-
25th November 2013, 01:25 AM
#451
இப்போதுதான் ஒரு சலசலப்பு நடந்து முடிந்தது என்று நினைத்தால் மீண்டும் சில வேதனையான காட்சிகள் நமது திரியில் அரேங்கேற்றம். நண்பர் சின்னக் கண்ணன் அவர்கள் தன் மனதில் தோன்றிய ஒரு சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டார். அவரை பொறுத்தவரை பாட்டுக்கு பாட்டு திரியிலும் கவிதைக்கு கவிதை திரியிலும் அவருடன் சேர்ந்து பங்களிப்பு செய்யும் ஆட்களை அவர் நன்கு அறிவார். அவர்களுடன் ஒரு நல்ல rapport-வும் அவருக்கு உண்டு, அதே போன்ற சூழலை அவர் இங்கே எதிர்பார்த்தார் என தோன்றுகிறது. இங்கே நிலவும் சூழல், புதிய ID-க்களின் வரவு, பயன்படுத்தப்பட்ட மொழி ஆகியவை அவரை disturb செய்து விட்டது என தோன்றுகிறது. அதை அவர் தன பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்கு ஒரு சில நண்பர்கள் எதிர்வினையாற்றிய முறை சரியான தரத்தில் அமையவில்லை என்று கேள்விப்படுகிறேன். அதை நான் படிக்கவில்லை. ஆனால் நமது திரியின் மாண்பிற்கு சற்றும் பொருந்தாத வகையில் வார்த்தை பிரயோகங்கள் அமைந்திருந்ததாக கேள்விப்பட்டேன்.
சின்ன கண்ணன் அவர்கள் பதிவு செய்திருந்தது அவரது மனதின் எண்ணங்களை. அவற்றில் கருத்து வேறுபாடு இருப்பின் அல்லது அவர் சொன்னவற்றை மறுக்க நினைத்தாலோ அதை கண்ணியமான வழியில் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி சொல்லியிருக்கலாமே. அதை விடுத்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது, இந்த திரியை விட்டு போ என்றெல்லாம் சொல்லுவது நமது நடிகர் திலகத்தின் திரிக்கு அதன் பெருமைக்கு களங்கம் விளைவிப்பதாகவே அமையும். மாற்று கருத்துக்களை சொல்பவர்கள் யாரும் திரிக்கு வரக் கூடாது என்பது சரியான நிலைப்பாடு கிடையாது. நடிகர் திலகத்திடமே கருத்து வேறுபாடு கொண்ட ரசிகர்கள் அதாவது அவர் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை பற்றியே மாற்று கருத்து கொண்டு அதை அவரிடமே நேரில் சொன்ன தீரா மறவர் கூட்டம் நமது ரசிகர் கூட்டம். ஆகவே மாற்று கருத்தை எதிர்க்க வேண்டாம். அதே நேரத்தில் வேண்டுமென்றே விஷமத்தனமான கருத்துகளை இங்கே யாராவது எழுதினால் அதற்கு நாம் தக்க பதில் அளிக்கலாம். அதுவும் கூட நாகரீகமாக.
இந்த exchanges காரணமாக இனி மய்யம் இணையதளத்திற்கு வரமாட்டேன் என்று சின்ன கண்ணன் எழுதியிருந்ததாக அறிகிறேன். அவர் அந்த முடிவை கைவிட்டு மீண்டும் திரும்ப வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கார்த்தி (Honest Raj),
இந்த திரி பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. அதே நேரத்தில் பாராட்டை கேட்டு வாங்குபவர்கள் என்ற தொனியில் நீங்கள் எழுதியிருப்பது வருத்தத்துக்குரியது. ஒருவரின் பதிவை பாராட்டுவது எனபது ஒவ்வொருவரின் விருப்பம். அதை குறையாக சுட்டிக் காட்டியதை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
-
25th November 2013 01:25 AM
# ADS
Circuit advertisement
-
25th November 2013, 07:54 AM
#452
Senior Member
Seasoned Hubber
சின்னக் கண்ணன் சார்
நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவில் ஏராளமான ரசிகர்களை சந்தித்து உரையாடியது உண்மை. அதில் சரஸ்வதி லக்ஷ்மி என்ற பெயரில் யாரையும் நான் சந்திக்கவில்லை. பிறகு சுப்பு என்கிற சுப்ரமணியம் அவர்கள் தன் பதிவுகளில் தான் பல்வேறு ஐ.டி.களில் வருவதாக சொன்னதன் மூலமும் அவரே சரஸ்வதி லக்ஷ்மி என்று எழுதியதைப் படித்த பிறகே நான் இவரை அடையாளம் தெரிந்து கொண்டேன். அவரை நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவில் சந்தித்தது சாதாரண விஷயம். அதுவும் சரஸ்வதி லக்ஷ்மி தான் என்னை சந்தித்தாக எழுதினாரே தவிர நான் அவரை சந்தித்ததாக என் பதிவில் எழுதவில்லை. இதைத் தெளிவு படுத்தவே இந்த பதிவு.
மாடரேட்டர் அவர்களே,
சின்னக் கண்ணன் கூறிய ஒரு கூற்றில் தகவலைத் திருத்தம் செய்யத் தான் இதை எழுதியிருக்கிறேன். உடனே இதையும் எடுத்து விடாதீர்கள். இந்தப் பதிவில் எந்தத் தவறான கருத்தும் இல்லை என எண்ணுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th November 2013, 08:03 AM
#453
Senior Member
Seasoned Hubber
சுப்பு அவர்களே,
ஒரு ரசிகராய் தாங்கள் கூறும் கருத்துக்களில் மற்ற தீவிர ரசிகர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தங்களுடைய வார்த்தைப் பிரயோகங்கள் நாகரீகம் என்கிற எல்லையைப் பல முறை தாண்டியிருக்கின்றன. இதனால் தங்கள் கருத்து மற்றவர்களுக்கு சென்று சேரும் வாய்ப்புத் தடுக்கப் படுகிறது என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் எழுத்துக்களையும் தேவையில்லாமல் பெரிய அளவில் இடுவதை விட்டு விடுங்கள். அவரவர்க்கு அவரவருடைய தலைவர் அல்லது நடிகர் தான் முக்கியம். எனவே மாற்றுத் திரியில் சென்று வேகமான முறையில் பதிவுகளை இடுவதை இனிமேல் முற்றிலும் தவிர்க்கவும். தற்போது தாங்கள் எந்த பயனாளர் பெயரில் பதிவுகளை இடுகிறீர்களோ அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும். கருத்துக்களில் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th November 2013, 08:06 AM
#454
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே,
நமது நடிகர் திலகத்தின் காணொளிகளையும் நிழற்படங்களையும் நாம் லட்சக் கணக்கான பக்கங்களுக்கு வர்ணனையும் ஆய்வுரைகளையும் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரே பக்கத்தில் பல வீடியோக்களைப் பதிவிடும் போது அவை பக்கங்களின் தரவிறக்க வேகத்தை முற்றிலும் குறைத்து விடுகின்றன. இதன் காரணமாக இந்தப் பக்கங்களைப் பலர் பார்க்காமலே தவிர்த்து விடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வீடியோக்கள் அளவிற்கு மேல் பதிவிடாமல் தவிர்த்தால் பக்கங்களின் தரவிறக்க வேகம் கூடுவதோடு அல்லாமல் தாங்கள் சொல்ல வந்த கருத்தும் தவறாமல் சென்றடையும்.
நிழற்படங்களைப் பொறுத்த வரையில் அதிக பட்சம் 100 கேபி அளவிற்கு மேல் செல்லாத வாறு அளவினைக் கணக்கில் கொண்டு பதிவிட்டால் பக்கங்களின் வேகத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th November 2013, 08:18 AM
#455
Senior Member
Seasoned Hubber
முரளி சார்,
இணைய இணைப்புக் கிடைக்காமல் சில நாட்களாக இந்தத் திரியினை நான் பார்வை இடக் கூட முடியவில்லை. இப்போது கூட இரவல் வாங்கித் தான் இணைய இணைப்புப் பெற்று இதை எழுதுகிறேன்.
நம்முடைய ரசிகர்கள் பாராட்டை எதிர் பார்த்து எந்தப் பதிவினையும் இடுவதில்லை என்பது தங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு பதிவிற்கும் வாசு சாராகட்டும், பம்மலாராகட்டும் கோபாலாகட்டும், எவ்வளவு உழைப்பை தருகிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனால் இதையெல்லாம் கொச்சைப் படுத்தும் வகையில் நண்பர் ஹானஸ்ட் ராஜ் அவர்கள் எழுதியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமாக இருக்கிறது. அதை மற்றோர் நண்பர் வழிமொழிந்திருக்கிறார்.
நண்பர் ஹைதராபாத் ரவி சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். இந்த மாதிரி கமெண்டுகளுக்கெல்லாம் தாங்கள் சற்று வருத்தத்தை ஆழமாகத் தெரிவித்தால் நல்லது. ஏனென்றால் இந்தத் திரியிலேயே தாங்கள் தான் மூத்த உறுப்பினர். அனைவரும் தாங்கள் என்ன சொன்னாலும் கேட்கக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையில் தான் வேண்டுகோள் வைக்கிறேன்.
நடிகர் திலகத்தை நேரடியாக கருத்துக்களைச் சொன்னதைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இல்லை என்று சொல்ல வில்லை. அங்கே நம்முடைய வீரத்தைக் காட்டிலும் அவருடைய பெருந்தன்மைதான் தெரிகிறது. வேறு யாரையாவது இது போல் பார்த்துப் பேச முடியுமா. நடிகர் திலகம் அனுமதித்ததால் தான் நம்மால் கருத்துக்களைக் கூற முடிந்தது. அவர் சொல்ல அனுமதித்ததால் அவர் செய்தது எல்லாம் தவறு, நாம் சொன்னது தான் சரி என்று ஆகி விடுமா. மனதில் சரி என்று பட்டதைத் தான் அவர் வாழ்வில் செய்திருக்கிறார். நாம் கருத்து சொல்வதால் மட்டுமே அவர் செய்தது தவறு என்றாகி விடாது.
நான் முன்னரே கூறியது போல், முன்பு அளவிற்கு இந்தத் திரியில் இனி நான் அதிகம் தொடரப் போவதில்லை. இருந்தாலும் தங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நண்பர்களுக்கும் ஒரு விஷயம் மட்டும் கூற விரும்புகிறேன்.
தயவு செய்து எந்தக் காரணத்தை முன்னிட்டும், சினிமாவானாலும் அரசியலானாலும் நடிகர் திலகத்தை பொதுவில் விட்டுக் கொடுக்காதீர்கள். அது அவரை நாம் இழிவு செய்வதற்கு ஒப்பாகும். நம்முடைய மேதாவித் தனத்தை முன் நிறுத்தி அவரைப் பற்றி மற்றவர்கள் செய்யும் விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
இங்கு நான் உரிமையுடன் ஒவ்வொரு சிவாஜி ரசிகரிடமும் வைக்கும் வேண்டுகோள் இது மட்டும் தான்.
Last edited by RAGHAVENDRA; 25th November 2013 at 08:22 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th November 2013, 09:05 AM
#456
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
அதை மற்றோர் நண்பர் வழிமொழிந்திருக்கிறார்.
திரு ராகவேந்திரா, என்னைத் தான் குறிப்பிடுகிறீர் என்பதால்.. "ஒருவர் சொல்வதை இன்னொருவர் வழிமொழிகிறார் என்றால் வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி அப்படியே என அர்த்தம் கொள்ளத் தேவையில்லையே! சரி.. அவர் சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை நீங்களே சொல்லலாமே! - யாருமே இங்கே நடக்கும் தவறுகளை குத்திக் காட்ட மட்டுமே பதிவு செய்யவில்லை. சிறப்பாக சென்றுகொண்டிருந்த ஒரு திரிக்கு இப்படிப்பட்ட களங்கம் வந்துவிடுகிறதே என்ற அக்கறையினால்தான்!"
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th November 2013, 09:11 AM
#457
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நண்பர்களே,
நமது நடிகர் திலகத்தின் காணொளிகளையும் நிழற்படங்களையும் நாம் லட்சக் கணக்கான பக்கங்களுக்கு வர்ணனையும் ஆய்வுரைகளையும் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரே பக்கத்தில் பல வீடியோக்களைப் பதிவிடும் போது அவை பக்கங்களின் தரவிறக்க வேகத்தை முற்றிலும் குறைத்து விடுகின்றன. இதன் காரணமாக இந்தப் பக்கங்களைப் பலர் பார்க்காமலே தவிர்த்து விடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வீடியோக்கள் அளவிற்கு மேல் பதிவிடாமல் தவிர்த்தால் பக்கங்களின் தரவிறக்க வேகம் கூடுவதோடு அல்லாமல் தாங்கள் சொல்ல வந்த கருத்தும் தவறாமல் சென்றடையும்.
நிழற்படங்களைப் பொறுத்த வரையில் அதிக பட்சம் 100 கேபி அளவிற்கு மேல் செல்லாத வாறு அளவினைக் கணக்கில் கொண்டு பதிவிட்டால் பக்கங்களின் வேகத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
எந்தெந்த காட்சிகள் எனப் பெயரிட்டு, அதற்கான யூட்யூப் லிங்க்களுக்கான முகவரிகளை மட்டுமே கொடுத்து விடுவது நன்று.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th November 2013, 02:14 PM
#458
Senior Member
Senior Hubber

Originally Posted by
HonestRaj
சரி... நானும் ஒரு பதிவு இடுகிறேன்...
இங்கு தமிழ் பிலிம் செக்சனில் வாழ்க்கையில் அதிக அனுபவம் வாய்ந்த பலர் பங்குபெறும் திரியும் இதுதான்..
மிகவும் குழந்தைத்தனமான பதிவுகள் அதிகம் கொண்ட திரியும் இதுதான்...
என் பதிவை நீ பாராட்டவில்லை.. இவ்வளவு சிரமம் எடுத்து பதிவிடுகிறேன் யாரும் கண்டுகொள்ளவில்லை.. போன்ற பதிவுகளும்...
குழாயடி சண்டைகள் போன்ற பதிவுகளும் சமீபகாலத்தில் அதிகமாகிவிட்டன...
முன்பெல்லாம் எதிர் நடிகரின் ரசிகர்களுடன் தான் சண்டைகள் நடக்கும்.. இப்பொழுதெல்லாம் உண்மையில் காங்கிரஷ் கட்சி கூட்டம்போல் தான் கலந்துரையாடல் நடக்கிறது... online என்பதால் சட்டை கிழிய வாய்ப்பில்லை
உடனே இந்த பதிவுக்கும் யாரும் கோவிச்சுக்காதீங்க
கோச்சுக்கலை. கேட்டதோ, கேட்காததோ பிடிங்க பாராட்டை. அப்புறம் நீங்களும் கோச்சுக்கிட்டா?
-
25th November 2013, 02:36 PM
#459
Senior Member
Senior Hubber
சின்னக்கண்ணன் திரும்ப வரவேண்டும். பிரச்சினைகளை பெரிதாய் எடுத்துக்கொண்டோமானால் இந்த திரியில் குப்பை கொட்ட முடியாது. குப்பையென்று பொதுவாய் சொன்னேன் - அதற்கும் கோபம் வேண்டாம். "பரவாயில்லை, என் கருத்துகளுக்கும் மற்றவர்களுக்கு உள்ளதைப் போலவே எதிர்ப்பாளர்கள் உண்டு. நான் மட்டும் தனியாக இல்லை. அப்பாடா." என்று நிம்மதியாக இருங்கள். உங்கள் நடை தொடரை தொடருங்கள். புதிதாகவும் எழுதுங்கள். படிப்போர் படிக்கட்டும். படியாதோர் விடட்டும். போகட்டும் நடிகர் திலகம் திரிக்கேவென்று.
-
25th November 2013, 07:40 PM
#460
Junior Member
Senior Hubber
தொடர்ந்து சிவாஜி சிலைக்காக பாடுபடும் திரு.சந்திரசேகர் அவர்களுக்கு உலக சிவாஜி பக்தர்கள் சார்பாக எனது நன்றி யையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Ramachandran.C
Bookmarks