-
22nd September 2013, 08:23 PM
#1371
Moderator
Diamond Hubber
இவர் குடிப்பது போலே நடிப்பார்!
குடிக்கு அடிமையான ஒரு இளைஞனை ‘நாதஸ்வரம்’ தொடரில் அப்படியே பிரதிபலிக்கிறார், சாய் ஷக்தி. அன்பான பெற்றோர், நல்ல மனைவி அமைந்தும் குடியின் ஆளுமைக்குள் சிக்கிக்கொண்டு குடித்தே ஆக வேண்டும் என்ற தாகத்தில் கட்டிய மனைவியை அடித்துப்போட்டு விட்டு, வீட்டில் இருந்த சாமி உண்டியலை உடைத்து பணத்தை பொறுக்கிக் கொண்டு பாருக்கு ஓடும் காட்சியில், அந்த மது அடிமை கேரக்டரில் நடிப்பில் அதகளப்படுத்தியிருந்தார், இவர்.
அவரை ‘நாதஸ்வரம்’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தபோது, ‘‘குடிகார நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறீர்களே, உங்களுக்கும் அந்தப்பழக்கம் உண்டா?’’ என்று ஆரம்பித்தோம். ‘‘நடிப்பு என்பது கேரக்டர்களின் பிரதிபலிப்பு தானே. குடிக்கும் வழக்கம் கொண்ட நண்பர் ஒருவரின் மேனரிசங்களை ஸ்டெடி பண்ணியதில் அந்த கேரக்டர் அற்புதமாக அமைந்து விட்டது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த கேரக்டரை எனக்குத் தந்த டைரக்டர் திருமுருகனைத்தான் இந்த பாராட்டு போய்ச் சேர வேண்டும்’’ என்கிறார், அவையடக்கத்துடன்.
வெங்கட் இயக்கத்தில் மழலைப்பட்டாளம் தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து வள்ளி, சொந்தபந்தம், நாதஸ்வரம், சரவணன்–மீனாட்சி என தொடர்பவர், இப்போது ‘சன் குடும்பம்’ நடன நிகழ்ச்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் ‘நாதஸ்வரம்’ தொடர் கொடுத்த பிரேக், பிரமிப்பின் உச்சம் என்கிறார்.
சாய் ஷக்திக்கு நாளை திருமணம். உறவுப்பெண்ணை மணக்கிறார். ‘‘வருங்கால மனைவிக்கு உங்கள் நடிப்பு பிடிக்குமா?’’ கேட்டால், ‘‘ரொம்பவே பிடிக்கும். அதிலும் என் குடிகார நடிப்புக்கு அவங்க முதல் ரசிகை’’ என்கிறார்.
நன்றி: தினதந்தி
-
22nd September 2013 08:23 PM
# ADS
Circuit advertisement
-
29th September 2013, 07:30 PM
#1372
Moderator
Diamond Hubber
கிளைமாக்சை நெருங்கும் உதிரிப்பூக்கள்
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், கிளைமாக்சை எட்டி விறுவிறுப்பின் உச்சம் தொட்டிருக்கிறது.
உச்சபட்ச ஆத்திரத்தில் எடுக்கப்படும் எல்லா அவசர முடிவுகளுமே விபரீதத்துக்கு நாம் விரும்பிக் கொடுக்கிற விலையாகத்தான் அமையும். அநியாயத்தை தட்டிக் கேட்ட ஒரே காரணத்துக்காக தன் குடும்பத்தை பழி வாங்கி, மனைவியும் மகளும் சாக காரணமாக இருந்த தட்சிணாமூர்த்தியை பழிவாங்கும் நோக்கில், அவரது 3 குழந்தைகளை கடத்தி விடுகிறான் சிவநேசன். அந்தக் குழந்தைகளை தன் சொந்தக்குழந்தைகள் போல் பாராட்டி சீராட்டி வளர்க்கிறான்.
ஒருகட்டத்தில் சிவநேசன் வளர்க்கும் குழந்தைகளுக்கு அவர் தங்கள் ஒரிஜினல் அப்பா இல்லை என்ற உண்மை தெரிய வர, அடுத்த கட்ட உறவு, உரிமைப் போராட்டம். மழலைப்பருவத்தில் பறிகொடுத்த பிள்ளைகளை, வளர்ந்த நிலையில் பார்க்கும் தட்சிணாமூர்த்தியின் மனைவி மேற்கொள்ளும் பாசப்போராட்டம் தாய்ப்பாசத்தின் உச்சம்.
இதற்கிடையே இந்த மூன்று பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களுக்கான மணவாழ்க்கை எல்லாவற்றிலும் சிவநேசனின் பங்கு இருக்கவே செய்கிறது. லட்சுமிபதிக்கு மனைவியாகி மூத்தமகள் ஷக்தி படும் துயரம் அவன் நெஞ்சில் ஆணியறைகிறது.
இந்த நேரத்தில் மனைவியுடன் சேர்ந்து எந்த மகள் இறந்து விட்டாள் என்று எண்ணினானோ, அந்த மகள் மேகா இப்போது வளர்ந்து மலர்ந்து பூத்துக் குலுங்கும் பருவத்தில். ‘அங்கிள்’ என்று அன்புடன் அழைக்கும் அவள், தன் ரத்தத்தின் ரத்தம் என்பது அவனுக்கும் தெரியாது. லட்சுமிபதிக்கு இரண்டாவது தாரமாக அவளை மணம் பேசியிருக்கும் நிலையில், மேகா தன் மகள் என்ற உண்மை சந்தோஷ சூறாவளியாய் அவனை தாக்குகிறது.
அடுத்தகட்டமாய் ஷக்தி உயிருடன் தானிருக்கிறான் என்பது சிவநேசனுக்குத் தெரிய வர, இந்த திருமண விஷயத்தில் அவன் எடுக்கும் முடிவு என்ன? ஷக்தியை மீண்டும் லட்சுமிபதியின் அம்மா அலமேலு மருமகளாக ஏற்றுக் கொள்வாளா? சிவநேசனுக்கு மேகா தன் மகள் என்பது தெரிய வந்த மாதிரி மேகாவுக்கு சிவநேசன் தான் தன் அப்பா என்பது தெரிய வருமா? ஷக்தியின் தங்கை நிலாவின் வாழ்வில் கணவன் என்ற பெயரில் புயல் ஏற்படுத்திய ‘பெண்கள் கடத்தல் புகழ்’ சத்யா தண்டிக்கப்படுவானா?
பணமும் கோபமும் ஒருசேர அமையப் பெற்ற தட்சிணாமூர்த்தி இனி என்னாவார்? உதிரிப்பூக்களாய் சிதறிய குடும்பம் மீண்டும் மாலையாய் சேருமா?
இத்தனை கேள்விகளுக்கும் அடுத்தடுத்த எபிசோடுகளில் பரபரப்பான பதில்கள் கிடைக்கும் என்கிறார், தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன். தயாரிப்பு: ஹோம் மீடியா மூவிமேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார்.
நன்றி: தினதந்தி
-
29th September 2013, 07:31 PM
#1373
Moderator
Diamond Hubber
மெல்லிய உணர்வுகளை காட்சிப்படுத்தும் ‘வைதேகி’
ஜெயா தொலைக் காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வைதேகி தொடர், குழந்தைகளின் மெல்லிய உணர்வுகளையும், குழந்தை இல்லாத தம்பதிகளின் வலிய உணர்வுகளையும் கதைக் களமாக கொண்டது.
நடிகர் அப்பாஸ் முதன்முதலாக சின்னத்திரையில் நடிக்கும் இந்த தொடரில், மீனு கார்த்திகா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். வைதேகி என்னும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பது குழந்தை நட்சத்திரம் ஜெனோ. நடிகை சுதா சந்திரன், ஸ்ரீதர், அர்ச்சனா, ஷப்னா, ஸ்ரீலதா, அழகு என சின்னத்திரையின் மாறுபட்ட முகங்கள் பலரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தொடரின் தயாரிப்பாளர்கள் ‘சாதகப் பறவைகள்’ சங்கர் மற்றும் பரணி இருவரும் தொடர் பற்றிக் கூறும்போது, ‘‘அப்பாஸின் கதாபாத்திரமும் மீனு கார்த்திகாவின் கதாபாத்திரமும் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் பாதையில் ஒரு அழுத்தமான தடயத்தை உருவாக்கும்’’ என்கிறார்கள்.
பாபு யோகேஸ்வரனின் ஆக்க மேற்பார்வையில், இயக்குனர் ஜெரால்டின் குழுவில் பணியாற்றிய பஷீர் இத்தொடரை இயக்குகிறார். விஷூவல் டிசைனர்: மகேஷ்வரன். ஒளிப்பதிவாளர்: பிரகாஷ். தலைப்புப் பாடல் இசை ‘சாதகப் பறவைகள்’ சங்கர். பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
நன்றி: தினதந்தி
-
29th September 2013, 07:32 PM
#1374
Moderator
Diamond Hubber
சிந்துவின் மகன் மீட்புப் போராட்டம்!
ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘‘சிந்து பைரவி’’ தொடர், எதிர்பாராத திருப்பங்களுடன் விரைகிறது.
சிந்துவின் மகன் யுவராஜ் அவினாஷால் கடத்தப்படுகிறான். ஏற்கனவே அவினாஷின் உறவினர் மகன் கண்ணன் சிந்துவிடம் தத்துப்பிள்ளையாக வளர்கிறான். கண்ணனுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதால், சிந்துவிடம் மிரட்டலை தொடர்கிறான். ‘உனது மகன் யுவராஜ் வேண்டுமானால் கண்ணனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், கொன்று விடுவேன்’ என மிரட்டுகின்றான்.
இந்த மிரட்டலை தனது குடும்பத்தாரிடம் தெரியப்படுத்தாத சிந்து, தன்னந்தனியாக மகனை மீட்கும் முயற்சியில் தோல்வி அடைகிறாள். தன்னிடம் தத்துப்பிள்ளையாக வளர்த்த கண்ணனை விட்டுப்பிரிய அவளுக்கு மனமில்லாததே இந்த முயற்சி பிசுபிசுத்துப் போனதற்கு காரணம்.
ஏற்கனவே, ராத்தோர் தனது மனைவி பைரவியை காணவில்லை என்று தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது வளர்ப்பு மகன் யுவராஜ் கடத்தப்பட்டதும் மிகவும் மன உறுத்தலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சிந்து, இந்த சம்பவத்தை பைரவியின் கணவர் ராத்தோரிடம் சொல்லும்போது கணவர் வீர் கேட்டு விடுகிறார். இதனால் சிந்துவுக்கும், வீருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.’’
யுவராஜை மீட்க வீர் தனது வளர்ப்பு மகன் கண்ணனை தாரை வார்க்கிறாரா? அல்லது சிந்துவே தன்னந்தனியாக போராடி மகன் யுவராஜை மீட்கிறாளா? வரும் பரபரப்பு காட்சிகள் பதில் சொல்லும்.
நன்றி: தினதந்தி
-
29th September 2013, 07:33 PM
#1375
Moderator
Diamond Hubber
புதுக்கவிதை
விஜய் டி.வியில் வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், ‘புதுக்கவிதை.’
இது ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் ராமேஸ்வரத்தை சுற்றி பயணிக்கிறது, இந்த காதல் தொடர்.
காவ்யா அழகானவள். அன்பானவள். எதிலும் ஆழமான பார்வை கொண்டவள். புத்திசாலியான இவள் எடுக்கும் முடிவுகள் இவள் வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தையும் மாற்றுகிறது.
காவ்யா சந்திக்கும் இளைஞன் அர்ஜூன் அவளுக்கு எதிர்மாறான குணம் கொண்டவன். புதுக்கவிதையாய் இவள். மரபுக்கவிதையாய் அவன். இவர்கள் தங்களுக்கிடையே காதலையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ள நேர்ந்தால் என்னவாகும்? அதுதான் இந்த தொடரின் கதைக்களம்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது, புதுக் கவிதை.
நன்றி: தினதந்தி
-
6th October 2013, 10:39 PM
#1376
Moderator
Diamond Hubber
மகாபாரதம்
விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய புராணத் தொடர், மகாபாரதம்.
இதுவரை பல மகாபாரத கதைகளை கேட்டிருந்தாலும், நாம் அறிந்திராத பல கிளைக்கதைகளை யும் எடுத்துச் சொல்கிறது, புதிய படைப்பாக உருவாகி வரும் இந்த மகாபாரதம் தொடர். சத்யவதி, சாந்தனு வாழ்க்கையிலிருந்து தொடங்கி, பீஷ்மரின் தியாகம் பற்றிய அறிமுகத்தோடு பயணிக்கிறது கதை.
மகாபாரதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது குருஷேத்திரத்தில் நடைபெறும் யுத்தமும் அது தொடர்பான நிகழ்வுகளுமே. ஆனால் அவையனைத்தையும் தாண்டி பல வரலாற்று சிறப்புமிக்க நுணுக்கமான கதையையும் இந்த தொடரில் காணலாம்.
இந்த பிரம்மாண்ட தொடருக்காக தமிழ்நாடு முழுவதும் பிரத்தியேக மகாபாரத வாகனங்கள் சுற்றி வருகின்றன. வாகனங்களில் வரும் நிபுணர் குழு நடத்தும் கேள்வி–பதில் போட்டியில் கலந்துகொண்டு சரியான விடை சொல்லி மகாபாரதம் தொடர்பான பரிசுகளை அள்ளிச் செல்லலாம்.
நன்றி: தினதந்தி
-
6th October 2013, 10:40 PM
#1377
Moderator
Diamond Hubber
புகுந்த வீடு
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புகுந்த வீடு தொடர், நம்பிக்கைத் துரோகத்தை மையப்படுத்தி காட்சிகளில் வேகம் பிடிக்கும் தொடர்.
அனுஷாவின் அழகில் மயங்கிக் கிடந்த விசுவுக்கு பேரிடியாக அமைகிறது, அனுஷாவின் அண்ணன் ஜெயகுமார் செய்த காரியம். ஜெயகுமார் சிபாரிசு செய்த ஒரு மோசடிக் கும்பலுக்கு 15 கோடி ரூபாய் கடன் கொடுத்த பிறகே அவர்கள் மோசடிப் பேர்வழிகள் என்று அறிகிறான், விசு. அந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்து போகிறான். எதேச்சையாக தன் மகள் ஸ்வேதாவுடன் கோவிலுக்கு வரும் ராதா, விசு கோவிலில் அமர்ந்திருக்கும் நிலையைக் கண்டு பெரிதும் வருந்துகிறாள்.
இதற்கிடையே குடிபோதையில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் விசுவின் பையில் இருந்து வங்கியின் சாவிகளை ஜெயக்குமார் எடுக்கிறான். அதை காப்பி எடுத்தவன், பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறான். அதாவது ஜெயகுமாரை இந்த வழக்கில் மொத்தமாக மாட்டி வைத்து விட்டு தன் காதலியுடன் வடஇந்தியாவில் செட்டிலாகி விடுவது அவன் திட்டம்.
அவன் திட்டம் நிறைவேறியதா? விசுவின் வேலை, கவுரவம் காப்பாற்றப்படுமா? கேள்விகளுக்கான பரபரப்பான விடைகள், தொடரும் காட்சிகளில் கிடைக்கும்.
நன்றி: தினதந்தி
-
6th October 2013, 10:55 PM
#1378
Moderator
Diamond Hubber
ராஜி செத்துப்போயிருவாளா? … சோகத்தில் தவிக்கும் கார்த்திக்!
விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திருமண நிச்சயம் முடிந்தும் கார்த்திக்கை மறக்க முடியாமல் தவிக்கும் ராஜி. சூசனின் காதலை மறுக்க முடியாமல் தவிக்கும் கார்த்திக் என கடந்த 10 எபிசோடுகளாவே ஒரே சோகமயம்தான். ஆரம்பத்தில் ஜாலியாக ஆரம்பித்த ஆபிஸ் காதல், கல்யாணம், உயரதிகாரிகளின் உள்குத்து என போக ஆரம்பித்தது. ராஜி - கார்த்திக் இடையே காதல் இருந்தாலும் அதை மறைக்கும் ராஜி அப்பாவின் விருப்பத்திற்கு சம்மதித்து அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். இதனால் வெறுத்துப் போன கார்த்திக் சூசனிடம் ஐலவ்யூ சொல்ல அதை உண்மை என நினைத்து சந்தோசமடைகிறாள் சூசன்.
-
6th October 2013, 10:56 PM
#1379
Moderator
Diamond Hubber
சன் டிவியில் நாதஸ்வரம் தொடர் 900 மாவது
எபிசோடுகளைக் நோக்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நாதஸ்வரம் தொடரில் ஆரம்பம் முதலே பெண் மறுமணத்திற்கு ஆதரவான காட்சிகளே அமைக்கப்பட்டு வருகிறது. மலர் வாழ்க்கை சரியில்லாமல் போகவே கணவனை விட்டு பிரிகிறாள். காதலித்த பெண்ணிற்கு வாழ்க்கைத் தருகிறான் கோபி. மலரின் தங்கை ரோகிணியை அவளது தாய்மாமன் மகனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து தர உள்ளனர். அதேபோல் அத்தை மகள் மகாவை திருமணம் செய்த பாண்டி கொலை செய்யப்படவே மகாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.
-
20th October 2013, 10:07 PM
#1380
Moderator
Diamond Hubber
குழந்தைக்காக ஒரு போராட்டம்!
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மண்வாசனை தொடர், 600–வது எபிசோடை எட்டவிருக்கிறது. பால்ய விவாகத்தை பின்புலமாக கொண்டது இந்த தொடர்.
குழந்தையை கருவாக சுமந்து கொண்டிருக்கும் நேரத்தில் கணவரை இழக்கும் சுகுணா, அதன்பிறகு ஷியாம் என்பவருக்கு மனைவி ஆகிறாள். ஷியாமின் பெற்றோர் அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளும் நிலையில், ஷியாமின் பெரியப்பா மட்டும் அந்தக் குழந்தையை ஏற்க மறுக்கிறார். காரணம் அவருக்கு வாரிசு கிடையாது. வேறொருவனுக்குப் பிறந்த குழந்தை தங்கள் குடும்ப சொத்தை சொந்தம் கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று எண்ணும் அவர், அந்தக் குழந்தையை கொல்ல முடிவெடுக்கிறார். அவர் செய்த சதியால் மாடியில் இருந்து தவறி விழுந்த அந்த குழந்தை ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.
இதையறிந்த சுகுணாவின் முதல் கணவரின் பெற்றோர், ஷியாமின் குடும்பத்தாரோடு தங்கள் வாரிசைக்கேட்டு மோதுகிறார்கள். விஷயம் போலீசுக்குப் போக, இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் போலீசார், பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள்.குழந்தை பிழைத்ததா? அப்படிப் பிழைத்தால் அந்தக் குழந்தை யாருக்கு சொந்தம்? பரபரப்பை தக்கவைத்தபடி விரைகிறது தொடர்.
நன்றி: தினதந்தி
Bookmarks