-
26th December 2013, 03:05 PM
#711
Senior Member
Seasoned Hubber
கடந்த 24-12-2013 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கிறார். இந்த சம்பவமும் இதே காமராஜர் சாலையில்தான் நடைபெற்றிருக்கிறது. நடிகர்திலகம் சிலை அருகில் அல்ல.
-
26th December 2013 03:05 PM
# ADS
Circuit advertisement
-
26th December 2013, 07:45 PM
#712
Senior Member
Devoted Hubber
சகோதரி வனஜா அவர்களே,
தயவு செய்து திரியை படிப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் .நானும் பதிவிடுகிறேன் என்று சொல்லி நல்லவர் மனதை புண்படுத்தாதீர்கள் என தாழ்மையோடு கேட்டுகொள்கிறேன் .நடிகர்திலகம் ரசிகர்களில் 90 சதவீதம் பேர் பெருந்தலைவர் காலத்து காங்கிரஸ் விசுவாசிகள் என்பதையும் அதன்பிறகு நடிகர்திலகம் எடுத்த நிலைபாட்டையே விமர்சித்தவர்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள் .
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
26th December 2013, 08:04 PM
#713

Originally Posted by
HARISH2619
சகோதரி வனஜா அவர்களே,
தயவு செய்து திரியை படிப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் .நானும் பதிவிடுகிறேன் என்று சொல்லி நல்லவர் மனதை புண்படுத்தாதீர்கள் என தாழ்மையோடு கேட்டுகொள்கிறேன் .நடிகர்திலகம் ரசிகர்களில் 90 சதவீதம் பேர் பெருந்தலைவர் காலத்து காங்கிரஸ் விசுவாசிகள் என்பதையும் அதன்பிறகு நடிகர்திலகம் எடுத்த நிலைபாட்டையே விமர்சித்தவர்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள் .
Well said Senthil sir,
Vanaja mam, we never undergone in counter arguement with our Murali sir and with our Chandrasekhar sir. That much respect we all are giving to these senior fans of NT. Comparing with them we are all (that means I and others, not you) nothing.
Please dont hurt them by these type of posts.
Yes, we are congressmen and we are for NT and Karmaveerar.
-
26th December 2013, 09:43 PM
#714
Junior Member
Devoted Hubber
திரியின் விதிகள் எல்லாருக்கும் பொதுவானவை தானே? பழைய பதிவர்களுக்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளனவா? என்னை பதிவிட வேண்டாம் என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை. நானும் யாரையும் அப்படி சொல்லவில்லை. நான் இங்கே முன் வைத்த வாதங்களில் எதுவும் கீழ் தரமாக இல்லை. அக்குறிப்பிட்ட பதிவுக்கும் நடிகர் திலகத்துக்குக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். ந .தி பெயர் கூட அந்த கட்டுரையில் இல்லை. அத்துடன் சம்பந்தமில்லாதவர்களின் பதிலை எதிர்பார்த்து நான் எனது பதிவை இடவில்லை . நடிகர் திலகத்தின் திரியில் எதற்கு காமராஜரை பற்றிய கட்டுரை என்பதற்கு சம்பந்தப்பட்டவரே பதில் சொல்லட்டுமே.
Last edited by Vankv; 26th December 2013 at 10:12 PM.
-
26th December 2013, 10:08 PM
#715
Junior Member
Devoted Hubber
one simple question; what has the post #703 got to do with Sivaji Ganesan? ok, you hubbers are congress supporters, so what? I couldn't care less about it. I do not have the habbit of mixing politics in everything I do, definitely not with entertainment. This thread was created to glorify NT's movies
(that's what I think anyway) and why not continue that way? For me, its like you have started a political argument with the 'other group' somewhere and come here to finish it off and people like me have to suffer. I can of course skip reading it, but the reason I started this argument is; this time the moderator is breaking his own rule!!!
-
27th December 2013, 12:32 AM
#716
வனஜா,
வெகு நாட்களுக்கு பின் வந்திருக்கிறீர்கள். வந்தவுடன் என் பதிவுகளை விமர்சனம் செய்திருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணம் அரசியல் கலந்திருக்கிறது என்ற ஒரு குற்றசாட்டை முன் வைத்திருக்கிறீர்கள். இது அரசியல் சம்பந்தப்பட்ட பதிவுதான். இல்லையென்று யாரும் மறுக்கவில்லை. இந்த பதிவிற்கு முன் வந்த பதிவை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். அதில் தெளிவாக கீழ்கண்டவாறு சொல்லியிருக்கிறேன்.
நடிகர் திலகம் திரியில் நாம் அரசியல் பதிவுகள் இடுவதில்லை. எப்போதேனும் சில விவாதங்கள் வரும்போது கூட அதை தவிர்க்க சொல்கிறோம். ஜூலை 15 அன்று மட்டும் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுக்க யாரை தலைவராக ஏற்றுக் கொண்டாரோ யாரை நாமும் இன்று வரை போற்றுகிறோமோ அவரை அந்த பெருந்தலைவரைப் பற்றிய ஒரு நினைவு கூறல் அதுவும் அது பிறந்த நாளாக இருப்பதனால் செய்கிறோம்.அந்த வகையில் இந்த வருடமும் ஜூலை 15 அன்று அவரை பற்றிய பதிவுகள் வந்தன. என்னுடைய பங்காக அவர் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தொழில்துறை சிறக்க அவர் எடுத்த முயற்சிகள், பங்களிப்புகள் பற்றிய ஒரு தகவல் குறிப்பாக செய்தேன்.
வழக்கம் போல் இதற்கும் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஒரு பதிவு வெளிவந்தது. அவர்களின் அபிமானத்துக்குரியவரை பற்றிய புகழ் பாடல். அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதே பதிவில் பெருந்தலைவர் பற்றிய தவறான தகவல்களை சொல்லியிருந்தார்கள். அந்த தவறை சுட்டிக் காட்டவும் வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறவுமே இந்த பதிவு.
அந்த பதிவிற்கு பதில் என்ற பெயரில் வரலாற்று பிழையான தகவல்கள் இடம் பெறும்போது அந்த பிழைகளை சுட்டிக்காட்டி உண்மைகளை உரக்க சொல்வது எங்களது கடமை. அது ஒரு சில பேருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பதிவிடாமல் இருக்க முடியாது. அதை பதிவிடக் கூடாது என்று சொல்வது, இன்ன இன்ன விஷயங்களைப் பற்றிதான் எழுத வேண்டும் என்று மற்றவர்களை நிர்பந்திப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு நாங்கள் அடிபணிவதில்லை.
பொதுவாக நான் என் மேல் வைக்கப்படும் அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு விளக்கவுரை எல்லாம் எழுதுவதில்லை. இன்று இதற்கு பதில் அளிப்பது சில விஷயங்களை தெளிவுப்படுத்தவே. நான் பதிவு செய்ய விரும்பும் முக்கிய விளக்கம் என்னவென்றால் இது காங்கிரஸ் ஆதரவு திரியல்ல. ஆனால் பெருந்தலைவர் ஆதரவு திரி. இங்கே பங்களிக்கும் நண்பர்களும் சரி, வெளியிலிருந்து வந்து படிக்கும் நண்பர்கள் மற்றும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஆகிய பெரும்பான்மை மனிதர்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்ட ஒரே தலைவன் பெருந்தலைவர் அவர்கள். அவரின் அரசியல் பயணம் தூய்மையின் அடையாளம். நேர்மையின் குறியீடு. அந்த பொன்னாட்களின் நிகழ்வுகளை நினைவு கூறவும் அடுத்தடுத்த தலைமுறைகள் அவற்றை அறிந்துக் கொள்ளவும் ஒரே ஒரு நாள் ஜூலை 15 அன்று இந்த திரியில் பதிவு செய்கிறோம்.
இவற்றையெல்லாம் குறிப்பிடும் அதே நேரத்தில் மற்றொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை [இது அநேகமாக இந்த திரியின் பங்களிப்பாளர்கள் பெரும்பாலானாவருக்கும் பொருந்தும் என்ற போதிலும்] எனக்கு இப்போது அரசியல் சார்பில்லை. என் அரசியல் சார்பு நான் பள்ளி மாணவனாக இருந்த காலக்கட்டத்திலேயே 1975 அக்டோபர் 2-ந் தேதியோடு முடிந்து விட்டது. இப்படி குறிப்பிட்டால் உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. அன்றுதான் பெருந்தலைவர் மறைந்தார். அதன் பிறகு வாக்களிக்கும் வயதை நான் அடைந்த பிறகு ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அந்த நேரத்தில் நான் வாக்களிக்கும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தராதரம் அறிந்து வாக்களித்து வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கடந்த 8 வருடங்களாக என் பதிவுகளை படித்து வந்திருப்பவர்களுக்கு தெரியும். நான் பெருந்தலைவர் தவிர்த்து வேறு காங்கிரஸ் தலைவர்களையோ அவர் காலத்திற்கு பின் உள்ள காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டையோ ஆதரித்து எழுதியதில்லை. இவற்றையெல்லாம் கூட நான் எழுதி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் யாரேனும் ஒரு சிலர் நீங்கள் நினைப்பது போல் தவறாக எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களும் புரிந்துக் கொள்ளவே இந்த விளக்கம்.
இறுதியாக ஒன்று. நீங்கள் இங்கே சில முறை குறிப்பிட்டது போல் உங்கள் நாட்டின் அரசியல் சூழலால் நீங்கள் இன்றைய காங்கிரஸ் கட்சியை வெறுக்கலாம். அதற்காக பெருந்தலைவர் பற்றி எழுதக் கூடாது, அவர் காலத்து காங்கிரஸ் கட்சியைப் பற்றி எழுதக் கூடாது என்றெல்லாம் நீங்கள் சொல்வது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நான் எழுதியவற்றை நன்றாக படித்து புரிந்துக் கொள்வீர்கள் என நம்பிக்கையில்
அன்புடன்
-
27th December 2013, 11:24 AM
#717
Senior Member
Seasoned Hubber
to link Kamarajar to the present day Indira Congress or to link him with any caste is a disservice to that great man, those who attempt to do that, requesting to kindly leave him alone just like Bharathiyar or Gandhi who has never been linked to any caste / political party.............
-
27th December 2013, 01:19 PM
#718
Senior Member
Devoted Hubber
சகோதரி வனஜா அவர்களே,
எங்கள் முரளி சாரின் பதிவுகளை விமர்சிக்கும் அளவுக்கு தங்களுக்கு அனுபவ முதிர்ச்சி இல்லை என்பது என் கருத்து .தயவு செய்து இதோடு நிறுத்திகொள்ளவும் .தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த பதிவுகளை படிக்காமல் தவிர்த்துவிடுமாறு கேட்டுகொள்கிறேன்
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
27th December 2013, 02:02 PM
#719
Junior Member
Regular Hubber
Dear Ravi sir,thanks for your article of Gnani.There are lot of inputs which will make everyone to ask few questions themselves.
-
27th December 2013, 03:12 PM
#720
Junior Member
Devoted Hubber
திரு முரளி
ஆரம்பத்திலிருந்தே உங்கள் பதிவுகளில் அரசியல் இருக்கும் ஆனால் அதில் ந .தி பற்றிய செய்திகளும் இருந்தது. அதனால் திரிக்கு சம்பந்தமில்லாதவை என்று அவைகளை நான் சொல்லவில்லை. ஆனால் எனது கேள்வியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் சொன்னதையே சொல்கிறீர்கள். அது மட்டுமன்றி எனது கருத்தையும் அரசியல் கோணத்திலேயே பார்க்கிறீர்கள் . நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, தமிழ்நாட்டு /இந்திய அரசியல் பற்றி எனக்கு எந்த வித கருத்தும் இல்லை. அதை நான் ஒரு பொருட்டாகவும் எடுப்பதில்லை. நான் எந்த தமிழ் நாட்டு கட்சிகளையும் ஆதரிக்கவும் இல்லை. எந்த ஒரு அரசியல் கட்சியையோ இயக்கத்தையோ சார்ந்திருப்பது எனக்கு அவமரியாதை தரும். இதற்காக எனக்கு இது பற்றியெல்லாம் தெரியாது என்றும் நினைக்க வேண்டாம். வயதுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தமில்லை. 50, 60+ வயதினர் முதிர்ச்சியற்று தர்க்கம் செய்ததை தான் நான் பார்த்தேனே! நடிகர் திலகம் திரியில் அவரை பற்றிய தவறான செய்திகளை சரிப்படுத்துவது தான் முறை. காமராஜர் பற்றிய செய்திகளை ந. தி திரியில் ஏன் பதிவிட வேண்டும் என்பது மட்டுமே எனது கேள்வி. (மிக குறிப்பாக சொல்லப்போனால் பதிவு 703). வேறு திரியில் இருந்திருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. பல கட்சியை சார்ந்தவர்கள் இத்திரிக்கு வந்து தத்தம் அரசியல் அபிப்பிராயங்களை சொல்ல நீங்கள் இடமளிப்பீர்களா? நான் சொன்னவற்றில் தனிப்பட்ட தாக்குதலோ அவமதிப்போ கிடையாது. எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லை. உங்களை இப்படி எழுத கூடாது என்று கூட நான் சொல்லவில்லை. உங்களது பதிவிலிருந்து உங்கள் சட்டாம்பிள்ளைத்தனம் தெரிகிறது; 'குருவானவர் எது சொன்னாலும் குற்றமில்லை' என்று பின்னால் தாளம் போடும் கூட்டமும் இருக்கிறது. அந்த உலக மகா கலைஞனை ஒரு சிறு அரசியல் வட்டத்துக்குள் அடக்கி சேறு பூச காரணமாகிவிட்டீர்கள் என்பதே எனது கருத்து.
Bookmarks