-
21st May 2014, 06:02 PM
#2921
Senior Member
Veteran Hubber

Originally Posted by
g94127302
உபயம் - முரளி
தீர்ப்பு 100 நாட்களை கடந்த அரங்குகள்
சென்னை
சாந்தி
கிரவுன்
புவனேஸ்வரி
மதுரை - சினிப்ரியா
சேலம் - சாந்தி
திருச்சி - பிரபாத்
கோவை
[மற்றுமொரு நகரம்]
As per Newspaper ad, published by Pammalar, re-published by Ravikiran Surya in this page...
Theerpu ran 100 days in
Chennai - Shanti, Crown, Bhuvaneswari,
Madurai - Minipriya
Trichy - Maris Fort
Salem - Shanti
Kovai - Geethalaya
Nellai - Sivashakthi
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2014 06:02 PM
# ADS
Circuit advertisement
-
21st May 2014, 06:05 PM
#2922
Junior Member
Devoted Hubber
Rks தீர்ப்பு வந்து 32 வருடம் ஆகிறது.
-
21st May 2014, 09:59 PM
#2923
Junior Member
Seasoned Hubber
Dear Senthil,
Wish You Many More Happy Returns
-
21st May 2014, 10:11 PM
#2924
Junior Member
Seasoned Hubber
நடிப்பினால் பாசிடிவ் ஆன நெகடிவ் ரோல்(ஸ் )
9, 3, 2 என்று வரிசை படுத்தி அலசினதில் nt யின் வீச்சு எவ்வளவு அழுத்தமாகவும் , ஆழமாகவும் இருந்தது என்பது தெரிய வந்திருக்கும் - அந்த படங்களின் வசூலையும் , வெற்றியின் ஓட்டத்தையும் தடுக்க முடியமால் அன்று துவண்டவர்கள் எண்ணிக்கையில் அடங்காது -- பிறகு ஒரு படி முன்னே சென்று யாருமே செய்ய , விரும்பாத ஜோடி இல்லாத படங்களை அலசினோம் - அதிலேயும் NT யின் தனித்தன்மை , தன்னம்பிக்கை துல்லியமாக தெரிந்தது .துணிவே துணை என்று நடித்து வெற்றியை குவித்த படங்கள் ஏராளம் - அவருடைய துணிவைகண்டு உலகம் வியத்தது . இன்னும் ஒரு படி முன்னே சென்று , ஜோடி இருந்தும் டூயட் பண்ணாத படங்களை அலசினோம் - இலக்கிய காதலின் அருமை புரிந்தது - காதல் என்பது வெறும் கட்டி பிடிப்பது அல்ல , இரண்டு ஒருமித்த மனங்களை ஒரு எல்லைக்குள் கட்டி போடுவது என்பதை உணர்த்திய படங்கள் ஏராளம் - இருவரின் துடிப்பினிலே பிறக்கும் மழலையின் ஆனந்தத்தை விட ஒருவரின் துடிப்பினிலே கிடைக்கும் நடிப்பின் ஆனந்தத்தை நமக்கு எல்லாம் அள்ளி அள்ளி வழங்கினார் - ஜோடி இல்லாமலும் அவருடைய படங்களை ரசித்தோம்/ரசிக்கின்றோம் /ரசிப்போம் , டூயட் இல்லாமலும் அவரின் நடிப்பை அனுபவித்தோம் /அனுபவிக்கின்றோம் /அனுபவிப்போம் - இவர் படங்களில் கர்சீப் க்கும் குறைவான துணியை அணியும் பெண்கள் கதாநாயகிகளாக வருவதில்லை - மாறாக கர்சீபினால் கண்களை வருடும் உருக்கமான காட்சிகள் இருக்கும் - கனவில் தேவதைகள் ஹீரோ வை கட்டி பிடிக்கும் கட்சிகள் வராது - அந்த தேவதைகள் வானில் இருந்து இறங்கி அவர் படங்களை பார்க்கும் நிலைமை இருக்கும் - 100 பேர்களை சுண்டி விரலால் ஹீரோ அடித்து விரட்டும் காட்சிகள் இருக்காது - ஆனால் ஒரு சுண்டி விரல் மட்டுமே பேசி நடிக்கும் இயல்பான , கலப்படம் இல்லாத நடிப்பு இருக்கும் -
யாருமே செய்ய துணியாத , புழனின் உச்சியில் இருக்கும் போது செய்ய விரும்பாத , நெகடிவ் ரோல் க்கும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தவர் ஒருவர் உண்டு என்றால் அதுவும் நம் செவாலியர் தான் - அதைத்தான் இங்கே அலச இருக்கிறேன் - ஒரு புதிய கண்ணோட்டத்தில்
தொடரும்
-
21st May 2014, 10:44 PM
#2925
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செந்தில் சிவராஜ் அவர்களே!
இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
பின்னலாடை தொழில் நகரமாம் திருப்பூரில் சென்ற 16.05.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக டைமண்ட் திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது காலத்தால் அழியாத காதல் காவியம் வசந்த மாளிகை!
தகவலுக்கு நன்றி ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
-
21st May 2014, 11:09 PM
#2926
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது -34
1977 ல் வெளிவந்த இளைய தலைமுறை படத்தை பற்றி தான் இந்த பதிவு .
கதை :
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு பட்டப் படிப்பு படித்த சம்பத் (நடிகர் திலகம்) வேலை தேடி அலைகிறார் , வறுமை குடும்பம் , வேலை கிடைக்காததால் சொந்த வீட்டில் கூட அவமானம் , சம்பத்தின் தாய் மட்டும் கனிவாக இருக்கிறார் . வேலை இல்லாமல் அலையும் பொது சகுந்தலாவை (வாணி ஸ்ரீ ) சந்திக்கிறார் , மோதலில் ஆரம்பிக்கும் சந்திப்பு காதலில் முடிகிறது , சகுந்தலாவின் தாய்மாமன் அரசியல்வாதி
(MRR வாசு) சகுந்தலாவை கல்யாணம் செய்ய அசைபடுகிறார் . சகுந்தலாவின் வீட்டில் மீனாக்ஷி ஆட்சி . கணவர் (VKR ) மனைவின் பேச்சுக்கு கட்டுபடுகிறார் (மனைவி MN ராஜம் )
இந்த வீட்டில் தான் சம்பத்தின் தந்தை வேலை பார்க்கிறார் . சிபார்சு கடிதம் தரும் வாசு தன் முறை பெண்ணை தான் சம்பத் காதலிக்கிறார் என்பதை அறிந்து ஆத்திரம் அடைந்து கடிதத்தை கிழித்து போடுகிறார்
dunken கம்பனில் வேலைக்கு அழைப்பு வர , சென்னைக்கு செல்லும் சம்பத் கோட் சூட் இல்லை என்ற காரணத்தினால் வேலை கிடைக்காமல் போக நண்பரின் (KS விஜயன் ) உதவியால் தான் படிச்ச காலேஜ் ல் வார்டனாக சேருகிறார் .
அங்கே வார்டனாக சேர 3 கட்டளைகள்
1. லீவ் போட கூடாது
2. 3 வருடம் வேலை பார்க்க வேண்டும்
3. வேளையில் இருக்கும் பொது திருமணம் செய்து கொள்ள கூடாது
அந்த காலேஜ் ல் பிரச்சனை செய்யும் கூடத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் , அவர் கூட்டாளி YGM , ஜூனியர் பாலையா , விஜயகுமார் , பிரேம் ஆனந்த் மற்றும் சிலர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2014, 11:10 PM
#2927
Junior Member
Seasoned Hubber
இதில்
YGM - தினமும் நைட் ஷோ பார்ப்பவர்
ஜூனியர் பாலையா - காதல்வயப்பட்டு படிப்பில் நாட்டம் இல்லாமல் இருப்பவர்
பிரேம் ஆனந்த் - kleptomania என்ற திருட்டு எண்ணம் கொண்டவர்
விஜயகுமார் - சண்டியர்
மற்றும் ஒரு நபர் - chain smoker
ஸ்ரீகாந்த் - அணைத்து கேட்ட பழக்கத்தின் மொத்த உருவம்
இவர்களின் பிரச்சனையை சம்பத் தீர்த்து வைக்கிறார் ஸ்ரீகாந்த் மட்டும் திருந்த மறுக்கிறார்
இந்த கூடத்துக்கு இடையில் அப்பு என்ற மாணவன் மட்டும் நன்றாக படிக்கிறார் , ஏழை , தாய் , தந்தை கிடையாது . ஸ்ரீகாந்த் ராக்கிங் செய்வதால் இறந்து விடுகிறார் .
சம்பத்தின் காதலி சகுந்தலாவின் முறைமாமன் (எம்.ஆர்.ஆர்.வாசு) அவரை திருமணம் செய்துகொள்ள தீவிரமாக இருக்க, வாணியின் அம்மா எம்.என்.ராஜம், தன் தம்பிக்கே அவளை மணமுடிக்க வேண்டும் என்றும் துடிக்க, அப்பா (வி.கே.ஆர்) தன் மகளின் காதலுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார். வீட்டை விட்டு சென்னைக்கு வருகிறார் சகுந்தலா
தன் தங்கையின் காதலை ஏற்க மறுத்ததுக்கு பழி வாங்க காத்து கொண்டு இருக்கிறார் விஜயன் , விஜயன் , ஸ்ரீகாந்த் இருவரும் சேர்ந்து சம்பத்தை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.
முடிவில் விஜயன் சம்பத்துக்கு உதவ ஸ்ரீகாந்த் மேல் தரவகம் விழுந்து விடுகிறது
'திருமணம் செய்தவர்கள் வாரடன் வேலையில் நீடிக்க முடியாது' என்ற கல்லூரியின் சட்ட விதிகளின்படி, சம்பத் வேலையை விட்டு விலக முடிவு செய்ய, சம்பத்தின் முயற்சியால் மாணவர்கள் திருந்தி இருப்பதை அறிந்து சம்பத் வேளையில் தொடர கல்யாணம் செய்து கொண்டு பணியில் தொடரலாம் என்று சலுகை கொடுக்க தன் சேவையை மாணவர்களுக்கு செய்கிறார் சம்பத்
சுபம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2014, 11:10 PM
#2928
Junior Member
Seasoned Hubber
படத்தை பற்றி :
இந்த படத்தை தான் அடுத்து பார்த்து விட்டு எழுத போகிறேன் என்று வீட்டில் என் அம்மாவிடம் தெரிவத உடன் அவர் அந்த படமா என்று கேட்ட போதே இந்த படத்தின் impact எப்படி என்று மனதுக்குள் நினைத்து கொண்டே தான் அதாவது ஒரு வித நெகடிவ் attitude உடன் பார்த்தேன் . படம் மோசமா ?
கிடையாது , படம் bore அடித்ததா இல்லை , படம் slow டாகுமெண்டரி பீல் உள்ள படமா கதை தான் அப்படி ஆனால் way of presentation was very good .
படத்தின் minus என்று நான் கருதுவது :
விடுதியில் மெஸ் நடத்தும் 'சர்மா' வாக வரும் நாகேஷ் மலையாளம் நன்றாக பேசுகிறார் ஆனால் சிரிப்பு ?
நடிகர் திலகமும் , விஜயகுமாரும் boxing போடும் காட்சி
இந்த இரண்டும் தான் minus
-
21st May 2014, 11:11 PM
#2929
Junior Member
Seasoned Hubber
இந்த படத்தின் நடிகர்களின் பங்களிப்பை பற்றி எழுத போவது இல்லை , காரணம்
படத்தின் உண்மையான கதாநாயகன் கதை , திரைக்கதை , வசனம் எழுதிய மல்லியம் ராஜகோபால் , (சவாலே சமாளி ) மற்றும் compromise செய்யாமல் இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு
இந்த கதையை ,எப்படி தான் தான் இருக்கும் என்ற திரைகதையை ஒரு வித heroism கூட இல்லாமல் நடித்து கொடுத்து உள்ளார் நடிகர் திலகம் . அட மற்றவர்களை திருத்துவது கூட heroism தான் ரியல் ஹீரோ அதுவும் தான் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்து அவர் பேசும் வசனங்கள் நச் , அதுவும் அவர் அன்று ஆளும் கட்சியை அதன் சில நடவடிக்கைகளை குறிப்பாக காலேஜ் ல் வந்து வாசு பேசும் வசனத்துக்கு ஸ்ரீனிவாசன் அரசியல்வாதி எப்போதும் வேலை பார்க்க விட மாட்டாங்க ? strike பத்தி பேசும் வசனமும் , தன் தந்தை இறந்து கூட தெரியாமல் இருந்து தன் தாய் சொல்லி தான் அந்த விஷயம் தெரிய வரும் போதும் , நடிகர் திலகம் உருகும் இடம், ராக்கிங் செய்ய படும் மாணவர் இறந்து போகும் காட்சியிலும் , அதுவும் அவர் கடிதத்தில் இருக்கும் வரிகளும் நம் கண்களில் கண்ணீர் குளம்
chain ஸ்மோகர் யை 50 பக்கங்கள் படித்து விட்டு 1 cigarette பிடி என்று சொல்லும் இடமும்
பாலைய்யாவின் காதலை சேர்த்து வைப்பதும்
- kleptomania உள்ள sabastain யை எல்லா பொருள்களிலும் சிலுவை உள்ளதாக நினைத்து கொள் திருடும் எண்ணம் வராது என்று சொல்லும் போதும்
விஜய்குமர்க்கு பீஸ் கட்டுவதும்
என்று மாணவர்களின் வளர்ச்சிக்கு என்று பல காட்சிகள்
பாடல்களில் :
யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஷ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' மூன்றும் நல்ல பாடல்கள் என்றாலும்
இளைய தலைமுறை... இனிய தலைமுறை' என்ற டைட்டில் பாடல் , கருத்து அதிகம்
ஒரே வரியில் :
கருத்து அதிகம் , கதை என்ற பாதையில் விலகாமல் செல்லும் படம் என்றும் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd May 2014, 12:22 AM
#2930
Junior Member
Seasoned Hubber
நடிப்பினால் பாசிடிவ் ஆன நெகடிவ் ரோல்(ஸ் ) - தொடருகின்றது
1. திரும்பிப்பார் -1953 ( 5வது படம்)
எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த படம் - ஒரு காமுகனை இவ்வளவு அழுத்தமாக , அழகாக காட்ட முடியுமா ? - அவனை திட்டுவதற்கு பதிலாக , சீக்கிரமே திருந்த கூடாதா என்று ஏங்க வைத்த படம் - தோல்விகளை அவர் திரும்பி பார்க்காமல் உயர்வின் உச்சிக்கு எடுத்து சென்ற படம்
2. இல்லற ஜோதி -1954 ( 11வது படம்)
கட்டிய மனைவியின் அன்பை வெறுத்து வேறு ஒரு பெண்ணின் நட்பை நாடிய படம் - பெண்களின் வெறுப்பை பெறக்கூடிய படம் - கலங்கினாரா - நடிக்க அஞ்சினாரா ?? பார்த்தவர்களை கலங்க வைத்தார் தன் நடிப்பினால்
3. அந்த நாள் -1954 ( 12வது படம்)
தேச துரோகி - பணத்திற்காக பிறந்த நாட்டை விலை பேசும் வேடம் - தன திறமையை உலகம் புரிந்துகொள்ளவில்லையே என்ற கோபம் - அவருடன் சேர்ந்து நம்மையும் கோபப்பட வைத்தபடம் - பாடல் இல்லை - டூயட் இல்லை - ஏன் உயிரே இல்லை முதல் காட்சியில் இருந்து - முழுவதும் ப்ளாஷ் பாக்கில் - யாருமே நடிக்க முடியாத படம் - "அந்த நாள்" வாழ்வில் மறக்க முடியாததாகி விட்டது .
4. துளி விஷம் -1954 (16வது படம் ) - ஒரு துளி விஷத்தை தன் எழுத்தின் திறமையினால் அமுத கலசமாக்கிய வாசுவின் பதிவுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தை பற்றி எழுத எனக்கு திறமையும் இல்லை ,மனதில் துணிவும் இல்லை .
5. கூண்டுக்கிளி -1954 (17வது படம் )
தனக்கு பார்த்த பெண் தன் நண்பனின் மனைவியாகி விடுகிறாள் - அவளை அடைய விரும்புகிறான் - ஹீரோ வான ஒரு வில்லன்
6. கள்வனின் காதலி -1955 ( 25வது படம்) பெயருக்கு ஏத்தார் போல வேடம் - வெளிசிறையில் இருந்து தப்பித்து நம் மன சிறையில்- தங்கிவிட்ட படம்
7.நானே ராஜா -1956 ( 28வது படம்) : அருமையான நெகடிவ் வேடம் -ஆனால் அன்றே எல்லோர் மனதிலும் ராஜாங்கம் செய்ய ஆரம்பித்த படம்
8. பெண்ணின் பெருமை - 1956 (30வது படம்)
தம்பி கெட்டவன் - அண்ணன் வெகுளி - அண்ணி அவனை படிபடி யாக உலகத்தை புரிய வைக்கின்றாள் - தம்பியையும் திருத்துகின்றாள் - NT யும் GGம் முதல் முறையாக சேர்ந்து நடித்த படம் - NT யின் நடிப்பினால் பெருமையும் , வெற்றியும் பெற்றது .
9.ரங்கூன் ராதா -1956 (34வது படம் )
கட்டிய மனைவியை பைத்தியம் என்ற பட்டத்தை சுமத்தி , அவளின் சகோதரியையே மணந்து கொண்டு அட்டகாசம் புரிந்த படம் - SSR , NT க்கு மகனாக நடித்த படம் - யாருமே ஏற்று கொள்ள முடியாத வில்லன் வேடம் - மனதில் நின்றது நடிப்பினால் .
10. பாக்கியவதி -1957 ( 43வது படம் )
அழகிய மனைவி , இருந்தும் அடுத்த வீட்டு மல்லிகையின் வாசம் அவனை தப்பான வழிக்கு இழுத்து சென்றது - தப்பானவன் - இருந்தாலும் அவனின் நடிப்பு எல்லோரையும் கட்டி போட்டது - அவன் பனியனை போல வந்த பனியன்களை போட்டு திரிந்த பாக்கியசாலிகள் அன்று எவ்வளவு பேர் ?!
11. உத்தம புத்திரன் -1958 ( 45வது படம்)
பார்த்திபனை கூட மறந்து விடலாம் - விக்கிரமனை எப்படி மறுக்க , மறக்க முடியும் ? "ஹ " என்று அலட்சியமாக சொல்லி 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படம் - அன்று ஸ்ரீதரின் வாழ்விலே ஒரு பொன்னாள் !
12. அன்னையின் ஆணை -1958 ( 49வது படம்)
நல்லவன் - தாயிடம் தகாத முறையில் நடந்தவனிடம் வில்லனாக மாறும் வேடம் - காதலியின் தந்தைதான் விரோதி அப்படி இருந்தும் தந்தை இருக்கும் இடம் சொல்லாமல் காதலியை மென்மையாக கையாண்ட படம்
13. தெய்வ பிறவி -1961 ( 61வது படம் ) - மனைவியின் நடத்தையில் சந்தேகித்து அவளை தகாத வார்த்தையினால் புண் படுத்தும் வேடம் - அருமையாக , பார்பவர்களுக்கு அதிருப்தி வராமல் நடித்திருப்பார் - NT ஒரு தெய்வ பிறவி என்று உலகத்திற்கு பறை சாற்றிய படம்
14. புனர் ஜென்மம் -1961 ( 68வது படம் )
ஹீரோ ஒரு குடிகாரன் சந்தர்ப்ப வசத்தினால் - குடியின் கொடுமையை விளக்கும் அருமையான படம்
15. நிச்சிய தாம்பூலம் - 1962 (76வது படம்)
காதலித்த பெண் , மனைவியாக வந்தபின் , சந்தேகமும் கூட வே வந்தால் ' படைத்தானே " என்றுதானே பாட வேண்டியிருக்கும்
16.ஆலய மணி - 1962 (83வது படம் )
நல்லவன் - கர்ணனை போல் அள்ளித்தரும் குணம் உடையவன் - இருந்தாலும் தோல்விகளை வெறுப்பவன் -பொது நலத்திலும் , சுயநலத்திற்கு அடிமையானவன் - சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் விஸ்வ ரூபம் எடுக்கும்போது அதன் வீச்சில் மாட்டிகொண்டவன் - split personality யை எவ்வளவு அழகாக இதுவரை எடுத்து சொன்னதில்லை , நடித்து காட்டியதும் இல்லை
17. இருவர் உள்ளம் - 1963 ( 86வது படம்)
பறவைகள் பலவிதம் என்று வாழ்ந்தவன் - நடத்தையினால் கெட்டவன் என்ற பழியை சுமந்தவன் - திருந்தும் போது - சட்டம் அவனை சிறைக்கு அழைக்கின்றது - கெட்டவன் திருந்த முடியாதா என்று உருக்கமாக அவன் கேட்க்கும் போது கலங்காத கண்கள் இல்லை
18. பார் மகளே பார் - 1963 ( 89வது படம்) - கண்டிப்பான தந்தை - அந்த கண்டிப்பு எல்லையை மீறும் போது வில்லனாக தென்படும் நடிப்பு
19. கல்யாணியின் கணவன் -1963 ( 92வது படம் )- காதலியை சந்தேகிக்கும் வில்லத்தனமான வேடம் - அருமையான காதலை ஆரபோடுகின்றது
20. நவராத்திரி -1964 (100வது படம்) - ஒன்பதில் இரண்டு வேடங்கள் - கொலை செய்தவன் ஒருவன் , காமுகன் ஒருவன்
21. திருடன் -1969 ( 133வது படம்) - வெறும் பெயரில் தான் திருடன் - திருடியதோ நம் எல்லோர் மனத்தையும்
22. இரு துருவம் -1971 ( 144வது படம்) - சந்தர்ப்ப வசத்தால் கொள்ளை கூட்டத்திற்கு தலைவனாகுகி றான் - தம்பியினால் மரணத்தை தழுவுகிறான் - தேறு பார்க்க வந்திருக்கும் சித்திர பெண்ணை திருடிகொண்டும் போகும் அவரின் நடிப்பு -NT வானில் மின்னும் ஒரு துருவ நட்ச்சத்திரம் என்பதை என்றும் பறை சாற்றி கொண்டிருக்கும் .
23.வசந்த மாளிகை - 1972 ( 159வது படம்) - குடிக்கும் , கூத்துக்கும் அடிமையானவன் - திருத்த ஒருவரும் இல்லை - தாய் உண்டு - பாசம் இல்லை - அண்ணன் உண்டு - அறவனைக்கும் கரங்கள் இல்லை அங்கே - அண்ணி உண்டு - ஆதரிக்கும் வார்த்தைகள் இல்லை அங்கே - காதலி உண்டு - அதனால் போகும் உயிரை திரும்பவும் பெறுகிறான் - காதலை ஒரு கவிதையாக்கிய ஒரே படம் - அன்றும் , இன்றும் , என்றும் .
24. உனக்காக நான் - 1976 ( 181வது படம் ) - பணக்காரன் - கூடவே வரும் திமிர் - தன் நண்பன் ஏழை தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வதை வெறுக்கிறான் - தெரிந்தே நெகடிவ் ரோல் யை எடுத்துகொண்டு சோபித்த படங்களில் இதுவும் ஒன்று
25 தீபம் -1977 ( 188வது படம்) - தன் காதலி தனக்கு கீழ் வேலை செய்யும் ஒருவனை காதலிக்கிறாள் என்று புரிந்துகொண்டு அவனை கொன்று விட நினைக்கும் வேடம் - அவன் தனது தம்பி என்று உணர்ந்துகொண்டபின் அவனுக்காக வாழும் பாத்திரம்
26. என்னைப்போல் ஒருவன் (1978) - 194வது படம் - இரு வேடம் - ஒருவன் மிகவும் நல்லவன் - அடுத்தவன் மதுக்கும் , மாதுவிற்கும் அடிமையானவன் - NT யை போல நடிக்க யார் இருக்கிறார்கள் உலகில் ??
27. கருடா சௌக்கியமா ? (1982) - 222வது படம் - சாதாரணமாக இருந்த ஒருவனை சந்தர்ப்பம் ஒரு DON க மாற்றி அமைத்தது
முற்றும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks