-
24th March 2014, 12:54 AM
#1
Senior Member
Seasoned Hubber
அந்த நாள் ஞாபகம்...

"ஆயிரம் தான் சொல்லுங்க.. தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்த அனுபவத்திற்கு ஈடாக எதுவுமே கிடையாது. அந்த காலத்திலே தியேட்டரில் நாங்க பண்ணிய அளப்பரை இருக்கே... பூக்கூடை கொண்டு வந்து வாரி இறைப்போம்... ஆடியென்ஸுக்கு சாக்லேட் குடுப்போம்.."
இப்படியெல்லாம் நீங்க செஞ்சிருப்பீங்க.. இல்லை பாத்திருப்பீங்க.. ரசிச்சிருப்பீங்க... இதையெல்லாம் மத்தவங்களோட ஷேர் பண்ணிக்கிட்டா தானே மனசு ஜாலியா ரெக்கை கட்டி பறக்கும்... இதையெல்லாம் நண்பர்கள் கிட்டே சாயங்காலம் சொல்லியிருப்பீங்க.. ராத்திரி தூக்கம் வராம இதையே நெனச்சு சந்தோஷப் பட்டுக்கிட்டே மனசு அசை போட்டுக்கிட்டு தூக்கம் வந்தது தெரியாமல் தூங்கியிருப்பீங்க..
இதையெல்லாம் மத்தவங்களும் அனுபவிக்க வேண்டாமா...
வாங்க... நடிகர் திலகத்தின் படத்தை ரசிகர்களோட தியேட்டரில் ஜாலியா படம் பார்த்தது அந்தக் காலத்தில் சுவையான அனுபவம் என்றால் அதை மற்றவர்களோட பகிரந்து கொள்ளும் போது அது இன்னும் சூப்பராச்சே...
அதையெல்லாம் இங்கே எழுதுவோம்..
அது மட்டுமா... அவரோட அரசியல்லேயும் உங்களில் சிலர் பங்கெடுத்திருக்கலாம்.. அது பழைய காங்கிரஸாயிருந்தாலும் சரி, இந்திரா காங்கிரஸாயிருந்தாலும் சரி, த.மு.மு. வா இருந்தாலும் சரி.. எப்படியெல்லாம் அவருக்காக உழைச்சிருக்கீங்க... எப்படியெல்லாம் அவர் நினைப்பு உங்களை ஆட்டிப் படைக்குது...
இதையெல்லாம் இங்கே ஷேர் பண்ணிக்குவோமே..
மெயின் திரியில் படங்களோட அனாலிஸிஸ்... ம்ம்.. அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும்.. தனிக்காட்டு ராஜா.. அதை யாரும் அசைக்கமுடியாது... என்னைக்குமே அது முதலிடம் தானே...
இங்கே நாம நம்ம அனுபவங்களையும் நினைவுகளையும் அசை போடுவோமே...
என்ன ... நான் சொல்றது...
Last edited by Murali Srinivas; 30th November 2014 at 12:24 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th March 2014 12:54 AM
# ADS
Circuit advertisement
-
24th March 2014, 01:12 AM
#2
Senior Member
Seasoned Hubber
உங்களை சொல்லிட்டு நான் சும்மாயிருக்க முடியுமா...
ஆரம்பிச்சுடுவோமே..

திரைப்படப் பாடலும் தேசிய கீதமாகலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழும் பாடல் இந்திய நாடு என் வீடு. இந்த திரைத் தேசிய கீதம் இடம் பெற்ற பாரத விலாஸ், கப்பலோட்டிய தமிழன், ஒரு வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைக்காவியங்களுக்கு சற்றும் குறையாத புனிதத் தன்மை வாயந்ததாகும். சொல்லப் போனால் முந்தையவை விடுதலை வேள்வியின் பிரதிபிம்பங்கள் என்றால் பின்னது அவற்றின் காவல் தேவதை எனலாம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கவும் நடிகர் திலகத்தின் படங்கள் பாடம் சொல்கின்றன. அவற்றில் நாம் பிறந்த மண், பாரத விலாஸ், புண்ணிய பூமி போன்றவை குறிப்பிடத் தக்கவை.
அப்படிப் பட்ட பாரத விலாஸ் வெளியாகி 41 ஆண்டுகள் நிறைவுற்று 42வது ஆண்டில் நுழையும் நாள் மார்ச் 24, 2014. இன்றைக்கு சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் மார்ச் 24, 1973 அன்று வெளியான போது நாடு இருந்த நிலைமைக்கும் இப்படம் பொருந்தியது. மக்களிடம் பெரும் வரவேற்புப் பெற்றது. தாய்மார்களின் அளப்பரிய ஆதரவோடு வெற்றி நடைபோட்டது. இன்றைக்கும் இப்படம் இன்றைய சமுதாயத்திற்கு பொருந்தி வருவதைப் பார்க்கும் போது இந்த படைப்பாளிகளின் தீர்க்கதரிசனம் புலனாகிறது.
மலேசியா வாசுதேவன் மெல்லிசை மன்னரின் இசையில் முதலில் பாடிய பாடல் இந்திய நாடு என் வீடு.
முன்னணி நட்சத்திரங்கள், கேரளத்தின் மது, களி தெலுங்கின் அக்கினேனி நாகேஸ்வரராவ், வட இந்தியாவின் சஞ்ஜீவ் குமார் என தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வண்ணம் இவர்களெல்லாம் பங்கேற்ற சிறந்த தேச பக்திச் சித்திரம் பாரத விலாஸ்.
நூறு நாட்களுக்கு மேல் வெற்றி நடை போட்டு வசூலிலும் வாரிக்குவித்த உன்னதத் திரைக்காவியம் பாரத விலாஸ்.
வழக்கம் போல ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து வெளியான படம் பாரத விலாஸ். அடுத்த வாரம் ராஜ ராஜ சோழன் ரிலீஸுக்கு மும்முரமாக எல்லோரும் ஆவலோடு காத்திருக்க ஒரு வாரம் முன்னாலேயே வெளியாகிறது என்கிற அறிவிப்பு கடுப்பேற்றியது. அவ்வளவு பெரிய படத்திற்கு வரவேற்பு தரத் தயாராகும் போது இதனுடைய வெளியீடு நம்மில் சிலருக்கு [பலருக்கு ?] கோபம் வந்தது உண்மை. அந்த கோபத்தோடு படம் பார்க்கப் போனோம். இதற்குள் அரசல் புரசலாக ராஜ ராஜ சோழனைப் பற்றிய விமர்சனங்களும் நம் நண்பர்கள் சிலர் மூலமாக தெரிய வந்து விட்டது. நம்முடைய வீக்னெஸ் எல்லாம் தலைவருக்கு நல்லா தெரியுமே.. இந்த பிள்ளைங்கெல்லாம் வெளியே எவ்வளவு கோபமாயிருந்தாலும் உள்ளே நம்மளைப் பார்த்தா அவ்வளவு தான் னு நல்லா தெரிஞ்சில்லே வெச்சிருக்கார்... சக்கை போடு பாட்டு வந்த வுடனே அத்தனை பேரும் FLAT... அதுவும் வந்தே மாதரம் என்று சொல்லிக் கொண்டே நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு துடிப்பார் பாருங்கள்.. அவ்வளவு தான்... தலைவா.... என்று ஏகோபித்த குரல் எல்லா திசையிலும்... [ நாங்கள்லாம் அப்பவே அப்படி] பாட்டு முடியும் முன் வரை சஞ்சீவ் குமார், மது, நாகேஸ்வர ராவைப் பற்றி விவாதித்த அத்தனை உதடுகளும் கப் சிப்... அதுவும் பசங்கள்லாம் வளர்ந்த நிலையில் ஒருத்தர் வந்தார் பாருங்க... தியேட்டரே ரெண்டாயிடுச்சி... வேறெ யாரு.. வயசான ரோல்லே தலைவரு தான்..
ஆரம்பத்திலேருந்தே கோபாலுக்கு ஒரு தனி வரவேற்பு தான்.. அது இன்னைக்கு வரைக்கும் குறைய மாட்டேங்குது.. பேசாம நம்ம பேரை கோபால்னு வீட்லே வெச்சிருந்திருக்கலாமோ..
எனிவே... படம் முடிஞ்சி வெளியே வரும் போது பசங்க முகத்தைப் பாக்கணுமே... சேப்பாக் ஸ்டேடியத்திலே டே நைட் மேட்சிலே வீசும் ஒளியை விட பிரகாசம்னா பாருங்களேன்.
மறக்க முடியுமா...
நீங்களும் தான் எழுதுங்களேன்...
Last edited by RAGHAVENDRA; 24th March 2014 at 01:15 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th March 2014, 01:31 AM
#3
ராகவேந்தர் சார் அவர்கள் நமது நடிகர் திலகம் பற்றிய Forum -ல் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றிய வர்ணனை முதல் நாள் படம் பார்த்த அனுபவங்கள் ஆகியவற்றை ஒரு தனி திரியாக தொடங்கியிருப்பது நன்று. ரசிகர்கள் குறிப்பாக பழைய ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். மார்ச் 24-ந் தேதி (1973) பாரத விலாஸ் படத்திலிருந்து ஆரம்பித்திருப்பது சிறப்பு பாரத விலாஸ் படத்திற்கு வருவதற்கு முன் வேறு ஒரு விஷயம் குறிப்பிட விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன் அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் என் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றி எழுதினேன். அதை மீள் பதிவாக மீண்டும் பதிவிட எண்ணம் அந்த மீள் பதிவு தொடர் முடிந்தவுடன் அடுத்த படத்திற்கு வருகிறேன். இதனிடையில் மற்றவர்களும் தங்கள் அனுபவங்களை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
2009-ல் எழுதியது.
அந்த நாள் ஞாபகம்
இன்றைக்கு சரியாக 37 வருடங்களுக்கு முன் [1972] இதே நாளில் ராஜா திரைப்படம் வெளியானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த நாளில் ஜனவரி 26 அன்று [26.01.1972] நான் இந்த படம் மதுரை சென்ட்ரலில் ஓபனிங் ஷோ பார்த்துக் கொண்டிருந்தேன். இதை பற்றி சிந்திக்கும் போது நண்பர் tacinema அவர்கள் நினைவு வந்தது
நண்பர் tacinema என்னிடம் பல முறை அந்த நாட்களில் நான் பார்த்த நடிகர் திலகத்தின் படங்களின் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளை எழுதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் இதோ இதோ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது எழுதலாம் என்று ஒரு எண்ணம். எந்தளவுக்கு நினைவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரியவில்லை. அந்த ஞாபக நதிக் கரையோரமாக நடந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது.
அதற்கு முன்பு, இதன் முன்னோட்டமாக ஒரு சில விஷயங்கள். என்னிடம் அநேகம் பேர் (குறிப்பாக நமது ஹப்பர்கள்) கேட்ட கேள்வி "நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி ரசிகரா? இல்லை கன்வர்ட்டா". நான் சொல்லும் பதில் " நான் மதம் மாறியவன் இல்லை". அவர்கள் கேட்ட கேள்வியின் பின்னணியை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதாவது சிறு வயதில் அனேகமாக எல்லா பாய்ஸும் சண்டை, காமெடி என்ற விஷயங்களில் தான் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். அப்படியிருக்க நீங்கள் எப்படி மாறுபட்டு போனீர்கள் என்ற அர்த்தத்தில் கேட்டார்கள். இதைப் பற்றி யோசித்த போது இரண்டு காரணங்கள் புலப்பட்டன. External and Internal influences. அக மற்றும் புற காரணங்கள் என்று சொல்லலாம். புற காரணம், சிறு வயதில் நான் பார்த்த அல்லது நான் பார்க்க அழைத்து செல்லப்பட்ட படங்கள் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. வாழ்க்கையில் முதலில் பார்த்த படம் தெய்வப்பிறவி (அம்மா சொல்லி தெரிந்துக்கொண்டது). பின்னர் நினைவு இடுக்குகளின் சேகரத்தில் முதலில் ஞாபகம் இருப்பது அன்னை இல்லம் பார்த்தது. [நடையா இது நடையா பாடல் ஞாபகம் இருக்கிறது], பிறகு மதுரை தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் அம்மா கையை பிடித்துக்கொண்டு கர்ணன் பார்க்க போனது, முரடன் முத்து பார்த்தது [சிவாஜி கோபித்து கொள்ளும் ஒரு காட்சி மட்டும் நினைவில் நிற்கிறது], அடுத்தது எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த மாஜிஸ்ட்ரேட் செல்வாக்கால் ஸ்ரீதேவி தியேட்டரில் மணிக்கணக்காய் வரிசையில் நின்றிருந்த மக்கள் வெள்ளம் எங்களை பொறாமையுடன் முறைக்க போலீஸ் எஸ்கார்ட் சகிதம் நாங்கள் திருவிளையாடல் பார்க்க போனது, கல்பனா திரையரங்கில் மோட்டார் சுந்தரம் பிள்ளை பார்த்தது, பிறகு சரஸ்வதி சபதம், செல்வம், கந்தன் கருணை, நெஞ்சிருக்கும் வரை, திருவருட்செல்வர் என்று பார்த்ததில் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. இந்த காலக்கட்டத்தில் நான் பார்த்த ஒரே எம்.ஜி.ஆர் படம் எங்க வீட்டு பிள்ளை. அக காரணம் என்று நான் குறிப்பிட்டது என்னை சுற்றி இருந்த சுற்றத்தார். அது தந்தை வழியாக இருந்தாலும் சரி, தாய்வழி சுற்றமானாலும் சரி, பெரும்பான்மையோர் நடிகர் திலகத்தின் ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்கள் நடிகர் திலகத்தின் பழைய படங்களை பற்றி, அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப்பற்றி, அவரின் ஸ்டைல் பற்றி நிறைய சொல்லுவார்கள். அதை கேட்டு கேட்டு மனதில் அவரின் ஆளுமை பதிந்து போனது. ஆக, இது போன்ற அகம் மற்றும் புற காரணங்களால் நடிகர் திலகம் ரசிகனாகி விட்டேன். இந்த விஷயங்களுக்கும் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். அதற்கு வருகிறேன்.
இந்த காலக்கட்டத்திலேதான் ஓரளவிற்கு விவரம் புரிய ஆரம்பித்த நேரம் என்று சொல்ல வேண்டும். அந்த வருடம் தீபாவளி திருநாள் வருகிறது. வீட்டிலிருந்து மாலை காட்சிக்கு அனைவரும் சென்ட்ரல் சினிமாவிற்கு ஊட்டி வரை உறவு பார்க்க போகிறோம். அதற்கு முன் கூட்டம் பார்த்திருந்தாலும் கூட அது போல ஒரு கூட்டத்தை அன்று தான் பார்த்தேன். எவ்வளவு முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. பக்கத்தில் நியூ சினிமாவில் இரு மலர்கள் அங்கே போகலாம் என்று ஒருவர் சொல்ல அங்கே செல்கிறோம். அங்கே ஏற்கனவே ஹவுஸ் புல். கடைசியில் கல்பனா தியேட்டருக்கு போய் "நான்" திரைப்படம் பார்த்தோம். ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் படத்திற்கு வந்த கூட்டம் என் மனதில் முதல் நாள் முதல் ஷோ ஆசையை விதைத்து விட்டது. ஆனால் அதை அப்போது நான் உணரவில்லை.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th March 2014, 03:02 PM
#4
பாரத விலாஸ்
அன்புள்ள ராகவேந்தர் மற்றும் முரளி சார்
முதல் நாள் நம்மவர் பட அனுபவம் பல நினைவலைகளை தோற்றுவித்தது. நமது பாரதவிலாச் படம் நெல்லையில் சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்த நினவு கண் முன் காட்சி அளிகிறது மார்ச் 24 சென்ட்ரல் திரை அரங்கில் பாரத விலாஸ்
மார்ச் 31 நெல்லை பூர்ணகல திரை அரங்கில் ராஜா ராஜா சோழன் சினிமாஸ் ஸ்கோப் இரண்டும் முதல் நாள் இரண்டாவது காட்சியில் பார்த்தது அப்போது எல்லாம் தினசரி 3 காட்சிகள் சனி மற்றும் சண்டே நாட்களில் தான் காலை காட்சி.
அன்று காலை காட்சி பார்த்த அனைவரும் தலைவரின் "சக்கை போடு" பாடலை பற்றி மற்றும் "இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு எல்லா ஊரும் என் ஊரு எல்லா மக்களும் என் மக்கள்" பாடலைபற்றி பேசி கொண்டே வெளி வந்தனர் அதில் ஒரு ரசிகர் அந்த பாடலில் பெருந்தலைவர் படத்தை காண்பித்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று கூறியது இன்னும் பசுமையாக நினிவுக்கு உள்ளது . மேலும இந்த ் படம ் நன்றாக உள்ளது இந்த படத்தின் வெற்றியினால் சோழன் பாதிகப்பட கூடாது என்றும் பேசி கொண்டே சென்றனர் மார்ச் 25 சண்டே ஒரு நெருங்கிய உறவினர் திருமணத்திற்கு சேலம் செல்ல வேண்டி இருந்தது.
மார்ச் 24 நெல்லையில் சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்து விட்டு இரவு பஸ் பிடித்து சேலம் சென்று மறு நாள் இரவு காட்சி பாரத விலாஸ் திரை படத்தை சேலம் ஜெயாவில் பார்த்தேன். திருமணத்திற்கு முன் தினம் இரவு தாம்பூல கவர் போதுவது என்ப்து முன்னாட்களில் வழக்கம் இப்போது எல்லாம் கோன்றக்ட்தான் அந்த வேலையை முடித்துவிட்டு கல்யாண மண்டபத்தில் இருந்து பஸ் பிடித்து சேலம் ஜெயா திரை அரங்கு சென்று பாரத விலாஸ் படம் பார்த்தது எல்லோரும் நடிகர் திலகத்தின் நடிப்பை பாராட்டியது மறக்க முடியாத அனுபவம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th March 2014, 11:42 PM
#5
Senior Member
Seasoned Hubber

ஹா...ஹா...ஹா... நான் ஜேம்ஸ்பாண்டாம்... இந்த மாபெரும் வெற்றிப் படத்தைப் பற்றிய நடிகர் திலகத்தின் விமர்சனம் இது. தலைவா... ஜேம்ஸ் பாண்ட் மட்டுமல்ல உலகத்தின் எந்த கமர்ஷியல் ஃபிக்ஷன் ஹீரோவானாலும் சரி, க்ளாஸிகல் ஃபிக்ஷன் ஹீரோவானாலும் சரி, எந்த எபிக் ஹீரோவானாலும் சரி, எந்த ஹிஸ்டாரிகல் ஹீரோவானாலும் சரி, எந்த ஹல்லூசினேடிவ் ஹீரோவானாலும் சரி... எந்த பாத்திரமானாலும் அதற்கு ஜீவன் தர உங்களைத் தவிர வேறு யார் உளர்.
மிஸ்டர் எக்ஸுடன் கை குலுக்கும் காட்சியில் தாங்கள் காட்டும் ஸ்டைல் தமிழ் சினிமாவில் அதுவரையில் யாரும் பார்த்திராதது, அதற்குப் பிறகு யாரும் செய்ய முடியாதது.
திரையரங்குகளில் கடைசிக் காட்சி வரை அரங்கு நிறைந்து ஓடி தங்களுடைய அடுத்த படத்திற்காக வழிவிட்டு ஒதுங்கி நின்று எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாபெரும் வெற்றிக் காவியமான தங்க சுரங்கம் திரைப்படத்தை மறக்க முடியுமா..
பள்ளியில் முழுத் தேர்வு நடைபெற்ற நிலையிலும் பரீட்சையைப் பற்றிய கவலை கொள்ளாமல், சாந்தியில் டிக்கெட் கிடைக்குமா என்ற கவலையே அதிகம் கொண்டு, அரங்கில் குளிரக் குளிர குளிர் சாதனத்தையும் மீறு தங்கள் பெயரைப் பார்த்த வுடன் குதித்த குதியில் உடம்பெல்லாம் வியர்த்ததை மறக்க முடியுமா.
1969 மார்ச் 28 .... தங்க சுரங்கம் வெளியாகி இன்று 2014 மார்ச் 28ம் நாளுடன் 45 ஆண்டுகள் முடிகின்றன.
அது சரி முதல் நாள் முதல் காட்சியில் அதிகம் கைதட்டல் வாங்கிய பாடல் எது எனத் தெரிய வேண்டுமா ...
இதோ பாடலையே பாருங்களேன் ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th March 2014, 11:49 PM
#6
Senior Member
Seasoned Hubber
முரளி சார்
முதல் நாள் முதல் காட்சி அனுபவத்தை மிகச் சிறப்பாக எழுதி அசத்தி விட்டீர்கள்.. எழுத்தாற்றல் தங்களுக்கு ஏராளம்.. நினைவாற்றலோ தாராளம்...
தங்களுடைய ரசிகர் பட்டாளத்தின் எல்லைக் கோட்டை நாங்களெல்லாம் அழித்து விட்டோம்... அதற்கு பௌண்டரி கிடையாது. அந்தக் காலத்தில் 70களில் சென்னை மெரினா கிரௌண்டில் லீக் மேட்ச் நடக்கும். ஐஓபி ரமேஷ் என ஒரு கிரிக்கெட்டர் ஆடுவார். காடா என செல்லமாக அழைக்கப் படும் அதிரடி ஆட்டக்காரர். மெரினா கிரௌண்டில் அவர் ஆடுகிறார் என்றால் மைதான நிர்வாகி குறைந்த பட்சம் ஒரு டஜன் பந்துகளாவது ஸ்டாக் வைத்திருப்பார். காரணம் ரமேஷின் சிக்ஸர்கள் கேலரியைத் தாண்டி பின்னால் இருக்கும் கால்வாயில் போய் விழும். அது போல் தங்களுடைய ரசிகர் பட்டாளத்திற்கு கோடு போட்டால் அதைத் தாண்டி பல தூரம் விரிவாக்கும் திறன் தங்களுடைய எழுத்துக்கு உள்ளது.
தொடருங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th March 2014, 11:50 PM
#7
Senior Member
Seasoned Hubber
டியர் கிருஷ்ணா ஜி
முதல் நாள் முதல் காட்சி தங்களைக் கவர்ந்திழுத்துள்ளது மிகவும் மன மகிழ்ச்சியைத் தருகிறது. இதைப் போல் தாங்களும் நம் மற்ற நண்பர்களும் பல படங்களுக்கு சுவையான அனுபவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றையெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st March 2014, 08:49 AM
#8
Senior Member
Seasoned Hubber
நமது மய்யத்தில் சமீபத்தில் இணைந்த மதுரை சந்திரசேகர் அவர்களின் பேட்டி தலைவன் சிவாஜி இணைய தளத்தின் சிவாஜி குரல் இணைய இதழில் வெளிவந்துள்ளது. அதன் நிழற்படம் நம் பார்வைக்கு

நமது நண்பர் சந்திரசேகர் அவர்கள் இது பற்றி இன்னும் விரிவாக தன் நினைவகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st March 2014, 07:56 PM
#9
மீள் பதிவு தொடர்
அந்த நாள் ஞாபகம்
அதற்கு பிறகு வரிசையாக நடிகர் திலகம் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். திருமால் பெருமை, கலாட்டா கல்யாணம் போன்றவைக்கு பிறகு பார்த்த என் தம்பி அந்த அடி மனதில் இருந்த ஆசையை வெளிக்கொண்டு வந்தது. காரணம் அதில் இடம் பெற்ற தெருக்கூத்து பாடல். அதில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் பாடுவதாக அமையும்
தெற்கத்தி கள்ளனடா
தென் மதுரை பாண்டியனடா
தென்னாட்டு சிங்கம்டா
சிவாஜி கணேசனடா !
நான் பார்த்தது மூன்றாவது நாள். அப்போதே தியேட்டரில் எழுந்த ஆரவாரம் அளவிட முடியாதது. அப்படியென்றால் ஓபனிங் ஷோ எப்படியிருந்திருக்கும்? என்ற எண்ணம் தோன்றியவுடன், அப்படிப்பட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று மனது ஆசைப்பட ஆரம்பித்தது. அடுத்தது தில்லானா முதல் நாள் கூட்டம் அந்த ஆசையை அதிகரித்தது. அடுத்து வந்த எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம் மற்றும் உயர்ந்த மனிதன் இவை எல்லாமே முதல் வாரத்தில் பார்த்தேன் என்றாலும் ஓபனிங் ஷோ ஆசை நடக்கவில்லை. இவ்வளவு ஏன் ஓபனிங் டே கூட பார்க்க முடியவில்லை. காரணம் சிறு வயது + கூட்டம் அதிகமாக இருக்கும்.அதனால் வேண்டாம் என்ற வீட்டார் முடிவு.
அடுத்த காலண்டர் வருடம் [1969] ஆரம்பம். ஜனவரி 1 அன்றே அன்பளிப்பு ரிலீஸ். ஆனால் வழக்கம் போல் மூன்றாவது நாள் தான் பார்த்தேன். அடுத்தது தங்க சுரங்கம் மார்ச் மாதம். Annual எக்ஸாம் டைம். எனவே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து காவல் தெய்வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520, நிறை குடம் எல்லாம் முதல் வாரம் ஆனால் முதல் நாள் கிடையாது. அடுத்து தெய்வ மகன் ரிலீஸ் செப் 5 அன்று. வழக்கம் போல் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. [இந்த மூன்றாம் நாளின் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆரப்பாளையத்தில் குடியிருந்தோம். சனிக்கிழமை மதியம் [ஹாப் டே ஸ்கூல்] டவுனில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போவேன். ஞாயிறு மாலை வரை அங்கே வாசம். பிறகு திரும்பி ஆரப்பாளையம். எனவே படங்கள் சனிக்கிழமை மாலை,இரவு அல்லது ஞாயிறு காலை, மதியம் இதில் ஏதாவது ஒரு காட்சி என்னை என் கஸின் கூட்டிக்கொண்டு போவான்]. அடுத்த ஒரு மாதத்தில் திருடன் ரிலீஸ். அதுவும் அப்படியே.
இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.
எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.
நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd April 2014, 11:11 AM
#10
Nam naadu and sivantha maan
முரளி சார்
நம்நாடு மற்றும் சிவந்தமன்
நினவு அலைகள் சூப்பர்
நெல்லை பார்வதியில் நம்நாடு 7த ரிலீஸ்
நெல்லை சென்ட்ரலில் சிவந்தமன் ரிலீஸ்
சிவந்த மண் முதல் ஷோ முடிந்த உடன் அப்போது மாற்று
முகாம் நண்பர்கள் வந்து வாயில் blade வைத்து ஊதி நம் ரசிகர்கள் இருவர் முகத்தில் பாய்ந்து ரதகளறி ஆனது இன்னும் நினைவில் உள்ளது அப்போது நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் ஆக இருந்த போஸ் என்பவர் பெயரே சிவந்த மண் போஸ் என்று தான் பெயர் அப்போது கல்லூரி படித்த ு
கொண்டு இருந்தார்
அவரை போலீஸ் பிடித்து கொண்டு சென்று விட்டது பாலம் போலீஸ் ஸ்டேஷன் என்று இப்போது பெயர் அப்போது நெல்லையில் ஈரடுக்கு மேம்பாலம் கிடையாது அதனால் அதன் பெயர் ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷன் ஸ்தாபன காங்கிரஸ் தலிவர் ஒருவர் கூட வரவில்லை ஜாமீன் எடுக்க. அப்போது என் வயது 9 முடிந்து 10 ஆரம்பம் சிறுவர்கள நாங்கள் (10 முதல் 16 வரை உள்ளவர்கள்) எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் சென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் நினிவில் உள்ளது அந்த ப்ளடி பார்ட்டி இருவரும் பின்னாளில் அ தி முக அரம்பிந்தவுடன் தி மு கவில் இருந்து பிரியாமல் தி மு க வில் தங்கி விட்டனர்
Bookmarks