Page 109 of 399 FirstFirst ... 95999107108109110111119159209 ... LastLast
Results 1,081 to 1,090 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1081
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ஹிந்தித் திரையுலகில் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவரும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகருமான திரு பிரான் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்ததாக செய்தி வந்துள்ளது. இது மிகவும் துயரளிக்கும் செய்தி. 93 வயதான பிரான் அவர்கள் நடிகர் திலகத்தை மிகவும் நேசித்தவர். அவர் இல்லத்தில் நடிகர் திலகத்தின் படம் எப்போதும் இருக்கும் என்றும் நாம் படித்திருக்கிறோம். அவருடைய மறைவு இந்தியத் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

    அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1082
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Hmmm...So unfortunate...The most stylish villain and a great character artist Mr.Pran...May his soul rest in peace...

    Dada Saheb phalke his recent achievement just like our NT it was given very very late for Mr.Pran. The plot that was plotted against him so that DSP award doesnt reach him was just the same like our NT...

    Great Men always alike !

  4. #1083
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சுப்பு,

    மீண்டும் ஒரு Nit picking. தவறாக நினைக்க வேண்டாம். இதை முன்பே ஒரு முறை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

    தேசிய விருதுகளைப் பொறுத்தவரை சிறந்த நடிகர் விருது நமது நடிகர் திலகத்திற்கு கிடைக்கவில்லையே என்ற மனக் குறை நம் அனைவரின் மனத்திலும் நிரந்தரமாக உள்ள ஒன்று. ஆனால் அதே நேரத்தில் நமது திரி என்று சொன்னாலே உண்மையான வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறும் திரி எனபது இந்த திரியை வாசிக்கும் உலகெங்கும் உள்ள மனிதர்கள் ஒப்புக் கொள்ளும் fact. ஆகவே தவறு என்று தெரியாமலே வரும் மாறுப்பட்ட தகவல்களை நாம் அளிக்காமல் இருக்க வேண்டும்.

    இந்த நீண்ட முன்னுரைக்கு காரணம் நமது நாட்டில் திரைப்பட தேசிய விருதுகள் 1954 முதலே வழங்கப்பட்டு வந்தபோதிலும் அந்த தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருது என்ற பிரிவு தொடங்கப்பட்டதே 1967 முதல்தான். எனவே தமிழ் திரையுலகில் நடிகர் திலகத்தின் முதல் 15 ஆண்டுகள் உழைப்பை உரசிப் பார்க்க அப்போது சிறந்த நடிகர் விருது இல்லாமல் போய் விட்டது.

    எனவேதான் 1961-ம் ஆண்டு பாவ மன்னிப்பு பாச மலர் மற்றும் கப்பலோட்டிய தமிழன் ஆகிய மூன்று படங்களுக்கு வெவேறு பிரிவில் அடங்கிய தேசிய விருதுகள் கிடைத்த போதும் சிறந்த நடிகர் விருது இல்லாததால் நடிகர் திலகத்தின் கழுத்தை அலங்கரிக்கும் பாக்கியம் அந்த விருதுக்கு இல்லாமல் போனது.

    அதே நேரத்தில் 1967 முதல் நடிகர் திலகம் தேர்வு குழுவினரால் புறக்கணிக்கப்பட்டார் என்பது யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மை.

    எந்த திரியில் எப்படிப்பட்ட செய்திகள் வந்தாலும் நமது திரியில் தெரியாமல் கூட தவறான தகவல்கள் இடம் பெற வேண்டாம். எப்போதும் உண்மையான செய்திகளையே பகிர்ந்து கொள்வோம் என்ற எண்ணத்தில் இதை பதிவு செய்கிறேன். சரியான கோணத்தில் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தவறாக நினைக்க வேண்டாம் என உங்களை கேட்டுக் கொண்டு

    அன்புடன்

  5. #1084
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #1085
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள நண்பர்களுக்கு,

    இதை பலமுறை எழுதியதுதான். இருந்தாலும் மீண்டும் மீண்டும் எழுத வைக்கிறார்கள் நமது நண்பர்கள் சிலர். ஒரு பெரிய பதிவுக்கு பதில் எழுதும்போது அந்தப்பதிவின் கருத்தைக்குறித்து, அல்லது அந்தப்பதிவின் எண்ணைக்குறிப்பிட்டு பதிலளித்தல் நன்றாக இருக்கும். திரியினை ஓப்பன் செய்வதிலும் தாமதம் ஏற்படாது என்றும், பலவீனமான சர்வர் இனைப்புள்ளவர்களுக்கும், இணையத்தில் ட்ராபிக் நெரிசல் ஏற்படும் நேரங்களில் காலதாமதம் தவிர்க்கப்படும் என்றும் பலமுறை பதிவிட்டுள்ளோம். பலன்...????.

    முந்தைய பக்கத்தில் ஒரு நண்பர் அவர்கள், நண்பர் திரு சௌரி அவர்கள் பதித்துள்ள நடிகர்திலகத்தின் ஸ்டைலுடன் கூடிய இயற்கையான சண்டைக்காட்சிகள் பற்றிய அற்புத பதிவுக்கு ஐந்து வரிகளில் கமெண்ட் எழுதுவதற்கு, சௌரி அவர்களின் அத்தனை பெரிய பதிவை அதில் அடங்கியுள்ள அத்தனை விடியோக்களுடன் அப்படியே 'கோட்' செய்துள்ளார். இதனால் திரியைத் திறப்பதற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பதை நண்பர்கள் புரிந்துகொண்டால் நல்லது...

  7. #1086
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    நாளை மறுநாள் 15.07.2013

    நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இரு மாபெரும் திரைக்காவியங்கள்

    "தர்மம் எங்கே" (15.07.1072 - 15.07.2013)
    42 - வது ஆண்டு துவக்கம்

    "எங்கள் தங்கராஜா" (15.07.1973 - 15.07.2013)
    41 - வது ஆண்டு துவக்கம்

    ரசிகப்பெருமக்களின் சிறப்புப் பதிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன...

  8. #1087
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    சுப்பு,

    மீண்டும் ஒரு Nit picking. தவறாக நினைக்க வேண்டாம். இதை முன்பே ஒரு முறை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

    தேசிய விருதுகளைப் பொறுத்தவரை சிறந்த நடிகர் விருது நமது நடிகர் திலகத்திற்கு கிடைக்கவில்லையே என்ற மனக் குறை நம் அனைவரின் மனத்திலும் நிரந்தரமாக உள்ள ஒன்று. ஆனால் அதே நேரத்தில் நமது திரி என்று சொன்னாலே உண்மையான வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறும் திரி எனபது இந்த திரியை வாசிக்கும் உலகெங்கும் உள்ள மனிதர்கள் ஒப்புக் கொள்ளும் fact. ஆகவே தவறு என்று தெரியாமலே வரும் மாறுப்பட்ட தகவல்களை நாம் அளிக்காமல் இருக்க வேண்டும்.

    இந்த நீண்ட முன்னுரைக்கு காரணம் நமது நாட்டில் திரைப்பட தேசிய விருதுகள் 1954 முதலே வழங்கப்பட்டு வந்தபோதிலும் அந்த தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருது என்ற பிரிவு தொடங்கப்பட்டதே 1967 முதல்தான். எனவே தமிழ் திரையுலகில் நடிகர் திலகத்தின் முதல் 15 ஆண்டுகள் உழைப்பை உரசிப் பார்க்க அப்போது சிறந்த நடிகர் விருது இல்லாமல் போய் விட்டது.

    எனவேதான் 1961-ம் ஆண்டு பாவ மன்னிப்பு பாச மலர் மற்றும் கப்பலோட்டிய தமிழன் ஆகிய மூன்று படங்களுக்கு வெவேறு பிரிவில் அடங்கிய தேசிய விருதுகள் கிடைத்த போதும் சிறந்த நடிகர் விருது இல்லாததால் நடிகர் திலகத்தின் கழுத்தை அலங்கரிக்கும் பாக்கியம் அந்த விருதுக்கு இல்லாமல் போனது.

    அதே நேரத்தில் 1967 முதல் நடிகர் திலகம் தேர்வு குழுவினரால் புறக்கணிக்கப்பட்டார் என்பது யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மை.

    எந்த திரியில் எப்படிப்பட்ட செய்திகள் வந்தாலும் நமது திரியில் தெரியாமல் கூட தவறான தகவல்கள் இடம் பெற வேண்டாம். எப்போதும் உண்மையான செய்திகளையே பகிர்ந்து கொள்வோம் என்ற எண்ணத்தில் இதை பதிவு செய்கிறேன். சரியான கோணத்தில் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தவறாக நினைக்க வேண்டாம் என உங்களை கேட்டுக் கொண்டு

    அன்புடன்
    அன்புள்ள முரளி சார்

    அப்படியே பார்த்தாலும் 67 முதல் வந்த திரைப்படங்களில் இந்த கீழ்கண்ட படங்களுக்காகவாவது சிறந்த நடிகர் பட்டம் கிடைத்திருக்க வேண்டும். இந்த படமா..இதற்க்கா என்று எவராவது கூரநினைத்தால் தங்கள் அபிமான நடிகரின் படங்களை விட இவை மிக சிறந்த நடிப்பை கொண்ட படங்கள் என்பதை உணர்வார்கள்...உணரவேண்டும்...!

    1967 - Thiruvarutchelvar
    1968 - Uyarndha Manidhan
    1968 - Thillana Moganambal
    1968 - Enga Oor Raja
    1969 - Dheiva Magan
    1970 - Vietnam Veedu
    1971 - Savaale Samaali
    1971 - Babu
    1972 - Gnana Oli
    1973 - Gauravam
    1973 - Rajapart Rangadurai
    1974 - Thanga Padhakkam
    1975 - Avan Thaan Manidhan
    1977 - Annan Oru Koyil
    1977 - Theebam
    1977 - Naam Pirandha Man
    1979 - Kavari Maan
    1981 - Keezhvaanam Sivakkum
    1981 - Kalthoon
    1982 - Vaa Kanna Vaa
    1982 - Thunai
    1982 - Paritchaikku Neramaachu
    1983 - Miruthanga Chakravarthi
    1984 - Vaazhkai
    1985 - Bandham
    1985 - Muthal Mariyathai
    1986 - Anandha Kanneer
    1986 - Marumagal
    1992 - Thevar Magan
    1997 - Oru Yathra Mozhi
    1998 - En Aasai Rasave

  9. #1088
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    திரி நண்பர்களுக்கு

    இன்று காலை முரசு தொலைகாட்சியில் இருபடபாடல்களில் நம் நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்து அன்றும் இன்றும் என்றும் வெற்றி நடை போடும் காலாத்தால் அழியாத சமூக காதல் காவியம் "வசந்த மாளிகை" பட பாடல் ஒளிபரப்பப்பட்டது.

    அனைத்து பாடல்களிலும் நம் நடிகர் திலகத்தின் தனி முத்திரை பார்த்தாலே பரவசமடைய செய்தது !

    மிகவும் இளமை பொலிவுடன் படு ஸ்லிம் அண்ட் ட்ரிம் ஆக நடிகர் திலகம் வலம்வந்து வாயசைத்து, நடமாடி பாடிய பாடல்கள் படு அற்புதம் !

    குறிப்பாக ஒரு கின்னைத்தை ஏந்துகிறேன் பாடல்...."கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டிமுடிந்ததட அதில் கட்டில் அமைந்ததட....ஹ..ஹ..அதில் நான் சக்கரவர்த்தியடா என்று ஸ்டைலாக கூறும் ஒரு காட்சி போதும் கண் கோடிவேண்டும் .....

    என்ன இளமை...என்ன அழகு ...!

  10. #1089
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post

    திரை உலக சித்தர் சிவாஜி


    தர்மம் எங்கே திரைப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களை எவ்வளவு பலசாலிகளாக காட்டியிருக்கிறார்கள் பாருங்கள். வேறு ஏதாவது நடிகராக இருந்தால்.....? இருந்தால் என்ன...! 3 அடி formula தான்..!



    [/B]

    First time I'm watching this scene from Dharmam Engey. Good one....nice make make-up after that fire sequence.. thanks NT360, for uploading.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  11. #1090
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சுப்பு,

    மீண்டும் உங்கள் பதிவிற்கு ஒரு பதில் பதிவு போட வேண்டிய சூழல். முதலில் தேசிய விருது என்பது இன்று நகைப்புக்குரிய ஒன்றாக அரசியல் சித்து விளையாட்டாக மாறி விட்ட போதினும், அதற்கு என்று ஒரு சில விதி முறைகள் இருக்கின்றன.அவற்றில் முதலாவது and முக்கியமானது,

    மொழி மாற்றப் படங்கள் அதாவது ரீமேக் படங்களோ அவற்றில் பங்கு பெற்ற கலைஞர்களோ விருதுக்கு போட்டியிட முடியாது. இந்த காரணத்தினால் 1967-க்கு பிறகு வந்த உங்கள் லிஸ்டில் இடம் பெற்ற கீழ்கண்ட படங்கள் போட்டியிட முடியாது.அவை

    உயர்ந்த மனிதன்

    பாபு

    அவன்தான் மனிதன்

    தீபம்

    அண்ணன் ஒரு கோவில்

    வா கண்ணா வா

    வாழ்க்கை

    பந்தம்

    மருமகள்.

    மற்றப் படங்களுக்கு இந்த தடையில்லை.

    அடுத்த விஷயம் முந்தைய வருடத்தின் விருதுகளுக்கான விண்ணபங்களை அனுப்ப கோரி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நாளிதழ்களில் அறிவிப்பும் விளம்பரமும் செய்யும். போட்டிக்கு அனுப்பப்படும் திரைப்படம் முந்தைய வருடம் வெளியாகியிருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. எந்த வருடத்தின் விருதுகள் அறிவிக்கபடப் போகிறதோ அந்த காலண்டர் வருடத்தில் டிசம்பர் 31-க்குள் தணிக்கை (censor certificate) செய்யப்பட்டிருக்க வேண்டும்.[உதாரணதிற்க்கு 2012 டிசம்பர் 31-குள் தனிக்கையானதனால்தான் பாலாவின் பரதேசி படம் 2012-க்கான விருதுகளுக்கு போட்டி போட்டு ஒரு விருதை கைப்பற்றியது. ஆனால் படம் வெளியானது 2013 மார்ச்].அந்த சான்றிதழை இணைத்து படத்தின் இரண்டு பிரதிகளை விண்ணப்ப படிவத்துடன் அதற்கான கட்டணத்தையும் சேர்த்து விண்ணப்பம் அனுப்பவதற்கு குறிப்பிட்டுள்ள கெடுவிற்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

    ஆனால் ஒரு விஷயத்தை நான் கவனத்தில் கொள்ள வேண்டும். நடிகர் திலகத்தை பொறுத்தவரை அவர் இதையெல்லாம் சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார். தயாரிப்பாளர்தான் இதை முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் நமது ஊரில் அப்படி எல்லாம் மெனக்கெடும் ஆசாமிகள் அந்நாட்களில் குறைவு. இப்போது ஓரளவு விழிப்புணர்வு வந்திருப்பதால் ஒரு சில தயாரிப்பாளர்கள் இதை செய்கிறார்கள்

    அடுத்த கட்டம் தேர்வு குழுவில் இடம் பெறும் நமது ஊரை சேர்ந்தவர்கள் அந்த படம் திரையிடப்படும் போது மொழி தெரியாத மற்ற மாநில உறுப்பினர்களுக்கு படத்தின் சிறப்பம்சங்களை விளக்கி சொல்ல வேண்டும். அப்போதுதான் அந்த படமும் சரி அந்த கலைஞனின் performance-ம் தேர்வு குழுவினரால் கவனிக்கப்படும்.

    இதற்கு மிக சிறந்த உதாரணம் 1992-ம் வருடத்திற்க்கான தேர்வு குழுவின் தலைவராக இயக்குனர் பாலு மகேந்திரா இருந்த போது விருதுக்கு போட்டியிட்ட தமிழ் படங்களின் சிறப்புகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அன்று வரை இல்லாத அளவிற்கு தமிழ் படங்களுக்கு 12 முதல் 14 விருதுகள் கிடைக்க செய்தார்.அது மட்டுமா? தேவர் மகன் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்காக சிறப்பு பரிசையும் அறிவித்தார். ஆனால் அது supporting actor category-யில் வந்ததற்கு கொடுப்பது போல் இருந்ததால் நடிகர் திலகம் அதை ஏற்க மறுத்து நிராகரித்தார்.

    இந்த விருதுகளுக்கு படங்களை அனுப்புவதில் மிகச் சரியாக செயல்படுபவர்கள் கேரளத்தினரும் வங்காளத்தினரும்தான். அது மட்டுமல்ல தேர்வு குழுவில் குறைந்த பட்சம் இந்த மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர்களாவது இடம் பெறுவார்கள். அவர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அந்த ஊர் பத்திரிக்கைகள் அவர்களை வாட்டி எடுத்து விடும்.

    1990ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு மலையாளத்தின் இரண்டு அருமையான படங்கள் [பெருந்தச்சன் மற்றும் அமரம்] போட்டியிட்டன. ஆனால் அன்றைய நாளில் [1991 மார்ச்] ராஜீவ் காந்தியின் ஆதரவோடு ஆட்சி செய்துக் கொண்டிருந்த சந்திரசேகர் அரசு அமைத்த தேர்வு குழு, அற்புதமாக நடித்திருந்த திலகன் மற்றும் மம்மூட்டியை நிராகரித்து அக்னி பாத் படத்தில் நடித்திருந்த ராஜீவின் நண்பருமான அமிதாபிற்கு அந்த விருதை வழங்கியது. அது போலவே 2004-ம் ஆண்டு விருதுக்கு காழ்ச்சா என்ற படத்தில் அருமையாக செய்திருந்த மம்மூட்டியை நிராகரித்து காங்கிரஸ் குடும்பத்திற்கு நெருக்கமான பட்டோடி -ஷர்மிளா தாகூர் மகனான ஸைப் அலி கானுக்கு அதுவும் hum tum என்ற படத்திற்காக கொடுத்தது. இந்த இரண்டு வருடங்களிலும் கேரளத்திலிருந்து சென்ற தேர்வு குழுவில் இடம் பெற்றவர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் என்று அனல் பறக்கும் கட்டுரைகள் அந்த மாநிலத்தின் நாளிதழ்களில் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தன. இங்கே நாம் அப்படி எதிர்பார்க்க முடியுமா?

    இவற்றையெல்லாம் சொன்னால் கூட நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் என் மனதை விட்டு நீங்காது. அதனால்தான் கீழ் கண்ட வரிகளை நேற்றைய பதிவிலேயே சேர்த்திருந்தேன்.

    அதே நேரத்தில் 1967 முதல் நடிகர் திலகம் தேர்வு குழுவினரால் புறக்கணிக்கப்பட்டார் என்பது யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மை.

    நமது திரியில் பங்களிப்போர் அனைவரும் ஒரு முறை கூடி பேசிக் கொண்டிருந்த போது இதை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது சொல்லப்பட்டது என்னவென்றால் நாம் பேசுவது எல்லாம் hind sight-ல் தான். நாம் நம் ஆதங்கத்தை வெளிக் காட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்படலாமே தவிர வேறு என்ன செய்ய முடியம்? ஆகவேதான் நாங்கள் தேசிய விருதுகளைப் பற்றியே இங்கே விவாதம் செய்வதில்லை.

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •