Page 74 of 401 FirstFirst ... 2464727374757684124174 ... LastLast
Results 731 to 740 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #731
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    The Gambia
    Posts
    0
    Post Thanks / Like
    நான் சில வருடங்களாக இந்தத் திரியில் வரும் பதிவுகளை ஒன்று விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன் - திரியில் பங்க்கு கொள்ளாவிட்டாலும். இந்தத் திரியில் பதிவிடுபர்களில் என்னைக் கவர்ந்தவர்கள் திருவாளர்கள். பம்மல் சுவாமிநாதன், நெய்வேலி வாசுதேவன், ராகவேந்திரா, முரளி ஸ்ரீனிவாஸ், கோபால் போன்றவர்கள். நான் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கு பல இடங்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் தவராமல் எல்லா பதிவுகளையும் படித்துவிடுவேன்.

    தற்சமயம் முரளி அவர்கள் தவிர்த்து மற்றவர்களின் பதிவுகள் இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் மீண்டும் பதிவுகள் இட்டு எங்களை மகிழ்சியில் ஆழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #732
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    The Gambia
    Posts
    0
    Post Thanks / Like
    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் பதிவிடும் பொழுது அந்த நேரத்தில் நினைவில் வந்த பெயர்களைக் குறிப்பிட்டேன். நான் பொதுவாக எல்லோருடைய பதிவுகளையும் படிப்பவந்தான். தயவுசெய்து எனது வயது 61க்கு மேல் என்பதை குறிப்பிடவிரும்புகிறேன். பொதுவாக நான் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்வேன் என்றாலும் சில நேரங்களில் மறதி வந்துவிடுகிறது.

  4. #733
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    எல்லாவற்றிலும் விலக்கு என்பது உண்டு.

    நடிப்புலகின் பிதாமகனாக நடிகர்திலகம் இருந்தாலும், நீண்ட நெடிய அரசியல், பொதுவாழ்வைக் கொண்ட அவரைப்பற்றி விவாதிக்கும்போது சிறிது அரசியல் கலக்கத்தான் செய்யும்.

    அதுபோல பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தாலும், அவரை ஒரு கட்சிக்குள் அடக்கிவிடக்கூடாது. இன்று அல்ல, நாளை அல்ல எக்காலத்திலும், காமராஜரின் அரசியல் என்பது பொதுவாழ்வில் தூய்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது. அதனை, அரசியல் என்றாலே சாக்கடை என்று வெறுதது ஒதுக்கும், ஒதுங்கும் இளைய தலைமுறையினரும், வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

    வாழ்நாளெல்லாம் பெருந்தலைவரின் புகழ் பாடி மறைந்த நடிகர்திலகத்தின் திரியில் பெருந்தலைவரைப் பற்றி வந்த அவதூறை மறுப்பது அவசியமான ஒன்றாகும்.

    சினிமாவை மட்டுமே விவாதிக்கவேண்டும் என்று விரும்புவது தவறல்ல. விவாதங்களில் அவரவர்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் படிக்கலாம், விவாதத்தில் பங்கேற்கலாம்.. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளவை பற்றி விவாதிக்கக்கூடாது என்பது முறையல்ல.
    சிவாஜிக்கு பெயர் சூட்டியவரும், காமராஜரை முதல்வராக ஆக்கிய சூழ்நிலையை உருவாக்கியவருமான பெரியாரைப் பற்றி காங்கிரஸ் பெருங்காய டப்பாக்கள் ஒன்றும் சொல்வதில்லை என்பதும் தெரிந்ததே!

    அது கிடக்கட்டும், கடைசியில் "என் தமிழ் என் மக்கள்" என்று தமிழ்த்தேசியராக தன் அரசியல் வாழ்வை முடித்துக் கொண்டார் சிவாஜி. ஆனால் இங்கே எழுதுவோரெல்லாம் ஆஷாடபூதிகள் போலவும் உருத்திராட்ச பூனைகள் போலவும் "தேசியமும் தெய்வீகமும்" பற்றியே பேசுவது நெருப்புக் கோழித்தனமா இல்லையா?!

    சிவாஜி 1974-75-இல் காமராஜரை கைது செய்ய இந்திரா உத்தரவிடுமளவு போனபோது என்ன நிலைப்பாடு எடுத்தார்-எவ்வாறு செயலாற்றினார் எனச் சொல்வதற்கு வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதா????

    எமர்ஜென்சியின் போது சிவாஜியின் நிலைப்பாடு என்ன?
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  5. #734
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    'Any-body can know, the point is to understand'! so far only one hubber understood my point. not bad for someone who do not confuse entertainment with politics!

  6. #735
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    .
    மேலும் மாவீரன் பிரபாகரன் வெறும் வட இலங்கை தமிழர்களின் தலைவர் மட்டுமே என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெருந்தலைவரை ஒரு இயக்கத்தின் தலைவர்ட்டும்தான் என்று சொல்வது ..
    the most absurd comment I've heard so far!!!can only laugh!

  7. #736
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    what next? Bharathiyar was part of congress, Gandhi had been congress leader and so on.... avangala pathi sonnalum athu politics thaana?
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  8. #737
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பூலோக சொர்க்கத்தில் கடந்த 6 நாட்களாக இன்ப சக்கரம் சுழல அதன் நிரந்தர சக்கரவர்த்தி, இளமை அழகு எழில் ஸ்டைல் இவற்றின் உருவகமான ஒரே நாயகன் அழகாபுரி ஜமீன் சின்னதுரை விஜய் ஆனந்த் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

    ஆம், ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜா திரையரங்கில் கடந்த 23-ந் தேதி முதல் தினசரி 3 காட்சிகளாக நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

    தகவல் உதவி திரு ராமஜெயம்.

    அன்புடன்

  9. #738
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே முன் தோன்றிய மூத்த மாநகரம் சங்கத்தமிழ் மணக்கும் எங்கள் மதுரை மாநகரம்! மற்ற ஊர்களிலெல்லாம் மனிதர்கள் நடமாடியபோது தெய்வமே மனித ரூபத்தில் திருவிளையாடலாடிய நகரம் எங்கள் நான்மாடக்கூடல். அந்த திருவிளையாடல் புராணங்களை மீண்டும் நடத்திக் காட்ட கைலாயத்திலிருந்து சிவா(ஜி) பெருமான் மதுரை சென்ட்ரலுக்கு விஜயம். வரும் வெள்ளிக்கிழமை முதல் சென்ட்ரல் திரையரங்கில் திருவிளையாடல் காவியம் திரையிடப்படுகிறது.

    அன்புடன்

    இப்போது வெளியிடப்படும் பிரிண்ட் APN பரமசிவம் மெருகேற்றிய பிரதி அல்ல. பழைய 35 mm பிரதிதான் திரையிடப்படுகிறது.
    கடந்த மூன்று நாட்களாக சிவபெருமானின் திருவிளையாடலை காண பக்த கோடிகள் மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு வந்துக் கொண்டேயிருக்கிறார்களாம். இன்று மாலைக் காட்சிக்கு திரளான கூட்டம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் கிட்டத்தட்ட 90% audience பொது மக்கள் என்பதுதான்.

    சென்ட்ரல் திரையரங்கில் புதுப்பிக்கும் பணிகள் cum மராமத்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவாம். அதனால் தியேட்டரின் full capacity-க்கு டிக்கெட்டுகள் கொடுக்கப்படவில்லையாம். எல்லாக் காட்சிகளுக்கும் அதிகபட்சம் கொடுக்கப்படும் டிக்கெட்கள் என்று ஒரு எண்ணிக்கை வைத்திருந்தார்களாம்.அதையும் மீறி இன்றைய மாலைக்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டனவாம். குறிப்பாக பால்கனிக்கு வந்த பொதுமக்கள் கூட்டம் பார்த்து தியேட்டர்காரர்களே வியந்து போனார்களாம். பால்கனியில் ஒரு சீட் கூட காலியில்லாமல் நிறைந்திருந்த காட்சியை பார்த்தபோது நடிகர் திலகத்தின் படங்களுக்கு எப்போதுமே கிடைக்கும் வரவேற்பு அதிலும் பால்கனிக்கு எப்போதும் வரும் high class audience ஆகியவை என்றுமே குறையாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்கள் விடுமுறை நாட்கள் இல்லை என்ற போதிலும் முதல் மூன்று நாள் வசூலில் பெரிய உயரத்தை எட்டியிருக்கிறது. திரையரங்கத்திலிருந்து நேரடி தகவல் கொடுத்த நண்பர் மதுரை சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன்

  10. #739
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Just wanted to share one more information given by Madurai Chandrasekar. While he was standing and talking to his friends outside Central theatre, two foreigners came there it seems. They introduced themselves as a couple from Holland and pointing at the posters of Thiruvilayadal wanted to know about it. Chandrasekar had told them that it is a thaetre screening movies and this particular movie is a film based on Hindu mythology. The couple showed interest to watch the movie but they were scheduled to leave to Chennai by train that night. Chandrasekar told them that they can watch the movie up to interval or whatever time they felt would be ideal for leaving.

    The couple had then bought Balcony tickets and requested our friend to sit along with them. The Dutch couple it seems have heard of the Purana tales and the fact that they had just visited Meenakshi Temple which is very much in the vicinity of the theare helped them to relate with the movie very well. They were also able to identify the பொற்றாமரை குளம் which would come in Dharumi episode.

    They were amazed by NT's performance and they could not believe when shown a photo of NT [where he was his normal self) refusing to accept that this man was the one who acted in the role of Lord Shiva in the film. They were taken aback when told that this film came out in 1965. Since their train was at 8.45 pm, they had to leave at 7.45 pm so that they can go to their room, have their dinner, take their luggage and go to the station. They felt very sorry it seems that they could not watch the full movie.

    I was not surprised because we all know that once someone steps in to a movie hall screening NT movie, after the movie gets over, he would come out as a fan of NT even if he is watching a NT movie for the first time in his life.

    Regards

  11. #740
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நான் சுவாசிக்கும் சிவாஜி - ஒய்.ஜி. மகேந்திரன் (13)

    கடந்த, 1959ல் வெளி வந்த, பாகப்பிரிவினை ஒரு அற்புதமான படம். தமிழகத்தின் பெரிய ஹீரோவாக, சிவாஜி கொடிக் கட்டி பறந்து கொண்டிருந்த நேரம் அது. ஸ்டைலிஷ் ஹீரோவாக தன்னை நிரூபித்தவர், பாகப்பிரிவினை படத்தில், ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில், தன்னை விகாரப்படுத்தி, நடித்திருப்பார். எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில், அவர்களிட மிருந்து தன்னை நடிப்பால் வேறுப்படுத்திக் காட்ட வேண்டிய சவாலான ரோல் அது.

    நாற்பது நாட்கள் நடந்த படப்பிடிப்பில், கை ஊனத்தையும், காலை இழுத்து இழுத்து நடந்து, கால் ஊனத்தை காட்டுவதாகட்டும், கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல், ஒரே மாதிரி நடித்திப்பார். அத்துடன், 'தேரோடும் நம்ம சீரான மதுரையிலே...' என்ற பாடலில், கை, கால் ஊனத்துடனே, நடனமாடி, கை தட்டல் வாங்கியிருப்பார் சிவாஜி.
    இந்த படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்தனர். அதுவும், வெற்றிப்படமாக அமைந்தது. சிவாஜி நடித்த ரோலில், இந்தியில் சுனீல் தத் நடித்திருந்தார். 'படப்பிடிப்பின் போது, முந்தின காட்சியில் கையை எப்படி வைத்துக் கொண்டிருந்தோம் என்பது அடிக்கடி மறந்து விடும். ஆனால், சிவாஜி எப்படி தான் ஒரே மாதிரி, கையையும், காலையும் வைத்து, அற்புதமாக நடித்தாரோ...' என்று, வியந்து கூறினார் சுனில் தத்.

    இப்படத்தின் வெற்றிக்கு, சிவாஜி - கண்ணதாசன் - எம்.எஸ்.வி., - டைரக்டர் பீம்சிங் இணைந்த கூட்டணியே, காரணம்.
    ஹாலிவுட் நடிகர்கள், மார்லன் பிராண்டோ, கிளார்க் கேபிள் ஸ்பென்ஸர் ட்ரேஸி, அலைக் கென்னெஸ், ஜேம்ஸ் காக்னி போன்றவர்களின் நடிப்பை பற்றி, அடிகடி பாராட்டி பேசுவார். ஆதே போல், சக நடிகர்களுக்கு, 'எந்த நடிகரையும், 'இமிடேட்' செய்யாதீங்க, அவங்க நடிப்பிலே, 'இன்ஸ்பயர்' ஆகும் போது, அதை, 'இம்ப்ரூவ்' செய்யுங்க...' என்று அறிவுரை கூறுவார்.

    சிவாஜிக்கு எத்தனையோ ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி ரசிகையாக இருந்து, குடும்ப நண்பர்களாகி, உடன் பிறவா சகோதரிகளாக ஆனவர்கள், லதா மங்கேஷ்கர் மற்றும் அவரது தங்கைகள். சிவாஜியை அவர்கள், 'அண்ணா' என்று பாசத்துடன் அழைப்பதுடன் மட்டுமல்லாமல், ஆண்டுதோறும், ரக்க்ஷா பந்தன் தினந்தன்று, ராக்கி கயிறு, அனுப்புவர். இவரும் தங்கைகளுக்கு சீர் வரிசை மற்றும் பரிசுப் பொருட்களை அனுப்புவார். சிவாஜி இறந்த பின்னரும், இந்த பழக்கம், இன்னும் தொடர்கிறது.

    சிவாஜி வீட்டில், எந்த முக்கியமான நிகழ்ச்சி நடந்தாலும், லதா குடும்பத்திலிருந்து, ஒருவர் கண்டிப்பாக, கலந்து கொள்வர்.

    சிவாஜி படங்களை, லதா விரும்பிப் பார்த்து ரசிப்பார். பாவமன்னிப்பு படத்தை பார்க்க விரும்புவதாக, லதா மங்கேஷ்கர் கூறியதும், அப்படத்தின் பிரின்ட்டை, பிரத்யேகமாக அனுப்பி வைத்தார் சிவாஜி. பொதுவாக, ஒருவர் நம்மை, 'இடியட்' என்று சொன்னால், உடனே, நமக்கு கோபம் வரும்; குறைந்தபட்சம் வருத்தமாவது வரும். ஆனால், என்னை ஒருவர், 'இடியட்' என்று குறிப்பிட்ட போது, நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன். என்னை, அவ்வாறு குறிப்பிட்டவர், லதா மங்கேஷ்கர் தான்.

    ஒரு சமயம், சிவாஜியின் வீட்டுக்கு, லதா மற்றும் அவரது தங்கைகள் உஷா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போன்ஸ்லே என, மூவரும் வந்திருந்தனர். சிவாஜி காலமாகிய பின், நடந்த நிகழ்ச்சி, அது. சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், போனில் என்னிடம், லதா மங்கேஷ்கர் வந்திருப்பதாக கூறினார். என் மனைவி சுதா, என் சித்தி சீதாவுடன் சிவாஜி வீட்டுக்கு சென்றேன்.

    ராம்குமார், லதாவிடம் என்னை அறிமுகப்படுத்திய போது, 'அப்பாவுடன் நிறைய படங்களில், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்திருக்கிறார்...' என்று சொல்லி, பரிட்சைக்கு நேரமாச்சு படத்தை பற்றி குறிப்பிட்டார். 'அந்த முட்டாள் பையன் கதைதானே?' என்று கேட்டார் லதா. 'ஆமாம் லதாஜி. நான் தான், அந்த இடியட்...' என்று, பெருமையோடு சொன்னேன். 'அந்த ரோலில் நன்றாக நடித்திருக்கிறீர்கள்...' என்று பாராட்டினார். இந்த பாராட்டுக்கு முழு காரணம், சிவாஜிதான்.
    லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் பாடகி என்பதோடு, சிறந்த ஓவியரும் கூட. சிவாஜியை, மிக அழகாக, தத்ரூபமாக வண்ண ஓவியமாக தீட்டி, சிவாஜிக்கு அன்பளிப்பாக வழங்கினார். கையில் புகைப்படம் வைத்துக் கொள்ளாமல், தன் மனதில், சிவாஜியின் முகத்தை வைத்து, வரைந்த படம்
    அது.

    மும்பையிலிருந்து வெளியான பிரபல ஆங்கில வாரப்பத்திரிகை, 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி!' அதில், கலைப் பகுதியை எழுதி வந்த ராஜூ பரதன் என்ற பிரபல பத்திரிகையாளர், மும்பை, ஷண்முகானந்தா அரங்கில் நடைபெற்ற, சிவாஜி நாடக விழா பற்றி எழுதியிருந்த கட்டுரையில், 'வியட்நாம் வீடு' தமிழ் நாடகம் நடைபெற்றது. முதல் வரிசையில், பிருத்வி ராஜ்கபூர், ராஜ்கபூர், சசி கபூர் மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் அமர்திருந்தனர். தமிழ் தெரியாவிட்டாலும், சிவாஜி நாடகங்களை பார்ப்பதற்காகவே அவர்கள் வந்திருந்தனர்.

    'விழாவில் பயங்கர கூட்டம். என்ன தான் இருக்கப் போகிறது என்ற மனநிலையில் தான், சிவாஜியின் நாடகத்தை பார்க்கச் சென்றேன். அவரது நடிப்பு என்னை உலுக்கி விட்டது. நாடக அரங்கிலிருந்து வெளியே வரும்போது, சிவாஜியின், பரம ரசிகனாக வந்தேன். நாடகத்தில் பல இடங்களில், என்னையும் அறியாமல், அழுதேன்...' என்று எழுதியிருந்தார் ராஜூ பரதன்.

    பிரபல இந்தி நடிகரும், தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சாதனையாளரும் ஆன நடிகர் பிரானுக்கு, சிவாஜி மீது அளவு கடந்த மரியாதை உண்டு. ஏக் முட்டி ஆஸ்மான் என்ற இந்தி படத்தில், விஜய் அரோரா, ஹீரோ. எனக்கு கவுரவ வேடம். இந்தியாவின் போர் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்த்தில், படமாக்கினர். விஜய் அரோராவும், நானும் கப்பற்படை வீரர்கள்; பிரான் எங்கள் தளபதி. படப்பிடிப்பின் போது, பிரானிடம் என்னை அறிமுகம் செய்தனர்.
    'உங்களுக்கு சிவாஜியை தெரியுமா?' என்று கேட்டார் பிரான். 'நன்றாகவே தெரியும். அவர், எங்களுடைய குடும்ப நண்பர். அவரோடு நான், சில படங்கள் நடித்திருக்கிறேன்...' என்றேன்.

    'நான் சிவாஜி சாரின் தீவிர ரசிகன். சிவாஜி நடித்த எமோஷனலான படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்ய கேட்டனர். (பிரான் சொன்ன, ஓரிரு காட்சிகளை வைத்து, அவர் குறிப்பிடுவது, ஞான ஒளி படம் என்பது புரிந்தது.) என்னால் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை, கண்டிப்பாக செய்ய முடியாது. வேண்டாம் என்று சொல்லி விட்டேன்...' என்று கூறினார் பிரான்.

    நடிகர் விஜய் அரோரா, புனே திரைப்படக் கல்லூரியில், நடிப்புக்கான படிப்பில், தங்கப் பதக்கம் பெற்றவர். 'சமீபத்தில், சிவாஜி படம் பார்த்தேன். அப்படத்தில், ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வருவார். படத்தின் பெயர் கூட, கோல்டு மெடல். (தங்கப்பதக்கம்) அதில், தன் மனைவி இறந்ததும், சிவாஜி கொடுத்திருக்கும், 'எக்ஸ்பிரஷன்ஸ்' ரொம்ப சிறப்பானவை. என் வயிற்றில் யாரோ குத்துவது போன்ற வலி எனக்குள் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றதும். அந்த காட்சியில், சிவாஜி நடித்தது போல, கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்தேன். அவர் செய்ததில், ஒரு சதவீதம் கூட செய்ய என்னால் முடியவில்லை...' என்றார் விஜய் அரோரா.

    — தொடரும்.
    எஸ்.ரஜத்
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •