Page 236 of 401 FirstFirst ... 136186226234235236237238246286336 ... LastLast
Results 2,351 to 2,360 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2351
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி ரவி தங்களது விளக்கத்திற்கு மறுபடியும் ஒரு நன்றி - ஸ்போர்டிவ்வாக என் கேள்வியை எடுத்துக் கொண்டு கோபிக்காமல் எனக்கு பதிலளித்தமைக்கு..என்ன பண்றது குரு.. வாயின் சிகப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே//கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும் - போன்ற வரிகள் தான் சுலபமாகப் புரிகின்றன எனக்கு (என் வயசு அப்படி!!)

    அது சரி ஈ ஈ.. ஏன் ரொமாண்டிக் ஸாங்க்ஸ்லாம் பிடிக்காதாங்காட்டியும். .அப்படியெல்லாம் இருக்கப் படாது.கேட்டேளா

    அப்புறம் காட்டுல போறச்சே பார்த்துப் போங்க...கிளிகளும் பூக்களும் கோபித்துக் கொள்ளப் போகின்றன..(பொதுவா மதுரைக் காரர்களுக்குத் தான் பேச்சு வழக்கில் ழ வராது..(எனக்கும்!!).. நீங்க மதுரை இல்லை என நினைக்கிறேன்!)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2352
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Ravi

    Your selection of NT's songs are simply superb. Pls continue the good work.

    Regards

  4. #2353
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ரவி,

    பழத்தின் தோல் பிரித்து சுளை எடுத்துக் தேன் தடவி கொடுப்பது போல் நடிகர் திலகத்தின் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் சிறப்பு வரிகளை அடிகோடிட்டு அதை மேலும் விளக்கி மக்களுக்கு அளிக்கும் பாணி நன்றாகவே வந்திருக்கிறது. கூடவே வீடியோவும் வருகிறது. அதில் மட்டும் சிறு கவனம் தேவை. காரணம் ஒரு பக்கத்தில் 3,4 வீடியோக்கள் இடம் பெற்றால் திரியின் பக்கங்கள் எளிதில் திரும்பாது. அதாவது திரி hang ஆகும். குறிப்பாக broad band இல்லாமல் dial up connection வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்கள். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

    அன்புடன்

  5. #2354
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவா அவர்களுக்கு இலங்கை பம்மலார் என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கிய கோபாலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் இலங்கை சாதனைகளையும் ஒப்பீடுகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சி. அதிலும் நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்கள் மற்றவர்களின் கலர் படங்களையெல்லாம் பின் தள்ளி முன்னணியில் நின்று சாதனை படைத்ததை படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது இலங்கையை சேர்ந்த ஒருவரே அந்த தகவல்களையெல்லாம் துல்லியமாக எழுதுவது சந்தோஷமான விஷயம். எதிரொலி எல்லாம் செம பிரமிப்பு.

    ஜீவ் சார் பதிவிடும் தகவல்களும் சிவா சார் கொடுக்கும் தகவல்களும் ஒரே போலதான் இருக்கிறது. சிவாஜி ரசிகராக இருப்பினும் இலங்கை தகவல்களில் பிழை இருப்பின் அதை சுட்டிக் கட்ட ஜீவ் அவர்கள் தவறியதே இல்லை.

    சிவா சார், 1972-லும் இப்போது 2013-லும் தவறான தகவல்கள் கொடுப்பதை சொல்கிறீர்களே, இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் சென்னை சத்யம் திரையரங்கிலும் பேபி ஆல்பட் அரங்கிலும் மட்டுமே தலா ஒரு காட்சி ஓடுகிறது. ஆனால் பத்திரிக்கை விளம்பரத்தை பார்த்தால் எஸ்கேப் திரையரங்கிலும் ஓடுவதாக கொடுக்கிறார்கள். அந்த திரையரங்கில் 13 நாட்கள் மட்டுமே ஓடியது [முதல் வாரம் இரண்டு காட்சிகள், இரண்டாவது வாரம் ஒரு காட்சி]. ஆனால் அங்கே ஓடுவதாக விளம்பரம் கொடுகிறார்கள். இன்றைய டெக்னாலஜி உலகத்தில் விரல் நுனியில் உண்மைகள் தெரியும் இந்த காலக் கட்டத்திலும் அதுவும் குக்கிராமம் கூட இல்லை தமிழகத்தின் தலைநகரிலே இல்லாத ஒன்றை இருப்பதாக தொடர்ந்து சொல்கிறார்கள் என்றால் பழைய காலத்தைப் பற்றி என்னதான் சொல்ல மாட்டார்கள்?

    ஒரு Flash Back நினைவிற்கு வருகிறது. அதிக நாட்கள் முன்பல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தத விஷயம். 2012 மார்ச் 16 அன்று வெளியான கர்ணன் மகத்தான மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் நேரம். நாஞ்சில் நகரில் 50 நாட்களை நிறைவு செய்து ஓடிக் கொண்டிருக்கிறது. 8 வாரங்களை நிறைவு செய்து 9-வது வாரமும் ஓடும் என நினைத்திருக்கின்ற நேரத்தில் இறுதியில் 56 நாட்களோடு படம் எடுக்கப்படுகிறது. 57-வது நாள் அதாவது 9-வது வாரம் வெள்ளியன்று தினசரிகளில் வெளியான விளம்பரத்தில் நாஞ்சில் நகரின் பெயரும் சேர்ந்து இடம் பெற்று விட்டது. உடனே மாற்று முகாம் நண்பர்கள் கர்ணன் படத்தின் வெளியிட்டாளர் திரு சொக்கலிங்கம் அவர்கள் ஏதோ கிரிமினல் குற்றத்தை செய்து விட்டதைப் போல பொங்கி எழுந்தார்கள். போஸ்டர் அடித்தார்கள். ஏன் நமது ஹப்பில் கூட ஒரு புதிய id உருவாக்கி தாக்கி எழுதினார்கள்.

    உண்மையில் நடந்தது என்ன? அன்றைய நாளில் வெள்ளியன்று தினத்தந்தியின் அனைத்து பதிப்புகளிலும் சினிமா விளம்பரம் வெளியாக வேண்டுமென்றால் அதற்கு முந்தைய ஞாயிறன்றே விளம்பர matter-ஐயும் இடத்தையும் reserve செய்ய வேண்டும். ஏதாவது மாறுதலுக்கு உட்படுத்த வேண்டுமென்றால் [அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு] செவ்வாய்க்கிழமைதான் இறுதி நாள். ஞாயிறன்றும் சரி, செவ்வாயன்றும் சரி படம் வெள்ளியன்று மாற்றப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. வியாழன் மாலைதான் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு படம் அன்றைய இரவுக் காட்சியோடு எடுக்கப்பட்டது. சூழ்நிலை இப்படி இருக்க வெள்ளியன்று வெளி வந்த விளம்பரத்தை எப்படி மாற்றியிருக்க முடியும்? அதன் பிறகு வந்த விளம்பரங்களில் நாஞ்சில் நகரின் பெயர் இடம் பெறவில்லை. ஒரு நாள் அப்படி வந்ததற்கே துடித்தவர்கள் எல்லாம் இப்போது மூன்று வாரங்களாக தவறான தகவலோடு விளம்பரம் வரும்போது எங்கே போனார்கள்?

    மற்றவர்களை விட்டு விடுவோம். என்னுடைய வருத்தம் என்னவென்றால் படம் எஸ்கேப் -ல் ஓடவில்லை என்பது தெரிந்தும் நண்பர் வினோத் போன்றவர்களும் அந்த திரியில் மிக இளையவர் [எனக்கு தெரிந்தவரை அவர் நடத்தும் இணைய தளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி பலரும் விஷம் கக்கினாலும் கூட தனிப்பட்ட முறையில் சிவாஜியின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாதவர் என நான் நம்புகின்ற] கண்ணன் என்ற ரூப்குமார் ஆகியோரும் கூட இந்த தவறான தகவலை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேறு என்ன சொல்வது?

    நம்மைப் பொறுத்தவரை நாம் எப்போதும் உண்மையாகவே வாழ்வோம். நாம் சொல்லி மகிழ உண்மை சாதனைகளே ஏராளமாக இருக்கின்றன. எனவே நான் எப்போதும் சொல்வது போல்

    யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்

    யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்

    நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!

    அன்புடன்

  6. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  7. #2355
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    சில பதிவுகளை படிக்கும் போது அது இரண்டு வரிகளாக இருக்கலாம், இருபது வரிகளாக இருக்கலாம் அதற்கு மேலும் இருக்கலாம், அதை படித்தவுடன் மன குளத்தில் ஒரு கல்லெறியப்பட்டு அதன் தொடர்ச்சியாக சிந்தனை அலைகளை உருவாகி இதைப் பற்றி நாமும் எழுத வேண்டும் என ஆவல் பிறக்கும் வண்ணம் வாசகனை தூண்டி விடும் சக்தி அத்தகைய எழுத்துக்களுக்கு உண்டாகும். அந்த சக்தி உங்கள் எழுத்துகளுக்கு பரி பூரணமாக இருக்கிறது. பாசமலர் பற்றிய பதிவு, இது மீள் பதிவுதான். சென்ற வருடம் நீங்கள் இதை எழுதிய போது பலமுறை படித்ததுதான். இருப்பினும் இன்றைக்கு படிக்கும்போது கூட அதே வாசனையோடு இருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் அலசப்படாத மேலும் பல கோணங்கள் இந்த ஸ்க்ரிப்டில் இன்னமும் இருக்கிறது என்பது நிச்சயம். அது போல தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தெரியாத கேரளத்தின் மருமக்கள் தாயம் என்ற சமூக சம்பிரதாயத்தையும் பாசமலர் கதாசிரியர் கொட்டாரகர அவர்களையும் இந்த கதையோடு இணைத்த விதம் பிரமாதம்.

    பாசமலர் மீண்டும் வெளியாகிறது என்ற தகவலை அறிந்து நீங்கள் இந்த மீள் பதிவை செய்திருப்பது பொருத்தமானது. பாச மலர் மட்டுமல்ல நடிகர் திலகத்தின் பல படங்களும் திரையரங்குகளில் மீண்டும் பவனி வர இருக்கின்றன. திட்டமிட்டு செய்யப்பட்ட பொய் பிரச்சாரத்தினாலும் பழைய திரைப்படங்களை வெளியிடும் திரையரங்குகளை தாங்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்திருப்பது போல் காண்பித்து அந்த திரையரங்க உரிமையாளர்களை எப்போதும் தங்கள் control-ல் வைத்திருக்க விரும்பிய ஒரு சில விநியோகஸ்தர்களால் உருவாக்கப்பட்ட மாயை தோற்றம் அகன்று பல்வேறு திரையரங்குகளும் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட முன் வந்துள்ளனர். அந்தந்த படங்கள் வெளியாகும் நேரத்தில் அவற்றைப் பற்றிய விவரங்களை தருவோம்.

    அன்புடன்

  8. Likes Subramaniam Ramajayam liked this post
  9. #2356
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் உருவான விதம் பற்றி அலசும் பாடல்கள் பலவிதம் திரியை படிக்க

    அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான சூழல் மற்றும் ஓபனிங் ஷோ அனுபவங்களை படிக்க பகிர்ந்துக் கொள்ள

    இப்போதும் இன்றைய நாட்களிலும் நடிகர் திலகத்தின் படங்கள் தமிழகமெங்கும் மறு வெளியிடுகளில் புரியும் சாதனைகளை தெரிந்துக் கொள்ள

    இவை அனைத்தையும் மற்றும் பல்வேறு நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட திரிகளையும் ஒரே குடையின் கீழ் வாசிக்க

    http://www.mayyam.com/talk/forumdisp...and-His-Movies

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 21st April 2014 at 11:14 PM.

  10. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  11. #2357
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சின்னதாய் ஸாங்க்ஸ் தட் மேட் அன் இம்பேக்ட் ஆன் அஸ் த்ரெட்டில் பின்னால் சென்று பார்த்துக் கொண்டிருந்த போது..
    அடடே..இந்தப் பாட்டு.. ஐ வில் சிங்க் ஃபார் யூ.. எனை மறுபடி பார்க்கத் தூண்டியது.. என்னா ஒரு துறுதுறுப்பு.. என்ன ஒரு ஆட்டம்…. மனஸ் பயங்கரமா சுறுசுறுன்னு ஆச்சு (ரவி..வீடியோ போடுப்பா)

    நண்பர்களின் கமெண்ட்.. பெயரை நீக்கி..

    //As time passed, my exposure to and interest in Tamil language and music grew by leaps and bounds. I became a fan of Kannadasan's lyrics and MSV's music. Gradually, the song that I am talking about became one of my favorites too.

    This is arguably one of the earliest attempts in India at fusion music. And what a fusion it is! MSV at his musical best, TMS at his singing best (in spite of his English pronunciation), and Sivaji at his acting best! In am not sure who wrote the lyrics. Here it is, from the 1973 movie "manidharil maaNikkam"...//

    // நான் - நிஜமாகவே உங்களுக்குத் தமிழ் தெரியாதா ..இண்ட்ரஸ்டிங்

    சிவாஜியின் நடிப்பும் பலம் இந்த ப் பாட்டுக்கு.. படத்தில் கெளரவ வேடம் பத்து நிமிடம் தான் வருவார்..அதற்காக முழுப்படத்திலும் ஏவிஎம் ராஜனைப் பொறுத்துக் கொண்டு பார்த்தது அந்தக் காலம்!! //

    //சிவாஜியின் அற்புதமான நடிப்புக்கு இன்னொரு சான்று இந்தப் படம். அவர் சிவாஜி என்பதையே மறக்க வைத்து உண்மையாகவே ஒரு "மாதிரி"யான டாக்டர் என்பது போல ஒவ்வொரு அசைவிலும் வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். திரைப்படங்களை ரசிக்காத, யார் நடிப்பையும் பாராட்டாத என் உறவினர் ஒருவரை வற்புறுத்தி அழைத்து சென்றார்கள். ( ஏதோ திருமணத்தின்போது கூட்டமாக போனதாக சொன்னார்கள் ) அப்போது அவர் "இவர் குணம் நிஜமாகவே இப்படித்தான்னு நினைக்கிறேன். இதெல்லாம் நடிப்புல வராது" என்று சொன்னாராம். அதன் பின் அவர் வேறு சிவாஜி படங்களைப் பார்த்து விட்டு வியந்து போனது தனிக் கதை. இந்த சம்பவம் எப்போதும் என் மனதில் நின்று போய் விட்டது!

    சிகே...

    நீங்க சிவாஜிக்காக பார்த்தீங்களா.. இல்லாட்டி பிரமீளா ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்"னு பாடி ஆடியதால் பார்த்தீங்களான்னு மத்தவங்களைக் கேட்டால்தானே தெரியும். ( அதெல்லாம் கல்யா..க்கு முன்னேன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம் )//

  12. #2358
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முரளி சார்.. அந்த ஒரே குடை திறக்க மாட்டேங்குது...

  13. #2359
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    சிவா அவர்களுக்கு இலங்கை பம்மலார் என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கிய கோபாலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் இலங்கை சாதனைகளையும் ஒப்பீடுகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சி. அதிலும் நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்கள் மற்றவர்களின் கலர் படங்களையெல்லாம் பின் தள்ளி முன்னணியில் நின்று சாதனை படைத்ததை படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது இலங்கையை சேர்ந்த ஒருவரே அந்த தகவல்களையெல்லாம் துல்லியமாக எழுதுவது சந்தோஷமான விஷயம். எதிரொலி எல்லாம் செம பிரமிப்பு.

    ஜீவ் சார் பதிவிடும் தகவல்களும் சிவா சார் கொடுக்கும் தகவல்களும் ஒரே போலதான் இருக்கிறது. சிவாஜி ரசிகராக இருப்பினும் இலங்கை தகவல்களில் பிழை இருப்பின் அதை சுட்டிக் கட்ட ஜீவ் அவர்கள் தவறியதே இல்லை.

    சிவா சார், 1972-லும் இப்போது 2013-லும் தவறான தகவல்கள் கொடுப்பதை சொல்கிறீர்களே, இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் சென்னை சத்யம் திரையரங்கிலும் பேபி ஆல்பட் அரங்கிலும் மட்டுமே தலா ஒரு காட்சி ஓடுகிறது. ஆனால் பத்திரிக்கை விளம்பரத்தை பார்த்தால் எஸ்கேப் திரையரங்கிலும் ஓடுவதாக கொடுக்கிறார்கள். அந்த திரையரங்கில் 13 நாட்கள் மட்டுமே ஓடியது [முதல் வாரம் இரண்டு காட்சிகள், இரண்டாவது வாரம் ஒரு காட்சி]. ஆனால் அங்கே ஓடுவதாக விளம்பரம் கொடுகிறார்கள். இன்றைய டெக்னாலஜி உலகத்தில் விரல் நுனியில் உண்மைகள் தெரியும் இந்த காலக் கட்டத்திலும் அதுவும் குக்கிராமம் கூட இல்லை தமிழகத்தின் தலைநகரிலே இல்லாத ஒன்றை இருப்பதாக தொடர்ந்து சொல்கிறார்கள் என்றால் பழைய காலத்தைப் பற்றி என்னதான் சொல்ல மாட்டார்கள்?

    ஒரு Flash Back நினைவிற்கு வருகிறது. அதிக நாட்கள் முன்பல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தத விஷயம். 2012 மார்ச் 16 அன்று வெளியான கர்ணன் மகத்தான மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் நேரம். நாஞ்சில் நகரில் 50 நாட்களை நிறைவு செய்து ஓடிக் கொண்டிருக்கிறது. 8 வாரங்களை நிறைவு செய்து 9-வது வாரமும் ஓடும் என நினைத்திருக்கின்ற நேரத்தில் இறுதியில் 56 நாட்களோடு படம் எடுக்கப்படுகிறது. 57-வது நாள் அதாவது 9-வது வாரம் வெள்ளியன்று தினசரிகளில் வெளியான விளம்பரத்தில் நாஞ்சில் நகரின் பெயரும் சேர்ந்து இடம் பெற்று விட்டது. உடனே மாற்று முகாம் நண்பர்கள் கர்ணன் படத்தின் வெளியிட்டாளர் திரு சொக்கலிங்கம் அவர்கள் ஏதோ கிரிமினல் குற்றத்தை செய்து விட்டதைப் போல பொங்கி எழுந்தார்கள். போஸ்டர் அடித்தார்கள். ஏன் நமது ஹப்பில் கூட ஒரு புதிய id உருவாக்கி தாக்கி எழுதினார்கள்.

    உண்மையில் நடந்தது என்ன? அன்றைய நாளில் வெள்ளியன்று தினத்தந்தியின் அனைத்து பதிப்புகளிலும் சினிமா விளம்பரம் வெளியாக வேண்டுமென்றால் அதற்கு முந்தைய ஞாயிறன்றே விளம்பர matter-ஐயும் இடத்தையும் reserve செய்ய வேண்டும். ஏதாவது மாறுதலுக்கு உட்படுத்த வேண்டுமென்றால் [அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு] செவ்வாய்க்கிழமைதான் இறுதி நாள். ஞாயிறன்றும் சரி, செவ்வாயன்றும் சரி படம் வெள்ளியன்று மாற்றப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. வியாழன் மாலைதான் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு படம் அன்றைய இரவுக் காட்சியோடு எடுக்கப்பட்டது. சூழ்நிலை இப்படி இருக்க வெள்ளியன்று வெளி வந்த விளம்பரத்தை எப்படி மாற்றியிருக்க முடியும்? அதன் பிறகு வந்த விளம்பரங்களில் நாஞ்சில் நகரின் பெயர் இடம் பெறவில்லை. ஒரு நாள் அப்படி வந்ததற்கே துடித்தவர்கள் எல்லாம் இப்போது மூன்று வாரங்களாக தவறான தகவலோடு விளம்பரம் வரும்போது எங்கே போனார்கள்?

    மற்றவர்களை விட்டு விடுவோம். என்னுடைய வருத்தம் என்னவென்றால் படம் எஸ்கேப் -ல் ஓடவில்லை என்பது தெரிந்தும் நண்பர் வினோத் போன்றவர்களும் அந்த திரியில் மிக இளையவர் [எனக்கு தெரிந்தவரை அவர் நடத்தும் இணைய தளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி பலரும் விஷம் கக்கினாலும் கூட தனிப்பட்ட முறையில் சிவாஜியின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாதவர் என நான் நம்புகின்ற] கண்ணன் என்ற ரூப்குமார் ஆகியோரும் கூட இந்த தவறான தகவலை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேறு என்ன சொல்வது?

    நம்மைப் பொறுத்தவரை நாம் எப்போதும் உண்மையாகவே வாழ்வோம். நாம் சொல்லி மகிழ உண்மை சாதனைகளே ஏராளமாக இருக்கின்றன. எனவே நான் எப்போதும் சொல்வது போல்

    யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்

    யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்

    நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!

    அன்புடன்
    MURALI your publication of facts regaeding A.O ESCAPE THEATRE run 100 percent true i was just listening the advtersements and theatre schudles regularly though I was sitting in USA for the last sixmonths.
    thankd for the FACTS given in your own style of writing without hurting the other side people which the other way done by other side friends always..keep it up sir. i have since returned to home. we will meet shortly.
    Last edited by Subramaniam Ramajayam; 20th April 2014 at 06:50 AM.

  14. #2360
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Murali Sir. Thoongupavargalai eluppi vidalam aanal thoonguvathu pol nadippavargalai eluppa iyalathu. They are still reluctant to accept their debacle with the miserable flop of AO in its release and unable to digest the bitter truth that their icon's movies are now outdated. Karnan upheld our respect and prestige as well as those of Panthulu though he changed his camp, getting his pay back even after a long time due to the evergreen and immortal nature of NT movies. Now it is evident that the other actor's movies need a rethinking before their restoration for rerelease as they may turn out as Marketless, Guranteeless and Revenueless movies! Summa padaththai veembukku otti enna payan!!
    Last edited by sivajisenthil; 20th April 2014 at 08:43 AM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •