-
26th June 2014, 09:05 AM
#961
Senior Member
Seasoned Hubber
இன்றைய பொழுதை இனிமையாகக் கழிக்க உதவுகிறார் மெல்லிசை மாமணி வி.குமார். கணவன் மனைவி திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலும் அவருடைய சிறந்த இனிமையான படைப்புகளுக்கு ஒரு அத்தாட்சி.
பாடகர் திலகம் டி.எம்.எஸ். கண்ணிய பாடகி சுசீலா இணையான குரலில் முத்துரமானும் ஜெயலலிதாவும் நடித்த இப்படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங் அவர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th June 2014 09:05 AM
# ADS
Circuit advertisement
-
26th June 2014, 09:08 AM
#962
Senior Member
Seasoned Hubber
யோகேஷ் இயற்றி ஜெய்தேவ் இசையமைத்து லதா மங்கேஷ்கர் பாடி பிரேம் பர்பத் ஹிந்திப் படத்தில் இடம் பெற்ற பிரபலமான பாடலை நினைவூட்டும் ரிதம் அமைப்பில் மெல்லிசை மாமணி வி.குமார் இசையமைத்த இப்பாடல் தமிழ்த் திரையுலகில் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்து நிற்கும். மிட்டாய் மம்மி என்ற பெயரில் தயாராகி பின்னர் தெய்வம் தந்த வீடு என்ற பெயரில் வெளிவந்த இப்படம், தமிழகத்தில் முதல் வெளியீட்டில் ஒரு திரையரங்கில் ஒரே நாளில் திரையரங்கிலிருந்து தூக்கப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இப்பாடலை நம் மனதில் இருந்து எந்நாளும் தூக்க முடியாது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th June 2014, 10:28 AM
#963
Senior Member
Veteran Hubber
'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது' படத்தப் பற்றி சொல்லும்போது கூடவே நினைவுக்கு வரும் படம் 'நந்தா என் நிலா'.
இதுவும் புஷ்பா தங்கதுரை கதைதான். பாடல்கள் அனைத்தும் இனிமை.
அதிலும் டாப்கிளாஸ் பாடல் எஸ்.பி.பாலாவின் கொஞ்சும் குரலில்...
நந்தா நீ என் நிலா.. நிலா...
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா...ஆ....ஆ..
பாடல் போட்டிகளில் கலந்துகொள்வோர் பெரும்பாலும் தேர்ந்தெடுத்து பாடும் பாடல் இது.
-
26th June 2014, 10:32 AM
#964
Senior Member
Senior Hubber
நண்பர்களே,
நடிப்புச் சுடர் - ஏவிஎம் ராஜனை 5000 சிவாஜி என்று நான் தான் கிண்டலடித்தேன். நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பார்கள். நினைப்பு இருந்து என்ன செய்வது? இவர் பரவாயில்லை. இந்த விஜய குமாரின் அலம்பல் இருக்கிறதே - குறிப்பாக - "ஆஹா" படத்தில்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
26th June 2014, 10:38 AM
#965
'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது' படத்தப் பற்றி சொல்லும்போது கூடவே நினைவுக்கு வரும் படம் 'நந்தா என் நிலா'.
நன்றி கார்த்திக் சார்
நந்தா நீ என் நிலா பாடலும் அருமையான பாடல்
இந்த பாடலை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று ஆசை
இந்த படத்தில் ஜெயச்சந்திரன் குரலில்
"ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாலும் "
என்று ஒரு பாடல் உண்டு
சிலோன் ரேடியோ ஹிட் சாங்
இந்த திரைப்படம் எ.ஜெகநாதன் direction என்று நினைக்கிறன்
ஒரு ஊதபூ அளவுக்கு ஹிட் இல்லை என்று நினவு
-
26th June 2014, 10:42 AM
#966
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
நன்றி கார்த்திக் சார்,
நாம் நியாயமாகவே நடக்கிறோம். நடப்போம்.
அருமையான, எனக்கு மிகவும் பிடித்த, என்னுடனேயே (cellil) இருக்கும் 'என்னதான் ரகசியமோ' இதயத்திலே பாடலைப் பற்றி பதித்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளீர்கள்.
இப்பாடலில் வீடியோ மிக்ஸிங் அவ்வளவு அழகு.
நினைத்தால்
எனக்கே (ஆனந்த) மயக்கம் வரும் சமயத்திலே
சூப்பர் பாடலை அளித்ததற்கு நன்றி!
அற்புதம்,
அதிலும், அந்த இரண்டாது (சரியா?) சரணத்தில், "முதல் இரவு வந்ததும், அந்த உறவு வந்ததும், நீ அருகில் வந்ததும் (இங்கு ஒரு குழைவு சுசீலாஆஆஆ!) நான் உருகி நின்றதும்" இந்த இடங்கள்.
தமிழில், பல படங்கள், - மற்ற மொழிகளில் இருந்து, ரீமேக் செய்யப்பட்டபோது, அசலை விட, பெரிதாக சாதித்திருக்கின்றன.
நடிப்பில், படைப்பில், இசையமைப்பில். எங்க மாமா (ஹிந்தி பிரம்மச்சாரி), ராஜா (ஹிந்தி ஜானி மேரா நாம்), வசந்த மாளிகை (தெலுங்கு ப்ரேம நகர்), அவன் தான் மனிதன் (கன்னடம் கஸ்தூரி நிவாசா), எங்க வீட்டுப் பிள்ளை (தெலுங்கு ராமுடு பீமுடு), இதயக்கமலம் (ஹிந்தி மேரா சாயா) போன்றவை சில உதாரணங்கள்.
ஹிந்தி மேரா சாயாவை விட, தமிழ் இதயக் கமலம் எல்லா வகையிலும் மேம்பட்டது. குறிப்பாக, இசை - அசல், மதன் மோகன் பெரிய இசையமைப்பாளர் என்ற போதிலும், அந்த சாயல் கொஞ்சம் கூட வராமல், ஒவ்வொரு பாடலிலும், திரை இசைத் திலகம் முந்தியது, ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
26th June 2014, 10:43 AM
#967
Senior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
யோகேஷ் இயற்றி ஜெய்தேவ் இசையமைத்து லதா மங்கேஷ்கர் பாடி பிரேம் பர்பத் ஹிந்திப் படத்தில் இடம் பெற்ற பிரபலமான பாடலை நினைவூட்டும் ரிதம் அமைப்பில் மெல்லிசை மாமணி வி.குமார் இசையமைத்த இப்பாடல் தமிழ்த் திரையுலகில் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்து நிற்கும். மிட்டாய் மம்மி என்ற பெயரில் தயாராகி பின்னர் தெய்வம் தந்த வீடு என்ற பெயரில் வெளிவந்த இப்படம், தமிழகத்தில் முதல் வெளியீட்டில் ஒரு திரையரங்கில் ஒரே நாளில் திரையரங்கிலிருந்து தூக்கப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இப்பாடலை நம் மனதில் இருந்து எந்நாளும் தூக்க முடியாது.
Yes, Raghavendar Sir. It was "Wellington".
Regards,
R. Parthasarathy
-
26th June 2014, 10:48 AM
#968
வேந்தர் சார்
மிட்டாய் மம்மி பற்றி நினவு படுத்தி விட்டீர்கள்
அவினாசி மணி direction என்று நினவு
ஜெய்ஷங்கர் கே ஆர் விஜயா நடித்து வெளி வந்தது
இதே நேரத்தில் "கியாஸ் லைட் மங்கம்மா " என்று ஒரு படம் 1977
ஜெய்ஷங்கர் கே ஆர் விஜயா நடித்து வெளி வந்தது
இதற்கு இசை மெல்லிசை மன்னர் என்று நினவு
ஜேசுதாஸ் வாணி ஜெயராம் குரலில்
"காதல் தெய்வம் கண்டேன் நான் சரணம் சரணம்
என் காதல் தெய்வம் கண்டேன் பக்கம் வரணும் "
ஒரு அருமையான பாடல்
-
26th June 2014, 11:04 AM
#969
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
தோள் கண்டேன் தோளே கண்டேன்..விட்டுட்டீங்களே..
தேடிவந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி சேர்த்தணைப்பேன் கையில் அள்ளி
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..
ம்ம்
ஏதோ வங்க/ஒரிய மொழிப் படத்திலிருந்து தழுவி எடுத்த படம் என நாகிரெட்டியாரோ யாரோ எழுதியதைப் படித்த நினைவு..
ஒரு கோர்ட்
ஒரு ஃப்ளாஷ்பேக்
ஒரு அழுகை
ஒரு கோர்ட் சீன்
என ஏதோ ஒரு விமர்சனத்திலும் படித்த நினைவு.. கே.ஆர்.வி யின் இரண்டாவது படம்..ஏதோ ஒரு சிலை போல வைத்து அது தான் கே.ஆர்.வி என்று பூஜையெல்லாம் செய்வார்கள்..
சமீபத்தில் கலைஞர் டிவியில் - மேபி ஆறுமாதத்திற்குள் பார்த்த படம்..என்ன தான் ரகசியமோ இதயத்திலே..ஷீலுவோன்னோ..
ck,
உங்களின் அதியற்புதத் தமிழுக்கு, அந்த நடைக்கு, நகைச்சுவைக்கு நான் ரசிகன்.
கண்ணதாசன். என்றென்றும், நடிகர் திலகத்திற்குப் பின், குடி கொண்டிருக்கும் கவிஞன்/கலைஞன்.
1980-83, ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கும் போது, அவர் மேல் மோகம் அதிகமாகியது - நிழலின் அருமை வெய்யிலில் தெரிந்ததால்.
தமிழ் மொழியின், ஆதி, வளர்ச்சி இவைகளை - ஒரே வரியில் சொல்லிய மாமேதை - "வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே" என்று.
ஒரே நேரத்தில், நடிகர் திலகத்தையும், கவியரசரையும் (ஒரே கவியரசு தான்!) பற்றி பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி, முடியும் தருவாயில், ஒரு சிறு தீ விபத்தில், மொத்தமும் அழிந்து போயின. ஆனால், என்றும் என் நினைவில் இருக்கும் - நேரம் கிடைக்கும் போது, வந்து விழுகின்றன - இப்படி எல்லாம்.
நிற்க.
இதயக் கமலம் கேயார்வியின் இரண்டாவது படம் அல்ல. கற்பகம் முதல் படம் எல்லோரும் அறிந்தது - 1963-இல் வந்தது. இதயக் கமலம் - 1965-இல் வந்தது. மூலம் - "பாத்லாக்" என்னும் மராத்தி படம் - தமிழில் 1965-இல் எல்.வி. பிரசாத் தயாரிப்பில் (இயக்கம் அவர் அல்ல - ஸ்ரீகாந்த் என்பவர் - பிறகு அவர் எந்தப் படத்தையாவது இயக்கினாரா எனத் தெரியவில்லை) - பிறகு ஹிந்தியில் ராஜ் கோஸ்லா என்னும் வெற்றிப் பட இயக்குனரால் - மேரா சாயா என்ற பெயருடன் 1966-இல் வந்தது. சுனில் தத், சாதனா நடித்தது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
26th June 2014, 11:36 AM
#970
டியர் ஆல்
நேற்று நான் வாழ வைப்பேன் படத்தை பற்றி சொல்லும் போது
நமது தலைவரின் படத்தை குறை கூறியது போல் இருந்தது
என்று மீண்டும் படிக்கும் போது தோன்றியது
நிச்சயமாக குறை கூறுவது என் நோக்கம் இல்லை
சில படங்கள் இன்னும் நன்றாக வந்து இருக்கலாம் என்று நமக்கு தோன்றுமல்லவா அந்த எண்ணத்தின் வெளிப்பாடே அது
மேலும் பிறமொழியில் இருந்து ரீமேக் செய்யும் போது அதை விட நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வரும்
எடுத்து காட்டு சாரதி சார் சொன்னது போல் ஜானி மேரா நாம் விட - ராஜா நிச்சயம் பல படி மேல் இசையிலும் சரி மற்ற எல்லா விசயங்களிலும் சரி .
அது போல் சில படங்கள் எதிர்பார்த்து ஏமாற்றி விடும்
அந்த வகையில் சக்தி சமந்தாவின் அனுராக் படத்தை தழுவி நீல மலர்கள் என்று ஒரு படம் 1979-80 கால கட்டத்தில் வந்தது
கமல் ஸ்ரீதேவி கே ஆர் விஜயா மேஜர் ஸ்ரீகாந்த் போன்றோர் நடித்து
மெல்லிசை மன்னர் கண்ணதாசன் கூட்டணியில் வந்தது
பாடல்கள் மிக அருமையாக இருந்தும் டெம்போ இல்லாததால் அடைய வேண்டிய வெற்றியை அடைய வில்லை
கமல் டாக்டர் ஆக வருவர். ஸ்ரீதேவி கண் தெரியாத அவரின் காதலி
ஒரு சிறு பையன் கேன்சர் நோயாளி ஆக வருவான் ஆனால் எல்லோரும் அவன் மீது அன்பு செலுத்துவார்கள் .இறுதியில் அந்த பையன் இறந்து விடுவான் அவனது கண்கள் ஸ்ரீதேவிக்கு பொருத்தப்பட்டு ஸ்ரீதேவிக்கு பார்வை கிடைக்கும்
பாலாவின் குரலில் மிக அருமையான குழந்தைகள் chorus உடன்
"பேசும் மணி முத்து ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
சம் சம் சம் சம் சம் சம் "
சுசீலா குரலில்
"மாதம் ஒரு பூ மலரும் அல்லி பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம் பூ "
என்ன ஒரு வாய்ஸ் இந்த பாடலில்
அதே போல் ஜேசுதாஸ் வாணி ஜெயராம் குரலில்
பயணம் படத்தில் வரும் "ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் " பாடலை போல்
கண் தெரியாத ஸ்ரீதேவி கேள்வி கேட்பது போலவும் அதற்கு பதிலும் எதிர்கேள்வி ஆகவே ஒரு அருமையான கற்பனை
இனிமையான் saxophone பாங்கோ கூட்டணியில் இதமான ஹம்மிங் உடன் ஆரம்ப இசை
பல்லவி
வாணி : ம்கும் ம்குகா ம்கும்
ஆஹா ஒஹோஹோ ஒஹோஹோ
இது இரவா பகலா
jesudas : நீ நிலவா கதிரா
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா
நீ மலரா ஓவியமா
இது வனமா மாளிகையா
நீ மலரா ஓவியமா ..ஒ ஓ
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
வயலின் வீணை சேர்ந்து இசை இண்டெர்லுட்
சரணம் - 1
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா
உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா
(இந்த இடத்தில பின்னணியில் ஜேசு குரல் ஹா ஹா )
உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா
இது கனியா காயா
அதை கடித்தால் தெரியும்
இது பனியா மழையா
எனை அணைத்தால் தெரியும்
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
மீண்டும் இண்டெர்லுட் இசை
சரணம் - 2
தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது
(ப ப ப பும் saxophone குழையும் சார் (வெண்கல பானையில் சாதம் வெந்தது போல்)
தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது
தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது
(இந்த இடத்தில பின்னணியில் ஜேசு குரல் மீண்டும் ஹா ஹா )
தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது
இது குயிலா குழலா
உன் குரலின் சுகமே
இது மயிலா மானா
அவை உந்தன் இனமே
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
மீண்டும் இண்டெர்லுட் (இசை)
சரணம் - 3
பூவின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய் காணுமா
பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா
இங்கு கிளிதான் அழகா
உன் அழகே அழகு
இந்த உலகம் பெரிதா
(இந்த கேள்வி கேட்கும் போது ஸ்ரீதேவி யின் கண்கள் இரண்டும் விரிந்து
ஒரு இன்னொசென்ட் லுக்குடன் கேள்வி சார் சான்ஸ் இல்லை )
நம் உறவே பெரிது
பின் இருவரும் இணைந்து
நனனனனனனா நனன்னனனா
நன்னனனன நனன்னனனா
நனனனனனனா நனன்னனனா
உடனே ஒரு சாக்ஸ் இசையில் மட்டும் இந்த பாடலின் பல்லவி ஒலிக்கும்
(ப ப ப ப பாபா )
(ப ப ப ப பாபா )
என்ன ஒரு அருமையான ஆரம்பம் மற்றும் முடிவு
இசையும் கவியும் வருடி எடுக்கும் சார்
Bookmarks