Page 250 of 397 FirstFirst ... 150200240248249250251252260300350 ... LastLast
Results 2,491 to 2,500 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2491
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த உதவிய வரிகளுக்குச் சொந்தமான வாலியின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். ஒரு சில நாட்களுக்கு முன் தான் பாடலாசிரியர் ஆத்மநாதன் அவர்கள் காலமானார். அந்த செய்தி மக்களிடம் சென்று சேர்வதற்குள்ளாகவே வாலியின் மறைவு. தொடர்ச்சியாக தமிழ்த்திரையிசையுலகம் சந்தித்து வரும் பேரிழப்புகள் இந்த ஆண்டை மிகவும் துயரமான ஆண்டாக மாற்றி வருகின்றன.

    அவரது ஆன்மா சாந்தியடையவும் அவர் குடும்பத்தார் இந்த துயரைத் தாங்கும் வலிவினைப் பெறவும் இறைவனை வேண்டுவோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2492
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    May his soul rest in peace.

  4. #2493
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    கலை மன்னன்

    எல்லாம் அறிந்த எங்கள் தங்கம்...

    தன்னைப்போல அனைவரையும் பாவித்த ஆண்டவன்

    மக்கள் திலகம் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் காலத்திலேயே, நடிப்பில் உள்ள நுணுக்கங்கள் மட்டுமன்றி திரைப்படத்துறையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றறிந்தார்..ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதற்கு காரணங்கள் என்னவென்று ஆராய்ந்தார்..நடிக்க வந்தோமா, சம்பளம் வாங்கினோமா, வீட்டில் வைத்தோமா என்று நடிகர்கள் நடித்து வந்த காலத்தில் திரைப்படங்களின் வெற்றிக்கு துணை நின்ற லைட் பாய், இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, பாடகர், இசையமைப்பாளர், ஆர்ட் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை .போற்றினார். தான் நடிக்கும் படங்களில் அனைத்து கலைஞர்களும் சாப்பிட்டார்களா, அவர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை கவனித்து அதனைத் தீர்த்தும் வந்தார். அதே போல் தனக்கு வழங்கப்படும் சாப்பாடு அனைவருக்கும் கிடைக்கிறதா என்பதையும் பார்த்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்..தன்னுடன் பணிபுரியும் கலைஞர்கள் மனக்குறைவுடன் வேலை செய்ய அவர் அனுமதித்ததே இல்லை..கலைஞர்கள் கஷ்டத்தில் இருந்தால் ஈடுபாடுடன் பணிபுரிய முடியாது என உணர்ந்து அவர்கள் குறைகளைக்களைவதில் தனி அக்கறை எடுத்துகொண்டார்..இது போன்ற அக்கறை அன்று முதல் இன்று வரை எத்தனை நடிகர்களுக்கு இருந்தது..ஆம். இருந்தது..ஆணித்தரமாக சொல்லலாம்..இருவருக்கு...ஒருவர் .கலைவாணர்..மற்றொருவர்..மக்கள் திலகம்..அப்படிப்பட்டவருக்கு ஈடேது..இணையேது...

    சகல கலா வல்லவர் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், இசை வல்லுநர், பாடல், திரைப்பட தொழில் நுணுக்கம் அறிந்த ஞானி..

    ஒரு கலைஞன் எப்போது ஒரு முழுமை பெற்ற கலைஞனாகவும், மக்களைக்கவரும் நடிகனாகவும், திரைப்படங்களில் வெற்றிமேல் வெற்றியை குவிக்கும் வசூல் சக்ரவர்த்தியாகவும் மிளிர முடியும்..அதற்கு ஒரே உதாரணம் புரட்சி நடிகர்தான்......தான் நடிப்பை மட்டும் கற்றுக்கொள்ளாது, திரைப்படத்துறையின் அனைத்து பகுதிகளிலும் சென்று ஆராய்ந்து, கற்று, அவற்றை தனது படங்களில் கையாண்டு வெற்றியும் கண்ட ஒரே நடிகர் மக்கள் திலகம்தான் என்றால் மிகையாகாது...சிறந்த இயற்கை நடிப்பால் தமிழக மக்களையே தன்பால் ஈர்த்தார்..படங்களை இயக்கும் வல்லமை படைத்து, தமிழ் நடிகர்களிலே நாடோடி மன்னன் மூலம் திறமைமிக்க இயக்குநராகி, மாபெரும் வெற்றிப்படத்தை தயாரித்து, இயக்கி, சிறந்த இயக்குனர் என பெயரும் பெற்றார்...




    வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படங்களிலே மிக சிறந்த படமென்றும், வெள்ளி விழா படங்களில் பெரும் சாதனை படைத்து இன்னும் சாதனை படைத்து கொண்டிருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை இயக்கி, இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்...ஆண்டுகள் பல ஆனாலும் அடிமைப்பெண்ணின் வெற்றி நிற்காது ! என்ற பெருமை பெற்ற, நடிப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.... நடிப்பு, இயக்கம் மட்டுமா..இசையையும் அவர் விட்டு வைக்கவில்லை..இசையைக் கற்று எந்த பாட்டிற்கு என்ன இசை இருந்தால் நன்றாய் இருக்கும் என ஒவ்வோர் மெட்டாக போட்டு, தனக்கு திருப்தி ஏற்படும் வரை விடாமல், பாடல்களில் இசையை கலந்தவர்..தனக்கு திருப்தி என்பது தனது ரசிகர்களின் திருப்தியாக உணர்ந்து செயல்பட்டவர்..அதனால்தான் இன்றும் அவருடைய கொள்கை பாடல்கள் மற்றும் தத்துவ பாடல்கள் அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாகவும், மனதில் உள்ள துன்பங்களை தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது...வாழ்க்கையின் விரக்திக்கே சென்ற ஒரு மனிதனையும் மீட்டு வரும் இன்ப கீதமாக இன்னும் ஒலித்துகொண்டே இருக்கிறது..எனவே திரைப்படத்துறையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராய்ந்து, திறம்படக்கற்று..அதில் வெற்றியும் கண்ட புரட்சித்தலைவருக்கு இணை எவருமில்லை...திரையுலகை அன்றும், இன்றும்..என்றும்..ஆளும் ஒரே மன்னன், ஒரே சக்கரவர்த்தி..எங்கள் எம்ஜிஆர்தான்...

    ...தொடரும்...

  5. #2494
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    வாலிபக்கவிஞர் வாலியின் மறைவு
    வானில் இருக்கும் நம் மன்னவன் அழைப்பு..

    அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திப்போம்[/
    color]

  6. #2495
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காவியக்கவிஞர் வரகவி வாலி அவர்களின் மறைவுக்கு நமது கண்ணீர் அஞ்சலி



    மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 23

    பொன்மனச்செம்மல் பற்றி பொற்காலக்கவி

    வரலாற்று ஆவணம் : குமுதம் ஜங்ஷன் : 27.5.2003












    பம்மல் ஆர். சுவாமிநாதன்.
    Last edited by pammalar; 18th July 2013 at 09:15 PM.
    pammalar

  7. #2496
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2497
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2498
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2499
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    வரகவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்

    What a song from Vaali for AASAIMUGAM MGR !

    "நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல
    நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன்பேர் உள்ளமல்ல"




    வாலியின் வைர வரிகள் மக்கள் திலகத்தின் வாய்மொழியில் மலரும்போது அவை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டிய பொன்மொழிகளாகிவிடுகின்றன. பொற்காலப் படைப்புகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் !!

    பம்மல் ஆர். சுவாமிநாதன்.
    pammalar

  11. #2500
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம.ஜி.ஆர். இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர்,
    "ஆண்டவனே!(எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா முயன்று முன்னின்று உருவாகிக் கொண்டதல்ல..படத்துக்குப் படம் அது இயற்கையா எற்பட்டுடுச்சு...கண்ணதாசன், பட்டுக்கோட்டை, நீங்க - இப்படி கவிஞர்களும், நான் கருத்தாழம் மிக்க பாடல்களைப் பாடற மாதிரியே எழுதிடீங்க..எந்த பாட்டுலயும் சமூகத்துக்கு ஒரு சேதி இருக்கற மாதிரி பாடிட்டு ஒரு குடிகாரனா கதைக்கே தேவைப்பட்டாலும் நான் வந்தா எப்படி? இயல்பாவே எனக்கு அந்த பழக்கம் கிடையாது! குடிகாரனா நடிக்கிறது வேற;குடிச்ச மாதிரி நடிக்கிறது வேற..நான் இந்த ரெண்டாவது வேஷத்தை பல படத்துல பண்ணியிருக்கேன் - அதுவும் வில்லனின் வில்லங்கங்களை கண்டுபிடிக்க...நீங்க பார்த்து இருக்கலாம்..அவன் மதுக் கிண்ணத்தை என் கிட்ட கொடுத்தா கூட, அதை பக்கத்துல இருக்கற பூந்தொட்டில கொட்டிட்டு - சாப்ட மாதிரி சமாளிப்பேன்.."

    எம்.ஜி.யார் அவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் தந்தும் வாலி விடவில்லையாம். "அண்ணே!நீங்களும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச படம் 'கூண்டுக்கிளி';விந்தனோட கதை வசனத்துல, ராமண்ணா டைரக்க்ஷன்ல வந்த படம்..அதுல - நீங்க சிகரெட் பிடிக்கறீங்களே - ஒரு காட்சில? அது எப்படி?

    எம்.ஜி.யார் சொன்னாராம், "அப்பல்லாம் - நான் பொது வாழ்க்கைல அவ்வளோ தீவிரமா ஈடுபடல...ஒரு நல்ல நடிகன்..ஒரு நல்ல மனிதன் - என்கிற அளவிலதான் என்னைப் பற்றி அபிப்பிராயம் இருந்தது..வளர வளர "வாத்யா"ராயிட்டேன் - உழைக்கும் வர்க்கத்துக்கு ! அந்த சிகரெட் பிடிக்கிற சீன் கூட - பின்னாளில் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது!"

    எம்.ஜி.ஆரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாராம் கவிஞர் வாலி

    Thanks to Mr. Chandran Veerasamy

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •