Page 288 of 401 FirstFirst ... 188238278286287288289290298338388 ... LastLast
Results 2,871 to 2,880 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2871
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //இன்னும் சிலவற்றை நேரம் அனுமதிக்கும் போது தொடர்வேன். // கண்டிப்பாகத் தொடருங்கள் கோபால்..மிக சுவையாக இருக்கிறது..என்போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கிறது..//சிரிப்புபாதி அழுகை பாதி 9 மட்டும் எழுதிவிட்டு முடிக்கப் போகிறேன்..அப்புறம் சைலண்ட் மோட் மட்டும் தான்..(ஹை ஜாலி என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது ) எனக்கு மற்றவர்கள் அளவுக்கு ந.தி பற்றி எழுத வரவில்லையென வெட்கமாக இருக்கிறது..//
    ck - கோபால் போடும் மறு பதிவுகளால் உங்கள் பதிவுகளை நிறுத்த வேண்டாம் - எல்லா சுவைகளும் இருந்தால்தான் உணவு நன்றாக இருக்கும் - ஒரு பதார்த்தம் தித்திப்பாக இருந்தாலும் அதைமட்டுமே தினமும் திங்க முடியாதே ! கோபாலின் நோக்கமும் அவ்வாறு அல்ல - சிறப்பான பதிவுகளை நமக்கு எல்லாம் சற்றே நினைவு படுத்துகிறார் - அவைகளை விட சிறப்பான பதிவுகள் இந்த திரியில் வந்தால் முதலில் பெருமை பட கூடியவரும் அவர்தான் - தொடருங்கள் உங்கள் பதிவுகளை

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2872
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    //3. சரஸ்வதி சபதம்

    இரண்டு தனிப்பட்ட வேடங்கள் - இருவருக்கும் ஜோடி இல்லை - நாரதராக வும் , வித்யாபதியாகவும் - அருமையான படம் , நடைக்காகவும் , நடிப்புக்காகவும் பல நாட்கள் ஓடியபடம்//

    Ravi,

    When you mention this film, how you forget FIVE role action in Thiruvarutchelvar..??.

    Villavan
    Sekkizhaar
    Thirukkurippu Thondar
    Sundharamoorthy Naayanar
    Thirunaavukkarasar (Appar).

  4. #2873
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    //3. சரஸ்வதி சபதம்

    இரண்டு தனிப்பட்ட வேடங்கள் - இருவருக்கும் ஜோடி இல்லை - நாரதராக வும் , வித்யாபதியாகவும் - அருமையான படம் , நடைக்காகவும் , நடிப்புக்காகவும் பல நாட்கள் ஓடியபடம்//

    Ravi,

    When you mention this film, how you forget FIVE role action in Thiruvarutchelvar..??.

    Villavan
    Sekkizhaar
    Thirukkurippu Thondar
    Sundharamoorthy Naayanar
    Thirunaavukkarasar (Appar).
    கார்த்திக் - தவறினை முதல் நபராக சுட்டி காண்பித்ததற்கு நன்றி - நீங்கள் சொன்னைவைகள் வேறு ரகம் - அப்படி இன்னும் சில படங்களை உதாரணம் காட்டலாம்

    1. திருமால் பெருமை

    2. திருவிளையாடல்

    3. ராஜா பார்ட் ரங்கதுரை


    இவைகளில் தனி தனி பகுதிகளாக ஒவ்வொரு வேடத்தில் நடித்துள்ளார் - அவைகளை இரண்டு வேடங்கள் அல்லது மூன்று வேடங்களின் வரிசையில் கொண்டுவர முடியாது என்று கருதியே திருவருட்செல்வரை பற்றி எழுத வில்லை - ஆனால் கண்டிப்பாக மறக்க வில்லை

  5. Likes KCSHEKAR liked this post
  6. #2874
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ரவி, சக்கப்போடு போட்டவரையும் பாடல்களில் சேத்துக்கோங்க!!!

  7. #2875
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    கார்த்திக் - தவறினை முதல் நபராக சுட்டி காண்பித்ததற்கு நன்றி - நீங்கள் சொன்னைவைகள் வேறு ரகம் - அப்படி இன்னும் சில படங்களை உதாரணம் காட்டலாம்

    1. திருமால் பெருமை

    2. திருவிளையாடல்

    3. ராஜா பார்ட் ரங்கதுரை


    இவைகளில் தனி தனி பகுதிகளாக ஒவ்வொரு வேடத்தில் நடித்துள்ளார் - அவைகளை இரண்டு வேடங்கள் அல்லது மூன்று வேடங்களின் வரிசையில் கொண்டுவர முடியாது என்று கருதியே திருவருட்செல்வரை பற்றி எழுத வில்லை - ஆனால் கண்டிப்பாக மறக்க வில்லை
    Ravi Sir:

    Thiruvarutchelvar & Thirumal Perumai had various roles for NT while Thiruvilaiyadal and Rajapart are different - Thiruvilaiyadal had episodes of the Hero which necessitated different get-ups.

    Regards,

    R. Parthasarathy

  8. #2876
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கல்நாயக் : படத்தில் வெறும் குரல் தான் வரும் - இதை எப்படி நம் லிஸ்டில் சேர்த்துக்கொள்ள முடியும் ?

  9. #2877
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    First of all, I thank Mr. Murali for helping me to post my previous postings.

    Secondly, I thank Mr. Gopal for posting my early postings on "The 10 remake films NT acted", (he didn't even tell me - for that also I thank him for the affection). Sir - In fact, this article was rather brief. I followed this with another 10 films on a larger scale - The 10 Films of NT which were remade in other languages - starting from Bhagappirivinai upto Thevar Magan. These were my initial postings. I just told that while NT excelled in remade films other Artistes didn't even come near his shadow when those were remade in other languages - so, who is the MASTER?

    With the above, now let me re-start my Song analysis as follows:-

    வணக்கம்!

    கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் எழுதத் துவங்கிய இரு கட்டுரைத் தொடர்களுள் ஒன்றான நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த வித்தியாசமான நடிப்பில் உருவான பாடல்கள் கட்டுரைத் தொடரைத் திரும்பவும் துவங்குவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். முதலில், இத் தொடரில் நான் ஏற்கனவே எழுதிய 8 பாடல்களை முதலில் மீள் பதிவு செய்து விட்டு பின்னர் மற்ற பாடல்களை பதிகிறேன்.

    நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள்

    மீண்டும் ஒரு புதிய கட்டுரைத் தொடர் மூலம் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

    நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பை வேறு வேறு பரிமாணங்களில் இப்பூவுலகம் உள்ளவரை ரசித்துக் கொண்டே இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், அவரது ஒவ்வொரு படத்தையும், திரும்பத் திரும்பப் பார்க்கும் போதும், ஒவ்வொரு முறையும், ரசிப்புத் தன்மையுள்ள ஒவ்வொருவருக்கும், வேறு வேறு கோணங்களில், அவரது அற்புதத் திறமையை புதிது புதிதாக ரசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

    நான் இங்கு எழுதப் போவது, நிச்சயம் அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் ஏற்கனவே ரசித்தது தான் (திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அடிக்கடி குறிப்பிடுவது போல், அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் ஒரே கோணத்தில்தான் அவரை ரசிக்கிறார்கள்.) இருப்பினும், அந்த அற்புதத் தருணங்களை மறுபடியும் எழுத்து வடிவில் இங்கு கொணர என்னால் இயன்றவரை முயல்கிறேன்.

    நடிகர் திலகம் பெரிய/அகன்ற திரைக்கு அறிமுகம் ஆன கால கட்டத்தில், பெரும்பாலும், அனைத்து நடிகர்களும் நாடகத்திலிருந்துதான் அறிமுகம் ஆனார்கள். நாடகம் என்கின்ற ஊடகம் எதையும் உரத்துச் சொல்லுவதிலும், சொல்ல வந்த விஷயத்தைப் பாடல்களின் மூலமும் சொல்லிக் கொண்டிருந்தது. காரணம் எல்லோரும் அறிந்ததுதான் - கடைசி இருக்கையில் இருப்பவருக்கும் கேட்க வேண்டும் என்பதால். இந்தக் காரணத்தால், நாடகத்திலிருந்து வந்த நடிகர்களின் நடிப்பில் ஒரு வித செயற்கைத் தன்மை இருப்பதாக சொல்வதுண்டு. இது சரியான கூற்று அல்ல. நாடகத்திலிருந்து வந்தவர்களிடம் இருந்த சரளமான நடிப்பு நேரே வெள்ளித்திரைக்கு வந்தவர்களுக்கு ஒரு போதும் இருக்காது. இதற்குக் காரணம், நாடகம் அளிக்கும் அனுபவம் மற்றும் தைரியம் - நேரே லைவாக ஆடியன்சை எதிர்கொள்ளவிருப்பதால். அங்கு தான் ரீடேக் எல்லாம் கிடையாதே.

    அதே சமயம், நாடகத்திலிருந்து நடிக்க வந்த நடிகர்கள் பாடல் காட்சியில் நடிக்கும் போது, அவர்களுடைய உடல் மொழி இயல்பாக இல்லாமல், கைகளை மனம் போன போக்கில் ஆட்டி, அசைத்து நடித்துக் கொண்டிருந்தார்கள் - இல்லை ஒரேயடியாக எந்த வித அசைவும் இன்றி நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்று நடித்துக் கொண்டிருந்தார்கள் - அதாவது ஒரு உயிரோட்டமான நடிப்பு அந்தக் காலத்தில் பாடல்களில் இல்லாமல் இருந்தது. அப்படிப் பார்த்தால், இந்த நிமிடம் வரை, பெரும்பாலான நடிகர்களுக்குப் பாடல் காட்சியில் அந்த அளவிற்கு நடிப்பதற்குத் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே நாடக உலகில் இருந்து வந்த நடிகர் திலகமோ, தன் முதல் படத்தில் இருந்தே, பாடல் காட்சியில் நடிக்கும் போது, அளவோடு கை கால்களை அசைத்து, அந்தப் பாடல் வரிகளுக்கேற்றார் போல் முகம் மட்டுமல்லாமல், மற்ற உடல் மொழிகளின் மூலமாகவும், சரியான பாவங்களைக் காட்டி நடிக்கலானார். அதாவது, அந்த முதிர்ச்சி, அவரது முதல் படத்திலேயே இருந்தது. நடிப்பில் எல்லையை முதல் படத்திலேயே தொட்டவரல்லவா அவர்! பாடல் முழுவதுமே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பின்னர் நடித்து விட்டவராயிற்றே! (பொன்னை விரும்பும் பூமியிலே - ஆலய மணி).

    திரைப்படங்களில், பாடல்கள் மூலம் கதையையும், காட்சியின் வீரியத்தையும் காட்டி அதன் மூலம், மக்களை ஒரு சேர சென்று சேர ஆரம்பித்தது, நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் / ராமமூர்த்தி - டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா கூட்டணி தான் என்றால், இதற்கு மாற்றுக்கருத்துக்கு இடமேது? இதே போல், பாடல்களின் மூலம், காட்சியின் வீரியத்தை மட்டுமல்லாது, அந்தப் பாடல்கள் இடம் பெற்ற காட்சிகளின் சூழலை சுவையும் சுவாரஸ்யமும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டதும், நடிகர் திலகம் தான்.

    அப்படிப்பட்ட பாடல்களின் மூலம், ஒரு இயக்குனர் (அவர் தானே அந்தக் கப்பலின் கேப்டன்) சொல்ல வந்த விஷயத்தை, மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, வெறுமனே நடித்து விட்டுப் போகாமல், அந்தப் பாடலில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலைத் தன்மையை, கிரியேடிவிடியைக் காண்பிக்க நினைத்து, அதில் நூறு சதம் வெற்றி பெற்ற பாடல்களை இந்தக் கட்டுரையில் பதிவிட முயல்கிறேன்.

    1. "சக்கப் போடு போடு ராஜா"; படம்:- பாரத விலாஸ் (1973); இயக்கம்:- ஏ.சி.திருலோகசந்தர்

    புதிதாகத் திருமணம் ஆன ஒருவன், முதன் முதலாகத் தன் காதல் மனைவியைப் பார்க்கும் முன், அவன் மனதில் எழுகின்ற உணர்வுகளைக் காட்டுவதாக அமைந்த பாடல். இந்தப் பாடலைப் புதிய கோணத்தில் சிந்தித்து எடுத்திருப்பார் இயக்குனர் ஏ.சி.டி. - அதாவது, அவனும் அவனது மனசாட்சியும் பாடி, பேசுவதாக அமைந்த பாடல்.

    இந்தப் பாடலின் தனிச் சிறப்பு - பொதுவாக, அனைத்து படங்களிலும், சம்பந்தப்பட்ட மனிதனும் மனசாட்சியும் நேருக்கு நேர் வருவதாகக் காண்பிப்பார்கள். அதனால், அந்த இரண்டு பாத்திரங்களும் அதாவது நடிகர்களும், கொஞ்சம் சுலபமாக யோசித்து, நடித்து விட முடியும். ஆனால், இந்தப் பாடலிலோ, மனசாட்சி அசரீரியாகக் குரல் மட்டுமே கொடுக்கும். அதை அவர் கவனித்து, ரியேக்ட் மட்டும் செய்ய வேண்டும். இங்கு தான், நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளம் அவருக்குக் கை கொடுக்கிறது.

    பல்லவியில், சக்கப் போடு போடு ராஜா என்று நிஜ மனிதனாக நடிகர் திலகம் பாடத் துவங்கியவுடன், "டேய் டேய் என்னடா பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட" என்று மனசாட்சியின் குரல் வரும். அப்பொழுது அவருடைய ரியேக்ஷனை கவனியுங்கள். அபாரம்!

    சரணத்தில், "நல்ல சமயம் இதை விட்டு விடாதே நாளும் தெரிந்த நீ நழுவ விடாதே" என்றவுடன் "என்னடா என்னடா நல்ல சமயம்" என்று மனசாட்சி கேட்டவுடன், அவர் இரண்டு கைகளையும் பின்னி "வெள்ளி நிலாக் காயுது வாடைக் காற்று வீசுது" என்று நடிக்கும் நடிப்பு, அது வரை அவர் காட்டாத - நடிக்க வந்து 21 வருடங்களுக்குப் பின்னர், 150 படங்களுக்கு மேல் நடித்த பின்னும், காட்டிய ஒரு புதிய பாணி நடிப்பு!

    அடுத்த சரணத்திற்கு முன் வரும் தருணத்தில், அந்த மனசாட்சி இவரது கழுத்தில் இருக்கும் துண்டைப் பிடித்து இழுப்பதாக நினைத்துக் கொண்டே அந்தத் துண்டைப் பிடித்து இழுத்து தன்னை விடுவித்துக் கொள்வதாக கற்பனை கலந்து நடித்திருக்கும் விதம் - நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளத்திற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.

    கடைசியில், கட்டிலைச் சுற்றி ஒரு மாதிரி கைகளை இழுத்து இழுத்து காட்டிக் கொண்டே பாடலை முடிக்கும் விதம் மிகவும் நகைச்சுவையோடு இருக்கும்.

    மொத்தத்தில், ஒரே நேரத்தில், அபாரமான கற்பனை வளத்தோடும், அற்புதமான நகைச்சுவையோடும், ஒரு முதல் இரவுப் பாடலாக இருந்தாலும், தரம் கொஞ்சமும் குறையா வண்ணம், நடித்த பாடல். அதுவும், எந்த வித அதீத முயற்சியும் இல்லாமல் (effortless) நடித்த பாடல்.

    எதையும் வித்தியாசமாக சிந்தித்து, மக்களுக்கு அறுசுவை விருந்து படைப்பவர் நடிகர் திலகம் என்பதற்குக் கட்டியம் கூறும் பாடல்.

    தொடரும்,

    இரா. பார்த்தசாரதி

  10. Likes KCSHEKAR liked this post
  11. #2878
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ரவி, நீங்க சொல்றது சரிதான். இருந்தாலும் உருவம் காட்டாம, குரலை மட்டும் இரண்டாவதற்கு காட்டியதை, நீங்க எந்த கணக்குலயும் எடுத்துக்க மாட்டீங்களா?

    இப்ப பாருங்க பார்த்தசாரதியார் எழுதினதுகூட எனக்கு பரிந்து எழுதினது போல இல்ல? கொஞ்சம் பார்த்து பண்ணுங்க!!!

  12. #2879
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரு இரா. பார்த்தசாரதி - கோபாலுக்த்தான் நன்றி சொல்லவேண்டும் - உங்கள் பழைய பதிவுகளை இங்கு மீண்டும் பதிவிட்டது மட்டும் அல்லாமல் உங்களையும் இங்கு மீண்டும் வரவழைத்தற்க்கு - இவ்வளுவு எழுதும் திறமையை வைத்துகொண்டு இந்த திரியில் இதுவரை நீங்கள் அதிகமாக பங்கு எடுத்துக்கொள்ளாமல் இருந்தது எங்களுடைய துரதிஷ்ட்டம் என்றுதான் சொல்ல வேண்டும் - இப்படியே கோபால் நெய்வேலி வாசுவையும், பம்மலார் அவர்களையும் இங்கு மீண்டும் அழைத்து வந்துவிடுவார் என்ற புதிய நம்பிக்கையுடன் உங்களையும் வரவேற்பதில் பெருமை அடைகிறோம் - தொடருங்கள் ( இடைவிடாமல்)
    அன்புடன்
    ரவி

  13. #2880
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஜோடிகள் இல்லையடி பாப்பா ! *

    இந்த பதிவும் ஒரு புதிய அணுகுமுறையில் ! *இந்த வரிசையில் எந்த படமாவது விட்டிருந்தால் மன்னிக்கவும் - ( கல்நாயக் , கார்த்திக் , முன்பாகவே உங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் திட்டு விழாமல் இருப்பதற்காக ----)*

    எவருக்கு வரும்*இந்த துணிச்சல் ? *எவருக்கு வரும் இந்த மனப்பான்மை ? எவருக்கு வரும் இத்தகைய தன்னம்பிக்கை - *ஒருவருக்கு ஒன்பது கதாநாயகிகள்*தேவைப்படும் காலம் அது ! *அண்ணனுக்கும் காதலனுக்கும் வித்தியாசம் தெரியாமல் வெளிவந்த படங்கள் எவ்வளவு அந்த காலத்தில் - *கதை படி , பல கதாநாயகிகள் hero விற்கு கிடைக்க வாய்ப்பில்லை என்றால் , உடனே அந்த ஹீரோவிற்கு இரட்டை வேடம் - இரண்டு கதாநாயகிகள் கிடைப்பார்களே !! *கண்ணை மூடிக்கொள்ளும் காதல் காட்சிகள் , முகத்தை சுளிக்கவைக்கும் ரசனைகள் - இவைகளின் நடுவே கதாநாயகிகளே தேவை இல்லை என்று நடித்த இந்த மாணிக்கம் எங்கே - வயதான காலத்தில் வரவில்லை இந்த வைராக்கியம் - இளமை பூத்து குலுங்கும் வயதில் ஜோடி இல்லாமல் நடித்தவர் இவர் - அப்படி நடித்தும் வெற்றியை கைபற்ற தவறவில்லை - இதுவல்லவோ**சாதனை - அப்படி சாதனை புரிந்த படங்கள் சிலவற்றை பார்க்கலாமா ?*

    தொடரும்*

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •