-
29th March 2013, 05:37 AM
#31
Moderator
Diamond Hubber
பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!!
உடலில் தீக்காயம் பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. சமீபத்தில் சுகுமாரி தன், தி.நகர்., வீட்டில், விளக்கு ஏற்றும்போது, புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, குளோபல் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
-
29th March 2013 05:37 AM
# ADS
Circuit advertisement
-
16th April 2013, 08:55 PM
#32
Moderator
Diamond Hubber
Last edited by aanaa; 17th April 2013 at 06:02 PM.
"அன்பே சிவம்.”
-
17th April 2013, 05:57 PM
#33
Moderator
Diamond Hubber
ராமமூர்த்தியின் உடலுக்கு எம்.எஸ்.வி இறுதி அஞ்சலி
திரைப்பட இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மாரடைப்பால் நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 91. ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று புகழ்பெற்றவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி. கடந்த சில மாதங்களாக ராமமூர்த்தி உடல்நிலை குன்றியிருந்தார். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். 1922ல் திருச்சியில் பிராமண குடும்பத்தில் பிறந்தவர், டி.கே.ராமமூர்த்தி. இசைக் குடும்பம் என்பதால், சிறுவயதிலேயே இசையை கற்றுக்கொண்டார். பிறகு சென்னைக்கு வந்த அவர், இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமன் சிபாரிசு மூலம் ஹெச்.எம்.வி. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் சரஸ்வதி ஸ்டோர் நிறுவனத்தில் இணைந்தார்.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
-
25th May 2013, 08:12 PM
#34
Moderator
Diamond Hubber
RIP -TMS
TM Soundarajan died on 25 May 2013 at his residence in Mandaveli, Chennai due to illness. He was 91 years old at the time of his death.
sample song..
Last edited by aanaa; 25th May 2013 at 08:15 PM.
"அன்பே சிவம்.”
-
18th July 2013, 08:57 PM
#35
Moderator
Diamond Hubber
கவிஞர் வாலியின் இயற்பெயர் டி.எஸ். ரங்கராஜன். இவர் கடந்த 29 அக்டோபர், 1931ல் பிறந்தார். தமிழ் கவிஞரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் ஆன இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதை தொகுப்புகள் புகழ் பெற்றவை. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள் ஹேராம், பார்த்தாலே பரவசம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருவரங்கத்தில் பிறந்து, வளர்ந்தார். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்து பத்திரிக்கையை துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதி கொடுக்கும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது.திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்த கையெழுத்து பத்திரிக்கையில் பல இளைஞர்கள் பங்கேற்று கொண்டனர். அப்படி பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ் பெற்ற எழுத்தாளரான சுஜாதா ஆவார்.தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாக படம் வரையும் திறமையும் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியை போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளி தோழன் பாபு, ‘மாலி'யை போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்று கூறி 'வாலி' என்னும் பெயரை சூட்டினார்.வாலி எங்க வீட்டு பிள்ளை என்ற படத்தீல் எம்.ஜி.ஆருக்கு எழுதிய நான் ஆணையிட்டால், ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தீல் எழுதிய ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... ஆகிய பாடல்கள் புகழ் பெற்று விளங்கின.இவர் ஐந்து முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.2007-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
-
23rd July 2013, 11:58 PM
#36
Moderator
Diamond Hubber
நடிகை மஞ்சுளா விஜயகுமார் மரணம்
சென்னை: நடிகை மஞ்சுளா இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவர் நடிகர் விஜயகுமாருடன் வசித்து வந்தார் மஞ்சுளா. சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். கட்டிலின் கால் பகுதி அவரது வயிற்றில் குத்தியது. இதில் வயிற்றில் ரத்தம் உறைந்தது. இதையடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து சிறுநீரகம் பழுதடைந்தது. இன்று காலை மஞ்சுளா உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். அப்போது விஜயகுமார், மகன் அருண் விஜய் மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். 1965ம் ஆண்டு ‘சாந்தி நிலையம்' படத்தில் சிறுமியாக அறிமுகம் ஆனார் மஞ்சுளா. பின்னர் ‘ரிக்ஷாக்காரன்' படத்தில் கதாநாயகியாக எம்ஜிஆருடன் நடித்தார்.
தொடர்ந்து சிவாஜி, என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கமல், ரஜினி உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்தார். ‘உன்னிடம் மயங்குகிறேன்' என்ற படத்தில் விஜயகுமாருடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் எம்ஜிஆர் திருமணம் நடத்தி வைத்தார். கடைசியாக 2011ம் ஆண்டு வெளியான ‘என் உள்ளம் தேடுதே' படத்தில் மஞ்சுளா நடித்தார்.
விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா. ஆனாலும் விஜயகுமாரின் முதல் மனைவி குடும்பத்தினருடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார். விஜயகுமார், மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். முதல் மனைவியின் மகன்தான் நடிகர் அருண் விஜய். மஞ்சுளா உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆலப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை அவரது இறுதி சடங்கு நடக்கிறது. திரையுலகினர் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Last edited by aanaa; 24th July 2013 at 12:00 AM.
"அன்பே சிவம்.”
-
9th November 2013, 08:36 PM
#37
Moderator
Diamond Hubber
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்...
பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு.
இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, 'பைபாஸ் சர்ஜரி' செய்து கொண்டார்.
அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.
சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.
கடந்த 4ந் தேதி அவர் திடீரென மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில்,
அவரை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலமானார்.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
-
22nd January 2014, 08:30 PM
#38
Moderator
Diamond Hubber
பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் இன்று புதன் அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 91. கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.
1940 ஆம் ஆண்டு வெளியான தர்மபத்தினி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் நாகேஸ்வரராவ். அவர் கதாநாயகனாக நடித்து வெளியான தேவதாஸ் மிகப் பெரும் வெற்றி பெற்றது. அதில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
அவர் நடித்து அதிகம் பேசப்பட்ட இன்னொரு தமிழ்த் திரைப்படம், திமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான அண்ணா கதை வசனம் எழுதிய ஓர் இரவு.
தமிழ், தெலுங்கு உட்பட 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நாகேஸ்வர ராவ், மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் மற்றும் திரைப்படத்துறை சாதனைகளுக்காக தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
தமிழக அரசும் கலைமாமணி பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது. அவரது மகன் நாகார்ஜூனாவும் பிரபல திரைப்படக் கதாநாயகனாவார்.
-
14th February 2014, 06:00 AM
#39
Moderator
Diamond Hubber
Southern film industry mourns as Sadma director Balu Mahendra dies
Balu Mahendra, 75, who suffered heart attack, was rushed to the hospital where he breathed his last, sources said. He is survived by his wife and son.
Last edited by aanaa; 14th February 2014 at 06:04 AM.
"அன்பே சிவம்.”
-
9th March 2014, 09:39 PM
#40
Administrator
Diamond Hubber
Comedian Lollu Sabha Balaji Passes Away
Comedian actor Balaji who is known for his hit comedy shows ‘Lollu Sabha’ in Vijay TV and ‘Super 10′ show in Sun TV passed away on 7th Marth in a private hospital in Anagaputthur, near Chennai. He was 43 and is surivived by his wife and 3 children..
Balaji who had been suffering from jaundice from quite some time now, was apparently admitted in hospital after his health condition was deteriorated.He was put on the ventilator but succumbed to his illness. He breathed his last at 2 AM.
He was the one who introduced comedian Santhanam to the director of Lollu Sabha and both the actors shot to fame with the same show.
Balaji has acted in comedic roles in several movies like Silambattam and Dindigul Sarathy. He is also credited with writing dialogues for Shiva starrer “Thillu Mullu”, released in 2013.
Bookmarks