-
12th June 2014, 02:41 PM
#121
Senior Member
Senior Hubber
வாசு சார், கார்த்திக் சார்,, கிருஷ்ணா சார் நன்றி
*
வாசு சார்.. தமிழ் ஃபாண்ட் இப்போ ஒர்க் செய்கிறது..என்று எழுதுகையில் சடாரெனக் கணினி கோபித்து அணைந்து விட்டது..
*
கார்த்திக் சார்.. சொன்னாற் போலவே இளையராஜா பெரும் பலம்..பாடலைப்பாடக் கொடுத்த நபர்களை சரியாக செலக்ட் பண்ணியிருப்பார்..சீக்கிரம் தனிமைப் பாட்டைப் பாடி எங்களைக் கலைங்க..
*
கிருஷ்ணா சார்.. லதா பட லிஸ்ட் பெரிதாய்ப் போட்டுக் கொடுத்து என் நினைவுக் குதிரையைச் சற்றே ஒரு பரவச நிலையில் நொண்டியடித்த படி ஓட விட்டு விட்டீர்கள்.(வயசாய்டுச்சோன்னோ) .அதுவும் ஆயிரம் ஜென்மங்கள்..அதில் உள்ள பாட்டு.. வெண்மேகமே கேளடி என்கதையை..ஓ..அது பத்மப் ப்ரியாவோன்னோ..இன்னொரு - மாலை நேர வெயிலின் நிறம் போல மஞ்சள் நிற மெழுகு பொம்மை.
*
. அப்புறம் அறுபத்து நான்கு கலைகள்..(அவ்வப்போது விஜயகுமாரின் மீது பொ ற் ற் றாமை வருகிறது) இரண்டும் வெகு இனிமையான பாடல்கள்.. வீடியோவிற்கு அறுபத்து ஆறாவது வட்டம் சார்பாக அண்ணன் ராகவேந்திரரை அழைக்கிறேன்!
-
12th June 2014 02:41 PM
# ADS
Circuit advertisement
-
12th June 2014, 02:45 PM
#122
Senior Member
Senior Hubber
"நடன சாலைகளில் நதியின் ஓரங்களில் அழகு கோலங்களில் .."
"கடந்த காலங்களில் நநடந்த உள்ளங்களில்"// வெகு அழகான வரிகள் நானும் ரசித்திருக்கிறேன்
-
12th June 2014, 02:53 PM
#123
Senior Member
Senior Hubber
சில தினங்கள் முன்பு (பத்து பதினைந்து நாள்) இங்கு(மஸ்கட்) 49 முதல் 52 டிகிரி வெயில் என்று முக நூலில் எழுதியிருந்தேன்.. அது இங்கே:
கண்களும் சூடாகும் காந்தலெனத் தோல்பொசுங்கும்
எண்ணம் மிக மாறி ஏதேதோ தோன்றிவிடும்
கஷ்டம்தான் என்றால் கலக்கிடுதே இன்னுயிரை
மஸ்கட் வெயிலது வாம்..
வெளியில் வெய்யில்..தலை காட்ட முடியவில்லை.உள்ளே என்ன செய்யலாம் என முடிவெடுத்து நேற்றும் இன்றும் (வெள்ளி சனி) விட்டுவிட்டுப் பார்த்தது வஞ்சிக் கோட்டை வாலிபன்..ம்ம்க்கும்..
ஆயிரம் தான் சொல்லுங்கள்.
சித்தம் கலங்கிடும் சிந்தை மயங்கிடும்
பத்மினி தோற்றத்தால் பார்
என சில பல ஆன்றோர்கள் சொல்லியிருந்தாலும் (?!) அதே ஆன்றோர்
செளஜன்யம் கொண்டுவக்கும் சோபையில் பெண்ணழகு
வைஜயந்தி மட்டுமே வா
எனச் சொல்லியிருக்கிறார்கள்..வைஜ் வைஜ் வைஜூ தான் கொஞ்ச நேரம் வந்தாலும் ராஜாமகள் புது ரோஜாமலர் அனாயசமாக சிம்மாசனத்தை இழுத்து நம் மனதில் சரி சரி என் மனதில் அமர்ந்து விட்டார்.. சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடியில் காட்டும் அலட்சியம்.. எவ்வளவு தான் பத்மினி கண்கள் உடல் உதடு என பல பாவங்கள் காட்டினாலும் அவற்றை எல்லாம் பாவமாக்கி விடுகிறது வைஜூவின் அலட்சியம் கலந்த அழகு..
ம்ம் படத்தை.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை.. என் இருவிழியோ ஒரு கணமும் அசையவில்லை!!
*
எனில் வைஜூவின் ராஜாமகள் ரோஜா மலரை இங்கு நினைவு கூறுவோமா..
-
12th June 2014, 03:20 PM
#124
வாசு சார்/ck சார்/கார்த்திக் சார்
ஒரே வானம் ஒரே பூமி - i .v .சசி /ஜெய்ஷங்கர்/ரவிக்குமார்/விதுபால /விஜயா/சீமா மற்றும் விச்சு கூட்டணி
படம் முழுக்க அமெரிக்க
வாணியின் "மலை ராணி முந்தாணி சரியாய் சரியாய் " விச்சுவின் violin
ஜாலி அப்ராஹீம் "ந ந ந "
வாணி "மண்மாதா வண்ண விடி விரிய விரிய"
ஜாலி அப்ராஹீம் "ந ந ந "
வாணி "இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ "
ஜாலி அப்ராஹீம் "ந ந ந "
வாணி "எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத "
விஜயா அண்ட் ஹாலிவுட் டாக்டர்
அதிலும் இரண்டாவது சரணத்தில்
வாணியின் "காதல் விட்ட முச்சு இன்று பெருகி பெருகி ஆறாகி"
குரல் முச்சு மட்டும் தனியாக கேட்கும்
இந்த பாட்டு மட்டும் track பிரிச்சு ரெகார்டிங் செய்து இருந்தால் பெஸ்ட் fusion ஆக இருந்து இருக்கும் விச்சு டெக்னாலஜி development இல் concentrate பண்ணாமல் போய் விட்டார்
-
12th June 2014, 03:32 PM
#125
Senior Member
Veteran Hubber
டியர் கிருஷ்ணாஜி,
என்ன 'லதா புராணம்' ஓவரா இருக்கு?. பட்டியல் எல்லாம் கரெக்டாக வந்து விழுகிறது. உங்களை சொல்லும் நான் மட்டும் என்ன?. லதாவுக்கு நடிக்கத்தெரியாவிட்டாலும் "மற்ற விஷயங்களுக்காக" லதா படங்களை விடாமல் பார்த்தவன்தான். கொஞ்சம் ஆண்குரல் கலந்த வசீகர குரல், கதாநாயகியாக நடிக்கும்வரை கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடல்வாகு,
சங்கர் சலீம் சைமன் படப்பிடிப்பின்போது பேசிக்கொண்டிருந்தவரை பந்தா இல்லாத நடிகையாகத்தெரிந்தார்.
ஆஹா.., 'வயசுப்பொண்ணு'வை நினைவூட்டி விட்டீர்கள். முத்துராமனுடன் லதா பாடும் 'அதோ அதோ ஒரு செங்கோட்டை.. இதோ இதோ ஒரு தேன்கோட்டை' நல்ல ஒரு டூயட். (புலமைப்பித்தன் பார்வையின் லதா தேன்கோட்டையாம்)
-
12th June 2014, 03:48 PM
#126
Junior Member
Platinum Hubber
Karthik Sir
One Of My Favorite song ''atho ....
-
12th June 2014, 04:10 PM
#127
ladha puranam

Originally Posted by
mr_karthik
டியர் கிருஷ்ணாஜி,
என்ன 'லதா புராணம்' ஓவரா இருக்கு?. பட்டியல் எல்லாம் கரெக்டாக வந்து விழுகிறது. உங்களை சொல்லும் நான் மட்டும் என்ன?. லதாவுக்கு நடிக்கத்தெரியாவிட்டாலும் "மற்ற விஷயங்களுக்காக" லதா படங்களை விடாமல் பார்த்தவன்தான். கொஞ்சம் ஆண்குரல் கலந்த வசீகர குரல், கதாநாயகியாக நடிக்கும்வரை கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடல்வாகு,
சங்கர் சலீம் சைமன் படப்பிடிப்பின்போது பேசிக்கொண்டிருந்தவரை பந்தா இல்லாத நடிகையாகத்தெரிந்தார்.
ஆஹா.., 'வயசுப்பொண்ணு'வை நினைவூட்டி விட்டீர்கள். முத்துராமனுடன் லதா பாடும் 'அதோ அதோ ஒரு செங்கோட்டை.. இதோ இதோ ஒரு தேன்கோட்டை' நல்ல ஒரு டூயட். (புலமைப்பித்தன் பார்வையின் லதா தேன்கோட்டையாம்)
கார்த்தி சார்
லதா உடைய performance வட்டத்திற்குள் சதுரம் மற்றும் 1000 ஜன்மங்கள் இரண்டிலும் உண்மையலே மிகவும் நன்றாக இருக்கும்
லதாவின் அழகு தெரிந்த ஒன்று தான்.
நிறைய திரை படங்களில் directors
அவருடைய இளமையை மட்டும் expose செய்து இருந்தனர்
அவர் மட்டும் NT கூட சில படங்கள் செய்து இருந்தால் அவருடைய திறமை பேசப்பட்டு இருக்கும்
-
12th June 2014, 04:21 PM
#128
Senior Member
Senior Hubber
வினோத் சார்.. அதோ அதோ ஒரு செங்கோட்டை பாடல் வீடியாவிற்கு நன்றி .. முதல்முதல் பார்க்கிறேன்
முத்து ராமனின் விக் யார் வாங்கிக் கொடுத்திருப்பார்கள்..
கிருஷ்ணா சார்..லதா புராணம் ஜோர்..
இதானா அழகென்று ஏதேதோ கேட்டால்
லதாவே எழிலென்க லாம்..! (ச்சும்மா இப்போது ஓடிக்கொண்டிருக்கும் கரண்ட் பதிவுகளுக்காக..அடுத்த பக்கத்திலேயே வண்ணம் மாறிட எண்ணமும் மாறும்
)
-
12th June 2014, 04:21 PM
#129
டியர் சின்ன கண்ணன் சார்
நீங்கள் muscat இல் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி
என்னுடைய உடன் பிறந்த தம்பி ஒருவரும் அங்கு தான் உள்ளார்
செம knowledge on சினி industry .
ஜகன் மோகினி ஜெயமாலினி பற்றி பேச சொன்னால் இரவு முழுவதும் பேசுவர் . நான் சொல்வது 1978-79 கால கட்டத்தில்.
இப்போது எப்படியோ தெரியவில்லை.
1000 ஜன்மங்கள் திரைபடத்தில்
ஜெயச்சந்திரன் வாணி கம்போவில் "கண்ணன் முகம் காண காத்து இருந்தாள் ஒரு மாது மன்னன் வந்த பின்னே தன நினவு என்பது ஏது"
விசுவின் தபேல பேசும்
-
12th June 2014, 04:27 PM
#130
அந்த ஏழு நாட்கள் "கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம் "
"கண்ணன் முகம் காண காத்து இருந்தாள் ஒரு மாது "
இரண்டும் ஒரு மெட்டில் அமைந்தது போல் இருக்கும்
எனினும் பிதாமகர் பீஷ்மர் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்
Bookmarks