Page 95 of 142 FirstFirst ... 45859394959697105 ... LastLast
Results 941 to 950 of 1411

Thread: Shocking things happening at TFI

  1. #941
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    dhina thandhi

    பெற்றோர்கள் சம்மதத்துடன் ‘‘ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன்’’ சிலம்பரசன் பேட்டி

    ‘‘பெற்றோர்கள் சம்மதத்துடன் நடிகை ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகர் சிலம்பரசன் கூறினார்.
    காதல்
    சிலம்பரசனும், ஹன்சிகாவும் ‘வாலு,’ ‘வேட்டை மன்னன்’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இரண்டு பேரும் நெருக்கமாக பழகி வருவதாகவும் பேசப்பட்டது. ஹன்சிகா வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும்போதும் சரி, சென்னையில் இருந்து வெளியூருக்கு போகும்போதும் சரி, விமான நிலையத்தில் வரவேற்பதும், வழியனுப்புவதும் சிலம்பரசன்தான்.
    இவர்களின் காதல் விவகாரம் இரண்டு பேரின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. சிலம்பரசனின் தந்தை டைரக்டர் டி.ராஜேந்தர், மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். ‘‘ஹன்சிகாவை என் மகன் சிலம்பரசன் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதை எதிர்க்க மாட்டேன்’’ என்று அவர் கூறினார்.

    நட்பாக...

    இந்த நிலையில் ஹன்சிகா, ஐதராபாத்தில் திடீர் பேட்டி அளித்தார். அதில், ‘‘சிலம்பரசனை நான் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நட்பாகத்தான் பழகி வருகிறோம்’’ என்று அவர் கூறியிருந்தார்.
    நடிகர்–நடிகைகள் முதலில் தங்கள் காதல் மற்றும் திருமண செய்திகளை மறைப்பதும், பின்னர் வேறு ஒரு காரணத்துக்காகவே மறைத்தேன் என்று சொல்வதும் சகஜம்தான். இதற்கு பல நட்சத்திர ஜோடிகளை உதாரணமாக கூறலாம்.
    ஹன்சிகாவின் பேட்டி, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிலம்பரசன் பேட்டி
    இதைத்தொடர்ந்து சிலம்பரசன் இன்று காலை லண்டனில் இருந்து தொலைபேசி மூலம் ‘தினத்தந்தி’ நிருபருடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
    ‘‘நானும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக காதலித்து வருகிறோம். உயிருக்கு உயிராக பழகி வருகிறோம். நான், ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன். என்னுடன், ஹன்சிகாதான் இருக்கிறார். நாங்கள் பிரிந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.
    திருமணம் உறுதி
    என் பெற்றோர்கள் சம்மதத்துடன், நான் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன். எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது உறுதி. அடுத்த ஆண்டு (2014–ல்) எங்கள் திருமணம் நடக்கும்.
    அஜித்–ஷாலினி எப்படி சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்களோ, அதேபோல் நானும், ஹன்சிகாவும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்.’’
    இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.
    ஹன்சிகா பேட்டி
    சிலம்பரசன் பேட்டி பற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–
    ‘‘நானும், சிலம்பரசனும் காதலிப்பது உண்மைதான். சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவே எங்கள் காதலை மறைத்து வந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதும் உண்மைதான். ஆனால், எங்கள் திருமணம் இப்போதைக்கு இல்லை.
    சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கிறது. அதையெல்லாம் சாதித்து முடித்து விட்டு, சிலம்பரசனை திருமணம் செய்து கொள்வேன்.’’
    மேற்கண்டவாறு ஹன்சிகா கூறினார்.
    Attached Images Attached Images

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #942
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like
    ithai ean pa shocking thread'la podringa..nalla news'thaana..

  4. #943
    Senior Member Senior Hubber nickraman's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    291
    Post Thanks / Like
    Quote Originally Posted by 19thmay View Post
    Ok ...adutha Nayanthara ready...
    Prabhu Deva ku next setup + silent breakup + announcing retirement + surprise comeback.

  5. #944
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    Actually PD - 9 break up-ku reason Hansika thaan-nu kElvi patten. Appdi paathaa, they have swapped their pairs

    Tamizhan-ku indha swarasiyam ellam pathaadhu, innum neraya edhirpaakiren.

  6. #945
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    மரணப் படுக்கையில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் அனாதை ஆஸ்பத்திரியில் தவிக்கிறார்

    கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமானவர் மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள் கனகா.. அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியால் தேவிகாக பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை.

    முத்துக்குமார் என்ற வெளிநாட்டு என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் கனவாவுக்கு இனிக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, பயம் அவருக்கு. அதனால் ஒரு மனநோயாளி போன்றே நடந்து கொள்ள ஆரம்பித்தார். தந்தை தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற்சிப்பதாகவும் வழக்கு போட்டார். தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசில் புகார் செய்தார். ஆவி அமுதா என் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று புகார் செய்தார். ஆவி அமுதா கனகா மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டார் கனகா. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது. இப்போது அவரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
    கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழா தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓராண்டுகள் வரை சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது அந்த மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

    கனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளகூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்க வில்லை என்று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்ற கனகா கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் யாரும் கனகாவை சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள்.

    கருப்பு வெள்ளை காலத்து கனவு கன்னியின் மகள், வண்ண சினிமா காலத்தில் மின்னிய நாயகி இப்போது யாருமற்றவராக மரணப் படுக்கையில்...

    - தினமலர்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #946
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    உண்மையில் அதிர்ச்சியளிக்கும் செய்தி. தேவிகாவின் மரணம் கனகாவை ரொம்பவே பாதித்து விட்டது உண்மை. "என்னை யாருமில்லாத அனாதையாக்கிட்டுப் போயிட்டியே" என்று கனகா கதறியது இன்னும் நினைவில் நிற்கிறது. இப்போது கனகா மரணத்தை எதிர்பார்த்திருக்கிறார் என்ற வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன...

  8. #947
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.dinamalar.com/news_detail.asp?id=772344

    காதலுக்கு தந்தை இடையூறு: சேரன் மீது மகள் போலீசில் பரபரப்பு புகார்

    சென்னை : சினிமா இயக்குனர் சேரன் மீது அவரது மகள், போலீசில் புகார் அளித்துள்ளார். தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது தந்தை சேரன் தன்னை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அவரது மகள் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் மனு அளித்துள்ளார். சேரனின் மகள் தாமினி(20). கல்லூரியில் முதலாமாண்டு விஷூவல் மீடியா படித்து வரும் இவருக்கும் உதவி இயக்குனரான சந்துரு என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
    இந்நிலையில் மகளின் காதல் விவகாரம் சேரனுக்கு தெரிய வர முதலில் எதிர்க்கவில்லை. இதற்கிடையில் சந்துரு, சேரனிடம் சென்று பெண் கேட்டுள்ளார். மகள் கல்லூரி படிப்பை முடித்ததும் திருமணம் செய்து வைப்பதாக சேரன் உறுதி அளித்துள்ளார். சிறிது நாட்களில் சேரன், சந்துருவின் வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று சந்துருவை ஒதுங்கிவிடும்படி கூறுமாறு அவரது பெற்றோரை மிரட்டி உள்ளார். இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் தலையீடு காரணமாக சந்துரு மற்றும் தாமினியிடம் விலகிக் கொள்வதாக மிரட்டி எழுதி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    இருப்பினும் தாமினியும் சந்துருவும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சேரன், மீண்டும் சேரனின் வீட்டிற்கு சென்று மிரட்டியதுடன் தாமினியை வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இதனால் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு தாமினி, சந்துருவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    சந்துருவின் தாய் மற்றும் சகோதரியின் உதவியுடன் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த தாமினி, தனது தந்தை சேரன் மீது புகார் அளித்தார். மேலும் தான் சந்துருவின் வீட்டிற்கு செல்ல விரும்புவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் பாதுகாப்பு அளித்தால் தாமினியை தங்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராக உள்ளதாக சந்துருவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

  9. #948
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like
    naan apdiye shock aayitten...

    Sridevi...




  10. #949
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    உண்மையில் அதிர்ச்சியளிக்கும் செய்தி. தேவிகாவின் மரணம் கனகாவை ரொம்பவே பாதித்து விட்டது உண்மை. "என்னை யாருமில்லாத அனாதையாக்கிட்டுப் போயிட்டியே" என்று கனகா கதறியது இன்னும் நினைவில் நிற்கிறது. இப்போது கனகா மரணத்தை எதிர்பார்த்திருக்கிறார் என்ற வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன...
    கனகாவும் அவரது தந்தையும் சந்திக்கிறார்கள். ஒருவரையொருவர் கடுமையாக சாடுகிறார்கள். தினமலர் பேட்டியெடுத்த இந்த நிகழ்வின் இரு காணொளிகளை முகநூலில் பார்த்தேன். இருவரின் மீதும் பரிதாப உணர்வே மிஞ்சியது. யூட்யூபில் வந்துவிட்டதா எனத் தெரியல. பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #950
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like

Page 95 of 142 FirstFirst ... 45859394959697105 ... LastLast

Similar Threads

  1. Funny Things Happening In Cricket
    By Sourav in forum Sports
    Replies: 140
    Last Post: 12th August 2013, 08:54 PM
  2. Good Things happening in TFI
    By Sanjeevi in forum Tamil Films
    Replies: 4
    Last Post: 8th February 2010, 04:47 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •