மக்கள் திலகத்தின் சிலை திருப்பூரில் அரசு பூங்கா அருகில் நிறுவப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கடக்கும் போது தலைவரை பார்த்து சென்றால் மனதுக்கு மிக சந்தோஷமாக இருக்கும்.
![]()
மக்கள் திலகத்தின் சிலை திருப்பூரில் அரசு பூங்கா அருகில் நிறுவப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கடக்கும் போது தலைவரை பார்த்து சென்றால் மனதுக்கு மிக சந்தோஷமாக இருக்கும்.
![]()
Last edited by ravichandrran; 28th August 2013 at 06:28 AM.
நான் கோபிசெட்டிபாளயம் சென்றபோது எடுத்த படம். ஒரு சுவரின் ஓரமாக வைக்கப்பட்டு இருந்த FLEX BOARD. அநேகமாக இது தமிழ் புத்தாண்டு தினத்தில் கோவில் திருவிழாவின்போது வைக்கப்பட்டிருக்கும்.
![]()
Last edited by ravichandrran; 28th August 2013 at 06:22 AM.
தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
தொட்டுக்காட்டவா .....
பாடகர் திலகத்தின் அட்டகாசமான குரலும் மெல்லிசை மன்னரின் மேலை நாட்டு இசையும்
மக்கள் திலகத்தின் அசத்தலான மேல்நாட்டுபாணி நடனமும் நெஞ்சை கொள்ளை கொள்ளும்
இனிய பாடல் .
Last edited by esvee; 28th August 2013 at 06:20 AM.
இனிய நண்பர் திரு ரவி சார்
திருப்பூர் நகரில் மக்கள் திலகத்தின் சிலை படம் அருமை .
திருப்பூர் என்றதும் நினைவுக்கு வரும் சில தகவல்கள்
* தொழில் நகரம்
* ஏற்றுமதி - ஜவுளி வியாபாரம்
*கொடிகாத்த தேசிய சுதந்திர வீரர் குமரன் பிறந்த ஊர்
*ஒரு சாதாரண மக்கள் திலகத்தின் ரசிகர் திருப்பூர் மணிமாறன் -1977 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை புரிந்தது .
* பொருளாதரத்தில் முன்னேறிய நகரம் .
கலங்கரை விளக்கம்
Kalangarai Vilakkam
.
புரட்சிநடிகர்.எம்.ஜி.ஆர், "அபிநயசரஸ்வதி"பி.சரோஜாதேவி(மாறுபட்ட இரு வேடங்களில்), "நகைச்சுவைத்தென்றல்"நாகேஷ், "பத்மஸ்ரீ"மனோரமா, எம்.என்.நம்பியார்,வி,கோபாலகிருஷ்ணன், ஏ.வீரப்பன், ஜி.சகுந்தலா மற்றும் பலர்.
இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
தயாரிப்பு:-ஜி.என்.வேலுமணி அவர்கள்.
இயக்கம்:-கே.சங்கர் அவர்கள்.
தேனினும் இனிய கானங்கள்.
1.என்னை மறந்ததேன் தென்றலே-தென்றலே என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ...(என்னை மறந்ததேன்)
2.பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்...(பொன்னெழில் பூத்தது)
3.சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு...(சங்கே முழங்கு)
4.நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்...(நான் காற்று)
5.என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்...(என்ன உறவோ)
6.பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே...(பல்லவன் பல்லவி)
Last edited by esvee; 28th August 2013 at 10:10 AM.
எப்போது பார்த்தாலும் புதிய படம் போல தோன்றி திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்களில் கலங்கரை விளக்கமும் ஒன்று. இணையில்லா ஜோடி நடித்த ஈடில்லா திரைப்படம் இது. புதுச்சேரியில் பெரும்பாலான திரையரங்குகளில் திரும்ப திரும்ப திரையிடப்படும் படங்களில் இதுவும் ஒன்று. எம்ஜிஆர்-சரோஜாதேவியின் இணை, தற்போது கெமிஸ்ட்ரி என்கிறார்கள்) பார்ப்பதற்கு அழகாகவும், காட்சிகள் அருமையாகவும் இருக்கும். பொன்னெழில் பூத்தது புதுவானில், என்ன உறவோ என்ன பிரிவோ மற்றும் காற்று வாங்க பொன்னென் பாடல்களில் எழிலும், இளமையும் கொஞ்சும். பல்லவன் பல்லவி பாடலில் தலைவரின் நடனம் நெஞ்சை அள்ளும். காற்று வாங்க போனேன் பாடலின் புகைப்படத்தை பாருங்கள். Superb step. என்ன உறவோ என்ன பிரிவோ பாடலில் ஒளிப்பதிவு அருமையாக இருக்கும். இருவரின் நான்கு கண்களும் ஒரே நேர்கோட்டில் படம் பிடித்திருப்பார்கள். பிரமாதமான காட்சி அது.
![]()
கலங்கரை விளக்கம் திரைப்பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள்.
அதிலும் பல்லவன் பல்லவி பாடட்டுமே.., பொன்னெழில் பூத்தது புது வானில்.., .நான் காற்று வாங்கப் போனேன்.., பாடல்கள் கவிதை நயம் மிக்கவை. வினோத் ஸார் பதிவுக்கு நன்றி.
Bookmarks