதென்றால் அதற்க்கு முதல் காரணம் நம் சித்தர் படங்களை பார்த்து இதைபோல நாமும் பேசவேண்டும் அக்ஷரம் பிசகாமல் என்பது தான் !

    பக்கம் பக்கமாக வசனம் என்று கேள்விப்பட்டவுடன் ஆளவிடு சாமி என்று கொடுத்தவரிடம் காரணமே சொல்லாமல் பயந்தோடிய நடிகர்கள் மத்தியில், ஒன்ற, இரேண்டா, மூன்றா, பத்துபக்கமா..? கொடு வசனத்தை...பிடி முதல் takilayae ஓகே என்ற ரீதியில் கலை களஞ்சியமாக விளங்கியவர் திரை உலகில் நடிகர் திலகம் மட்டுமே என்றால் அது மிகையாகாது !

    அந்த அனல் பறக்கும் நீதிமன்ற காட்சி - !


    http://www.youtube.com/watch?feature...&v=SdnOlP94x2g

    வசன வார்தைகளுக்கேற்ற அவருடைய முகபாவம், வார்தைகேற்றவாறு கேசம்கூட ஆடவைக்கும் அந்த தலை அசைப்பு , ஆணித்தரமாக வாதிடும்போது தானாக வரும் அந்த வலதுகை, தங்கைபற்றி, குடும்பத்தைப்பற்றி பேசும்போது முதல்படதிலயே கண்ணீரை தேக்கி எப்போது வெளியே விடவேண்டுமோ அப்போது விடவைக்கும் திறன் இந்த புவியில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அந்த திறம் ...அடேயப்பா..! !

    தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !

    இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...

    தொடரும் ....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •