-
18th February 2014, 09:56 AM
#1271
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ravikiransurya
dear sir,
i think what mr.balaji referred was something like social themed film fights ( dishyum...dishyum..)
ofcourse, the malyudham and sword fight there were many pictures...nothing to deny.
Further, whatever being mentioned here in this thread, nothing is new but old wine in new bottle only. It was published long back in english, this is a translated version which i had put for the benefit of few of our friends from salem and mannargudi.
Rgds,
rks
அன்புள்ள ரவிகிரண் - நீங்கள் என்னதான் சொன்னாலும் - பேட்டி என்ற பெயரில் சிலர் நம் தலைவரை மட்டம் தட்டும் போது மனது அந்த பேட்டியை பாராட்ட மறுக்கின்றது - முதலில் ஒருவர் சிவாஜியே தன்னை " அழு மூஞ்சி " என்று சொன்னதாக குறிப்பிட்டார் - இன்னொருவர் " தங்கை" க்கு பிறகு தான் அவருடைய டிஷ்யும் டிஷ்யும் பெருத்த பாராட்டுதல்களை பெற்றது என்று சொல்லியுள்ளார் - இவர்கள் nt யின் நெருங்கிய நண்பர்கள் வேறு !
அவர் எந்த வேடத்தையும் ஏற்க தயங்கினதில்லை - அதில் சோடை போனதும் இல்லை - அவரை சரியாக பயன் படுத்திக்கொள்ள நாமும் தவறி விட்டோம் , பல தயாரிபாளர்களும் தவறி விட்டனர் - தயிர் சாதத்தின் அளவு அதிகமாக ஆனதிற்க்கு சில தயாரிபாளர்களும் , திரை கதையுமே காரணம் -- அவர் அல்ல
அன்புடன் ரவி
-
18th February 2014 09:56 AM
# ADS
Circuit advertisement
-
18th February 2014, 10:06 AM
#1272
Junior Member
Seasoned Hubber
கோபாலின் சுனாமிக்காக பயந்து கொண்டே மூன்று தெய்வகளை அலச ஆரம்பித்தேன் - ரவி கிரணை சற்றே மறந்து விட்டேன் - அவர் போடும் பதிவுகளின் வேகத்தை பார்க்கும் போது , " எப்பொழுது என் அலசல்களை முடிக்க போகிறேன் " என்ற பயம் வந்து விட்டது - சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன - ஆனால் மற்றவர்கள் போடும் பதிவுகளின் வேகத்திற்க்கு ஈடு கொடுக்க முடியவில்லை --- எல்லோரும் இந்த நான்கு படங்களை பற்றிய தகவல்களை , அனுபவங்களை என்னுடன் இந்த திரியில் பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்குமே !!!!
அன்புடன் ரவி

-
18th February 2014, 10:22 AM
#1273
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ravikiransurya
விரைவில் கோவை ராயலில் நடிக சக்ரவர்த்தியின் 147வது காவியம் "சொர்க்கம் "
- பொன்மகள் வருகிறாள் ...சொல்லாதே யாரும் கேட்டால்.எல்லோரும் தாங்கமாட்டார் !
அன்புள்ள ரவிகிரண்
சொர்க்கம் nt யின் 142 வது படம் . அவருடைய 147வது படம் "குலமா குணமா " சுட்டி காட்டுவதற்கு மன்னிக்கவும்
அன்புடன் ரவி
-
18th February 2014, 10:59 AM
#1274
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
மூன்று தெய்வங்களை சந்திக்கும் முன் , அந்த வருடத்தில் வந்த படங்களை பற்றி சற்றே தெரிந்து கொள்வோம் . ----
மொத்தம் 10 படங்கள்


டியர் ரவி சார்,
தாங்கள் எடுத்துக்கொண்ட 10 படங்களும் முத்தான படங்கள்தான். முதலாவதாக எடுத்துக்கொண்ட மூன்று தெய்வங்கள் - தாங்கள் குறிப்பிட்டபடி நடிகர்திலகத்திற்கு வேண்டுமானால் தயிர்சாதமாக இருக்கலாம். ஆனால் அந்த ரோலை வேறு யாரும் செய்திருந்தால், முத்துராமனையாவது விட்டுவிடுவோம், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, வி.எஸ்.ராகவன் போன்றவர்கள் முன்னாள் காணாமல் போயிருப்பார்கள். நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் எக்காலத்திலும் பார்த்து ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படத்தில் இதுவும் ஒன்று.
-
18th February 2014, 11:01 AM
#1275
Junior Member
Veteran Hubber
ஹைதராபாத் பிரியாணி மற்றும் அறுசுவை உணவு..
இரெண்டுமே உணவுவகைதான்.
அறுசுவை பிரியாணி என்று உண்பவர்கள் கூற கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பிரியாணி உணவு அறுசுவை என்று நாம் கேள்விப்பட்டதுண்ட என்று தெரியவில்லை.
நல்ல தரமான குடும்ப படங்கள் இரண்டு வகைப்படும்.
ஒன்று ஒரு மனிதனுடைய வாழ்கையில் நடக்கும் கஷ்டங்கள் ..அதை அந்த மனிதன் எப்படி சந்திக்கிறான் ...எப்படி அதிலிருந்து மீள்கிறான் எப்படி அவனால் அவன் குடும்பம் பலன் அடைகிறது என்பதை கொண்டு தயாரிக்கப்படும் படங்கள் - இதில் நாயகன் மற்றும் குடும்பத்தார் ஒன்று செல்வந்தர்களாக அல்லது lower middle class வகையை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
மற்றொன்று - கஷ்டமே இல்லாத குடும்பம் ..(எங்குமே நினைத்து பார்க்க முடியாத ஒரு விஷயம்) ஒரு குடும்பம் என்றால் அதில் ஏதாவது பொருளாதார மற்றும் உறவினர் வகை துன்பங்கள் அல்லது குடும்பத்தினர் நல்வாழ்வுக்கு வழி இல்லாத கஷ்டம் இப்படி இருக்கதான் செய்யும்.
ஆனால் இந்த வகை படங்களில் நாயகன் கஷ்டமே படமாட்டான். குடும்பத்திலும் பெரிதாக ஒரு சவால் விடும் கஷ்டம் முக்கால்வாசி இருக்காது. ஏதோ ஒரு சின்ன வருத்தம் இருக்கும் அவ்வளவே.
ஆனால் இது போன்ற கதைகளில் நடைமுறையில் ஒத்துவராத, நடக்கவே நடக்காத வில்லன் அவன் அடியாட்கள் என்று ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுடன் நாயகன் 4 அல்லது 5 முறை கைகலப்பது போன்ற காட்சிகள், மற்றும் போலீஸ் நாயகனை வானளாவ புகழ்வது என்னமோ நாயகன் காவல் துறையை விட சாதுர்யமானவன் என்ற வகையில் புகழ்ச்சி இருக்கும். இது போன்ற கதைகளங்கள் சில காட்சிகளை தவிர பெரும்பாலும் சினிமாத்தனம் நிறைந்து இருக்கும்.
வாழ்கையில் ஒரு சாதாரண மனிதன் என்னெவெல்லாம் சந்திக்க மாட்டானோ அவற்றை எல்லாம் சந்திப்பது போல எடுத்திருப்பார்கள்.
நான் குறிப்பிட்டதில் , முந்தையது ஹைதராபாத் பிரியாணி ரகம். பிந்தையது அறுசுவை.
முன்னதால் ஒரு தனிமனிதனுக்கு நிறைய பலன்கள் உண்டு. வாழ்கையில் நாம் நடைமுறையில் சந்திக்கின்ற பிரச்சனைகள் ...அவற்றை எப்படி கையாளவேண்டும்...தவறான முடிவு, கய்யாளளால் என்னென்ன விபரீத விளைவுகள் இப்படி பல விஷயங்களை அழுத்தமாக கையாண்டிருப்பார்கள்.
திரைப்படத்தை பார்பவர்களுக்கு சோகமாக இருப்பது மன உளைச்சல் சிறிது ஏற்படுவது ஆகியவை ஒரு சிறந்த நடிகனின் வெற்றியை குறிப்பதாகும், நல்ல வசனகர்த்தாவின் வெற்றியை குறிப்பதாகும் ஒரு நல்ல இயக்குனரின் வெற்றியை குறிப்பதாகும். மரக்கட்டை போன்ற மனிதன் இருப்பனாகில் எந்த சோகமும் அவனை பாதிக்காது. அல்லது எதை பற்றியும் ஏன் தன்னை பற்றியும் தன குடும்பத்தை பற்றியும் கூட சிறிதும் கவலை இல்லாத மனிதர்களுக்கு இது போன்ற படங்கள் துளி கூட பிடிக்காது...என்னப்பா இவ்வளவு அழுவை என்று கூறுவார்கள்.
ஆனால் ஒரு குடும்ப பொறுப்பு உள்ள குடும்ப தலைவர்கள் நல்ல நெறிகொண்ட மனிதர்கள் இது போன்ற படங்களை மிகவும் விரும்புவார்கள். காரணம் அவர்களுக்கு இந்த படங்களில் இருந்து நல்ல ஒரு LEARNING கிடைக்க வாய்பிருப்பதால் ! சோகம் வரும்போது நாம் சோகமாக தான் இருக்கிறோம் என்பது உண்மை. சோகம், கஷ்டம், துன்பம் சிறிதும் இல்லாமல் மனித வாழ்கை இல்லை !
பின்னது - அறுசுவை உணவு - நடைமுறைக்கு ஒத்துவராத வாழ்கையில் மிக மிக குறைவாக நாம் சந்திக்கின்ற காட்சியமைப்புகள், நீங்களே கூறுங்கள்...நாம் நம் வாழ்கையில் தினமும் வில்லனும் 10-15 அடியாளும் என்றாவது சந்தித்ததுண்ட அல்லது அவர்களுடன் நாம் தன்னந்தனியாக சண்டயிட்டதுண்டா ? ஒரு தனிமனிதன் கோர்ட்டில் போய் ஜட்ஜ் அவர்களயே தாறு மாறாக தனிஷ்டப்படி கேள்வி கேட்க முடியுமா ? அல்லது ஒரு காவல் துறை உயர் அதிகாரியை அடிக்கதான் முடியுமா ? இதெல்லாம் நடை முறைக்கு ஒத்து வராத விஷயம் மட்டுமல்ல , ஒரு சில சந்தர்பங்களில் தனிமனிதனை தவறான நினைப்பு வாழ்கையை பற்றி நினைக்கவைக்கும் வகையில், ENTERTAINMENT என்பதற்காக மட்டுமே எடுக்கப்படும் படங்கள் - இதில் யதார்த்தம் பதார்த்தம் அளவிற்கு கூட இருக்காது ! ஆனால் பார்பதற்கு அழகாக இருக்கும்...-மனதிற்கு பிடித்ததாக இருக்கும்.. இது அறுசுவை உணவு !
இதில் இரெண்டுமே அதிகம் உண்டால் ஆபத்துதான்.
ஆகையால்தான் மக்கள் இரெண்டுக்கும் சம வாய்ப்பு அளித்தாலும் பிரியாணியை அதிகம் விரும்புகின்றனர் !
உலகளவில் நாம் பார்த்தால் அறுசுவை உணவை விட, பிரியாணி விரும்பி உண்பவர்கள் அதிக அளவில் உள்ளார்கள் !
அறுசுவை உணவு தினமும் உட்கொள்ள முடியாது. திகட்டிவிடும். அதே போல தான் பிரியாணியும்...தினமும் வயிறு நிறைய பிரியாநியயே சாப்பிடமுடியாது ...
ஆனால் ஓரிரு கரண்டி வேண்டுமானால் தினமும் உண்ணலாம் ! திகட்டாது !
Last edited by RavikiranSurya; 18th February 2014 at 11:26 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th February 2014, 11:03 AM
#1276
Junior Member
Veteran Hubber

Originally Posted by
g94127302
அன்புள்ள ரவிகிரண்
சொர்க்கம் nt யின் 142 வது படம் . அவருடைய 147வது படம் "குலமா குணமா " சுட்டி காட்டுவதற்கு மன்னிக்கவும்
அன்புடன் ரவி
Dear Ravi Sir,
thanks for pointing out the mistake. Corrected !
Please point out more if there are any...Shall correct myself
Thanks and Regards
RKS
-
18th February 2014, 11:37 AM
#1277
Junior Member
Seasoned Hubber
Dear Ravi sir, Ravi kiran Surya sir,
you both are doing a great job of posting articles in a frenetic pace , especially ethirpaarathathu was too good
Moondru Deivangal is one of my favourite movie of NT reason light hearted subject, It is a perfect entry point for starters to watch NT movies
Thanks for acknowledging my article on Needhi KC sekar sir & ravi sir
One of the NT movies which I did not understand its significance reason being stupendous Raja effect
thanks for your comments , will look deeply into NT movies rather than blindly seeing it
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th February 2014, 11:46 AM
#1278
Junior Member
Veteran Hubber
Babu - மறு வெளியீடு அடிக்கடி..அடிக்கடி வரவில்லை என்றாலும் அவ்வப்போது தலைநீட்டும் திரைப்படம். அதாவது முதல் தர ஹைதராபாத் பிரியாணி ரகம் என்று வைத்துகொள்ளுங்களேன் !
தயாரிபாளருக்கும், ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து இடங்களில் உள்ள விநியோகஸ்தர்களுக்கும் மிகபெரிய லாபத்தை முதல் வெளியீடிலயே ஏற்படுத்தி கொடுத்த படம் தமிழகத்தின் பெருமையாம் நடிகர் திலகத்தின் "பாபு"
ஒரு சில நடிகர்கள் படங்கள் போல் பாபுவோ மற்றும் நடிகர் திலகத்தின் நல்ல தரமுள்ள படங்களோ அடிக்கடி அடிக்கடி வருவதில்லை என்றொரு சொற்றொடர் நிலவி வருகிறது !
தலைனீட்டும்பொது எப்போதும் பல அரங்கு நிறைவு விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கும் படம். சில வருடங்களுக்கு முன்னர் மறுவெளியீடு கண்டபோது வெள்ளி மாலை, சனிகிழமை இரவு, ஞாயிறு மேட்டுணீ மற்றும் மாலை காட்சி அரங்கு நிறைவு கண்டது !
நடிகர் திலகத்தின் படங்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப technology transformation செய்ய விநியோகஸ்தர்களால் விரும்பப்படும் முதல் முதன்மையான படங்களாகும்.
காரணம் பல ...நல்ல குடும்பகதைகள். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்ககூடிய பல படங்கள் நடிகர் திலகத்துடயது மட்டுமே என்றால் அது மிகையாகாது ! மேலும், தமிழக கலாசாரம், பண்பு, அன்பு, பாசம், பக்தி, இப்படி பல விஷயங்கள் அவர் படங்களில் உள்ளதுதான் காரணம். தை சிறந்த முறையில் மக்களிடம் வெளிபடுத்தும் திறன் அவர் ஒருவரை தவிர மற்ற எவருக்கும் இருக்குமா என்றால் இருக்காது என்பது தான் பெரும்பான்மையானவர்கள் பதிலாக இருக்கும்.
முதல் வெளியீடிலயே பெரும்பான்மையான நடிகர் திலகத்தின் படங்கள் விநியோகஸ்தர்களையும் தயாரிபாலர்கலயும் வசூல் மழையில் நனைய செய்வதனால்...அவர் படங்கள் பல ஆட்களுக்கு கை மாற்றம் செய்யபடுகிறது. அவர்களும் ஒரு சில வெளியீடு செய்து மிகுந்த பணம் சம்பாதித்தவுடன், அதை மற்றவர்களுக்கு விற்காமல் மற்றவர்களும் பலன் அடையவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அப்படியே வைத்திருந்து கமுக்கமாக உள்ளனர்.
வாங்கியவர்கள் வெளியிடாமல் வைத்திருந்தால் அதற்க்கு நடிகர் திலகம் பொறுப்பேற்க முடியுமா ?
இவர்கள் அனைவரும் சமீப காலமாக..QUBE செய்யபோகிறேன் என்று வேறு படையெடுக்க உள்ளனர் ...இன்றைய நிலவரத்தில் நடிகர் திலகத்தின் 19 (படங்கள் கருப்பு வெள்ளை மற்றும் கலர் )QUBE முறையில் வெளியிடும் முயற்சியில் விநியோகத்தர்கள் உள்ளனர்.
என்னதான் புத்தம் புது படங்கள் தினமும் திரை அரங்கங்களை ஆக்ரமித்த வண்ணம் வந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர் திலகம் படங்கள் என்றால் மிகுந்த உற்சாகத்துடன், உடனே தேதி குடுக்கவும் தயாராக உள்ளனர் என்பதை நாம் சமீப காலமாக பார்கின்ற ஒரு உண்மை.
குறைந்தபட்சம் 65 திரையரங்குகள் இன்றைய தேதியில் ஒரே சமயத்தில் புத்தம் புது படங்களுடன் நடிகர் திலகம் படங்களை வெளியிட திரை அரங்கு உரிமையாளர்கள் , விநியோகஸ்தர்கள் நான் நீ என்று போட்டி போடுவது மிகவும் உற்சாகமான செய்திமட்டும் அல்ல, பாக்ஸ் ஆபீஸ் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் ஆளுமைக்கு எல்லா காலத்திலும் ஒரு ஆதாரம் !
Last edited by RavikiranSurya; 18th February 2014 at 12:48 PM.
-
18th February 2014, 12:24 PM
#1279
Junior Member
Senior Hubber

Originally Posted by
RavikiranSurya
Babu - மறு வெளியீடு அடிக்கடி..அடிக்கடி வரவில்லை என்றாலும் அவ்வப்போது தலைநீட்டும் திரைப்படம்.
தலைனீட்டும்பொது எப்போதும் பல அரங்கு நிறைவு விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கும் படம். சில வருடங்களுக்கு முன்னர் மறுவெளியீடு கண்டபோது வெள்ளி மாலை, சனிகிழமை இரவு, ஞாயிறு மேட்டுணீ மற்றும் மாலை காட்சி அரங்கு நிறைவு கண்டது !
ஒரு சில நடிகர்கள் படங்கள் போல் பாபுவோ மற்றும் நடிகர் திலகத்தின் நல்ல தரமுள்ள படங்களோ அடிக்கடி அடிக்கடி வருவதில்லை என்றொரு சொற்றொடர் நிலவி வருகிறது !
நடிகர் திலகத்தின் படங்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப technology transformation செய்ய விநியோகஸ்தர்களால் விரும்பப்படும் முதல் முதன்மையான படங்களாகும்.
காரணம் பல ...நல்ல குடும்பகதைகள். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்ககூடிய பல படங்கள் நடிகர் திலகத்துடயது மட்டுமே என்றால் அது மிகையாகாது ! மேலும், தமிழக கலாசாரம், பண்பு, அன்பு, பாசம், பக்தி, இப்படி பல விஷயங்கள் அவர் படங்களில் உள்ளதுதான் காரணம். தை சிறந்த முறையில் மக்களிடம் வெளிபடுத்தும் திறன் அவர் ஒருவரை தவிர மற்ற எவருக்கும் இருக்குமா என்றால் இருக்காது என்பது தான் பெரும்பான்மையானவர்கள் பதிலாக இருக்கும்.
நடிகர் திலகத்தின் படங்கள் பெரும்பாலும் என்றுமே முதல் ரிலீஸ் சூப்பர் ஹிட் ஆகி நல்ல ஒரு தொகையை வசூல் செய்வதால் தயாரிப்பாளர் அல்லது வெளியிடும் விநியோகஸ்தர் படங்களை கை மாற்றி பலருக்கு விற்று விடுகின்றனர் ..
வாங்கியவர்கள் வெளியிடாமல் வைத்திருந்தால் அதற்க்கு நடிகர் திலகம் பொறுப்பேற்க முடியுமா ?
BABU PADAM RERELESE VERY LESS NUMBER IF TIMES REMARK ABSILUTELY FALSE The so called mega movie never made any show not only in first run but also subsequent runs that too when compared to babu it has no show at all. every one knows very well.thanks kiran sir.
Last edited by Subramaniam Ramajayam; 18th February 2014 at 12:27 PM.
-
18th February 2014, 12:56 PM
#1280
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
ஹைதராபாத் பிரியாணி மற்றும் அறுசுவை உணவு..
இரெண்டுமே உணவுவகைதான்.
அன்புள்ள ரவிகிரண் - உங்கள் ஹைதராபாத் பிரியாணி மற்றும் அறுசுவை உணவு --- இரண்டுமே திகட்டவில்லை - ஹைதராபாதில் இருந்தும் அதிகமாக பிரியாணியை சாப்பிட்டதில்லை - உங்கள் உவமானம் அருமை - இப்படிப்பட்ட நல்ல கருத்துள்ள தமிழ் பதிவை பார்த்து மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன - நன்றி .

Bookmarks